Contact us at: sooddram@gmail.com

 

நிர்ப்பந்தம் காரணமாக கூட்டமைப்பு புலிகளின் குரலாக செயற்பட்டது

கேள்வி: உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்: உள்ளூராட்சித் தேர்தலில் அரசின் வெற்றி வாய்ப்புக்கள் மிக நம்பிக்கைக்குரியதாக அமைந்துள்ளன. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். நாட்டின் செழிப்பும் முன்னேற்றமும் கிராமங்களின் அபிவிருத்தியிலேயே தான் தங்கியிருக்கின்றது என்பது அரசின் நிலைப்பாடு.

இத்தகைய கொள்கை மிகவும் சரியானது என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள். கிராமிய அபிவிருத்தியை சிறப்படையச் செய்ய தேவையான மானியங்களையும் தொழிலுக்கான உபகரணங்களையும் வழங்கிவரும் அரசு அமைச்சுக்கள் மூலமாக தொழில் சார்ந்த வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புக்களையும் அளித்து வருகின்றது. இதனால் கிராமிய மக்கள் அரசை நம்புகின்றார்கள்.

அரசுக்கு ஆதரவளிக்கிறார்கள். கிராமிய மக்கள் அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்லாமல் அத்தியாவசிய உணவுப் பொருள் உட்பட அனைத்துத் தேவைகளையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஐ.தே. கவின் திறந்த பொருளாதாரக் கொள்கை பொருத்தமற்றது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துவிட்டனர்.

முப்பத்தாண்டு காலம் பீதியில் வாழ்ந்த மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தவர் நமது ஜனாதிபதி அதனால் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெருமதிப்பு காரணமாக ஜனாதிபதித் தேர்தலிலும் அமோக வெற்றி கிடைத்தது. பாராளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறே அரசுக்குப் பாரிய வெற்றிக் கிடைத்தது.

அதுபோல மாகாண சபைத் தேர்தலிலும் கிடைத்தது. உள்ளூராட்சித் தேர்தலிலும் பெரு வெற்றி கிடைக்கும் என உறுதியாகக் கூறலாம். அத்தோடு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க வுக்குள்ளே பாரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சி உறுப்பினர்கள் கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கின்றனர். நலிவடைந்த இந்தக் கட்சிக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? எதிர்க் கட்சிக் குழப்பங்களும் ஆளும் கட்சி வெற்றி வாய்ப்புக்கு சாதகமாகவுள்ளது.

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன?

பதில்: இந்த மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை ஏறாவூர் நகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் தேர்தல் இடம்பெறுகின்றது. ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் வேட்பாளர் பட்டியலில் எமது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த வேட்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.

 இருந்தபோதும் கருத்து வேற்றுமைகளைப் பொருட்படுத்தாது புரிந்துணர்வுடன் நாம் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுகின்றோம். இந்த மூன்று சபைகளிலும் ஆளும் கட்சியே அமோக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அழிவுகள் தொடர்பாக சற்று விபரிப்பீர்களா?

பதில்: இந்த மாவட்ட வெள்ள அழிவு ஒரு சுனாமி அழிவு போன்றதே. வெள்ளப் பெருக்கினால் இப்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அழிந்துள்ளன. பாதைகள், பாலங்கள் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன. மக்களின் வீடுகள் இருந்த இடம் தெரியாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மக்களது வாழ்க்கைப் பாதிப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இந்த அழிவினால் சுமார் 100 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களில் வேளாண்மையே இல்லை. மதிப்பீட்டின் படி 2 இலட்சத்து 30 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் நாசமாகியுள்ளது. இதன் பெறுமதி சுமார் 860 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய அழிவைத் துரிதமாக ஈடுசெய்ய ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குளங்களைப் புனரமைக்கவும் கால்வாய்களைத் திருத்தவும் தெருக்கள் பாலங்களை அமைக்கவும் துரிதமாக வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மக்கள் இழந்த வீடுகளை மீளக் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அங்கு சுயதொழிலை மீண்டும் ஆரம்பிக்க ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்படுகின்றது. கூடிய விரைவில் மக்கள் இதன் பயனை அனுபவிப்பர் என்று எண்ணலாம்.

கேள்வி: யுத்தக் குற்றம் சாட்டப்படுகின்றதே?

பதில்: யுத்தக் குற்றச்சாட்டு என்பது பழிவாங்கும் எண்ணத்தின் வெளிப்பாடு என்றே கூறலாம். கடந்த 3 தசாப்தங்களிலும் தமிbழம் மலரும் என்று கனவு கண்டவர்கள் பலரே. இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் எந்த அரசும் இனப்பிரச்சினையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்கும் திராணியும் அவர்களுக்கு இருக்கவில்லை. தமிbழத்துக்கான சக்திகள் வலுப்பெற புலம்பெயர் தமிழ் சமூகம் உதவி செய்ததுமல்லாமல் தமிbழம் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர்.

இவ்வாறு அரசுக்கெதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய நற்பெயர் மஹிந்தவுக்கு ஏற்பட்டுவிட்டதே என்ற காழ்ப்புணர்வும் இத்தகைய யுத்தக் குற்றச் சாட்டுகளுக்கு காரணமாகும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது.

மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவதற்கு பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அருகதை இல்லை. வியாபாரத்துக்கு வந்த பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை முதலிலும் பின்னர் கண்டியையும் கைப்பற்றியபோது நடைபெற்ற போரிலே தேசாபிமானமிக்க சுதேசிகள் கொல்லப்படவில்லையா? அது மனித உரிமை மீறல் இல்லையா? கடந்த காலங்களில் அரசியல் வாதிகளாகவும் தலைவர்களாகவும் இருந்து பணிபுரிந்த பலர் கொல்லப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா?

வடபுலத்திலுள்ள 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் ஓரிரு நாளில் விரட்டியடிக்கப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா? உலக நாடுகள் பலவற்றிலே போரினாலும் அதிகாரப் போட்டியாலும் எத்தனை உயிர்கள் மடிகின்றன. அவைகள் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஏன் தெரியவில்லை? இலங்கை விஷயம் தானா அவர்களின் கண்ணில் புலப்படுகின்றது. காழ்ப்புணர்வு காரணமான இந்தச் சேறுபூசும் நடவடிக்கை பொருத்தமற்றது என்பதே வெளிப்படையான உண்மை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நீங்கள் என்ன கருதுகின்aர்கள்?

பதில்: கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனுக்காக அவர்களின் உரிமை, அபிலாஷைகளுக்காக ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வந்தது. புலிகளின் ஆதிக்கம் வலுப்பெற்ற காலகட்டத்திலே கூட்டமைப்பினர் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாத கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் குரலாக ஒலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இன்று புலிகள் ஒழிந்த நிலையில் கூட்டமைப்பினர் சாதுரியமாக தமது கோரிக்கைகளைப் பெற முயற்சிக்க வேண்டும். அதற்காக அரசின் நல்லெண்ணத்தோடு காரியங்களை நிறைவேற்ற முயலவேண்டுமே தவிர அரசுக்கு எதிரான விமர்சனங்களை வெளியிட்டும் மேடைகளில் பேசியும் நிலைமையைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அரசியல் ரீதியான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கும் உண்டு. முஸ்லிம் மக்களுக்கும் உண்டு. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்திருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸ¤ம் கூட்டமைப்பும் பிரச்சினைகளை அரசுடன் பேசி தீர்வு காணவேண்டுமே தவிர மனம்போன போக்கில் விமர்சனம் செய்வதால் நன்மை ஏற்படப்போவதில்லை.

சுஐப் எம். காசிம் 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com