Contact us at: sooddram@gmail.com

 

புரிந்துணர்வுடன் தீர்க்கப்படவேண்டிய இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை

இந்திய - இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்றைய பேசு பொருளாக உள்ளது. இலங்கை மீனவர்களும் இந்திய மீனவர்களும் ஒரே கடற்பரப்பில் மீன் பிடிக்கின்றனர். இரு நாட்டினருக்குமான கடல் எல்லை தீர்மானிக்கப்பட்டு தத்தம் கடற் பிரதேசத்திலே மீன்பிடிக்க வேண்டுமென்ற நிலைப் பாடே இருந்தபோதும் சில சந்தர்ப்பங்களிலே கடல் எல்லை தெரியாது அடுத்தவரின் கடற் பிரதேசத் துக்குள் பிரவேசிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இரவிலே கடல் எல்லை தெரியா மல் ஏற்படும் இத்தகைய சம்பவங்களை பொறுத்துக்கொள்ளலாம்.

எனினும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்க வரும்போதே பிரச் சினைகள் எழுகின்றன. அத்துடன் இலங்கை மீனவர்களுக்கு இதனால் ஏற்படும் நஷ்டங்கள் கொஞ்ச நஞ் சமல்ல. கடற்றொழிலையே சீவனோபாயமாகக் கொண்ட இலங்கை மீனவர்களின் வலைகள் அறுத் தெறியப்படுகின்றன. பவளப்பாறைகள் சிதைவடைகின்றன. மீன்வளம் குறைகின்றது. கடல்வளம் அள்ளிச் செல்லப்படுகின்றது. இத்தகைய நஷ்டங்கள் தொடர்பாக இலங்கை மீனவர்கள் முறையிடும்போதுதான் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்கின்றது.

கடந்த 15ம் திகதி 112 மீனவர்கள் இழுவைப் படகுகளோடு இலங்கை எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடித் தனர். இலங்கை மீனவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். பொலிஸார் அவ ர்களை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அதேபோன்று அதற்கடுத்த நாள் இந்திய மீனவர்கள் 26 பேர் மாதகல் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படையினரால் கைது செய்யப்பட்டு இள வாலை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தால் விடுவிக் கப்பட்டனர்.

மீனவரின் பிரச்சினை தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளி யுறவுச் செயலர் நிருபமா ராவுடன் பேசப்பட்டபோது இந்திய- இலங்கை அதிகாரிகளின் கூட்டுச் செயற் றிட்டக் குழுவொன்றை அமைத்து தீர்வு காணவேண்டுமென அவர் தெரிவித்தார். இலங்கை அரசும் அவ் வாறே கருதுகின்றது. இரு அரசுகளின் கூட்டு முயற்சியினாலேயே தீர்வு காணப்பட வேண்டுமென வெளிநாட்டமைச்சரின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவிக்கின்றார்.

இந்திய மீனவர்கள் கைது செய் யப்பட்ட உடனேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த இடத்துக்குச் சென்றார். பிடித்தவர்களும் பிடிபட்டவர்களும் ஒரே மொழியைப் பேசுபவர்கள். ஒரே தொழிலைச் செய்பவர்கள். ஒருவரொடொருவர் முரண்படுவது அழகல்ல. இலங்கை மீனவர்கள் வன்முறையில் ஈடுபடாது அடிதடியில் இறங்காது இந்திய மீனவர்களைப் பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்படைத்ததையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகக் கூறி னார்.

மேலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உணவு மற்றும் தேவைகளைக் கவனிக்க வேண்டி யிருப்பதாகக் குறிப்பிட்டபோது வடமராட்சி மீனவர் சம்மேளனம் அவர்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்களும் அமைச்சருடன் உரையாடியபோது தாம் அத்து மீறி வந்து மீன்பிடித்த தவறை ஒப்புக்கொண்டனர். தம்மை விடுதலை செய்யுமாறு கோரினர். அத ற்கான முயற்சிகளை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

நிலைமை இவ்வாறு சுமுகமாக இருக்க இந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி மத்திய அரசுக்கும் இதனைத் தெரிவித்து நிலைமையை மேலும் சிக்கலாக்கினர் தென்னிந்திய அரசியல்வாதிகள்.

பொது மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோரைத் திரட்டி இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த அரசியல்வாதிகள். அரசியல் இலாபம் கருதிய செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையில் பாரிய விரிசலை ஏற்படுத்த இவர்கள் முயற்சிக் கின்றனர். இந்தியாவும் இலங்கையும் தொன்மை வாய்ந்த வரலாற்றுத் தொடர்புடையவை. கலை, கலாசாரத் தொடர்புகள் இரண்டு நாடுகளுக்கும் பொதுவானவை. இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவை மதி த்தே வந்துள்ளது.

இந்தியா பல்வேறு பொருளாதார உதவிகளை இலங்கைக்கு நல்கி வருகின்றது. இலங்கையின் தற்போதைய அபி விருத்தித் திட்டப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் இன்னோரன்ன உதவிகள் காத்திரமாகவுள் ளன. இந்திய உதவிகள் மறக்க முடியாதவை.

எனினும் தென்னிந்திய மண்ணிலே அரசியலில் ஆட்டம் காணும் நிலையிலுள்ள அரசியல் வங்குரோத்து சக் திகள் அப்பாவி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆர்ப்பாட்டங்களையும் கண்டன ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுக்கும் இலங்கைக்குமிடையே உறவில் பாதிப்பை ஏற்படுத்தி அதில் குளிர்காய இந்த சக்திகள் நினைக்கின்றன. இதேவேளை கடந்த ஜனவரி 7ம் நாள் மீன்பிடிக்கச சென்ற 85 இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் தவறுதலாகப் பிரவேசித்தபோது இந்தியக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்திய அரசால் தடுத்து வைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டதற்காக இந்திய அரசின் மீது கோபமுற்று ஆர்ப்பாட்டங்களையும் கண்டன ஊர்வலங்களையும் காட்டு மிராண்டித்தன மான முறையில் இலங்கை மக்கள் ஒருபோதும் நடத்தவில்லை என்பதை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள். அத்துடன் நட்பு நாடுகளும் கூட, இந்த நிலையிலே இலங்கை யில் உண்மையாக என்ன நடந்தது என்பதை அறியாமல் கைது செய்யப்பட்டவர்கள் மனிதாபிமானத் தோடு நடத்தப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. ஒரே கடலில் இரு நாட்டு மீனவர்களும் தொழில் செய்வதால் நீண்டகாலமாக இந்தப் பிரச்சினை இடையிடையே ஏற்பட்டு வருகின்றது. எதிர்காலத்திலே இரு நாடுகளுக்குமிடையே இத்தகைய முறுகல் நிலை ஏற்படாமல் புரிந்துணர்வுடன் பிரச்சினையை அணுகவேண்டி இருக்கின்றது.

எனவே இலங்கை- இந்திய அரசுகள் ஒன்றிணைந்து நிலையான, நிரந்தரமான ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com