Contact us at: sooddram@gmail.com

 

மண்டேலாவுக்கு இன்று பிரியாவிடை

ஆபிரிக்க நாட்டவர்கள் அவரை அப்பா (மாடிபா) என்றே அழைத்தனர். அந்த அழைப்பிற்கு வயது பேதம் இருக்கவில்லை. தென் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்களின் தந்தையாகவே அவர் கருதப்பட்டார். உண்மையில் அவரை அப்படி அழைப்பதில் தவறில்லை. காரணம் அவர் இல்லையெனில் இன்றும் தென் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்கள் உரிமைகள் அற்ற அடிமைகளாகவே வாழ வேண்டி இருந்திருக்கும். உலகில் நெடு நாள் வாழ்ந்தோரின் பெயர் பட்டியலில், தமது பெயரையும் இணைத்துவைத்த நெல்சன் மண்டேலா கடந்த வாரம் இவ்வுலகை விட்டுச் சென்றார்.

தமது எழுபத்து ஆறாவது வயதில் பிறந்த மண்ணின் தலைவராகும் வரையிலான அவரது வாழ்க்கை சாதாரண மனிதரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அபூர்வமான கதையாகும். தமது வாழ்க்கையில் பெரும் பகுதியை அரசியல் கைதியாக சிறைச்சாலையின் சிறிய, இருண்ட அறையில் கழித்த அவர் இறுதி மூச்சுவரை தமது நாட்டு மக்களினதும் உலகினதும் பெரும் மதிப்புக்குரிய புரட்சித் தலைவராக திகழ்ந்தார்.

தென் ஆபிரிக்காவின் பெரும்பான்மையினரான கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினரின் அடிமைகளாக இருந்த போதே அவ் அடிமைகளில் ஒருவராகவே நெல்சன் மண்டேலா பிறந்தார். ஒன்பது வயது சிறுவனாக இருந்த போதே தமது தந்தையை இழந்த மண்டேலாவை, ஆபிரிக்க நாட்டின் ஒரு இனத் தலைவரே வளர்த்தார். சிறு வயது முதலே அவருக்குத் தேவையான கல்வியையும் அவரே வழங்கினார்.

கல்வி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா ஜொஹன் னர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தில் கல்வி கற்று வழக்கறிஞர் ஆனார். அந்த பல்கலைக்கழக வாழ்க்கை கூட இனவாத அடக்குமுறைகளால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் நெல்சன் மண்டேலாவின் மனதை வெகுவாக பாதித்தது. தம்மை மாத்திரமின்றி தாம் சார்ந்த இனத்தவரையும் வேதனைப்படுத்தும் அந்த சமூக வடுவை அழிக்கும் நோக்கிலேயே இளம் மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் சங்கத்தில் இணைந்தார்.

வெகு சீக்கிரமாக மக்களின் மனங்களை கவர ஆரம்பித்தார். அப்போதைய வெள்ளையர் ஆட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் சங்கத்தை முடக்க சகல வழிகளிலும் முயன்றது. அதன் விளைவாக அரசியல் போராட்டக் களம் இரத்தக் களமாக மாறியது. அறுபத்தி ஒன்பது பேர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் செத்துமடிந்த 1956ஆம் ஆண்டில் ஓர் இருண்ட நாளில் நெல்சன் மண்டேலா உட்பட இன்னும் சிலர் பொலிஸாரினால் அரசியல் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர். அதன்போதே அரசியல் போராட்டத்துடன் ஆயுதப் பயிற்சியும் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மண்டேலாவுக்கு வந்தது. அதிலிருந்து ஆபிரிக்க காங்கிரஸின் இளைஞர் சங்கத்தின் இளம் அங்கத்தவர்கள் ஆயுதப் பயிற்சியினையும் பெற்று கொண்டனர். மெரொக்கோவில் ஆயுதப் பயிற்சியினைப் பெற்று நாடு

திரும்பிய நெல்சன் மண்டேலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இரண்டு வருட விசாரணைகளின் இறுதியில் 1964ஆம் ஆண்டில் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை அப்போது ஏற்றுக்கொண்ட போதிலும் அந்த நேரம் தொட்டு தொடர்ந்து நான்கு மணித்தியாலங்களாக அவர் தமது நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அதன்போது தாம் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கி கூறியதுடன் வர்க்கபேத வாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது என வலியுறுத்தினார். அன்று முதல் பதினெட்டு வருடங்கள் நெல்சன் மண்டேலாவை ரொபின் தீவில் இருண்ட சிறிய அறையில் சிறைவாசம் வைத்தது. அப்போதைய தென் ஆபிரிக்க வெள்ளையர் ஆட்சி.

1990ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை பெற்ற மண்டேலா ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தென் ஆபிரிக்க ஜனாதிபதி போட்டியில் பங்கேற்றார். 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற அத்தேர்தலில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஒன்று திரண்டு நெல்சன் மண்டேலாவுக்கு வாக்களித்தது. அதுவரை கடற்கரை, உல்லாச விடுதிகள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும் உரிமைகளைக் கூட கறுப்பு இனத்தவர் பெற்றிருக்கவில்லை. அந்த மிலேச்சத்தனமான அடிமை ஆட்சியில் இருந்து கறுப்பு இனத்தவரை மீட்ட மண்டேலா அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றக்கொடுத்து அவர்களின் அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டினார்.

தமது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இந்த மக்கள் மன்னன் சிறந்த காதல் மன்னன் என்பதையும் மறுப்பதற்கில்லை. தமது இரண்டாவது மனைவி வினீ மண்டேலாவை விவாகரத்து செய்த மண்டேலா தமது எண்பதாவது வயதில் மூன்றாவது திருமணத்தையும் செய்து கொண்டார். இறக்கும்போது அவர் இருபத்தி ஏழு பேரப்பிள்ளைகளின் பாட்டனாகவே இருந்தார்.

தொண்ணூற்று ஆறாவது வயதில் மரணத்தை தழுவிக்கொள்ளும் வரை வாழ்ந்த அவரது நீண்ட வாழ்க்கை மனித இனத்தின் விடிவுக்காக வாழ்ந்த அர்தபுஷ்டியான ஒரு வாழ்க்கை என்பதை மறுப்பதற்கில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com