Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்கமும் தமிழ் தரப்பும் சந்தித்தே தான் ஆக வேண்டும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு அரசியலமைப்பு திருத்தத்திற்காக அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவையும் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஆகியவற்றை கண்டறிவதற்கான குடிசன மதிப்பீட்டையும் நிராகிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தலைவர்களின் கூட்டத்தை அடுத்து தெரிவித்துள்ளனர். இதில் நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் தெரிவுக் குழுவை நிராகரிப்பதென்ற முடிவு புதியதல்ல. அக்குழு நியமிக்கப்படும் முன்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை நிராகரித்திருந்தது. குடிசன மதிப்பீட்டை நிராகரிப்பதற்கான முடிவு தான் இவற்றில் புதிய முடிவாகும்.

இனப்பிரச்சினை தொடர்பான தெரிவுக் குழுவை நிராகரித்தாலும் பேச்சுவார்த்தைக்கு வருமாரு கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த அழைப்பை கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை. வரவு - செலவு திட்டத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி, கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால் தாம் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை என்றே இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதைத் தவிர தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை என்றும் ஜாதிக்க ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் தான் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்.

சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச போன்ற தமது அமைச்சர்கள் எதைக் கூறினாலும் தமிழ் தேசிய கூட்டமப்புடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருப்பதனாலேயே அவர் பேச்சுவார்ததை நடத்த வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறார். தெரிவுக்குழுவை நியமித்ததன் மூலமும் பேச்சுவார்த்தைக்கான அவசியத்தை அரசாங்கம் உலகத்தார் முன்னிலையில் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழ் தரப்பினரும் பிரச்சினைகளை முன்வைத்த வண்ணமே தான் இருக்கிறார்கள். அதிகாரப் பரவலாக்கல், காணிப் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு, காணாமற் போனோர்களின் பிரச்சினைகள் என்று பலவற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றையும் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லை.

அரசாங்கமும் தமிழ் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றே சர்வதேச சமூகமும் அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஜனாதிபதியின் அழைப்பின் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தை இலக்காக வைத்தே ஜனாதிபதி, தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியிருந்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதமும் இவ்வருடம் மார்ச் மாதமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு பாதகமான இரண்டு பிரேரணைகள் நிரைவேற்றப்பட்டன. அதிகார பரவலாக்கலை முறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் அந்தப் பிரேரணைகளின் இருந்தது. எனவே தாம் அந்த விடயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமை பேரவைக்கு எடுத்துக் காட்ட அரசாங்கத்திற்கு ஏதாவது ஆதாரம் அவசியமாக இருக்கிறது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இருந்தால் அதனை ஆதாரமாக எடுத்துக் காட்டலாம். அதைத் தான் கிரியல்ல கூறுகிறார்.

இதற்கு முன்னரும் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமையும் அவர் அவ்வாறு கூறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தாம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே புலிகள் போராடுகிறார்கள் என்று உலகத்;தார் முன் எடுத்துக்கூற அரசாங்கம் முயற்சித்தது.

அதற்காக அக்காலத்தில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாடொன்றை கூட்டினார். பின்னர் அந்த மாநாடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்தது. அக்குழு ஒரு வருடத்திற்கு மேலாக கூட்டங்களை நடத்தி போர் முடிந்த உடன் அதாவது 2010ஆம் ஆண்டு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. அவ்வளவு தான். அந்த அறிக்கை காணாமற்போய்விட்டது.

பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசணை வழங்குவதற்காக மர்சூகி தருஸ்மான் தலைமையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது இலங்கை அரசாங்கம் 2010ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் ஆணைக்குழுவொன்றை நியமித்தது. அக்குழு 2011 ஆண்டு தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. அவர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டது. எனவே அரசாங்கமும் அந்த அறிக்கையை காட்சிப் பொருளாகிக் கொண்டது.

ஆனால் தாம் நியமித்த அந்த ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்ற அரசாங்கம் தயங்கி வருகிறது. கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்கள், செனல் 4 விடியோ, போன்ற பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என அவ்வறிக்கையில் கூறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அவற்றைப் பற்றி நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.

தெரிவுக் குழுவை நியமிக்கு முன்னரும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. அந்த காலத்திலும் அரசாங்கம் அப்பேச்சுவார்தைகளையும் உலகுக்கு காட்டி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி வந்தது.

இதனிடையே தான் அரசாங்கம் திடீரென தெரிவுக் குழுவை நியமிக்கும் ஆலோசனையை முன்வைத்தது. அந்த நிலையில் தாம் அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவை தெரிவுக்குழுவின் அடிப்படையாகக்கொள்ள வேண்டும் என தாம் கூறியதாகவும் அரசாங்கம் அதற்கு இணங்கியதாகவும் தமிழ் கூட்டமைப்பு அப்போது கூறியது.

ஆனால் தாம் அதற்கு இணங்கவில்லை என பின்னர் அரச பிரதிநிதிகள் கூறினர். இதன் காரணமாகவே தமிழ் கூட்டமைப்பு தெரிவுக் குழுவை நிராகரித்தது. ஆனால் அரசாங்கம் தெரிவுக் குழுவை நியமித்தது. அதற்காக ஆளும் கட்சியிலிருந்து 19 பேர் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஏனைய கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. எனவே தெரிவுக்குழு கூடாமலே அதன் தொழிற்படும் காலம் கடந்து விட்டது.

எனவே தான் சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் அதன் காலத்தை நீடித்தது. அவ்வாறு தெரிவுக் குழுவின் காலம் நீடிக்கப்பட்டதன் பின்னர் தான் ஜனாதிபதி பேச்சுவார்ததைக்கு வருமாறு சம்பந்தனையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அழைத்திருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தை விடயத்தில் அரசாங்கத்தின் நோக்கமும் சந்தேகமாக இருக்கிறது தான். அதேவேளை இலங்கையின் சமாதான பேச்சுவார்ததை வரலாறும் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை தான். ஆனால் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேறு என்ன வழி இருக்கிறது என்பதே இங்குள்ள கேள்வியாகும்.

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான உலகம் ஏற்றுக்கொண்ட நாகரிகமான ஒரே வழி பேச்சுவார்த்தையே. பேச்சுசார்த்தைகளின் போது சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஒருவருக்கொருவர் பல நெருக்குவாரங்களை ஏற்படத்தலாம். இருந்த போதிலும் பிரச்சினைகள் இருப்பதாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அரசாங்கம் தமிழ் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தியே ஆக வேண்டும்.

அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே தான் ஆக வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மனித உரிமை பேரவையில் காட்சிப் பொருளாக பாவிக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் மார்ச் மாதத்தின்; பின்னராவது பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர இருசாராருக்கும் வேறு வழியில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com