Contact us at: sooddram@gmail.com

 

தமிழீழம் எனும் தனிநாடு கேட்டவர்கள் ஒரு மாகாண பையைகூட நடத்தமுடியாமல் திக்குமுக்காடுகின்றார்கள்

இயக்கங்கள் உருவானபோதே பல பத்தாக உருவாகியதுபோல முதன்முதலாக உருவாகிய வடமாகாண சபையின் பதவிப்பிரமாண நிகழ்வுகளும் பலபத்து திசைகளிலே நடந்தேறியது. அமைச்சுப் பதவி பகிர்வுகள் தொடர்பாக இழுபறிகளும் கோபதாபங்களும் வஞ்சம்தீர்ப்புக்களுமே இதற்கு காரணமாகும். இதனூடாக சபை உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பு என்பது முளையிலேயே கருகிவிட்டமையானது வட மாகணசபைக்கான ஒரு அபசகுனம்தான்போலும். முதலமைச்சர் சர்வாதிகாரியாக நடக்கிறார் என மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி எழிலன் சுட்டுவிரல் நீட்டும் அளவிற்கு உட்கட்சி ஒற்றுமைகள் சந்திசிரிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் யாழ்விஜயத்தின்போது மாவை சேனாதிராஜாவை சந்திக்கவிடாது முதல்வரும் சுமந்திரனும் பண்ணிய சதிவலைகள் எல்லாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது அந்திம காலங்களில் தள்ளாடுவதை நன்கே புலப்படுத்துகின்றன. இந்த பூசல்களின் உச்சம் வடமாகாண சபையை நிர்மூலமாக்கும் கைங்கரியத்தில்தான் வந்து முடியப்போகிறது என்பதுதான் வேதனையான விடயம்.

தமிbழம் கேட்டவர்கள் ஒரு மாகாண சபையை கூட நடத்தமுடியாமல் திக்குமுக்காடு வதை எண்ணி தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் வெட்கப்பட வேண்டும். ஆட்சி நடத்துவது என்பதும் மக்களின் குறைநிறை களை தீர்ப்பது என்பதும் அவ்வளவு எளிதான காரியங்களல்ல. விமர் சனம் பண்ணுவது இலகு வானது. சுமார் அறுபது வருடகால அரசியல் வரலாறு கொண்ட தமிழரசு கட்சியினரை பொறுத்தவரையில் அவர்கள் ஒருபோதும் ஆட்சி நடத்தவில்லை. விமர்சிப்பதும சவால்விடுவதுமே அவர்களின் அரசியலாக இருந்து வந்திருக்கிறது. மக்களுக்கு சேவையாற்றிய அனைவர்மீதும் துரோகப்பட்டம் சாட்டுவது ஒன்றே தமிழரசு கட்சியினரின் அரசியலின் பிரதானபாகமாகும்.

சிறிமாவை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் கட்டவிட்டுவிடுவோமோ? மட்டக்களப்பு நல்லை யாவை அமைச்சரவையில் நீடிக்க விட்டுவிடுவோமோ?

துரையப்பாவை அடுத்தமுறை மேயராக விட்டுவிடுவோமோ? பிள்ளையானை இரண்டாம் தடவையாக முதலமைச்சராக விட்டுவிடுவோமோ? சங்கரியை வெற்றியடைய விட்டுவிடுவோமா? பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த விட்டுவிடுவோமா? என்று மற்றையோருக்கு சவால்விட மட்டுமே தெரிந்தவர்கள் இந்த கூட்ட மைப்பினர். இவர்கள் ஒருபோதும் சவால்களை ஏற்று அரசியல் செய்தவர்கள் அல்லர். அதனால் தான் கிடைத்த மாகாண சபையைகூட சரியாக இயக்க இவர்களால் முடியவில்லை.

ஆனால் வடமாகாணசபை எதிர் கொண்டிருக்கும் சவால்கள் ஏராளம். வன்னிபிரதேசம் முப்பது வருட கல்வியை தொலைத்து நிற்கிறது. யாழ்ப்பாண விவசாயிகள் தமது மீளுயிர்ப்புக்காக காத்துக்கிடக் கிறார்கள். கரையோர மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் அன்றாடம் அல்லல்படுகிறார்கள். இதற்கிடையில் யுத்தத்தின் விளைவுகளான விதவைகளும் அங்கவீனர்களும் ஆயிரக்கணக்கான வாழ்வின் விளிம்புக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவைபற்றியெல்லாம் வடமாகாணசபை கிஞ்சித்தேனும் இன்னும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த சவால்களை எதிர் கொண்டு பயணிக்க கூட்டமைப்பினருக்கு அக்கறையில்லை. தமது குடும்ப சண்டைகளின் துர்நாற்றம் மக்களுக்கு தெரிந்துவிடாமல் இருக்க அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டே காலம் கடத்த முயல்கின்றனர். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முன்வைக்கப்பட்ட போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வடமாகாணசபைக்கு மேலதிக நிதிகோரவுள்ளதாக அறிவித்தார். இவையனைத்தும் அரசின்மேல் பழியைபோட்டு தாம் தப்பிக்கொள்ளும் முயற்சியாகும்.

அரசு மற்றைய அனைத்து மாகாணங்களையும் விட வடமாகாணத்துக்கே கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. வடமாகாணத்திற்கு ரூபா 5.831 மில்லியனும், சப்ரகமுவ மாகா ணத்திற்கு ரூபா 4.580 மில்லி யனும், மத்திய மாகாணத்திற்கு ரூபா 3.927 மில்லியனும், ஊவா மாகாணத்திற்கும் ரூபா 3.873 மில்லியனும், கிழக்கு மாகாணத்திற்கு ரூபா 3.546 மில்லியனும், வட மத்திய மாகாணத்திற்கு ருபா 3.393 மில் லியனும், மேல் மாகாணத்திற்கு ரூபா 2.755 மில்லியனும், வட மேல்மாகாணத்திற்கு ரூபா 2.470 மில்லியனும், தென் மாகாணத்திற்கு ரூபா 2.095 மில்லியனும் ஒதுக்கப் பட்டுள்ளன என்கிற உண்மை களை மறைக்கும் முயற்சியே முதலமைச்சரின் பேச்சாகும்.

ஒதுக்கப்பட்ட நிதிகளை உரிய வழிகளில் மக்களுக்கு செலவுசெய்ய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். திட்டங்கள் தீட்டப்படுவதற்கு மக்களின் பிரச்சனைகள் பற்றிய கரிசனையும் கள ஆய்வுகளும் தேவை. ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பு அவசியமானது. எருக்கலம் பிட்டியிலிருந்து தண்ணீருற்று வரைக்கும் பருத்தித்து றையிலிருந்து பண்டாரிகுளம் வரைக்கும் மக்களின் தேவைகளை அறிய சென்று வரவேண்டும். பென்சனியர்மாரால் நிரப்பப்பட்டிருக்கும் வட மாகாண சபைக்கு இவையெல்லாம் ஏழாம்பொருத்த மானவை. வடமாகாண சபையைகூட யாழ்ப்பா ணத்தைவிட்டு வெளிமாவட்டத்துக்குள் அமைக்க இடந்தராத மேட்டுக் குடிகள் எப்படி ஏழை மக்களின் வாசல் தேடி அபிவிருத்தி செய்யபோ கிறார்கள்?

இந்த தொல்லைகள் வேண்டாம் என்பதே யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் இணைத்தலைவர் பதவியை முதலமைச்சர் ஏற்க மறுத்ததன் பின்புலமாகும். தேர்தலுக்கு முன்னர் வடமாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறிக்கு வழங்கப்பட்டு இருந்த இணைத் தலைவர் பதவிப் பொறுப்பு இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கெடுக்க மாட்டாமைக்கு மகிந்த சிந்தனையின் காவலராக தன்னால் இயங்கமுடியாது என்று முதல்வர் சொல்லும் காரணம் மக்களின் காதுகளில் பூ சுற்றும் நடவடிககையாகும். மகிந்த சிந்தனைதான் நாடுமுழுக்க செயல்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர்.

வடமாகாணமும் இலங்கைக்குள்தான் இருக்கிறது. தமிழ் மக்களும் செலுத்துகின்ற வரிப்பணம் இலங்கையரசுக்குத்தான் செல்லுகின்றது. இதே ஜனாதிபதியிடம் சென்றுதான் முதலமைச்சரும் பதவிப் பிரமாணம் செய்து வந்தார். மகிந்தசிந்தனையின் கீழ் செயல்படும் சமூர்த்தி கிராம எழுச்சி மற்று பலவிதமான நல்வாழ்வு திட்டங்கள் ஒன்றும் தீண்டதகாதவையல்ல.

அவற்றின் பெயரால் மீண்டுவரும் லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் உண்டு. இச்செயன்முறைகளில் சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான தமிழ் உத்தியோகஸ்தர்களின் வாழ்வாதாரமே மகிந்த சிந்தனையால் தான் காப்பாற்றபடுகிறது. வாழ்நாளெல்லாம்சிங்களஅரசுக்கு சேவகம் செய்துவிட்டு இன்று முன்னாள் நீதியரசருக்குரிய ஓய்வூதியம் பெறுகின்ற முதல்வருக்கு வேண்டுமானால் இந்தவிதமான ஸ்டன்ட் அறிக்கைகள் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அவை ஜீவனாம்ச பிரச்சினைகள் ஆகும் தவிர மகிந்த சிந்தனை எந்தெந்த புள்ளிகளில் தமிழ் மக்களுக்கு எதிராகவுள்ளது என்பதை முதலமைச்சர் விளக்கவேண்டும்.

ஆளுநருக்கு அதிகாரமா? முதல்வருக்கு அதிகாரமா? என்று ஒருபுறம் கேள்வி எழுப்பிகொண்டு இதுவரை காலமும் ஆளுநர் வகித்த அந்த பொறுப்பை தமக்கு வழங்க ஜனாதிபதி வழங்க முன்வரும்போது அதை புறங்கையால் தட்டிவிட முனைவது சுத்தமான கையாலாகத்தனமாகும். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பது பிரதேசசபை, மாகாணசபை பாராளுமன்று போன்ற அனைத்தினூடாகவும் அந்தந்த மாவட்டம் சார்ந்த ஒதுக்கப்படுகின்ற நிதிகளை போடப்படுகின்ற திட்டங்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறி முறையாகும். இந்த பொறிமுறையில் பங்கெடுத்து தலைமையேற்று நடத்துவதென்பதுவும் அதிகாரங்களை கையகப்படுத்தும் முக்கிய செயல்பாடுகள்தான்.

இதுபோன்ற அபிவிருத்தி மையங்களில் பங்கெடுத்து ஒதுங்குவது முதல்வர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பெரும்துரோகமாகும். அரசின்கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் பங்கெடுக்கமுடியுமென்றால் எம்பி பதவிகளும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் பதவிகளை பெறமுடியுமென்றால் அதற்கான கெளரவங்கள் சம்பளங்கள் சொகுசு வாகன கோட்டாக்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளசிங்களஅரசின் முன் நிற்கமுடியும் ஆனால் மக்களின் அபிவிருத்தி பணிகளில்மட்டும் மகிந்த சிந்தனை கறைபட்டு தங்களின் புனிதம் கெட்டுவிடும். எத்தனை காலத்துக்குத்தான் எமது மக்களும் வேடதாரி அரசியலுக்கு வாக்களிக்க போகிறார்கள்? இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது கூட்டமைப்பல்ல கூத்தமைப்புத்தான் என்பது நிரூபணமாகும் தருணங்கள் மிக விரைவில் வரத்தான்போகிறது.

(மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com