Contact us at: sooddram@gmail.com

 

அனைத்து தரப்பினரையும் உள்வாங்கிய இணக்கப்பாடே காலத்தின் தேவை

30 வருட கொடூர யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைபெற யுத்த த்தை தோற்றுவித்த அடிப்படைக் காரணிகள் களையப் படுதல் வேண்டும். அவ்வடிப்படைக் காரணிகள் களையப்படுவதிலும் பார்க்க அக்காரணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புத் தரவல்ல சிகிச்சையாகவே தீர்வுத் திட்டம் பேசப்படுகின்றது. சிகிச்சைகள் பக்க விளைவுகளை தரக் கூடியவை. உடம்பின் எந்தப் பாகத்தின் நோயைத் தீர்க்க சிகிச்சை நாடப்படுகின்றதோ அச்சிகிச்சை உடம்பின் மற்றொரு பாகத்திற்கு பக்க விளைவுத் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை வைத்தியர் களுக்கு இருக்கின்றது. எனவே ‘அரசாங்கம்’ என்ற வைத்தியர் ‘தமிழ் மக்கள்’ என்ற உடற்பாகத் தின் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கான சிகிச்சையைச் செய்ய விழைகின்ற பொழுது இலங்கை மக்கள் என்ற உடம்பின் அடுத்த பாகங்களான ஏனைய சமூகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. எனவேதான் த.தே. கூட்டமைப்புடன் பேசுகின்ற அதேவேளை பாராளுமன்றத் தெரிவுக் குழுவையும் அமைத்து சகல தரப்பினரையும் உள்வாங்கி ஒரு பொதுவான இணக்கப்பாட் டிற்கு வர முயற்சிக்கின்றது.

கடந்த கால வரலாறுகளைத் த.தே.கூ. இதை மீட்டிப் பார்க்க வேண்டும். அரசாங்கத்துடன் எட்டப்படுகின்ற எந்த இணக்கப்பாட்டிற்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு அல்லது டட்லி- செல்வா ஒப்பந்தத்திற்கு ஏற்பட்ட கதி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சகல தரப்பினரையும் உள்வாங்கிய ஓர் இணக்கப்பாடு தவிர்க்க முடியாததாகும்.

இந்தப் பின்னணியில்தான் த.தே. கூட்டமைப்பு அரசுடன் பேசுகின்ற அதே வேளை தெரிவுக்குழுவிலும் பங்குபற்றுகின்ற தேவை பார்க்கப்பட வேண்டியுள்ளது.

கேள்வி: அரசாங்கத்திற்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும் இடம்பெற வேண்டும் எனக் கூறப்படுவது பற்றி

பதில்: இந்தப் பேச்சுவார்த்தையில் த.தே.கூ. கலந்து கொள்ளுவதன் நோக்கம் அதிகாரப் பகிர்வின் அடிப்படை விசயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்விற்கு வருவதற்காகும். அதிகாரப் பகிர்வின் அடிப்படை விடயங்கள் என்னும் போது அது வட-கிழக்கு மீளிணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்றவற்றைக் குறிக்கின்றது. வட-கிழக்கு இணைப்பு முஸ்லிம்களைப் பொறுத்தவரை, இவை தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேயளவு அவர்களுக்கும் முக்கியமானதாகும். எனவே இப்பேச்சுவார்த்தை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாற்றப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கும் ஐ.தே.கட்சி அரசாங்கத்திற்கும் இடையில் அன்று பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் நடைபெற்ற பொழுது முஸ்லிம்கள் மூன்றாந் தரப்பாக பங்குபற்ற வேண்டும், என்பது முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஈற்றில் விடுதலைப் புலிகளும் மூன்றாந்தரப்பிற்கு இணங்கியிருந்தார்கள். எனவே த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் பங்குபற்றுவதை எதிர்ப்பதற்கு நியாயம் இல்லை. முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பை எதிர்பார்ப்பது எல்லா வகையிலும் நியாயமானது. ஏனெனில் 1987ம் ஆண்டு இலங்கை- இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட போதும் அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 13 வது அரசியலமைப்புத் திருத்தத்திலும் வட - கிழக்கில் முஸ்லிம்களில் இருப்பு கண்டு கொள்ளப்படவில்லை.

கேள்வி: இன்று 13 பிளஸ் என்பது அரசியலில் ஒரு பிரபல்யமான ஒரு சொல்லாக இருக்கின்றது. 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன? இது முஸ்லிம்களைப் பொறுத்தவரை எவ்வித சாதக பாதக தாக்கங்களைச் செலுத்தும் என எதிர்பார்க்கிaர்கள்?

பதில்: நான் ஏற்கனவே கூறியது போல், 13 வது அரசியலமைப்புத் திருத்தம் முஸ்லிம்களைக் கலந்தா லோசிக்காது, அவர்களது அரசியலி ருப்பைக் கணக்கிலெடுக்காது கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். இத்திருத்தச் சட்டம் இரு மாகாணங் கள் விரும்பினால் அவைகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது. மட்டுமல்லாமல் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே 13 வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் போது அவ் அதிகாரங்கள் செயற்பட ஆரம்பிக்கும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இரு மாகாணங்களும் இணைந்த நிலையில் இவ்வதிகாரங்கள் செயற் படுத்தப்படுமானால் முஸ்லிம்கள் வட - கிழக்கை விட்டு வெளியேறு வதைத் தவிர வேறு வழி இருக்காது.

கேள்வி: காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது எவ்வாறான பாதிப்புக்கள் முஸ்லிம்களுக்கு ஏற்படும், என்பதை சற்று விபரிக்க முடியுமா?

பதில்: பொலிஸ் அதிகாரத்தை எடுங்கள், மாவனல்லையில் முஸ்லிம் களுக்கு எதிராக இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட பொழுது பொலிஸாரால் அதனைக் கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

அன்றைய ஜனாதிபதி உடனடியாக படைகளைச் சேவையில் ஈடுபடுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அதேபோன்று அழுத்கமவில் முஸ்லிம்களுக் கெதிராக இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட பொழுதும் காலியில் 1982ம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதி ராக இனவன்செயல் வெடித்த பொழுதும் படைகளைச் சேவையில் ஈடுபடுத்தியே பதவியில் இருந்த ஜனாதிபதிகள் அமைதியை நிலை நாட்டினர். பொலிஸ் அதிகாரம் முதலமைச்சரின் கைகளுக்கு செல்கின்ற பொழுது முதலமைச்சரின் சம்மதம் அல்லது வேண்டுகோளின்றி இவ்வாறான சூழ்நிலைகளில் ஜனாதி பதியால் படையினரை சேவையில் ஈடுபடுத்த முடியாமல் போகும். அவ்வாறான சூழ் நிலையில் சிறுபான்மை மக்களின் நிலைமையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் போது சர்வதேச அபிப்பிராயங்களு க்கு தலைசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு புறம், இலங்கை வாழ் முழு முஸ்லிம்களையும் சேர்க்கும் பொழுது மத்திய அரசாங்கத்தில் அல்லது ஜனாதிபதித் தெரிவில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தக் கூடிய பலம் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே மத்திய அரசாங்கத்தினூடாக சாதிக்கக்கூடிய விடயங்களை, உறுதிப்படுத்தக் கூடிய பாதுகாப்பை மாகாண சபை மூலம் எதிர்பார்க்க முடியாது?

வட - கிழக்கை எடுத்துக் கொண்டாலும் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக இருக்கின்ற பொழுது இவ்வதிகாரங்களால் ஆபத்தே இருக்கின்றது. உதாரணமாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் அங்கு மூவின மக்களும் அண்ணளவாக சமமாக இருந்தாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது சகல சமூகங்களினதும் பாதுகாப்பில் கேள்விக்குறி எழவே செய்கின்றது. அதாவது முதலமைச்சர் எந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றாரோ அதற்கு அடுத்த சமூகங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை.

கேள்வி: வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று த.தே.கூ. தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருக்கும் போதே காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் எவ்வாறான ஆபத்துக்களை முஸ்லிம்கள் சந்திக்க வேண்டி வரும் என்று மேலே குறிப்பிட்டேன். வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம்களின் நிலைபற்றி விபரிக்கத் தான் வேண்டுமா? இணைந்த வட- கிழக்கில் முஸ்லிம்கள் 17 சதவீதமாக மாறுகின்ற பொழுது முஸ்லிம்கள் அம்மாகாண சபையில் ஒரு செல்லாக்காசாகத்தான் இருப்பார்கள் என்பது விகிதாசாரத்தில் அவர்கள் பலமிழந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்காக மாத்திரமல்ல. முஸ்லிம்களின் கடந்த கால வேதனையான அனுபவங்களும் அதனையே சொல்லி நிற்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் வரலாற்றுப் புத்தகத்தின் சில பக்கங்களைப் புரட்டியே ஆக வேண்டும். ஒரு காலமிருந்தது தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம், சொல்லின் செல்வன் இராசதுரை போன்றவர்கள் அரசியலில் கோலோச்சிய பொன்னான காலமது. முஸ்லிம்கள் தமது மொழி இன சகோதரர்களாகிய தமிழ் சகோதரர்களுடன் இரண்டறக் கலந்து ஒன்றாக அரசியல் பயணம் செய்ய ஆசைப்பட்ட காலமது.

அதனால்தான் எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அகமட், எம்.எம். முஸ்தபா போன்றவர்கள் தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பொழுது ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களைப் புறந்தள்ளி இவர்களை முஸ்லிம்கள் தெரிவு செய்தார்கள். துரதிஷ்டவசமாக அண்மையில் ஒரு தினசரிப் பத்திரிகையில் ஒரு தமிழ் சகோதரர் தன்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவராக அடையாளம் காட்டி மேற்குறிப்பிட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு அன்றைய தமிழரசுக் கட்சி போட்ட பிச்சைதான் அவர்கள் பாராளுமன்றம் சென்றது, என்று ‘தலையை வால்’ என்பது போல் எழுதியிருந்தார். சிலவேளை தமிழ்ப் பெரும்பான் மைத் தொகுதிகளில் இவர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தால் அவரது கூற்று சரியாக இருந்திருக்கும். மாறாக முஸ்லிம்களுக்கே உரித்தான, முஸ்லிம் பெரும்பான்¨மைத் தொகுதிகளில் இவர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பொழுது முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் ஒத்துப் போக விரும்பாமல் இருந்திருந்தால் அவர் கள் வேறு முஸ்லிம் வேட்பாளர் களைத் தெரிவு செய்திருக்க முடியும்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளால் வெற்றி பெற்று அவர்கள் கட்சி மாறினார்கள், என்பது உண்மை. அதற்கான காரணம், தமிழ் அரசியல் என்றுமே எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்தை விமர்சிக்கின்ற முரண்பாட்டு அரசியலினூடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம் என்ற போக்கில் ஏற்பட்ட அதிருப்தியும் தெரிவு செய்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேணவாவும் தானே தவிர தமிழ் மக்கள் மீதான சகோதர வாஞ்சை யில் குறைவு ஏற்பட்டதனால் அல்ல.

இணக்கப்பாட்டு அரசியல் முஸ்லிம்களின் பாதை என்றான போதும் தமிழ் முரண்பாட்டு அரசியலின் தாக்கத்தின் ஆளுகைக் குட்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இல்லாமல் இருக்கவில்லை. அதனால்தான் அன்று ஆயுத இயக்கங்களில் இணைந்து தமிழ் சகோதர போராட்டத்தில் பங்கெடுக்க பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந் தார்கள். ஆனால் அவர்களெல்லாம் களையெடுக்கப்பட்டு விலாசம் தெரியாமல் வேரறுக்கப்பட்டார்களே!

ஆண்டாண்டு காலமாய் அருகருகே வாழ்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அகதி முத்திரை குத்தப்பட்டு அவசர அவசரமாய் வடக்கில் இருந்து விரட்டப்பட்டனரே! அதற்கான காரணமென்ன?

முஸ்லிம்களுடன் ஒட்டி உறவாடுகின்ற ஒரு போக்கிற்கு தாம் தயாரில்லை என்ற செய்தியை தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம் போன்றோரில் மறைவுக்குப் பின் தமிழ் அரசியலில் தொடர்ச்சியாக பல வடிவங்களில் சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதிகாரப் பகிர்வு முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் அடிப்படை நலன்களுக்கும் குந்தகம் இல்லாத வகையில் அமைய வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். எனவேதான் வட - கிழக்கு மீளிணைப்புத் தொடர்பாகவும் காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பாகவும் நாம் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் வட - கிழக்கு இணைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்ற அதே வேளை தனி அலகு பற்றியும் பேசுகின்றது. இது பற்றி என்ன கூறுகின்aர்கள்.

பதில்: வட-கிழக்கு மீளிணைப்பில் உள்ள ஆபத்து பற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கின்றேன். தனி அலகு கோரிக்கையை மறைந்த தலைவர் அஷ்ரப் முன்வைத்தார். எனவே அ.இ.மு. காங்கிரஸ் தனி அலகு வேண்டாம் என்கின்றதா? என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம்.

தனி அலகுக் கோரிக்கை உருவானதன் பின்னணியை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அன்று முஸ்லிம்களை கருத்திற் கொள்ளாமல் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. கிழக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு வருட காலப்பகுதிக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது நடாத்தப்படுவதற்கான எதுவித அடையாளங்களும் தென்படவில்லை. அதே நேரம் அவ்வாறு நடாத்தப்பட்டால் அன்றைய ஆயுத கலாசார சூழலில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் உயிர்கள் பலியாகக் கூடிய வாய்ப்பும் இருந்தது.

ஞியிப் எம். ஜீhசிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com