Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினை தீர்வில் சுதந்திர இலங்கையின் வரலாற்றுப் பதிவுகள்

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரமடைந்த நாம் 64 வது சுதந்திரதின கொண்டாட்டங்களில் ஈடுபட்டவண்ணமுள்ளோம். திண்டாட்டங்கள் தீர்ந்து தீர்மானங்கள் தீர்வுகளாகி ஒருதாய் மக்கள் போன்று ஒரே தேசம், ஒரே நாடு என்ற உரத்த தொனியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்ற பேதமின்றி மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் ஏககாலத்தில் ஒன்றிணைந்து சுதந்திரத்தை கொண்டாடக்கூடிய தருணத்தையே இலங்கை இன்னும், இன்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை தொட்டுக்கட்டாமலிருக்க முடியாது. இதனையே ஜனாதிபதியும் நேசிக்க விரும்புகிறார். ஆனால் இனக்குமுறல் என்ற உளக்குமுறல் உள்ளங்களையும், உணர்வுகளையும் உதாசீனப்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். புற்றுநோய்க் கிருமிகள் உடம்பை ஆக்கிரமிப்பது போன்று இனப்பிரச்சினையும், அதிகார பங்கீட்டுப் பிரச்சினையும் நம் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரத்திற்கு வயது 64 என்றால், நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள இனப்பிரச்சினைக்கும் வயது 64 போன்றே எண்ணத் தோன்றுகின்றது. நாட்டின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை சுதந்திர இலங்கையில் தனக்கென தனியானதொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

அந்த வகையில் 1957 ஆம்ஆண்டின் பண்டா - செல்வா உடன்படிக்கை, 1965 ஆம் ஆண்டின் டட்லி - செல்வா உடன்படிக்கை, 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய உடன்படிக்கை, 1995 ஆம் ஆண்டின் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம், 2002 ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கை போன்றன வரலாற்றுப் பதிவுகளாகும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரிசையில் இலங்கையில் நல்லிணக்கத்தை கண்டடையும் நோக்குடன் காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இந்திய இராணுவத்தைத் திருப்பி அனுப்புகின்ற பணியில் மாத்திரமே வெற்றி கண்டார்.

இந்த வரிசையில் சமகால ஜனாதிபதி சுதந்திர இலங்கையின் இந்தத் தகராறை உள்நாட்டில் தயாராகும் தீர்வு, பதின்மூன்றாவது திருத்தம், 13வது திருத்தத்திற்கும் மேலதிகம், செனட்சபை, பாராளுமன்றத் தெரிவுக் குழு போன்ற தலைப்புக்களில் முன்னெடுத்து வருவதை நாடு அறிந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஜனாதிபதி சர்வகட்சி பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பைத் தோன்றுவித்து சர்வகட்சி மாநாடு ஊடாகத் தீர்வைக் கண்டடைய முயற்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போன்று ஜனாதிபதி சமகால முறுகல் நிலையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி ¨வைப்பாரா? என்பதே மக்களின் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

பண்டா - செல்வா உடன்படிக்கை (1957)

நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்திவந்த கருத்து வேற்றுமைகளை தீர்க்கும் முயற்சியாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமர் பண்டாரநாயக்கவோடு தொடரான பேச்சுக்களை நடத்தினார்கள். உரையாடலின் தொடக்கத்திலேயே தமிழரசுக் கட்சியின் சில கோரிக்கைகளைப் பிரதமர் ஏற்பது சாத்தியமற்றதென்பது தெளிவானது.

சமஷ்டி அரசியல் அமைப்பையோ, சுயாட்சியையோ ஏற்படுத்துவது பற்றிப் பேசவோ, அல்லது உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவோ அரசாங்கத்தின் நிலையில் தன்னால் இயலாது என்று பிரதமர் கூறினார். பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தனது அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் எவற்றையும் கைவிடாத வகையில் ஒரு இடைக்கால ஒழுங்குக்கு வர இயலுமா என்பதை ஆராயும் கேள்வி எழுந்தது.

அரசாங்கத்தின் பிரதேச சபைகள் மசோதாவை ஆராய்ந்து அதன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்திற்கொண்டிருக்கும் சில விஷயங்களை நியாயமாக உள்ளடக்கக்கூடியதாக ஏற்பாடுகளை மேற்கொள்ள இயலுமா என்று பார்க்குமாறு பிரதமர் ஆலோசனை கூறினார்.

இடைக்கால ஒழுங்கு

மொழி விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சம அந்தஸ்துக் கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால் இவ்விடயத்தில் பிரதமரின் நிலைப்பாட்டுக்கமைய ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் முக்கியமானவையென்று சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பிரதமர் - தான் முன்னர் குறிப்பிட்டது போல உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தை அழிக்கக் கூடிய எந்த நடவடிக்கையையும் எடுப்பது சாத்தியமற்றது என்று கூறினார்.

கருத்துப்பரிமாறலின் பின்னர் இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் இலங்கையின் தேசிய சிறுபான்மையினரின் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்றும் உத்தியோகபூர்வ மொழியின் நிலையை பாதிக்காத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழே இருக்கும் வகையில் பிரதமரின் நான்கு அம்சத் திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்திய வம்சாவளியினருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும், குடியுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினர். இனப்பிரச்சினை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்று பிரதமர் அறிவித்தார்.

அம்முடிவுகளின்படி உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையை கைவிடுவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது.

இணங்கிக்கொண்ட விடயங்கள்

* பிரதேச சபைகளின் எல்லைகள் - சட்டத்திலேயே அட்டவணையாக சேர்க்கப்பட்டு வரையறுக்கப்படல்.

* வட மாகாணம் ஒரு பிரதேச சபையாக வும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளாகவும் அமையும்.

* மாகாண எல்லைகளையும் தாண்டி இரண்டு அல்லது மேற்பட்ட சபைகள் இணைவதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக ஒரு பிரதேச சபை தன்னைப் பிரித்துக்கொள்ளவும் இடமிருக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேச சபைகளுக்கு பொதுவான குறிப்பிட்ட நோக்கங்களுக்கு, அவை சேர்ந்து செயல்படச் சட்டத்தில் இடமிருக்கும்.

* பிரதேச சபை உறுப்பினர் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்கு தொகுதி நிர்ணயக் குழுவோ, குழுக்களோ அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பிரதேச சபைகளின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபைத் தலைவராவதற்கு தகுதி பெறுவது பற்றி ஆலோசிக்கப்படும், அரசாங்க அதிபர்கள் பிரதேச ஆணையாளர்களாக நியமிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படும். பெரிய பட்டினங்கள், கேந்திர நகரங்கள், மாநகர சபைகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் ஆராயப்படும்.

* அதிகாரங்கள் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டு சட்டத்தில் வரையறுக்கப்பட வேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன் பிடித்துறை, வீடமைப்பு, சமூக சேவை, மின்சாரம், தண்ணீர்த் திடங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கக் குறிப்பிட்ட விடயங்கள் – பிரதேச சபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும்.

* குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, தமது அதிகார எல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டிய குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் ஆட்களைத் தெரிவு செய்வதும் பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்குமென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போது கல்லோயா அபிவிருத்தி சபைகளினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின் நிலை ஆராயப்பட வேண்டும்.

டட்லி - செல்வா (1965)

திரு டட்லி சேனநாயக்கா அவர்களும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களும் 24.03.1965 ஆம் திகதி சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைய, நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் நிமித்தம் கீழ்க் குறிப்பிட்டுள்ளவற்றிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று திரு. சேனநாயக்கா ஒப்புக் கொள்கின்றார். இதன்போது திரு. டட்லி சேனநாயக்கா அவர்களும் எஸ். ஜே. வி. செல்வநாயகமும் கையொப்பமிட்டுள்ளனர்.

* வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாகங்கள் நடப்பதற்கும், அவற்றைத் தமிழிலேயே பதிவதற்கும் தமிழ் மொழி விசேட விதிகளுக்கமைய உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே தன் கட்சியின் கொள்ளை என்பதையும் திரு. சேனநாயக்கா விளக்கினார்.

* வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள சட்டபூர்வமான நடவடிக்கைகளை நடாத்தவும், அவற்றைப் பதிவதற்குத் தமிழே நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் தன் கட்சியின் கொள்கை என்று திரு.சேனநாயக்கா ஏற்றுக் கொண்டார்.

* இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின்பேரில், மக்கள் பாலுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப இலங்கையில் மாவட்ட சபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதிய திட்டங்களுக்கமைய மாவட்ட சபைகளுக்கு மேலான அதிகாரங்கள் அரசாங்கத்துக்கு உண்டென்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* இலங்கைப் பிரஜை காணிப் பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் காணி அபிவிருத்தி விதிகள் திருத்தி அமைக்கப்படும்.

குடியேற்றத் திட்டங்களில் காணி வழங்கப்படும் போது வட, கிழக்கு மாகாணங்களில் கீழ்க்காணப்படும் விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும் எனவும் திரு. சேனநாயக்கா ஏற்றுக்கொண்டார்.

* வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் - அம் மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வழங்கப்படல் வேண்டும்.

* இரண்டா வதாக - வட, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்படல் வேண்டும்.

* மூன்றாவதாக - இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் இனத்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து ஏனையவர்களுக்கும் வழங்கலாம்.

ஜே. ஆர் - ராஜீவ் (1987)

காலஞ்சென்ற தலைவர்களான இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆருக்குமிடையே 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் வைத்து செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும், அதன் விளைவான வன்செயல்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும், இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு, சேமநலம், சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும், சம்பந்தப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவுமே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்திய, இலங்கை இணக்கப்பாடுகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வீக வசிப்பிடங்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளமை, தனியான கலாசாரம், மொழி தனித்துவம், பன்மைத்தன்மை சகல பிரஜைகளுக்கும் சமத்துவம், பாதுகாப்பு, ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்றவற்றை முன்அம்சங்களாகக் கொண்டுள்ளன.

வடக்கு, கிழக்கு இணைப்பு, சர்வஜன வாக்கெடுப்பு, வாக்கெடுப்பின் முடிவைத் தீர்மானிக்க இலகு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பைக் கண்காணிக்க கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியும், ஜனாதிபதியின் பிரதிநிதியும் மற்றும் இந்தியக் கண்காணிப்பாளர்களை அழைத்தல், 1987 ஆகஸ்ட் 15 ஆம் திகதியளவில் அவசரகாலநிலை நீக்கம், 48 மணித்தியாலங்களில் நாடு முழுவதிலும் பகைமைத் தவிர்ப்பு, போராளிக் குழுக்களின் ஆயுதங்கள் அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்தல், தடுப்புக் காவல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு, குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கும் மன்னிப்பு, புனர்வாழ்வளிக்க விசேட முயற்சிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே அலகு, ஒரு ஆளுனர், ஒரு முதலமைச்சர், ஒரு அமைச்சர்கள் சபை எனப் பல முக்கிய விடயங்களைத் தாங்கிய அவ்வொப்பந்தத்தில் ஜே. ஆர். ஜெயவர்த்தனவும், ராஜீவ்காந்தியும் அதிகாரபூர்வமாக கைச்சாத்திட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இதனை பல அரசியல் கட்சிகள் அடிமைச் சாசனம் என்று அழைத்ததை நினைவூட்டிப் பார்க்க முடியும்.

விஷேட அம்சங்கள்

குறித்த உடன்படிக்கையை இலங்கையிலுள்ள போராளிக் குழுக்கள் ஏற்காவிட்டால் எடுக்க வேண்டிய நிபந்தனைகளும் உடன்படிக்கையில் அடங்கியிருந்தன. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் தை இந்தியா உறுதிப்படுத்தல், இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்படையுடன் ஒத்துழைத்தல், இந்தியா இராணுவ உதவி வழங்கல், பரஸ்பரம், அகதிகள் திருப்பியனுப்பப்படல், வடகிழக்கு மக்களின் சரீரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பரஸ்பரம் ஒத்துழைத்தல், ஊர்காவல்படைகள் கலைக்கப்படுதல், துணை இராணுவப் படை திருப்பியழைக்கப்படுதல், அத்தகையோரை ஜனாதிபதி விரும்பினால் நிரந்தரப் படைப் படைகளுடன் சேர்த்துக்கொள்ள லாம் எனக் கூறுகின்றது.

இதனை விட இனப் பிரச்சினைத் தீர்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வில் காத்திரமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

புலிகளுடன் பேச்சு நடத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகியது. பயங்கரவாதத்தினால் உருக்குலைந்து கிடந்த இந்த நாட்டை நன்னிலைக்கு கொண்டு வருவதற்காக பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்தார்.

அதன் பின்னர் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. அதே நேரம் சகல கட்சிகளையும் உள்ளடக்கி தெரிவுக் குழு அமைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

சட்டத்தரணி

இஸ்மாயில்

பி. மஆரிஃப்

(தலைவர் சுயாதீன தேசிய முன்னணி (ஐநா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com