Contact us at: sooddram@gmail.com

 

எகிப்தின் திரொலி

அரபுலகில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிரான புரட்சி டியூனீஷியாவில் ஆரம்பமாகி இரண்டே மாதங்களேயாகின்றன. டியூனீஷியாவில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பதற்கு இளைஞனொருவனுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதையடுத்து அவன் தனக்குத்தானே தீமூட்டி இறந்து போனான். டியூனீஷிய, எகிப்திய சர்வாதிகார ஜனாதிபதிகள் நாட்டை விட்டு ஓட்டம் பிடிப்பதற்குத் தூண்டுகோலாய் அமைந்த சம்பவம் இதுதான். ஆனால் அவ்விளைஞனின் மரணத்தோடு ஆரம்பமான புரட்சிகள், டியூனீஷியா, எகிப்து என்பனவற்றோடு மட்டும் நின்று விடவில்லை. மாறாக யெமன், ஜோர்தான், லிபியா, சவூதிஅரேபியா, பஹ்ரேன் என அரசுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் புரட்சிக்கு அது வழிகோலியிருக்கிறது.

யெமனை கடந்த 32 வருடங்களாக ஆட்சி செய்து வரும் அமெரிக்காவின் நெருங்கிய சகாவான அலி அப்துல் சாலேஹு பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

தலைவிரித்தாடும் வறுமையும், அரசின் ஊழலுமே அரசின்மீதான மக்களின் கோபத்துக்குக் காரணங்களாய் அமைந்துள்ளன.

2013 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையென்றும், தனது மகனை அடுத்த வாரிசாக நியமிக்கப் போவதில்லை என்றும் சாலேஹ் உறுதியளித்தும் மக்கள் நம்புவதாக இல்லை. யெமனின் தலைநகரில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

ஜோர்தானில் கடந்த இரண்டு மாதங்களாக அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையிலான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள்.

ஜோர்தானில் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிவருகின்றனர்.

சவூதி அரேபியாவில் அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த உம்மா இஸ்லாமியக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிபியாவில் 40 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் மொஹம்மட் கடாபி பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எண்ணெய் வளம் கொழிக்கும் நாடுகளில் ஒன்றான லிபியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

லிபியாவின் பெங்காஸி நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டடங்களையும் பொலிஸ் நிலையங்களையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

லிபிய ஜனாதிபதி மொஹம்மட் கடாபிக்குச் சொந்தமான இணையத்தளமொன்றில் பாராளுமன்றச் செயற்பாடுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், பாராளுமன்றம் மீண்டும் கூடும் பொழுது, அரசை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பெங்காஸியில் உள்ள சிறைச்சாலையொன்றில் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு சுமார் 1000 சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ளதாகவும் அவ்விணையத்தளம் கூறுகிறது.

லிபியாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை 25 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் லிபியாவில் இடம் பெறும் ஆர்ப்பாட்டங்கள் மொஹம்மட் கடாபியின் ஆட்சியை ஆட்டங்காணச் செய்யுமா என்பது கேள்விக்குறியே.

அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், டியூனிஷியாவிலேயே ஆரம்பமானபோதும், எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியே, தங்கள் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டங்களால், அரசை ஆட்டங்காணச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தசாப்தகாலமாக அடக்குமுறைக்கு இருந்த மக்களுக்கு கொடுத்துள்ளது.

எகிப்தில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் பதவி விலகினார். நாட்டை விட்டே அவர் சென்றுவிட்டார். இந் நிலையில் ஹுஸ்னி முபரக்கின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததன் பின்னரான பாரிய ஆர்ப்பாட்டமொன்று தாஹிரின் சதுக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.

இன்னமும் பதவியில் இருக்கும் ஹுஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள் தூக்கி யெறியப்பட வேண்டும் என்றும், நாடு மறுசீரமைப்பை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையிலேயே, பஹ்ரெயினில் மன்னராட்சியை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக பஹ்ரெய்னில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

பஹ்ரெய்னில் 70 சதவீதமானவர்கள் ஷிஆ முஸ்லிம்கள். ஆனால் நாட்டை ஆளும் கலீபாமன்னர் சிறுபான்மை சுன்னி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர். கடந்த வெள்ளியன்று, பஹ்ரெய்னின் தலைநகர் மனாமாவின் பேர்ள் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பஹ்ரெய்ன் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பஹ்ரெய்னின் வைத்தியசாலைகள் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் நிறைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சொல்கின்றன.

ஷிஆக்கள் பெரும்பான்மையாக வாழும் பஹ்ரெய்னில், சிறுபான்மை சுன்னி முஸ்லிம்கள் ஆட்சியில் இருப்பதும், நாட்டின் உயர் பீடங்களிலும் ஷிஆ முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும், பஹ்ரெயினில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

சுன்னி ஆட்சியாளர்கள் மீதான ஷிஆ முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டங்கள் 1990 ம் ஆண்டு முதல் இடம் பெற்று வருகின்றபோதும் இந்தளவுக்கு தீவிரமாக இடம்பெற்றதில்லை.

பஹ்ரெய்னில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மன்னர் கலிபாவை தூக்கியெறியும் அளவுக்குப் பலம் வாய்ந்தவையா என்பதை இப்போதே எதிர்வு கூற முடியாதெனக் கூறும் அரசியல் அவதானிகள், எகிப்து மற்றும் டியூனிiயாவுடன், பஹ்ரெயினை ஒப்பிட முடியாதென்கின்றனர். காரணம், எகிப்து, டியூனிஷா போன்ற நாடுகளில் எல்லாம் ஜனாதிபதிகள் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து பதவி வகித்த போதும் அங்கு நிலவியது குடியரசு ஆட்சி முறை தான். ஆனால், பஹ்ரெயினில் இருப்பதோ, அரசாட்சி. எனவே ஆர்ப்பாட்டக்காரர்களை எந்தவிதத் தயவு தாட்சண்யமுமின்றி அடக்கிவிடுவார்கள் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

பஹ்ரெயினில் மன்னருக்கெதிரான எதிர்ப்பு வலுவடைய ஆரம்பித்தது முதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1,000 டினார்கள் வழங்குவதாக மன்னர் ஹமட் பின் இஸா - அல் கலிபா அறிவித்திருந்தார்.

2010 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சிறார்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற மறைமுக அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

பஹ்ரெயினில் இருக்கும் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் சவூதி அரேபியாவுக்கு மாத்திரமன்றி வளைகுடா நாடுகளுக்கு முக்கியமானவை. சவூதியின் எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு அவை பாதுகாப்புத் தருபவை.

ஏற்கனவே ஹுஸ்னி முபாரக்கின் பதவி விலகலால் நலிந்துபோயிருக்கும் சவூதி அரேபியாவுக்கும், பஹ்ரெய்னில் இடம் பெறும் ஆர்ப்பாட்டங்கள் தலையிடியைத் தந்துள்ளன.

பஹ்ரெய்னில் இடம்பெறும் ஷிஆக்களின் ஆர்ப்பாட்டங்கள் தனது நாட்டுக்கும் பரவக் கூடுமென சவூதி அஞ்சுகின்றது.

அபி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com