Contact us at: sooddram@gmail.com

 

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் மறைவு

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84. பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள். மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார். 'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர் கே.பாலசந்தர்.

இயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:

கே.பாலசந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர். நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர். இன்று அவர் நம்மிடையே இல்லை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்த பாலசந்தர் படிக்கும் போதே 1960-களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவியில் இருந்தார்.

'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'மெழுகுவர்த்தி' மற்றும் 'நவக்கிரகம்' உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது.

திரைப்படத் துறையில் அவர் 1965-ஆம் ஆண்டு நுழைந்தார். தன் முதல் படத்தில் நாகேஷை குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்த அவரது 'நீர்க்குமிழி' அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது.

அது முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. காதல் கதைக்கு இவரது இந்திப் படமான 'ஏக் துஜே கே லியே' ஒரு பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தது.

தெலுங்கில் 'மரோசரித்ரா' என்ற படம்தான் இந்தியில் 'ஏக் துஜே கே லியே'-வாக மாறியது. தெலுங்கில் சரிதா நாயகியாக நடிக்க கமல்ஹாசன் நாயகன். இந்தியில் சரிதாவுக்கு பதிலாக ரதி அக்னிஹோத்ரியை கமலின் நாயகியாக நடிக்க வைத்தார். தெலுங்கு, இந்தி இரண்டிலுமே இந்தப் படம் பல மைல்கல்களைக் கடந்து சென்றது.

மைய நீரோட்ட வணிக சினிமாவில் இயங்கினாலும், சமரசமற்ற தன்மையில் அவரிடம் தனிச்சிறப்பான உத்திகள் பளிச்சிட்டது. சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் வடிவ ரீதியில் ஒவ்வொரு விதமாகவும் அவர் படங்களை கொடுத்து வந்தார். பல படங்கள் சமூக-அரசியல் புலத்தை கதைக்கருவாக கொண்டது. நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை முறை அவரது படங்களில் சிறப்பாக கையாளப்பட்டது.

சினிமாவில் சமூகப் புரட்சி

பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள், அதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயர்வுக்கும் வித்திட்டது என்று கூறலாம்.

மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலசந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான் நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார்.

அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார். இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.

திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விவேக், பிரகாஷ் ராஜ், ஏ.ஆர். ரஹ்மான் என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம்.

எத்தனையோ இளம் இயக்குநர்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்டுகளாக இவர் படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார். இவரது உத்திகள் பல இளம் இயக்குநர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

இளம் நடிகர்களுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படியோ அப்படித்தான் இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் திலகம் கே.பாலசந்தர்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு...

தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறுதிப்பாடு மற்றும் தான் நினைத்ததை கலைஞர்களிடமிருந்து தருவிக்க முடியக்கூடிய அவரது திறமையே கலைமட்டத்திலும், வணிக அளவிலும் அவரது பெரும் வெற்றிக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக சின்னத் திரையிலும் அவர் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். வெள்ளித்திரையில் காண்பித்த அதே தீவிரம், காட்சியமைப்பில் துல்லியம் என்று இங்கும் அவர் சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை.

1990-களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் ரயில் ஸ்நேகம் சீரியல்கள் அளவில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. கை அளவு மனசு என்ற தொடரும் மக்கள் மனதைக் கவர்ந்தது.

சன் தொலைக்காட்சியில் ரகுவம்சம் என்ற நெடுந்தொடர் மூலம் மெகா சீரியல்களும் ஏன் தரமாக இருக்கக் கூடாது என்ற சிந்தனையை இளம் இயக்குநர்கள் மத்தியில் ஏற்படுத்தினார் பாலசந்தர்.

இவரது படங்கள், அதன் கதைக்கரு, கதாபாத்திர உருவாக்கம், கதையாடல் முறை, உத்தி ஆகியவை இன்று மாணவர்களின் ஆய்வு செய்வதற்கு ஒரு கருவியாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

'நினைத்தாலே இனிக்கும்' குறிப்புகள்:

* ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ் என்ற நடிகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தவர் கே.பாலசந்தர்.

* இயக்குநர் பாலசந்தரை தனது குருநாதராக பாவித்து வருபவர் கமல். காரணம், கமலின் திரையுலக வாழ்க்கையில் பல முக்கிய கதாபாத்திரங்களை அளித்து அவரை மெருகேற்றியவர் கே.பி

* திரைப்பட கல்லூரியில் பேசிய கே.பாலசந்தரிடம் அங்கு மாணவராக இருந்த சிவாஜிராவ் (ரஜினி) "நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்க கே.பி சிரித்தபடி "கேமிராவிற்கு வெளியே அவர் நடிக்க கூடாது" என்று பதிலளித்தார் கே.பி.

தமிழ் சினிமாவுக்கு கே.பி. தந்த அறிமுகங்கள்:

நடிகர்கள்: ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன்

நடிகைகள்: சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, 'கல்கி' ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன்

இயக்குநர்கள் விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியார் கே.பாலசந்தர் தயாரித்த படங்கள் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள்.

( தி ஹிந்து)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com