Contact us at: sooddram@gmail.com

 

போரில் இறந்தவர்களை நினைவு கூறலும் நல்லிணக்கமும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

போருக்குப் பின்னரான காலத்தில் தாம் வட பகுதியில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் அப் பகுதி மக்கள் ஆளும் கட்சிக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது பெருமளவில் வாக்களிக்கவில்லை என்று தென் பகுதியில் சில அரசியல்வாதிகள் கவலைப் படுகிறார்கள். போர் நடைபெற்ற காலத்தில் வாழ்ந்ததைப் பார்க்கிலும் நிம்மதியாக வாழும் நிலையிலும் வட பகுதியில் சிலர் இன்னமும் புலிகளை பூஜித்து வருகிறார்களே என்பதும் சிலரது ஆதங்கமாக இருக்கிறது.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாக புலிகளின் மாவீரர் தினம் வட பகுதியில் வெளிப்படையாக கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. தமிழ் ஊடகங்களும் அக்காலத்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் பத்திரிகைகள் வட பகுதியில் இது தொடர்பாக இடம்பெற்ற பல நிகழ்வுகளை அறிக்கையிட்டுள்ளன.

கடந்த வருடம் கார்த்திகை தீப நிகழ்வும்; புலிகளின் மாவீரர் தினத்தோடு சம்பந்தப்பட்டது. இரண்டும் ஒரே தினங்களில் கொண்டாடப்பட்டதால் புலிகளின் நிகழ்வை தடுக்க முற்பட்ட பாதுகாப்புப் படையினர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் பல இடங்களில் கார்த்திகை தீபமேற்றியவர்களையும் புலிகளுக்காக தீபமேற்றியவர்களாக நினைத்து கைது செய்ய முற்பட்டதாக செய்திகள் வந்தன.

இவ் வருடமும் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கடந்த செவ்வாய்க்கிழமை  ாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது புலிகளையும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் பாராட்டிப் பேசினார். பின்னர் அவ்வுரை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட்டது. அவரது உரையை தாம் அங்கீகரிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பின்னர் டெய்லி மிரர் பத்திரிகைக்குக் கூறியிருந்தார்.

வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பானத்தில் வட மாகாண கல்வி அமைச்சு வளாகத்தில் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு மர நடுகையில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறின. ஆனால் அவர் சட்டம் தெரிந்தவர் என்பதால் அவரது உரை பொதுவானதோர் நிகழ்வில் நிகழ்த்தபட்டதைப் போன்றதாகவே அமைந்திருந்தது.

அவர் புலிகளை பாராட்டிப் பேசியிருந்தால் பல தமிழர்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். அதைப் போலவே அரசாங்கமும் மகிழ்ச்சியடைந்திருக்கும். ஏனெனில் அவர் பிரிவினைக்கு எதிராக செய்து கொண்ட சத்தியப்பிரமானத்தை மீறினால் மாகாண சபையை கலைத்துவிட அரசாங்கத்திற்கு சட்ட அதிகாரம் கிடைத்துவிடும். அரசாங்கம் அதற்கான வாய்ப்பு வரும் வரை காத்துக்; கொண்டு இருக்கிறது.

இந்த விடயத்தை தென் பகுதி மக்களும் அரசியல்லாதிகளும் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களும் அறிந்திருப்பது முக்கியமாகும். புலிகள் வட பகுதியை நிர்வகித்த காலத்தில் இருந்த நிலைமையையும் புலிகள் வட மாகாணத்தை மட்டுமாவது கைப்பற்றிக் கொண்டு தமிழீழத்தை பிரகடனப்படுத்தியிருந்தால் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலைமையையும் புலிகளின் செயற்பாடுகளினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் தற்போதைய வட பகுதி நிலைமையோடு ஒப்பிடும் சில சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்கள் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து மீண்டும் போர் காலத்தை அடைய விரும்புகிறார்களா என்று கேள்வி எழுப்புகின்றன.

உண்மையிலேயே போர் காலத்தில் நிலவியதைப் பார்க்கிலும் இன்றைய வட பகுதி நிலைமை நல்லது தான். இப்போது புலிகள் தமது பிள்ளைகளை போருக்காக பிடித்துச் செல்வார்கள் என்று மக்கள் அச்சப்படத் தேவையில்லை. விமானப் படை கண்மூடித்தனமாக குண்டுகளைப் போட்டு தாம் குடும்பத்தோடு அழிந்து விடுவோமோ என்று மக்கள் பயப்படத் தேவையில்லை.

போரில் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலைமையை எவராலும் விவரிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறானதோர் நிலைமையை விரும்புவார்கள் என்று கூறவும் முடியாது. ஆயினும் புலிகள் போரில் தோல்வியடைந்ததை தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளில் பலரும் விரும்பவில்லை.

புலிகளின் நிர்வாகத்தை விரும்பாதவர்களும் அதை விட அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் முறையை விரும்பாமையே அதற்குக் காரணமாகும். வட பகுதியல் வீதிகள் நிர்மானிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு, மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு பல துறைகளில் மேம்பாடு காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது.
ஆனால் அங்கு மக்கள் அரசாங்கத்தை தமது அரசாங்கமாக மதிக்கத் தயாராக இல்லை. அவர்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது அந்த செய்தியைத் தான் அரசாங்கத்திற்கு வழங்கினார்கள். இதைத் தான் தென் பகுதியில் பலரால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் தான் அவர்கள் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதை ஆச்சரியத்தோடு நோக்குகிறார்கள்.

வட பகுதி மக்கள் போரில் இறந்த தமது பிள்ளைகளை நினைவு கூற உரிமை இருக்க வேண்டும் என்று பல தமிழ் அரசியல்வாதிகள் வாதிடுகிறார்கள். இதனை வட பகுதியில் கடமையாற்றும் இராணுவ அதிகரிகளுக்கும் நிராகரிக்க முடியாத விடயமாக இருக்கிறது. ஏனெனில் ஒருவருக்கு என்ன குற்றத்தை செய்தாலும் தமது பிள்ளை பிள்ளையே என்ற உண்மையை அவர்களாலும் நிராகரிக்க முடியாது. எனவே மக்கள் தமது பிள்ளைகளுக்காக தீபமேற்றலாம், ஆனால் அதனை பகிரங்கமாக செய்ய முடியாது என கடந்த வருடம் மூத்த இராணுவ அதிகாரிகள் கூறினர்.

நவம்பர் 27 ஆம் திகதி இந்த நினைவு கூறல்கள் இடம்பெறுவதனாலேயே இந்த விடயத்தில் மோதல் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. ஏனெனில் புலிகள் போரில் இறந்த தமது இயக்கத்தின் முதலாவது போராளியான சங்கரின் இறந்த தினமான நவம்பர் 27 திகதியையே மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தியிருந்தனர்.

அது தமிழீழத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது போராளி இறந்த நாளும் அல்ல. தமிழீழத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது போராளியான உரும்பிராய் சிவகுமாரன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதியே இறந்தார். எனவே நவம்பர் 27 என்பது புலிகள் இயக்க போராளிகளை நினைவு கூறுவதற்காகவே ஒதுக்கப்பட்ட நாளாகும். எனவே போரில் பிள்ளைகளை இழந்தவர்கள் அப் பிள்ளைகள் இறந்த தினங்களில் அவர்களை நினைவு கூறாது நவம்பர் 27 அம் திகதியே நினைவு கூறுவதே அரசாங்கத்திற்கு பிரச்சினையாக தெரிகிறது.

ஆனால் அதற்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் பதிலளித்துள்ளார். இரண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி தமது போராளிகளை பகிரங்கமாகவே நினைவ கூற முடியும் என்றால் புலிகளை நினைவு கூறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் தமிழகத்திலேயே புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடம் அவ்வாறானதோர் நிலைமையை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் இது நல்லதோர் வாதம் என்பதில் சந்தேகமே இல்லை.

இது ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாகும். எனவே தான் போரில் இறந்த சகலரையும் நினைவு கூற பொதுவானதோர் தினத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என ஐ.தே.கு. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கூறியிருக்கிறார். இது
உணர்வு பூர்வமான விடயம் என்பதால் இரு சாராரும் பக்குவமாக நடந்து கொள்வது போலவே நல்லிணக்கத்தையும் மனதில் இருத்தி செயற்படுவது நாட்டுக்கு நல்லதாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com