Contact us at: sooddram@gmail.com

 

போராட்டக் களமல்ல பல்கலைக்கழகம்!

ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் மிகத்தீவிரமாக கிளர்ந்தெழுந்த முன்னொரு காலத்தில் பல சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அக் கிளர்ச்சிகளின் வடிவமாகவும் ஆரம்ப நிலைக்களனாகவும் இருந்திருக்கின்றது என்பது உண்மை. தமிழ்த் தேசியப் போராட்டம் சார்ந்து பல்வேறு மாற்றுக்கருத்துக்கள், கொள்கைகள், செயற்பாடுகள் அனைத்தும் குவிந்திருந்த மையமாகவும் பல்கலைக்கழகம் என்றுமே இருந்து வருகின்றது என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது.

விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பேராசிரியை ராஜினி திரணகம, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்து படுகொலை செய்யப்பட்டும் காணாமலும் போன விஜிதரன் மற்றும் செல்வி உள்ளிட்ட மாணவ செயற்பாட்டாளர்கள் என்ற ஒரு பகுதியினரையும்,

மண்சுமந்தமேனியர் நாடகம் மூலம் விடுதலை உணர்வூட்டிய அரங்கச் செயற்பாட்டாளர்கள் பின்னர் அவர்களின் காலநீட்சியின் வெளிப்பாடாக அமைந்த அரங்க விடுதலை வடிவத்தின் முனைப்பு பெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் பங்குதாரர்கள் என்ற இன்னொரு பகுதியினரையும்,

விடுதலைப் புலிகள் தம்மை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக நிலைநிறுத்திய பின்னர் அவர்களைப் பின்பற்றிய மாணவ சமூகம் என இன்னொரு பகுதியினராக பல வகையானவர்களை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தளத்தில் அடையாளப்படுத்த முடியும்.

இந்த அடையாளப்படுத்தல்களின் பின்னணியில் இருந்து நோக்கும்போது தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை நாடி பிடித்துப்பார்க்கும் இடமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உலகத்தின் பார்வையில் தன்னை வைத்துக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியம் சார்ந்து உணர்ச்சியமயப்பட்டு பேசும் பலரும் கருதிக்கொண்டுள்ளனர். இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், அந்த நாடித்துடிப்பை வைத்து தமிழர்களின் வருத்தத்தை உலகம் முழுமையாகக் கற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளதா என்பது சிந்திக்க வேண்டிய விடயமே. இந்தக் கருத்து நிலைப்பட்டு சிந்திக்க விழையும்போது நாம் யாழ் ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை உணர் வுகளை மலினப்படுத்துவதாக யாராவது கருத்து எடுக்கக்கூடாது. தமிழ் மக்களின் கல்விக்கு தனித்துவமான பாதையை தகவமைக்கும் நோக்கில் பரந்த பிரயத்தனங்களின் மத்தியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வளாகமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியோடு சமாந்தரமாக தமிழர்களின் போராட்டமும் வளர்ந்து வந்திருக்கின்றது. போராட்டத்தின் உச்சக்கட்டமான ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தருணங்களில் பல்வேறு விடுதலை அமைப்புகளினதும் ஆலோசனை மையமாகவும் கருத்தாடல் களமாகவும் பல்கலைக்கழகம் இருந்திருக்கின்றது என்பதும் உண்மை. பின்நாளில் ஏனைய ஆயுதப் போராட்ட அமைப்புக்களை பின்தள்ளி விடுதலைப்புலிகள் முனைப்புப் பெற்ற போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும் அவர்களுக்கு சார்பானதாக தன்னை மாற்றிக்கொண்டதும் உண்மை.

விடுதலைப்புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முக்கிய அமைப்பினராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் திகழ்ந்தனர். அதற்காக அவர்கள் பொங்குதமிழ் நிகழ்வை ஆரம்பித்து அதனூடாக மிகப்பெரும் சமூக அணிதிரட்டலைச் செய்து மக்களின் மொழியாக ஏகப்பிரதிநிதித்துவ முடிவை மொழிந்தனர். பொங்குதமிழ் நிகழ்வின் முக்கிய செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளருமாகவும் இருந்த விஞ்ஞான பீட மாணவர் திவ்வியன், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.

அத்துடன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களும் ஏகப்பிரதிநிதித்துவம் என்ற மந்திரத்துக்கு கட்டுப் பட்டவர்களாக நாடாளுமன்றத் தேர்தலை 2004 இல் சந்தித்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பி னருக்காக தீவிரமான பிரச்சா ரங்களை முன்னெடுத்த துடன், அத்தேர்தலில் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கஜேந் திரன் அதிகப்படியான விருப்பு வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார். இவர் இலங்கையில் அம் முறைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறான வரலாற்று விடயங்களைக் கொண்ட பல்கலைக்கழகம் தன்னை முழுமையான விடுதலைப் பக்குவத்துக்குள் கொண்டு சென்றிருக்கின்றதா என்பது இன்று மட்டுமன்றி என்றுமே சிந்திக்கப்பட வேண்டிய விடயம். வெறுமனே உணர்ச்சி அடிமைகளாகவும் உணர்வுப் பிரதிபலிப்புக்களாகவும் தான் பல்கலைக்கழகம் இருக்கப்போகின்றதா என்ற வினா மிக முக்கியமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் நலன் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பக்கங்கள் பல இன்னும் மீதமாக இருக்கின்றன. இவை தொடர்பில் அக்கறை எடுக்காது வெறுமனே பருவகால கொந்தளிப்புக்களை மட்டும் உமிழ்ந்து விடுவது நீண்டகால நோக்கில் வாய்ப்பாக அமையாது. பல்கலைக்கழகம் இன்னும் தன்னை சமூக மயப்படுத்தவேண்டியுள்ளதுடன் ஆற்றல் திறன்மிகு எதிர்கால சந்ததியை அடைகாக்கும் பொரிகலனாக தன்னை மாற்றவேண்டும். மாணவர்களும் தம்மை சுய ஆளுமை மிக்கவர்களாகவும் எத்தகைய எதிர்கால சவால்களையும் வெற்றிகொள்ளத்தக்கவர்களாகவும் தம்மை வளப்படுத்திக்கொள்வதுடன் உண்மையான சமூகப் பற்றாளன் பிறரை ஒருபோதும் சீண்டுவதில்லை என்பதையும் உள்ளார்ந்தமாக உணர்ந்துகொள்ள வேண்டும். காலக்கனதியை பல்கலைக்கழகம் புரிந்துகொள்ளவேண்டும்.

(நன்றி: தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com