Contact us at: sooddram@gmail.com

 

மொழிகளின் மரணம்

(பேராசிரியர் ஆர். சந்திரா)

26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தபோஎன்ற மொழி மரணமடைந்தது. சிறப்பு அந்தமான்மொழிகளில் ஒன்றானபோமொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும்போமொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான்போமொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டதுஎன இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்தமலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.

ரெமோஎன்ற மொழி ஒரிசா மாநிலத்திலுள்ளபோண்டாஎன்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் களால் பேசப்படுகிறது. தற்போது இம்மொழியை பேசுவோர் 5000 பேர் மட்டுமே. இந்த இனமக்கள் தற் போதுஓரியாமொழியை பேசத் துவங்கி விட்ட நிலையில் வெகு விரைவில் இந்த மொழி (ரெமோ) மறைந்து விடுமென கணிக்கப்பட்டுள்ளது.

2009ல் யுனெஸ்கோ நிறுவனம்அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் வரைபடத்தைவெளியிட்டது. அதில், அழியும் அபாயம் உள்ள மொழிகள், அழிந்து விட்ட மொழிகள் என உலகின் மொழிகளை வகைப்படுத்தியுள்ளது. 2,473 மொழிகள் இதில் அழியும் அபாயத்தில் உள்ளன என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950க்குப் பின்னர் 5 மொழிகள் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்ச யம் அழிந்துவிடும் என்ற பட்டியலிலும், 82 மொழி கள் அழியும் அபாயம் உள்ளவை என்ற பட்டி யலிலும் உள்ளன.

பழங்குடி இன மக்கள் பேசுகின்ற பல மொழிகள்தாய்மொழிஎன்று கருதப்பட்டு அதிகாரபூர்வமாகமொழிஎன்ற வரையறைக்குள் வருவதில்லை. இது தவிர நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அன் றாட வாழ்க்கைத் தேவைகளையொட்டியும் பொரு ளாதார நிர்ப்பந்தங்களினாலும், அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாகக் கருதப்படும் மொழியை கற்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தம், குடி பெயர்வு அதிகரித்துள்ள சூழலில், குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசு கின்ற மொழிகள் சிறிது, சிறிதாக மறைந்து விடு கின்றன.

மைசூரிலுள்ள இந்திய மொழிகள் கழகம் (சிஐ ஐஎல்) மொழிகள் அழியும் அபாயத்தைக் கருதி, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யுனெஸ்கோ நிறு வனம் தயாரித்த வரைபடத்திற்கு உதவிய இந்த அமைப் பின் இயக்குனர் உதயநாராயணசிங், “உலக நாடுக ளின் நிலையோடு ஒப்பிடுகையில், தாய் மொழி அழி யும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யுனெஸ்கோ வரைபடம் வெளியிடப் பட்ட உடனேயே மனிதவள மேம்பாட்டு அமைச்ச கம் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் மற்றும் மிக வும் பழமையான மறைந்து வரும் மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள கமிட்டி அமைத்துள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

சி. ஐ. ஐ.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் சச் தேவாசமூகரீதியில் ஓரங்கட்டப்படுகின்ற மக்க ளுக்கு அவர்களுடைய கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் ஆயுதமாக மொழி பார்க்கப்படுகிறதுஎன்கிறார்.

மொழிகளை பாதுகாப்பதன் மூலமே அந்தந்தப் பகுதியில் தோன்றி, வளர்ந்துள்ள பழக்க வழக்கங் களையும், அறிவியலையும் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, அந்தமானில் மறைந்த போவா சீனியருக்கு அப்பகுதியிலுள்ள செடி, கொடிகள், இலைகள், பழங்கள் என அனைத்தின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி நன்கு தெரியும். மொழி ஆய் வாளர் அபியும் அவரது குழுவினரும் போவா சீனியருடன் பேசி, அந்த விஷயங்களை எல்லாம் சேகரித்து, ஆவணப்படுத்தும் முயற்சியை மேற் கொண்டுள்ளனர். அந்தமானில் பின்பற்றப்பட்டு வந்த பிரத்யேக பழக்கங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்பதற் கான வரலற்று சான்றுகள் நிறையவே உள்ளன. இன்று அந்தமானிலும்இந்திபிரதான மொழியாக மாறி விட்டது. இந்தி கற்பது பொருளாதார ரீதியில் முன் னேற உதவி செய்தவாக அம்மக்கள் கருதுகின்றனர். எனவே முன்பு பேசப்பட்டு வந்த மொழிகள் மறைந்து வருகின்றன.

1894 - 1928 வரை இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் குறித்து ஜி.ஏ. க்ரியர்சன் என்பவர் ஆய்வு மேற்கொண்டு விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள மொழிகளுடன் 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு என்ன சொல்கிறது? குறிப் பிட்ட ஒரு மொழியை குறைந்தது 10000 பேர் பேசி னால்தான், அதுமொழிஎன்கின்ற வரையறைக்குட் பட்டதாக கருதப்படும். 2001 மக்கட்தொகை கணக் கெடுப்பின்படி, பட்டியலிடப்படாத 100 மொழிகள் 3 விழுக்காடு இந்திய மக்களால் பேசப்படுகின்றன. (அதாவது 3 கோடி பேரைவிட அதிகம்) “இந்த மொழிகள் பாதுகாக்கப்படாவிட்டால், அமெரிக்க ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழிகளுக்கு சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட கதிதான் ஏற்படும்என மொழியியல் வல்லுநர் கிரிகெரி ஆண்டர்சன் கூறி யுள்ளதை யுனெஸ்கோவும் வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் அழியும் நிலையிலிருந்தபிலி’ (க்ஷடைi) என்ற மொழியின் பாதுகாப்பு பணியை மேற் கொண்டுள்ள காஞ்சிபடேல்ஒரு மொழி பாதுகாக் கப்பட மூன்று விஷயங்கள் முக்கியமானவை 1. அந்த மொழியை பயிற்றுவிப்பது, 2, அந்த மொழியில் இலக் கியங்களை வெளியிடுவது, 3 இதர மொழிகளை பேசு வோரிடையே குறிப்பிட்ட மொழி பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்என்கி றார். மொழி ஆய்வாளர் அபி, “ஒன்று - முதல் மூன்று வகுப்புகள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய் மொழி மூலம் கல்வி அளித்து, அத்துடன் அந்த மாநில மொழியைக் கற்பிக்க வேண்டும். 4ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை அறிமுகப் படுத்தலாம்என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.

மொழியை அரசியல் ஆதாயங்களுக் கென பயன் படுத்தப்பட்டுள்ளதற்கான வரலாற்று சான்றுகள் நிறைய உள்ளன. சமீபகாலமாக பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழி

கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று மாவோயிஸ்டு கள் குரலெழுப்பி வருகின்றனர்.
இதன் மூலம் பழங் குடி மக்களை தங்கள் வசம் வென்றெடுக்க கருதுகின் றனர். மத்திய இந்தியாவில், மாவோயிஸ்டுகள் கட் டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பட்டியலிடப்படாத, ஆனால் 20 லட்சம் மக்கள் பேசும்கோந்திமொழி மூலம் கல்வி அளிக்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத் தில்தான் கோந்தி மொழி பேசுவோர் அதிகமாக உள் ளனர். இருப்பினும்,ஒர பள்ளிபாட நூல் கூட இது வரை அந்த அரசால் வெளியிடப்படவில்லை. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகரித்தபின், தற் போது, அம்மாநில அரசு கோந்தி, கொர்க்கு, சத் தீஸ்கரி, ஹல்பி, சர்குஜிய ஆகிய மொழிகளில், 3,4, 5ம் வகுப்புகளுக்கான பாடநூல்களை வெளியிட்டுள் ளது. இது பழங்குடி இன மக்களிடையே பெரும் வர வேற்பை பெற்றுள்ளது.

பட்டியலில்வராத மொழிகளை பாதுகாக்கபாஷாஎன்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்வி என்பவர் மொழி பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுவருகிறார்புதன்என்ற கலைக்குழு அமைக் கப்பட்டு பாடல், நாடகங்கள் மூலம் மொழிகளை பாது காக்கும் நடவடிக்கைகளைபாஷாஅமைப்பு மேற் கொண்டுள்ளது. ஹிம்லோக்என்ற அமைப்பு இமா லயப் பகுதிகளில் பேசப்படும் பட்டியலிடப்படாத மொழி

களை காக்க, நூல்கள், வார, மாத இதழ்களை வெளி யிட்டு வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்திலும்மண்டரி’, ‘ஹோ’, ‘அசுர்’, ‘க்ரியா’ ‘குருக்ஸ்போன்ற அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்கஜார்கண்டி பாஷா சாகித்ய சன்ஸ்க்ருதி அக்ராஎன்ற அமைப்பு அம்மாநில எழுத்தாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த அமைப்பு சார்பில் 25 நூல்கள் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

ஜோகர் திசும் கபர்என்ற மாத இதழ் மூலமாக வும், மொழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. 13ம் நூற்றாண்டின் போது வட கிழக்கு சீனாவிலிருந்து அசாம் வந்தஅஹாம்இன மக்கள் அசாமிய மொழியை பேச ஆரம்பித்து, இன்றுஅஹாம்மொழி அழியும் தருவாயில் உள்ளது. எனவே திப்ருகர் பல்கலைக்கழகத்தில் இம்மொழி கற்பிக்கப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ஆங்கில பேராசிரியர் பிரசன்னஸ்ரீகுர்ருஇன மக்களின் வரலாற்றை ஆராய்ந்து, அவர்கள் மொழிக்கு எழுத்து வடி வங்களை கண்டுபிடித்து, உயிர் கொடுத்துள்ளார். ஆந் திரா, ஒரிசா மாநிலங்களில் கொண்டா - டொராமொழி பரவ லாக பேசப்பட்டாலும், பழங்குடி மக்கள்ஓரியாமொழியை பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே இந்த மொழியை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில்சந்தால்இனமக்கள் பெங்காலி பேச ஆரம்பித்து விட்டனர். தற்போது, ‘ஒல்சிக்கிஎன்ற அவர்கள் மொழியில் பேச ஊக்கு விக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் மொழிகள் அழிந்து வருவதை கவ னித்து, “லிவிங் டங்க்ஸ்” (அமெரிக்க அமைப்பு) “சர் வைவல் இன்டர் நேஷனல்” (பிரிட்டிஷ் அமைப்பு) “சொரோ சொரோ” (பிரெஞ்சு அமைப்பு) ஆகியவை ஆய்வு செய்து மொழி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியக் குடியரசு இந்தியாவில் பேசப் படும் மொழிகளை பிரதிபலிக்க வேண்டும். இந்தியா வில் பேசப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழி கள் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப் படுத்துகின்றன. ஒருதுருவ உலகம், உலகமயம் ஆகிய கொள்கைகள் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடாமல் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள் ளப்படவேண்டும். மொழிகள் நம் சிந்தனைகளை கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும், நமது பன் முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்ப தால், மொழிகளை பாதுகாப்போம்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com