Contact us at: sooddram@gmail.com

 

ருமேனியர்கள் சொல்கிறார்கள்  கம்யூனிசமே மேம்பட்டது!

ருமேனியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியி லிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிச சிந்தனையை ஆமோதிக்கின்றனர், 60 சதவிகிதம் பேர் கம்யூனிசம் நல்ல சிந்தனை என்று தெரிவித்துள்ளனர். 4 வருடங்களுக்கு முன்பாக இதே போல கருத்து வாக்கெடுப்பு நடத்தியபோது இருந்ததைக் காட்டிலும் தற்போது கம்யூனிசம் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளதாக வாக்கெடுப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

ருமேனிய கருத்து வாக்கெடுப்பு நிறுவனமான சிஎஸ்ஓபி, தனது கருத்துக்கேட்பில் 49 சதமானவர் கள், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நிக்கோலஸ் சேசெஸ்கு ஆட்சிக்காலத்தில் வாழ்க்கை இன்னும் மேம்பட்டதாக இருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரம், வெறும் 23 சதமானவர்கள் மட்டுமே இப்போது நல்ல வாழ்நிலை கொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளனர். மற்றவர்கள் நடுநிலை அல்லதுதெரியவில்லைஎன்று பதில் கூறியுள்ளனர். இதில் பங்கேற்றவர்கள், தங்கள் நேர்மறையான மதிப்பீட்டிற்கு தெரிவித்துள்ள காரணங்களைப் பார்த்தபோது, 62 சதமானவர்கள் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு என்றும், 26 சதமானவர்கள் நல்ல வாழ்க்கைத்தரம் என்றும், 19 சதமானவர்கள் அனைவருக்கும் வீட்டுவசதி என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தெடுப்பை நடத்திய நிறுவனம், ஐஐசிஎம்இஆர் எனப்படும் அரசு உதவிபெற்ற நிறுவனமாகும். (அந்த நிறுவனப் பெயரின் விரிவாக்கம் - கம்யூனிசத்தின் குற்றங்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட ருமேனிய நினைவுகள் குறித்த ஆய்வுக்கான அமைப்பு என்பதாகும்) அவர்கள் கம்யூனிச அச்சுறுத்தல்கள் குறித்து மக்களைப்பயிற்றுவிப்பதற்காகஇந்த ஆய்வைச் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றத்திலேயே மிக மோசமானது, கம்யூனிச ஆட்சியின்போது உங்கள் குடும்பம் எத்தகைய பாதிப்புக்கு உள்ளானது? என்ற கேள்விக்கான பதில்களாகும். மிகக் குறைவாக 7 சதவீதமானவர்களே தாங்கள் கம்யூனிச ஆட்சியின்கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், அத்துடன் 6 சதமானவர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்றாலும் குடும்ப உறவுகளின் வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதிலும், தரப்பட்டுள்ள காரணங்களில், குறிப்பானது பொருளாதாரம். 1980களில் ருமேனியாவின் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிக்கனத்திட்டத்தின்போது ஏற்பட்ட பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதாக பெரும்பாலானவர்கள் சொல்லியுள்ளனர். ஒரு சிறிய அளவிலானவர்கள் மட்டுமே, தங்கள் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டதாகதெரிவித்துள்ளனர். மற்றும் ஒரு பகுதியினர் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் தாங்களோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களோ சிறையில் அடைக்கப்பட்டதாகச் சொல்லியுள்ளனர் (பாதிக்கப்பட்டதாக கூறியவர்களிலும் 6 சதமானவர்கள் இந்த பதிலை கூறியுள்ளனர்).

20 ஆம் நூற்றாண்டு கம்யூனிசம் குறித்து பொதுவான நேர்மறை மதிப்பீட்டிற்கு ருமேனியர்கள் மட்டும் வரவில்லை என்று ஐஐசிஎம்இஆர் குறிப்பிடுகிறது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த 2009 ஆம் ஆண்டு பியூ ஆய்வு மையம் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, முன்னாள் சோசலிச நாடுகளின் மக்களில் குறிப்பிட்ட பகுதியினர் முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த விபரங்கள் பின்வருமாறு: போலந்து 35 சதவீதம், செக் குடியரசு 39 சதவீதம், ஸ்லோவேகியா 42 சதவீதம், லிதுவேனியா 42 சதவீதம், ரஷ்யா 45 சதவீதம், பல்கேரியா 62 சதவீதம், உக்ரெய்ன் 62 சதவீதம், ஹங்கேரி 72 சதவீதம்.

ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட 2010 சிஎஸ்ஓபி மற்றும் ஐஐசிஎம்இஆர் கருத்துக் கணிப்புகள், “சந்தைப் பொருளாதாரத்தின்கீழ் பெற்றுள்ள அதிகப்படியான அனுபவங்களில் இருந்து, மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் மாறி வருகிறார்கள் என்று காட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 53 சதவீதம் ருமேனியர்கள் கம்யூனிசத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர். 2010 வாக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ருமேனியாவின் மருத்துவத்துறை தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தற்போது 25 சதவீத சம்பளக் குறைப்பை சந்தித்திருக் கிறார்கள். முதலாளித்துவம் மறு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின் னர் நடந்தவைகளை - அதிகரித் திருக்கும் ஏழ்மை, வேலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை இன்னும் மற்றவைகளை தொகுத்துப் பார்க் கையில் சிஎஸ்ஓபி கணிப்பு முடிவு கள் ஆச்சரியம் தருவதாக இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com