Contact us at: sooddram@gmail.com

 

கறுப்புக் கொடியில் தொடங்கி

வெள்ளைக் கொடியில் முடிந்த வரலாறு

மீண்டும் ஒரு முறை உருவாக்க முனையும் தமிழ் தலைவர்கள்

வட மாகாண சபை உருவானதிலிருந்து மக்களுக்கான நல்ல செய்திகள் எதுவுமே இல்லை. அரசுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பனிப்போர் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆடு அறுக்க முதல் "எதையோ" அறுப்பதுபோல சபை கூடுவதற்கு முன்பே ஆளுநரிடம் சத்திய பிரமாணம் எடுக்க மாட்டோம் என்று தொடங்கிய கூட்டமைப்பினர் ஆளுனரை மாற்றுவோம் இராணுவத்தை வெளியேற்றுவோம் என்று ஓடி இன்று தேசியக்கொடியை ஏற்ற மாட்டோம் என வந்து நிற்கிறது. மன்னார் - வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வட மாகாண விவசாய அமைச்சரிடம் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர் நிராகரித்து 60 வருடத்துக்கு முந்திய காலத்துக்கு தமிழ் மக்களை அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.

இன்று தேசியக் கொடியை ஏற்ற மறுப்பவர்கள் வெகு விரைவில் கறுப்புக்கொடியை ஏந்துவார்கள் எனவும் எதிர்பார்க்கலாம். ஒருவேளை அரசாங்கம் ஓய்வு பெற்ற ஒரு சிவில் அதிகாரியை வடக்குக்கு புதிய ஆளுநராக நியமிக்கும் நிலை ஏற்பட்டால் கூட அதையும் ஒருபோதும் கூட்டமைப்பினர் வரவேற்கப்போவதில்லை என்பதுமட்டும் நிச்சயம். ஏன் தமிழர் ஒருவரை எமக்கு ஆளுநராக நியமிக்க கூடாது? புதிய ஆளுனரின் வருகையை கறுப்புக்கொடி கொண்டு எதிர்ப்போம் என்பதுதான் அப்போதைய கூட்டமைப்பின் கோசமாக இருக்கும்.

ஏனெனில் தமிழரசு கட்சியின் வரலாறு என்பது கறுப்பு கொடிகளினூடாகவே தொடங்கியது. அதனூடாகவே வளர்ந்தது. தமிழரசுக் கட்சி நடத்திய முதலாவது தேசிய மாநாடு இலங்கையின் (சிங்கத்தின் உருவம் பதித்த) தேசியக் கொடியை தமிழர்கள் ஏற்றுகொள்ள முடியாது. அது தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. என்கின்ற கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியது. இம்மாநாடு 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருகோணமலையில் இடம்பெற்றது. அன்று முதல் தேசிய ரீதியிலான பொது நிகழ்வுகளை பகி;கரிப்பதும் அவற்றில் பங்கெடுக்கும் நாட்டின் பிரதான தலைவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுவதுமே தமிழர்களின் கடமை என்றுணர்த்தியது தமிழரசுக்கட்சி. அதனூடாக பிரிவினைக்கு தூபமிடுவதே தமிழரசுகட்சியின் பிரதான அரசியல் நடவடிக்கைகளாயின.

இத்தகைய பிரச்சாரங்கள் பல இளைஞர்களின் உணர்வுகளை கிளறிவிட காரணமாயின. இலங்கையின் 9வது சுதந்திர தினத்தை பகி;கரிக்க வேண்டும். தேசிய கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடிகளை பறக்க விடவேண்டும் என்று பிரச்சாரங்களை தமிழரசுகட்சி மேற்கொண்டது. இந்த உசுப்பேற்றல்களின் விளைவு 1957ம் ஆண்டு திருமலை நடராஜனின(22 வயது) உயிரை காவுகொண்டது. திருகோணமலை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி தேசியக்கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடியை கட்டும்போது நடராஜன் சுடப்பட்டான். அதுவே தமிழ் தேசிய விடுதலையின் பெயரில் கொடுக்கப்பட்ட முதலாவது உயிர்ப்பலியாகும். அன்று கறுப்புக்கொடியுடன் தொடங்கிய பலியிடல்கள் ஒன்று, பத்து, நூறாகி ஆயிரமாய் வடக்கு கிழக்கை சுடுகாடாக்கிவிட்டு 2009ம் ஆண்டு மே மாதம் புலிகளின் தலைமை வெள்ளை கொடிகளுடன் சரணடையும் வரை தொடர்ந்தது.

இந்த வரலாற்று சம்பவங்கள் எமக்கு எதையும் கற்றுத்தராவிட்டால் தமிழினம் ஈடேற வழியேதும் கிடை யாது.இந்த போராட்டம் எமது மக்களின் சக்திக்கு அப்பால் சென்றுவிட்டது. இது இத்தனை பாடங்களுக்கு பின்னரும் புரியாவிடின் எமதினத்தை என்னசொல்லுவது? . வட மாகாண சபையை கூட்டமைப்பினர் பொறுப்பெடுக்க முன்வந்தமையே இந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களினால்தான் என நம்பிய எமது மக்களுக்கு ஐயோ கேடு.

எப்படியோ மாகாண சபை என்பது தேசிய கொடியை மாற்றுவதற்கோ இராணுவத்தை அகற்றுவதற்கோ உரிய களம் அல்ல.அது எமது மக்களின் வாழ்வாதாரங்களை மீள கட்டியெழுப்ப குறைந்த பட்ச அதிகாரங்களுடனான வாய்ப்புகளை கொண்ட ஒரு சிறு கட்டமைப்பாகும்.அதில் செய்யப்படுகின்ற இணக்கப்பாடுகளும் பரஸ்பரம் கட்டி எழுப்பப்படும் நம்பிக்கைகளுமே அச்சபையை மென்மேலும் வலுப்படுத்த உதவும்.இவையெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தெரியாத விடயதானங்கள் அல்ல. அப்போது ஏன் கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வந்தனர்? இந்த இடத்தில்தான் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது.

இறுதியுத்தத்துக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு வயிற்றுக்கான போராட்டம் பற்றி மட்டுமே கவலையிருந்தது.தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மக்களின் இந்த அவல நிலையை போக்க எதுவுமே செய்ய முடியவில்லை.அரசுடன் இணைந்து இணக்க அரசியல் செய்பவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்தனர். குறிப்பாக கிழக்கு மாகாண தேர்தலை முதலில் கூட்டமைப்பினர் புறக்கணித்த போது தாங்கள் இல்லாமல் இந்த மாகாணசபை முறைமை தேறாது என கணிப்பிட்டனர்.

போதாக்குறைக்கு எமது பத்திரிகையாளர்களும் "சின்னபொடியன் பிள்ளையான்" முதலமைச்சராகி எதை கிழித்துவிட முடியும் என்று தப்புக்கணக்கு போட்டனர். ஆனால் பத்திரிகையாளர்களின் நகைப்பையும் கூட்டமைப்பினரின் சாபத்தையும் கடந்து கிழக்குமாகாண சபை சாதித்துத்தான் காட்டியது. அதனால்பிள்ளையானை எப்படியாவது அரசியலில் இருந்து ஒழித்து கட்டிவிட இரண்டாவது மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு களமிறங்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை உடைத்து கிழக்குமாகாண சபையை தமிழர்கள் பயன்படுத்தமுடியாதவாறு சீர்குலைத்தது.

முதலமைச்சர் மட்டுமல்ல ஏனைய நான்கு அமைச்சர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லாத நிலைமையை ஏற்படுத்தியது தமிழரின் வரலாற்றின் பக்கங்களில் கூட்டமைப்பினர் அடைந்த இமாலைய சாதனையே ஆகும். அதனூடாக தங்களால் செய்யமுடியாத சேவைகளை வேறு யாரும் தமிழ் மக்களுக்கு செய்து விட கூடாது என்கின்ற தமது எண்ணத்தை ஈடேற்றுவதில் கூட்டமைப்பினர் பெருவெற்றி கண்டனர்.

இதே போன்றுதான் எத்தனையோ துரோகப்பட்டங்களை சுமந்து கொண்டு கடந்த இருபது வருடங்களாக தம்மால் முடிந்த சேவைகளை ஆற்றி வந்த டக்ளஸ் தேவானந்தாவின் செயல்பாடுகள் ஏதோ ஒரு வகையில் அவருக்கான வாக்கு வங்கியொன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவதினை கூட்டமைப்பினரால் தடுக்கமுடியவில்லை.இந்த நிலையில் தான் வடமாகாணசபையை டக்ளசின் கரங்களில் கொடுத்து விட்டால் அது தமது அரசியல் எதிர் காலத்தை சு+னியமாக்கிவிடும் என கூட்டமைப்பினர் கணிப்பிட்டனர்.கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தலில் தாம் விட்ட தவறை வடமாகாணசபையினை பகி„;கரிப்பதன் ஊடாக செய்து விட கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். இதன் காரணமாகவே கூட்டமைபினர் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டனர்.ஆனால் அது மக்களுக்கு புரியாது போனதுதான் கொடுமை. இனியாவது இவர்கள் ஏதாவது உருப்படியாக செய்வார்கள் என நம்பியது வீணே.

இல்லாவிட்டால் இத்தனை அழிவுகளுக்கு பின்னர் கிடைத்திருக்கின்ற இந்த சபையைகூட அடாவடித்தனம் பண்ணும் ஒன்றாக சவால்விடும் மையமாக மீண்டும் கறுப்புக்கொடிகளை உருவாக்கும் எதிர்ப்பு அரசியல் புள்ளியாக மாற்ற முனைவார்களா? இது நல்ல சகுனம் அல்ல.மிக விரைவில் இலங்கை சுதந்திரதினம் வருகிறது மீண்டு கறுப்பு கொடியை ஏந்த சொல்லி வட மாகாண சபை தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஏனன்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வட மாகாண சபையை கைப்பற்றியது தாங்கள் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும்படியான கருமங்களை ஆற்றுவதற்கல்ல. அதுபோன்ற கருமங்களை தமது அரசியல் எதிரிகள் யாரும் ஆற்றிவிடகூடதிருக்கவேயாகும்.

இனி அவர்கள் கறுப்புகொடியில் தொடங்கி வெள்ளை கொடியில் முடிந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை உருவாக்க முனையும் தமிழ் தலைவர்களாக வலம்வரப் போகிறார்கள். தமிழ் மக்களே தயாராகுங்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com