Contact us at: sooddram@gmail.com

 

மும்மொழி அறிவு இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும்

ங்கள் நாட்டில் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற் படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அர சாங்கம் இன்று தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றது. வெறுமனே வாசிக்கவும், படிக்கவும் கற்றுக்கொடுப்பது மாத்திரம் கல்விய ல்ல. கல்வியின் உண்மையான பயனை அடைய வேண்டுமானால் மாணவ, மாணவியர் பிற்காலத்தில் தங்களுக்கு ஊன்றுகோலாக இருக் கக்கூடிய கல்வியையே கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அவர்களின் இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றும் முகமாக அரசாங்கப் பாடசாலைகளில் கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவியரு க்கு அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் போது தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு உறுதுணை அளிக்கக்கூடிய பாடவி தானங்களை அறிமுகம் செய்து கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத் தப்படுகிறது.

மனிதவள தேவைகளுக்கு அமைய மாணவர்களை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்காக க.பொ.த. உயர்தர வர்த்தக மற்றும் விஞ்ஞானப் பிரிவை சகல அரசாங்கப் பாடசாலைகளிலும் வலுப்படுத் துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கென முதற்கட்டமாக தெரிவுசெய் யப்பட்டிருக்கும் 1000 பாடசாலைகள் நவீனமயப்படுத்தப்பட விருப்பது டன் வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப் படும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

1000 பாடசாலை திட்டத்தின் கீழ் சகல பகுதிகளிலும் சமகாலத்தில் கற்பித் தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இன் றைய நவீன உலகில் நாம் உலகநாடுகளுடன் கல்வித்துறையில் சரிநிக ராக வீற்றிருக்க வேண்டுமாயின் எமது மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவு உயர் மட்டத்தில் இருக்க வேண்டும். இதற்காக ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் கணனி சம்பந் தப்பட்ட தகவல் தொடர்பு கல்வியை கற்பிப்பதற்கான விசேட பிரிவு களை ஏற்படுத்துவதற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தபட்சம் 10 கணனிகளாவது இருக்கும் கணனிப்பாட வகுப்பறைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஜனாதி பதி தனது பணிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட 30ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் காரணமாக இனங்களிடையே, சமூகங்களிடையே இருந்துவந்த பகைமை, சந்தேக உணர்வு, நம்பிக்கையின்மை இவை அனைத்திற்கும் 1956ம் ஆண்டு முதல் அமுலாக்கப்பட்ட சிங்கள மட்டும் சட்டமே அடித்தளமாக அமை ந்திருந்ததை நன்கு உணர்ந்திருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மொழிப்பிரச்சினைக்கு சமூக தீர்வு கண்டால் இந்நாட்டு மக்களிடையே உண்மையான சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடி யும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

தமது இந்த நம்பிக்கையை நிறைவேற்றும் முகமாக ஜனாதிபதி அவர்கள் நாடெங்கிலும் மும்மொழித்திட்டத்தை அறிமுகம் செய்யும் செயற்பாட் டில் இப்போது இறங்கியுள்ளார். தனது நெருங்கிய நண்பரான சிரேஷ்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் இதனை நிறைவேற்றும் பொறு ப்பை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதி, சிங்களவர்கள் தமிழ் மொழியை யும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இவ்விரு மொழிகளுடன் சர்வதேச மொழியான ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1950ம் ஆண்டு தசாப்தத்தின் பின்னர் இலங்கை மக்கள் மனதில் வேரூன்றி யிருந்த ஆங்கில மொழி மீதான மோகம் படிப்படியாக தளர்ச்சியடைய ஆரம்பித்தது. இதனால், சர்வதேச அரங்கில் இலங்கையின் பல்கலைக் கழக பட்டதாரிகளுக்கு இருந்த வரவேற்பும், மதிப்பும் குறைய ஆரம் பித்தது.

1960ம் ஆண்டு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையில் விஞ்ஞான, வைத் திய, சட்டத்துறை மற்றும் கணக்கியல் துறை பட்டதாரிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி இலகுவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்தேச நிறுவனங்களில் உயர்பதவிகள் காத்திருந்தன. ஆனால், இன்று இலங்கை பெற்றிருந்த இந்த வாய்ப்பை இந்தியர்களும், பாகிஸ் தானியர்களும், மலேசிய தேசத்தைச் சேர்ந்தவர்களும் எங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டு விட்டார்கள். இதனால் நாம் அந்த நாடுகள் மீது குறை சொல்ல முடியாது. நம் நாட்டவர்கள் ஆங்கில கல்விக்கு முக்கி யத்துவம் அளிக்காமல் சுதேச மொழிகளிலேயே பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பெற்றுக் கொடுத்ததே இதற்கான காரணம் என்று கல்வி மான்கள் கூறுகிறார்கள்.

இலங்கையை மீண்டும் கல்வித்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மற்றெல்லாத்துறைகளிலும் ஆசிய நாடுகளைவிட முன்னிலைக்கு கொண்டு வர வேண்டுமாயின் நம்நாட்டு மக்களிடையே இன ஐக்கியத் தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தங்களை தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று அறிமுகம் செய்வத ற்கு பதில் நாம் ஒவ்வொருவரும் எங்களை இலங்கையர் என்று அறி முகம் செய்து கொள்ளக்கூடிய தேசப்பற்றை பிரதிபலிக்கக்கூடிய மனப் பக்குவம் அவசியமாகும்.

இவ்விதம் நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனோ நிலையில் செயற் பட்டால் இந்த நாட்டை எந்தவொரு சக்தியாலும் பிளவுபடுத்தவோ, சீர் குலைக்கவோ முடியாது. இது பற்றி எங்கள் பிரதம மந்திரி டி.எம். ஜயர ட்ன அவர்கள் பொதுமக்களுக்கு வலுவையும், சக்தியையும் பெற்றுக் கொடுப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை என்று தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல மொழி அறிவை நாம் பெற்றுக் கொடுத்தால் அவர்களின் புரிந்துணர்வு அதிகரிக்குமென்றும் அதன் மூலம் அவர்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நற்பணி களை செய்வார்கள் என்றும் கூறினார்.

மும்மொழி அறிவை மையமாகக் கொண்டு நாம் அனைவரும் தேசப்பற்று டன் செயற்பட்டால் எமது நாடு சகல துறையிலும் முன்னிலைக்கு வரும் என்று நாம் அசையாத நம்பிக்கை கொள்ள முடியும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com