Contact us at: sooddram@gmail.com

 

ஊடகமே எல்லோருக்கும் இறுதியாக கை கொடுக்கிறது

கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலக்கரத்ன - ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டதை அடுத்து அதனோடு தொடர்புடைய சம்பவங்கள் தொடரொன்றே இடம்பெற்றது. இப்போது அச் சம்பவத் தொடர் அதன் உச்சக் கட்டமொன்றை அடைந்து இன்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையொன்றின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். மஞ்சுள திலக்கரத்னவின் அந்த அறிக்கை வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்ததாகவே பல அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் நீதித்துறை அவ்வாறு அறிக்கை வெளியிடும் மரபோ வழக்கமோ எந்தவொரு நாட்டிலும் இல்லை.

ஆனால் நீதித்துறை மீது, அதிலும் குறிப்பாக நீதித்துறைக்கு தலைமை தாங்கும் பிரதம நீதியரசர் மீது நிறைவேற்றுத்துறையினால் பல நெருக்குவாரங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மக்களிடம் முறைப்பாடு செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் தமக்கு எவராகிலும் தொந்தரவு செய்யும்போது முறைப்பாடு செய்வதற்கு பொதுமக்களுக்கு நீதிமன்றங்கள் இருந்த போதிலும் நீதித்துறைக்கு அவ்வாறு முறைப்பாடு செய்வதற்கு சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனம் இல்லை.
இங்கு தான் ஊடகங்களின் முக்கியத்துவம் தங்கியிருக்கிறது. நீதித்துறையினர் வேறு வழியின்றி மக்களிடம் முறைப்பாடுசெய்ய வேண்டும் என்று நினைத்த போதிலும் ஊடகங்களின்றி அவர்களுக்கு அதனை செய்ய முடியாது. அதனால் தான் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரதம நீதியரசர் தலைமை தாங்கும் அவ் ஆணைக்குழுவின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிக்கையை வெளியிட்டார்.

அதன் பின்னரும் பிரதம நீதியரசரின் சார்பில் அவரது சட்டத்தரணிகளால் கடந்த டிசெம்பர் 7ஆம் திகதி ஓர் அறிக்ககையும் அவருக்காக பொதுச் சட்டத்தரணிகள் குழுவொன்றினால் டிசெம்பர் 14ஆம் திகதி மற்றொரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையின் குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து அவர் வெளிநடப்பு செய்த உடன் அந்த வெளிநடப்புக்கான காரணங்களை விளக்கியே அவரது சட்டத்தரணிகள் அறிக்கை வெளியிட்டனர். தெரிவுக் குழுவின் அரசாங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது அறிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்தவுடன் அந்த அறிக்கை மூலம் பிரதம நீதியரசருக்கு நீதி வழங்கப்படவில்லை என்று கூறுவதற்காகவே மற்றைய அறிக்கை வெளியிடப்பட்டது.

அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் நீதித்துறையினர் இவ்வாறு அறிக்கை விடுவதை விமர்சித்தனர். புதுக்கடை இப்போது லிப்டன் சுற்றுவட்டமாக மாறியிருப்பதாக அவர்கள் கூறினர். நீதித்துறையினர் அரசியல்வாதிகளைப்போல் நடந்து கெளிகிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.

நீதித்துறை வேறு வழியின்றி மக்களிடம் முறைப்பாடு செய்வதற்காக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும் நாட்டில் பல நீதிபதிகள் ஏனைய வழக்குகளின் போதும் நீதிமன்றங்கள் தொடர்பான ஏனைய விடயங்களின் போதும் ஊடகங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை. சிலர் ஊடகங்களை நட்புக் கண்கொண்டு பார்ப்பதும் இல்லை. சிலர் நீதிமன்ற பதிவாளரிடம் ஊடகவியலாளர்கள் ஆவணங்களை பெற்றுக்கொள்வதையும் விரும்புவதுமில்லை எனக் கூறப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டபோது நீதிமன்றங்களிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பலருக்கு நியாயம் வழங்கப்படவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு பொலிஸாரை இதைவிட அழுத்தமாக வற்புறுத்த நீதிவான்களால் முடியாதா என்பது தெளிவில்லை.

இந்த நிலையை இந்நாட்டு ஊடகவியலாளர்கள் இதற்கு முன்னரும் பலமுறை கண்டுள்ளனர். அவற்றில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுடன் நடந்து கொண்ட முறையும் இப்போது நடந்து கொள்ளும் முறையும் சிறந்த உதாரணமாகும். இராணுவத் தளபதியாக இருக்கும்போது பொன்சேகா - அரச ஊடகங்களை மட்டுமே மதித்தார். ஏனைய சில ஊடகவியலாளர்களை அவர் துரோகிகள் என்று வர்ணித்த சந்தர்ப்பங்களும் இருந்தன.

பல ஊடகவியலாளர்கள் அவர் தளபதியாக இருக்கும் காலத்தில் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டனர். அவ்வாறான சில சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரையே குற்றஞ்சாட்டினர். புலிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்ட சில ஊடகவியலாளர்களும் அவரது காலத்தில் இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில ஊடகவியலாளர்கள் அக்காலத்தில் நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டனர்.

பதவியில் இருந்து சரிந்த பின்னர் அவருக்கு ஊடகங்களே துணை என்ற நிலை உருவாகியது. குறிப்பாக சிறையிலடைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களே அவருக்காக நாட்டின் அரசியல் அரங்கில் இடமொன்றை அமைத்துக் கொடுத்தன. அவரும் ஊடகங்களை சிறப்பான முறையில் பாவித்து அந்த இடத்தை பாதுகாத்துக் கொண்டார்.

அந்நாட்களில் அவர் அடிக்கடி மருத்துவமனைகளுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போதெல்லாம் ஊடகங்கள் அவரை சூழ்ந்து கொண்டன. ஓரிரு நிமிடங்களே அப்போது அவருக்கு தொலைக்காட்சி கமெராக்கள் முன் தோன்ற சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவர் மிக சாதுரியமாக அந்த சில நிமிடங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவித்தார். அப்போது ஊடகங்கள் அவரை புறக்கணித்து இருந்தால் அவருக்கும் அவரது அரசியலுக்கும் என்ன நடந்து இருக்குமோ தெரியாது?

போர் நடந்து கொண்டு இருந்த காலத்தில் ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசியவர்கள் பலரை தேசத்துரோகி என்று கூறிய பொன்சேகாவின் இன்றைய அரசியல் சுலோகங்களில் ஒன்றாக ஊடக சுதந்திரமும் இருப்பது விநோதமான விடயமாக இருப்பது போலவே மகிழ்ச்சிக்குரிய விடயமாகவும் இருக்கிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்குத் தாவிய மங்கள சமரவீரவும் ஒரு காலத்தில் அரசாங்க ஊடகங்களல்லாத ஏனைய ஊடகங்களை எதிரியைப் போல் கருதியவர். அவரே சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்தார். அவர் அப் பதவியில் இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊடகங்கள் விடயத்தில் முக்கியமான சம்பவமொன்று தான் 1997ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யுமாறு கோரி ஐ.தே.க. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில நடத்திய ஆர்ப்பாட்டம். அந்த ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் பொலிஸாரையும் குண்டர்களையும் கொண்டு கலைத்தது. அப்போது பொலிஸாராலும் குண்டர்களாலும் இந்த நிகழ்வை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டனர். அவர்களது கமெராக்கள் அடித்து நொருக்கப்பட்டன. சில கமெராக்கள் குண்டர்களால் பறிக்கப்பட்டன.

பதவியில் இருக்கும் வரை சமரவீர இந்த அடாவடித்தனத்தை நியாயப்படுத்தினார். ஊடகவியலாளர்களும் ஐ.தே.கவினரும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் புக முற்பட்டதால் அவர்கள் தாக்கப்பட்டனர் என்றே அவர் அப்போது வாதிட்டார்.

இப்போது அவருடைய அரசியலும் பெரும்பாலும் ஊடகங்கள் மீதே தங்கியிருக்கிறது. இன்று அவரே சில இணையத்தளங்களை நடத்த உதவி வருகிறார். ஊடக சுதந்திரத்தைப் பற்றி அக்கறையோடு பேசுகிறார்.

இவையெல்லாம் இப்போது ஊடக சுதந்திரத்தை மதியாது நடந்து கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் புத்தியூட்டும் நிகழ்வாக இருக்கின்றன. ஆயினும் இப்போது ஊடகங்களை புறக்கணித்துவிட்டு தாமும் ஒருகாலத்தில் சரிந்தால் ஊடகங்களை பாவிக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். அது உண்மை தான். அவ்வாறானதோர் நிலைமை உருவானால் செய்தித் தாகத்தின் காரணமாக ஊடகங்கள் பழையனவற்றை மறந்து விடும் என்பதும் உண்மை தான். ஆனால்
மனச்சாட்சி என்று ஒன்றும் இருக்கிறது அல்லவா?

எம்.எஸ்.எம். ஐயூப்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com