Contact us at: sooddram@gmail.com

 

த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அழைப்பு

"எல்.ரி.ரி.ஈ.யில் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ் தேசிய கூட் டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்."

என்னை பத்திரிகைகளில் கிண்டல் செய்வதையோ, கேலிச் சித்திரங்கள் மூலம் நையாண்டி செய்வதையோ நான் பொருட் படுத்துவதில்லை. முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாஸவை எழுத்தாக்கங்கள் மூலமும் கேலிச் சித்திரங்கள் மூல மும் கிண்டல் செய்தவர்களுக்கு நடந்தது என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே. அப்பாவி ரிச்சட் சொய்சா கூட அதற்காகவே உயி ரிழந்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகை பிரதம ஆசி ரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக பொறுப்பாளர்களுடனான சந் திப்பில் கூறினார். நான் அவ்விதம் எத்தகைய கேலி, கிண்டல்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அரசியல்வாதி. ரணிலும் என்னைப் போன்று எந்தக் கேலிக் கிண்டல்களையும் பொருட்படுத்தும் ஒருவர் அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

உங்களை கேலி செய்யும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியமையால் ஒரு பாடசாலை அதிபர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளிவந் துள்ளது. அதைப்பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள் என்று ஒரு ஆசிரி யர் கேட்டதற்கு பதிலளிக்கையில், அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரி யாது. நான் இத்தகைய கேலி, கிண்டல்களை பொருட்படுத்துவதில்லை. அவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவ தற்காக நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழி யச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் தாம் விரைவில் சகல அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்க கூட்டணியில் உள்ள ஹெல உறுமய கட்சியும் தேசிய சுதந்திர முன்னணியும் வெளியில் எந்தக் கருத்துக்களை கூறினாலும் பாராளும ன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்று தன்னால் உறுதியாக கூற முடியுமென்று ஜனாதிபதி கூறினார். 13 பிளஸ் பற்றி நீங்கள் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிaர்கள் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தணிக்கும் என்று சிரித் துக் கொண்டே பதிலளித்தார்.

நான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தா லும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால் பாராளு மன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஏகமன தான முடிவை எடுப்பது அவசியம். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் தான் ஆதரித்து அமுலாக்குவேன் என்று கூறினார்.

இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீ காரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும் பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை அமுலாக்குவது முடியாத காரியம் என்றும் கூறினார். அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதி காரங்களை கொடுக்க தயக்கம் காட்டுவதனால் தான் தமிழ் தேசிய கூட் டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள விரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன? என்று ஒரு ஆசிரியர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

நிச்சயமாக நாங்கள் பொலிஸ் அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்ற தென்றும், அது பிரச்சினைக்குரிய விடயமல்ல என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடைமுறை ப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய, நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனை களை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல என்றும் ஜனாதிபதி கூறினார்.

எல்.ரி.ரி.ஈ.யில் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ் தேசிய கூட் டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவ ர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப் பதுமேயாகும்.

அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் என்றுமே இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கூறினார். பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 பிளஸ் சட்டத்திருத்தம் போன்ற விடயங் களில் ஊடகவியலாளர் நடுநிலையில் இருந்து பக்கச் சார்பற்ற முறை யில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக் களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்து வதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தனது நிலைப்பாட்டில் இருந்தே பிரி வினைவாத கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகியன அவசியம் என்று கேட்டு வரு கின்ற போதிலும் வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதை ப்பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட் கிறார்கள் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற குழு ஆகிய அனைத்தும் பாராளுமன்ற தெரி வுக்குழுவிற்கு இதுவரை தமது பெயர்களை முன்மொழியவில்லை. அந் தக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து எல் லோருடைய பிரச்சினையாக விளங்கும் இனப்பிரச்சினைக்கு கூடி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு முன்வர வேண்டுமென்று கூறினார்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com