Contact us at: sooddram@gmail.com

 

பார்த்தீனியம் களைகளை அழித்தொழித்து பயன்தரும் பயிர்களைப் பாதுகாப்போம்

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களின் சில பிரதேசங்களில் பார்த்தீனியம் களை பரவிப் பெருக்கமடைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 763 ஏக்கரிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1.75 ஏக்கரிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 0.75 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 107 ஏக்கரிலும் பார்த்தீனியம் களை காணப்படுகிறது. இக் களையினைக் கட்டுப்படுத்தாவிடில், பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைவு குறைவடையும். மனிதர்களின் தோலில் பட்டால் ஒவ்வாமை ஏற்படும், சுவாசம் மூலம் மகரந்தமணிகள் உட்சென்றால் ஆஸ்த்துமா ஏற்படும். கால்நடைகள் அதனை உண்பதால் நோய்கள் ஏற்படலாம். மகரந்த மணிகள் வேறு தாவரத்தில் விழும் போது அவை கருக்கட்டமாட்டா. இதனால் இனப்பெருக்கம் தடைப்படும்.

¡ர்த்தீனியம் ஹில்டோபோரஸ் எல் என்னும் இக்களை ஓர் ஆக்கிரமிப்புக் களையாகக் கருதப்பட்டு 1999ம் ஆண்டின் 35ம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையில் இக்களை பரவாமால் தடுப்பதற்கும் அதனை அழிப்பதற்குமான ஒழுங்கு விதிகள் 2000-12-20 ல் பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானி இலக்கம் 1163/23 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குவிதி 1:2 ல் இக்களை காணப்படும் நிலத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளர் இக்களை காணப்படுவதாக விவசாயப் பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது அப் பிரதேச செயலாளருக்கு உடனடியாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் எனவும், இக்களை தமது நிலத்தில் அல்லது குடியிருக்கும் பகுதியில் காணப்படுவதாகவும் சந்தேகப்படாது இருப்பதற்கான தகுந்த காரணத்தை உறுதி செய்யாத போது அவர் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவராகக் கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு விதி 1:5:1 ல் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறு இழைக்கும் எந்த ஒரு நபரும் நீதவான் முன்னிலையில் குற்றம் செய்தவராக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒரு மாதத்திற்கு குறையாமலும் 6 மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாவிற்கு குறையாததும் அல்லது 100,000 ரூபாவிற்கு மேற்படாத தண்டப்பணம் அறவிடப்படும். அல்லது இவை இரண்டு தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குவிதி 1:14 ல் இவ்விதிகளை அமுல் செய்வதற்கு விவசாயப் பணிப்பாளர் நாயகம் பின்வரும் திணைக்களங்களில் இருந்து அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்களை நியமனம் செய்வார் என்றும் அவர்களுக்கு இது தொடர்பான அதிகாரம் அளிக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கல்வித் திணைக்களம்,

* விவசாயத் திணைக்களம்,

* கமநலசேவைத் திணைக்களம்,

* புகையிரதத் திணைக்களம்,

* பிரதேச செயலாளர்கள்,

* மாநகர சபைகள்

* மகாவலி அதிகார சபை,

* வீதி அபிவிருத்தி அதிகார சபை,

* நீர்ப்பாசனத் திணைக்களம்

* சுகாதாரத் திணைக்களம்,

* கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்,

* கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்

இக்களையினால் ஏற்படும்

பாதிப்புக்கள் வருமாறு;

* பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்

* இவற்றின் மகரந்தமணிகள் செய்கை பண்ணும் பயிர்களின் குறிகளில் விழுந்தால் கருக்கட்டல் தடைப்படும்.

* விளைச்சலில் 30-40 வீழ்ச்சி ஏற்படும்

* மனிதனின் தோலில் பட்டால் ஒவ்வாமை ஏற்படும்

* கால்நடைகள் உண்டால் நோய்கள் ஏற்படலாம்

* தாவரங்களின் பல்வகைத் தன்மை அழிக்கப்படுகிறது

பார்தீனியத்தை இனங்காணும்

முறைகள் பின்வருமாறு:

* இது எஸ்டரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஓராண்டுக் களையாகும்.

* 50 தொடக்கம் 150 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

* இலைகள் செவ்வந்தி பூச்செடியின் இலையமைப்பை ஒத்தது.

* 4 தொடக்கம் 5 வாரத்தில் முனையரும்பில் சிறிய வெண்ணிறப் பூக்கள் தோன்றும்.

* நன்கு வளர்ந்த தாவரம் ஒன்று பல்லாயிரக்கணக்கில் விதைகளை உற்பத்தி செய்யும்

* இவ் விதைகள் பல ஆண்டுகளுக்குப் பின்னும் முளைக்கும் ஆற்றல் கொண்டவை.

கட்டுப்படுத்துவதற்கு உரிய

வழிமுறைகளாவன:

* இக்களையுள்ள இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மண் எடுத்துச் செல்லாதீர்கள்

* பூக்கள் உள்ள பகுதிகளை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லாதீர்கள்

* பூக்கள் உருவாக முன்னரே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

பூக்கள் உருவாக முன்னும், பூக்கள் உருவாகிய பின்னரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு முறைகள்

* கையுறைகள் அணிந்து பிடுங்கிக் காயவிட்டு எரியுங்கள் அல்லது மண்வெட்டியால் கொத்திக் காயவிட்டு எரியுங்கள்.

* கிளைபோசேற் களை நாசினியை விசிறிக் கட்டுப்படுத்துங்கள்

* கிளைபோசேற் 100 மில்லிலீற்றர் 13.5 லீற்றர் நீர் கொள்ளும் தாங்கிக்கு அல்லது 120 மில்லி லீற்றர் 16 லீற்றர் நீர் கொள்ளும் தாங்கிக்கு.

விவசாய நிலங்களில் உள்ள களைகளை

அழிப்பதற்கு

* விவசாய நிலங்களில் உள்ள களைகள் முளைத்தவுடன் கிளைபோசேற் நாசியை விசிறவும்

* பூக்கமுன் உழுதுவிடவும்

* பயிர்கள் இருக்கும் காலத்தில் மற்றைய களைகளுடன் சேர்த்து இக் களையையும் அகற்றி எரிக்கவும்

* உழுவதற்குப் பாவிக்கப்பட்ட உழவு இயந்திரங்கள், இருசில்லு உழவு இயந்திரங்கள் ஆகியவற்றின் சில்லுகள், கலப்பைகள் ஆகியவற்றை சருகுகள் வாழை இலைகளில் மேல் ஏற்றி வைத்துக் கழுவவும்

* பாத்தீனியம் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை உழுது விடவும்

* புல்வெட்டும் கத்தியைப் பாவித்து வெட்டுவது களையின் வெட்டிய இடத்தில் இருந்து பல கிளைகள் தோன்றி இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பாக அமையுமாதலால் புல் வெட்டும் கத்தியைப் பாவிப்பதைத் தவிர்க்கவும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com