Contact us at: sooddram@gmail.com

 

வீதி விதிகளை கடைப்பிடிக்காதவர்களை பொலிஸார் கடுமையாக தண்டிக்க வேண்டும்

30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தில் இருந்து மீண்டு இன்று பூரண சுதந்திரத்தையும் அமைதியான வாழ்க்கையையும் அனுபவித்துக்கொ ண்டிருக்கும் நம் நாட்டு மக்களுக்கு வாகன விபத்துக்களின் உருவில் இன்னும் ஒரு பயங்கரவாத அரக்கன் இப்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கி றான். ஒரு நாடு பொருளாதாரத்துறையில் அபிவிருத்தியடைவதற்கு அந்நாட்டில் சிற ந்த நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் அதிவேக நெடுஞ் சாலைகள் மிகவும் அவசியமாகும். இன்றைய அபிவிருத்தி யுகத்தில் நம் நாட்டு மக்கள் ஒரு விநாடியைக்கூட அநாவசியமாக போக்குவரத்துக்காக வீணாக்க விரும்புவதில்லை. அவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைந்து தங்கள் பணிகளை நிறைவேற்றி முடிக்க விரும்புகிறார்கள்.

வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தில் நேரத்தை வீணாக்கலாகாது என்ற பொரு ளாதார சித்தாந்தத்தை நன்கு உணர்ந்திருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள், பயங்கரவாத யுத்தம் உச்ச கட்டத்தில் நடைபெற் றுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் ஒரு பக்கத்தில் யுத்தத்தை நடத்திக் கொண்டு மறுபக்கத்தில் அபிவிருத்திப் பணிகளை குறிப்பாக பாலங்கள், மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை அமைப்பதற்கான சிறந்த அடித்தளத்தை அமைத்து செயற்பட்டார்.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை துவம்சம் செய்து நாட்டு மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி அவர்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக் களுக்கு இடைத்தங்கல் வசிப்பிடங்களை தற்காலிகமாகச் செய்து கொடுத்து இப்போது அவர்களை அந்த மக்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த் தும் சாதனையையும் புரிந்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியினதும், அவரது அரசாங்கத்தினதும் கவனம் முழுமையாக அபிவிருத்திப் பணிகளில் குறிப்பாக வீதியமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைப்பு, பாலங்களை அமைத்தல் போன்ற பணிகளில் கூடுதலாக திரும்பியிருந்தது.

கொட்டாவையில் இருந்து காலி மாநகரத்துக்கான அதிவேக நெடுஞ்சாலை இன்று ஒரு உலக சாதனையை ஏற்படுத்தி இலங்கையின் அபிவிருத்திச் செய ற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுவதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து காலிக்குச் செல்வதற்கு பொதுவாக நான்கு மணித்தியாலங்கள் எடுக்கும். இந்த அதிவேக பாதையின் ஊடாக ஒரு மணி நேரத்தில் கொட்டாவையில் இருந்து காலிக்குச் சென்றடையலாம்.

அது போன்று மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு பாதை மூலம் செல்வதற்கு முன்னர் ஆறு, நீரோடைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந் தது. இப்போது அரசாங்கம் இங்கு 6 பாலங்களை அமைத்துள்ளது. இதனால் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் தூரம் 100 கிலோ மீற்றர்களினால் குறைந்திருக்கின்றது. அதுபோன்றே அரசாங்கம் மன்னம்பிட் டிப் பாலம், கிண்ணியாப் பாலம், சங்குப்பிட்டிப் பாலம் போன்றவற்றையும் பெரிதாக அமைத்துள்ளது.

ட்டக்களப்பின் வரலாற்றில் முக்கிய அடையாளச் சின்னமாக விளங்கிய இரும் பினால் நிர்மாணிக்கப்பட்ட கல்லடிப்பாலத்தை இப்போது அரசாங்கம் படிப் படியாக அகற்றி, அங்கு ஒரு பெரிய பாலத்தையும் நிர்மாணித்துக் கொண்டி ருக்கின்றது.

இவ்விதம் நாட்டின் எந்தப் பிரதேசத்துக்கும் ஓரிரு மணித்தியாலங்களில் சென்ற டைவதற்கு நல்ல பெரிய காப்பெட் போடப்பட்ட நெடுஞ்சாலைகள் அமைக் கப்பட்டு வருவதனால் வண்டியோட்டிகளும் வேக வரம்புகளை மீறி தங்கள் வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்வதுடன் கவனக்குறைவாகவும் வாகன ங்களை ஓட்டுகின்றார்கள். இதனால்தான் கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் வீதி விபத்துக்களும், வீதி விபத்து மரணங்களும் என்றுமில்லாத வாறு அதிகரித்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் சில மோசடிகள் இடம்பெறுவதனால் வாகனங்களை ஓட்டுவதற்கு அந்தளவுக்கு பரிச்சயம் அற்றவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் கொடுக்கப்படுவதும் இந்த வீதி விபத்துக்களுக்கு இன்னுமொரு காரணம் என்றும் கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 39 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம் பெற்றன. இவற்றில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,501 ஆகும். இந்த விபத்துக்களில் 13 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 2012 ஆம் ஆண் டின் முதல் 38 நாட்களில் சுமார் 100 பேருக்கு மேல் வீதிவிபத்துக்களுக்கு பலியாயிருக்கிறார்கள்.

பயங்கரவாத யுத்தம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து உயிராபத்து இன்றி வீடு திரு ம்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வார்கள். மனைவிமார் தங்கள் கணவன்மார் ஆபத்து இன்றி வீடு திரும்ப வேண்டும் என்றும் பிரா ர்த்திப்பார்கள். இன்று நாட்டில் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து விட்ட போதிலும் நம் நாட்டு மக்கள் இன்றும் நாளாந்தம் இதே பிரார்த்தனையை தங்கள் உறவுக்காரர்களுக்காக தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பாடசாலைகளுக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள், கணவன்மார், சகோதர சகோ தரிகள் வீதி விபத்துக்களில் சிக்காமல் வீடு திரும்ப வேண்டும் என்ற பிரார் த்தனை ஒவ்வொரு இல்லத்தரசிகளின் மனதிலும் வேரூன்றி இருக்கின்றது.

வீதி விபத்துக்களும், வீதி விபத்து மரணங்களும் நாளாந்தம் அதிகரித்து வரு வது இன்றைய அவல நிலைக்கு பிரதான காரணமாகும். வீதி விபத்துக்களை யும், விபத்து மரணங்களையும் கணிசமான அளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டுமாயின் பொலிஸார், வாகனப் போக்குவரத்து விதி களை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமன்றி வீதி விதிகளை துச்சமாக மதித்து வீதிகளைக் கடக்கும் மற்றும் நடைபாதைகளில் செல்வதை மறந்து நடு வீதியில் கைத்தொலைபேசிகளைக் காதில் வைத்துக்கொண்டு உல்லாச மாகப் பேசிக்கொண்டு நடப்பவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடி க்கை எடுப்பது அவசியமாகும்.

அடி உதவுவது போல் அண்ணன் தம்பிமார் உதவ மாட்டார்கள் என்று பாட்டி சொல்லும் கதைகளைப் போன்ற இன்றைய விபத்துக்களுக்கு பொறுப்பான வர்களுக்கு எதிராக பொலிஸார் நேர்மையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தவறிழைப்பவர்களை, வாகன ஓட்டிகளாக இருந்தாலும் அல்லது பாதசாரிக ளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம். இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட் டில் வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பது சாத்தியப்படாது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com