Contact us at: sooddram@gmail.com

 

கடற்றொழிலாளர்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்துவது தவறு

டற்றொழிலாளர்கள் இந்தியர்களாகவோ இலங்கையர்களா கவோ இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு தேவையான போஷாக்கு உணவான மீனை பிடித்து வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இவர்கள், கடல் கொந்தளிக்கும் போதும், மழை, காற்று போன்ற சீரற்ற காலநிலையிலும் கடலுக்கு சென்று தொழில் புரிகிறார்கள். இந்தக் கடல் தொழிலாளர்கள் தாங்கள் படும் கஷ்டத்திற்குரிய வருமானத்தைப் பெறுகிறார்கள் என்று நாம் கூறமுடியாது. பெரும்பாலும், கடலுக்குச் செல்லும் இழுவைக் கப்பல்களின் உரிமையாளர்களும், மீன் தரகர்களுமே கடல் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம், கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

கடற்றொழிலாளர்கள் என்றுமே குடிசை வீடுகளிலும், கடற்கரையை அண்டியுள்ள சிறிய வீடுகளிலும் வாழ்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு சரியான பாடசாலைகள் கூட இல்லை. கடலுக்கு சென்று திரும்பும் போது சிறிதளவு மீனையும், சொற்ப காசையுமே ஒரு கடல் தொழிலாளி தனது மனைவிற்குக் கொண்டு வந்து கொடுப்பார். அதிலும் ஒரு தொகை பணத்தை எடுத்து, அந்த தொழிலாளி மது அருந்தி, தனது உடல் நிலையையும் கெடுத்துக் கொள்வார்கள்.

இதனால், ஒரு கடல் தொழிலாளி வாழ்நாள் பூராவும் வறுமையிலேயே இருப்பார். வயோதிப கட்டத்தை அடையும் அந்த தொழிலாளிக்கு ஓய்வூதியமோ, சேமலாப நிதி கொடுப்பனவோ கிடைப்பதில்லை. இதனால், அந்த தொழிலாளி வறுமையிலேயே துன்பப்பட்டு இறுதியில் மடிந்து போவார். அதையடுத்து தந்தையின் தொழிலை தனயன் ஏற்று கடலுக்கு செல்வான். சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி பத்தாண்டுகளுக்கு ஒரு தடவையாவது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளியின் உயிரை கடல் பலிவாங்குகிறது என்பது தெரியவந்துள்ளது.

கடலுக்கு செல்லும் இவர்கள், அண்ணளவாகவே திசையை அறிந்து, தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டு மீன்பிடிக்க ஆரம்பிப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அயல்நாட்டின் கடல் எல்லைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ சென்று விடுவார்கள். அப்போது, சம்பந்தப்பட்ட நாடுகளின் கடற்படையினர் அல்லது கரையோர பாதுகாப்பு படையினர் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது உண்டு.

இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற போது, 136 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் அவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியதையடுத்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோன்று, பல இலங்கை கடற்றொழிலாளர்களும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கொடுத்து, இந்திய அதிகாரிகள் விடுவிக்கவில்லை என்ற வேதனைக்குரிய விடயத்தையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

இன்று தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அயல் நாடான இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளுக்கு திடீரென்று தங்கள் கடற்றொழிலாளர்களின் மீது அன்பும் அனுதாபமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தங்கள் நாட்டு கடற்றொழிலாளர்களை அரசியல் லாபத்திற்காக பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதேவேளையில், வடமாகாண கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து 11.5 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலான கடல்வளத்தை சின்னாபின்னப்படுத்தி அழித்துவிட்டார்கள் என்றும் அவர்களை தண்டிக்காமல் விடுவித்தது தவறு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த இந்த நட்புறவு கொள்கையின் அடிப்படையில் இந்தியாவும் தங்கள் சிறைகளில் துன்பம் அனுபவித்து வரும் இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிப்பது அவசியமாகும்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தெரியாமல், அத்துமீறி பிரவேசிப்பதை தடுப்பதற்கு தாங்கள் இருநாடுகளுக்கிடையிலான ஆழ்கடலில் கிuoy என்ற மிதவைகளை வைப்பதற்கு இப்போது இந்திய அதிகாரிகள் தீர்மானித்திருப்பது இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்கள் தங்கள் அயல்நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு ஒரு நல்ல அடையாளச் சின்னமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சமீபத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது, அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, எமது பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மனிதாபிமான முறையில் முன்மாதிரியாக நடந்து இரு தேசங்களின் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் நட்பு பாலத்தை அமைப்பதற்கு எடுத்து முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com