Contact us at: sooddram@gmail.com

 

ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் புற்றுநோயை குணமாக்கலாம்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று உலக புற்றுநோய் தினம் உலகநாடுகள் எங்கும் நினைவுகூரப்பட்டது. எல்லா நோய் களையும் விட இன்று புற்றுநோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உலகநாடுகளில் அதி உயர் மட்டத்தில் இருக்கின்றது. இலங்கையில் மாத்திரம் ஒரு வருடத்திற்கு சுமார் 15ஆயிரம் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். புற்றுநோய் ஆபத்தில் இருந்து நம் நாட்டு மக்களை காப்பற்றுவதற்காக கொழும்பு றோட்டரிக்கழகம் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்புத் திட்டத்தின் கீழ் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டவர்களை ஆரம் பத்திலேயே கண்டுபிடிக்கும் உயிர்காக்கும் ஒரு பாரிய திட்டத்தை ஆரம்பித் துள்ளது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் புற்றுநோயினால் இளம் வயதிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியுமெ ன்று வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். புற்றுநோய் மற்றும் மற் றவர்களுக்கு தொற்றாத சில நோய்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 25சதவீதம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எய்ட்ஸ் நோய், மலேரியா, சயரோகம் ஆகியவற்றினால் இன்று இறப்பவர்களின் எண்ணிக்கையை விட புற்றுநோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மிக வும் அதிகமாக இருக்கின்றது. உலகின் புற்றுநோய் கட்டுபாட்டு பேரவை நட த்திய ஓர் ஆய்வொன்றின் மூலம் ஒவ்வொரு வருடமும் 12.7மில்லியன் பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 7.6 மில்லியன் புற்று நோயாளிகள் புற்றுநோய்க்கு வருடாந்தம் பலியாகிறார் கள்.

உலகில் இடம்பெறும் நோய்களினால் மரணிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணி க்கை 13சதவீதமாக அதிகரித்துள்ளது. 2030ம் ஆண்டில் புற்றுநோயினால் பாதி க்கப்படுவர்களின் எண்ணிக்கை 26மில்லியனாகவும் அதனால் மரணிப்பவர்க ளின் எண்ணிக்கை 17மில்லியனாகவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

புற்றுநோயினால் இவ்விதம் பலர் மரணிக்கின்ற போதிலும் 30முதல் 40 சதவீத மான புற்றுநோயாளிகளை பூரணமாக குணப்படுத்த முடியுமென்று வைத்தியர் கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நவீன வைத்திய சிகிச்சை கண்டுபிடிப்புக ளின் மூலம் இதனை சாதிக்க முடியுமென்று திட்டவட்டமாக அறிவிக்கப்படுகி றது.

ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டார் என்ற தகவலை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்ட உடன், அவர் உடனடி சிகிச்சைகளை எடுத்தால் புற்றுநோயாளிக ளில் மூன்றில் ஒரு பகுதியினரை பூரணமாக குணப்படுத்த முடியுமென்று வைத் தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

புற்றுநோயை குணமாக்கும் பிரதான ஆஸ்பத்திரி மஹரகமையில் அமைந்துள்ள போதிலும் நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் புற்றுநோயை குணப்படுத்தும் பிரிவுகள் இயங்குகின்றன. அங்கு குணமாக்க முடியாத நோயாளிகள் மஹரகம பிரதான ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக் கப்படுகிறார்கள்.

கொழும்பு 5 எல்விட்டிகல மாவத்தையில் இருக்கும் புற்றுநோயாளிகளை ஆரம் பத்திலேயே வைத்திய பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கும் நிலையத்தில் எந்தவொரு நோயாளியும் எவ்வித கட்டணமும் இன்றி தனக்கு தேவையான வைத்திய பரிசோதனையை நடத்தி அதில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் அவர்கள் மஹரகம புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். இதுவரையில் இந்த நிலையத்தில் 12ஆயிரம் புற்றுநோயாளிகள் தொடர்பான பூர்வாங்க வைத்திய பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

விஞிதிகி என்ற லத்தின் சொல்லில் இருந்தே புற்றுநோய் என்ற பதம் உலகில் அறி முகமானது. புற்றுநோய் உடற்கலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து உடல் உறுப்புகளை ஒரு நண்டைப் போன்று இருக்கி பிடித்துக் கொள்வதனால் தான் புற்றுநோய் ஏற்படுகின்றது. அதனால் தான் இது நண்டின் மறு பெய ரான புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்றது.

உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை புற்றுநோய் தாக்கி செயல் இழக்கச் செய் கிறது. சாதாரண உடற்கலங்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படும் போது, உட லின் அப்பகுதியில் உள்ள கலங்கள் அனைத்தும் செயலிழக்கின்றன. இந்த புற்று நோய் கலங்கள் வளர்வதுடன் இனவிருத்தியும் செய்து உடல் எங்கும் காட்டுத்தீயைப் போன்று வேகமாக பரவுகின்றன.

ற்றுநோய் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டதற்கான அறிகுறிகள் இவைதான். உடலில் எங்காவது ஏற்படும் காயம், எத்தகைய சிகிச்சையை அளித்தாலும் அந்த காயம் குணமாகாது. மார்பகத்தில் அல்லது வேறு ஏதாவது இடத்தில் உடலுக் குள் கட்டிகள் உருவாகும். அவற்றை நீங்கள் தொட்டுத்தடவி உணர்ந்து கொள்ளலாம். இயற்கைக்கு மாறாக மர்ம உறுப்புகளில் இருந்து இரத்தம் வடிதல். சருமத்திற்கு வெளியில் கட்டிகள் தோன்றுதல். தொடர்ந்தும் அஜீர ணம் ஏற்படுதல், எதையும் விழுங்குவதில் கஷ்டங்கள் தோன்றுதல், தொடர்ந் தும் இருமல் நீடித்தல். பொதுவாக இயற்கைக்கு மாறாக மலம் வெளியேறுதல்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒவ்வொருவரும் சென்று தங்கள் நோய் அறிகுறிகளை டாக்டர்களிடம் தெரிவித்தால் புற்றுநோய் இருக்கின்றதா என் பதை கண்டுபிடிப்பதற்கான வைத்திய ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

புற்றுநோய் ஆண், பெண், சிறுவன், சிறுமி, ஏழை, பணக்காரன் என்ற பேதம் காண்பிக்காமல் அனைவருக்கும் பீடிக்கக்கூடிய ஒரு நோயாகும். பெரும்பா லும் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைத்தல் மற்றும் புகையிலையும், வெற்றி லையும் சுண்ணாம்பையும் சப்புதல் ஆகியனவும் பிரதான காரணங்களாகும்.

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுவிட்டதென்று எவரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அந்நோயாளியை பூரணமாக குணமாக்க முடியும். எனவே, எங்களில் எவருக்காவது இந்த அறி குறிகள் தென்பட்டால் உடனடியாக புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனை களை நடத்தி நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை கள் மூலம் பூரணமாக நோயை குணமாக்க முடியும்.

இந்திய அணி உலக கிரிக்கட் சம்பியன் பட்டத்தை பெறுவதற்கு தனது சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் உதவி செய்த யுவராஜ்சிங் நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்திலேயே நோய் கண்டுபிடிக் கப் பட்டதனால் இன்னும் சில மாதங்களில் அவரை பூரணமாக குணமாக்க முடியுமென்று அமெரிக்க வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். யுவராஜ்சிங்கின் இந்த அனுபவம் எங்கள் நாட்டின் புற்றுநோயாளிகளுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குவது திண்ணம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com