Contact us at: sooddram@gmail.com

 

முன்னவர் குட்டையில் முதல்வரும்.........!

(இடக்கரடக்கர்)

தேர்தல்களில் வெல்வது,நாடாளமன்றத்தில் முழங்குவது,அப்பப்போ வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அறிக்கை அளிப்பது  இவை தான் மக்கள் சேவை என மார்தட்டிக்கொண்டு, மக்களின் அன்றாட வாழ்வியல் பற்றி எந்த சிந்தனையுமற்று உல்லாசப் பவனி வந்துகொண்டிருந்த அந்த அம்பாரியில், தனது முன்னுதாரணச் சகாக்களைப் போலவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏறி அமர்ந்து கொண்டுவிட்டார் என்றே தெரிகிறது.

அரசுடன் பேசியும், இணங்கவைத்தும் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் பெற்றுக்கொண்டு, வடக்கு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவே வடக்கு மாகாணத் தலைமையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லிவந்தவர், இப்போது அதைப்பற்றிய பேச்சை எடுத்தாலே, பதிலுக்கு அரசாங்க எதிர்ப்புப் பேச்சால் தமிழ்மக்களை இதப்படுத்தி விடலாம் என்ற சூட்சுமத்தை கண்டுகொண்டுவிட்டார் போலுள்ளது..

வாழ்வின் இழப்புகள், அவலங்கள், அன்றாடப்பாடுகள்,அல்லாட்டங்கள் அனைத்தையும்,எதிரி எனப்படும் சிறீலங்கா அரசாங்கம் மீது ஏற்றிவிடப்படும் உணர்ச்சிகர ஆவேசத்தினுள் மறந்து மாய்ந்து போய்க்கொண்டிருக்கலாம் என்றுதானே மக்களும் இருக்கிறார்கள்....!!

மாகாண சபையை எடுத்து மாதங்கள் இரண்டு தாண்டுகிறது, ஏதாவது மக்கள் நலத் திட்டங்கள்,அதற்கான ஆரம்பம்,அங்குரார்ப்பணம்,அடிக்கல் நாட்டல் எதுவும் இல்லை குறைந்த பட்சம் அதற்கான முன் முயறசிகள், அரசாங்கம் இடமகொடுக்கவில்லை என்றால் அதற்கான அழுத்தங்கள் அதுவும் இல்லை ,ஆனால் நம் மாண்புமிகு முதலமைச்சரும் நேரடியாக போய் நினறு மாவீரர் தினத்திற்கு மரக்கன்றுகள் நாட்டப்படுகிறது. இது தேவையற்ற விடயம் என்று யாரும் சொல்ல முயற்சித்தால் அது அபத்தம். நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மரங்கள் நாட்டுவது என்பது தினமும் செய்துகொண்டிருக்கப்பட வேண்டிய ஒன்று.

முப்பதுவருடகாலத்தை அண்மித்த யுத்தகாலத்தில் போராளிகளும் பொதுமக்களுமாக எத்தனையோ ஆயிரம் பேர் வருசத்தின் 365 நாட்களிலும் மாண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் நினைவாக ஒவ்வொரு நாளும் மரம் நடமுடியும், நடவேண்டும். புலிகளின் மாவீரர்கள் நாளில் மட்டும், வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல்வரும் போய்நின்று மரம் நடுவது, மக்களுக்கான இந்தப் போராட்டத்தில் மரணித்த மற்றவர்களுக்குச் செய்யும் ஓரவஞ்சனையாகாதா.......? என்பதை முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும் ஒருமுறை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும்.

தமிழ்மக்களின் உரிமைகளுக்காகவென நடந்த இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் ஏனைய இயக்கப் போராளிகளாகவும், பொதுமக்களாகவும் இறந்தோரை அலட்சியப்படுத்துவது அவர்களை தீண்டத்தகாதவர் களாக்குகிறது என்பதனையும் அவர்களது பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் இதனால் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதனையும் இம்மாகாணத்தின் அனைத்து மக்களுக்குமான முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும்.

அவர்தான் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும், முதலமைச்சரை முன்னிறுத்திய முன்னையவர்களான சேனாதிராசா,பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் தத்தமது அமைப்புகளின் தலைமைகள் உட்பட்ட இறந்த ஏனையவர்களும் அவமதிக்கப் படுகிறார்களே என்பதை உணரவில்லையா......? மாவீரர் தினத்துக்கு மரம் நடும் விக்கினேஸ்வரனை ,அமிர்தலிங்கம் நினைவு தினத்திற்கும், தியாகிகள் தினம் ,வீரமக்கள் தினம் போள்றவற்றிற்கும் மரம் நட வைப்பார்களா இவர்கள்....? சுயத்தை விற்று சுகம் தேடுபவர்கள் ஆச்சே இவர்கள் எப்படி இது நடக்கும்.

 போரிட்டு மடிந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் நினைவாக மரம் நடுவது ஒன்றும் தவறல்ல ஆனால் கடைசியாகப் போரிட்டு மடிந்த இயக்கத்தின் உறுப்பினர்களை மட்டும்தான் கௌரவப்படுத்துவேன் என்று ஒரு முதலமைச்சர் நடந்துகொள்வது, அவரும் அடுத்த தேர்தலை எண்ணி மக்களை உணர்ச்சிவசமாக வைத்திருக்க விரும்பும் சிறீதரன், சரவணபவன, சேனாதிராசா வகையறாக்களில் ஒருவராக மாறிவிட்டார் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

போர்களத்தில் தனியொரு அமைப்பாக தம்மைத்தாமே நிலைநிறுத்தியதனூடக அழிவுயுத்தம் ஒன்றை மட்டுமே நடாத்தி, தம்மையும் மாய்த்து, இறுதிக்கட்ட மக்கள் அழிவுக்கும் களம் அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள் என்பதனை 2009 மே 18ன் யுத்த வெற்றியை கொழும்பில் அரசாங்கத்தின் சக நண்பர்களுடன் கொண்டாடிய விக்கினேஸ்வரன் அதற்குள் மறக்கும் அளவிற்கு அவருக்கு பதவிசுகம் வந்து விட்டதுதான் இன்றைய வேதனை...... 

சந்திரிகா அம்மையார் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும ,மாவட்ட அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வடமாகாண அபிவிருத்திக்கான இணைத்தலைமையை ஏற்கமாட்டேன் எனவும் அவர் அறிவித்திருப்பதானது, வடக்கை மேம்படுத்துவதை விட அரசை எதிர்த்துப் பேசி, தொடர்ந்து பதவி அரசியல் செய்யும் தனது சகாக்களைப் பின்பற்ற அவரும் முடிவு செய்துவிட்டதை மேலும் வெளிப்படுத்துகிறது.

இந்த நாட்டின் சகல இனமக்களினதும் பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின்  ீழேயே மாகாண சபைகள் வருகின்றன. அந்த ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் கீழ் செயல்படுவேன் என அவர் முன்னிலையிலேயே இவர் சத்தியப்பிராமணம் எடுத்தவர்.

ஆனால் மக்கள் நலனுக்கென அவர் தரும் இணைத்தலைமையை ஏற்கமாட்டேன் என்பது, மற்றொரு அரச எதிர்ப்பு வீரனாக, உணர்ச்சியாளராக மீண்டும் மக்களின் வாக்குகளை அள்ள மட்டுமே முதலமைச்சருக்குப் பயன்படும்......... தவிர நமது மக்களுக்கு எப்படிப் பயனுள்ளதாகும் என்பதைச் சொல்லாமல் மறைத்துச் செய்யும் 'வீரவசன அரசியலில்' அவரும் இறங்கிவிட்டதாகத்தான் இதனைக் கொள்ள வேண்டும்......

(நன்றி: தேனி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com