Contact us at: sooddram@gmail.com

 

மீனவர் பிரச்சினையில் அரசியல்,  தமிழக தலைவர்கள் தேர்தல் சித்து

(விசு கருணாநிதி)

இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் லாபம் தேடிக்கொண்டதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் காலத்திற்குக் காலம் முன்னணி வகிக்கின்றனர். தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் காலத்தில் பிரசாரம் செய்வதற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையே அவர்களுக்குக் கைகொடுத்து வருகிறது. தி.மு.க, அ.தி.மு.க. என இரு பிரதான அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தே தமது அரசியல் காய்நகர்த்தலை முன்னெடுத்து வருகின்றன. இதில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கைதேர்ந்தவராகத் திகழ்கிறார். இப்போது அவரது மகள் கனிமொழி அப்பாவின் வழியில் தப்பாமல் இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் பிரசாரம் செய்வதில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மீனவர் பிரச்சினையைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மீனவர்கள்பற்றிக் கூடுதல் கரிசனையுடன் செயற்படுகின்றனர்.

தமிழக-இலங்கை மீனவர்கள் எல்லை மீறுவது இன்று நேற்றல்ல என்பது இரு நாட்டு மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயம். மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் பின் விடுதலைசெய்யப்படுவதும் தொடராக இடம்பெற்று வந்திருக்கிறது. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப் பாணத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தை அமர்க்களப்படுத்தியிருக்கிறார் கனிமொழி கருணாநிதி.

மீனவர் பிரச்சினையை ஆர்ப்பாட்டங்கள் மூலம் தீர்க்க முடியாது என்பதை அறியாதவரல்ல கனிமொழி. மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் ஆர்ப்பாட்டம் நடத்தி அவாகள்மீது கருணைகாட்டுவதாகக் காண்பிப்பது தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகத் தனம் என்பதே உண்மை.

கடந்த மூன்று தசாப்த காலமாக யாழ்ப்பாண மீனவர்கள் தமது தொழிலைச் சரியாகச் செய்ய முடியாமல் திண்டாட்ட வாழ்வுக்குள் மூழ்கியிருந்ததைத் தமிழகம் நன்கு அறியும். அந்த நிலையை உணர்ந்ததால்தான் ஈழத்தமிழர்கள் அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என அப்போது தமிழகத்தில் குரல் எழுப்பினார்கள்.

புலிகள் இயக்கத்தின் நெருக்குவாரங்கள், கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, கட்டுப்பாடுகள் காரணமாகவும் யாழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைத்திருந்தனர். தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ் மீனவர்கள் தொலைந்த தம் வாழ்வைத்தேடி சுதந்திரமாகக் கடற்றொழிலுக்குச் செல்கிறார்கள். இதில் மண்ணள்ளி போடும் வகையில் தமிழகத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் அத்துமீறி வரும் மீனவர்கள் யாழ் கடற்பரப்பில் உள்ள வளங்களைச் சிதைத்து வருகிறார்கள்.

தமிழகக் கடற்பரப்பில் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததன் மூலம் இன்று பிழைப்பு நடத்த முடியாமல் தமிழகக் கடல் வளம் திq=!ிப்போன நிலையில் அவர்கள் அதே இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி யாழ் குடாநாட்டின் கடல் வளத்தையும் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமன்றி இழுவைப்படகுகள் மூலம் எமது கடற்றொழிலாளர்களின் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்க ளையும் அழித்துச் செல்கின்றனர். கடந்த முப்பது வருடகாலமாக இலங்கையின் வட கடற்பரப்பில் மீன்பிடித்துறை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் அங்கு மீன்வளம் பெருகியிருக்கின்றது.

எனவேதான் தமிழக மீனவர்கள் இங்கு அத்துமீறி மீன்பிடிக்க வருகின்றனர் என்பது யாழ் மீனவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இவ்வாறு இலங்கை மீனவர்களின் யதார்த்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் தமிழகத்தில் செயற்படும் அரசியல்வாதிகள் வரிசையில் தற்போது கனிமொழி களமிறங்கியிருப்பது தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் அல்ல என்பதும் நன்கறிந்த விடயமே. இலங்கையில் தமிழர் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கான ஒரு மா¡க்கத்தையோ வழிமுறைகளையோ அறிந்திராதவர்காளாக செயல்பட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், மீனவர் பிரச்சினையிலும் மூக்கை நுழைத்து வருகிறார்கள்.

கனிமொழியைப் பொறுத்தவரை, அவர் தேர்தல் பிரசாரத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு மீனவர் பிரச்சினையைப் பார்க்கவில்லை. தற்போது இந்தியாவில் தேசிய ரீதியாக அவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை வேறுபக்கமாகத் திசைதிருப்பும் ஒரு களமாகவும் வட பகுதி கடற்பரப்பை அவர் பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.

இதேசமயம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தேர்தல் பிரசாரம் கருதி மீனவர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியாக எச்சரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தருப்ப தானது, ஏனையவர்களைவிடத் தாம் இந்த விடயத்தில் முதன்மை வகிக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதாக குறியாக இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மீனவர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கிறார் இல்லை என்று ஜெயலலிதா தற்போது குற்றச்சாட்டை முன்வைத்தாலும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவிகளைச் செய்வதற்குக்கூட நடவடிக்கை எடுக்க வில்லை. அப்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜெயலலிதா, தற்போது தேர்தல் நோக்கத்திற்காக மீனவர்கள் மீது இரக்கம் கொண்டவராகக் காண்பிப்பது ஓர் அரசியல் கபடத்தனம் என்பதில் சந்தேகம் இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com