Contact us at: sooddram@gmail.com

 

ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்!

தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ் தொடர்பில் விசாரணைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென ஆவணங்கள் பலவும் திரட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஜொப்ஸின் நண்பர்கள், அவரிடம் வேலைபார்த்த ஊழியர்கள் அவர் தொடர்பில் வழங்கிய செய்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 1991 ஆம் ஆண்டுப்பகுதியில் தயாரிக்கப்பட்ட 191 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை தற்போது எப்.பி.ஐ. இன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தகவல்களுக்கான சுதந்திரம் (Freedom of Information Act) என்ற சட்டத்தின் அடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இவ் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் பல அரிய வெளியுலகினர் அறிந்திராத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜொப்ஸ் தொடர்பில் ...... ஜொப்ஸ் நம்பத்தகுந்தவரோ, நாணயமானவரோ இல்லையென அவரின் நீண்டகால நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது இலக்குகளை எட்டுவதற்காக எதனையும் செய்யவார். நிஜத்தினைக்கூட மாற்றிவிடும் தன்மை கொண்டவர். தலைக்கனம் கொண்டவர் என்பதுடன் மற்றையோரை இலகுவில் மதிக்கும் தன்மை அற்றவர். ஜொப்ஸ் சட்டவிரோத போதைப் பொருட்களை உபயோகித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கடந்த 1985 ஆம் ஆண்டு ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் போது குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது உறவினர்கள் சிலருக்கு இவர் உதவிசெய்யவில்லை. இவ்வாறான பல தகவல்கள் ஜொப்ஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள போதிலும் இவற்றில் சில தகவல்கள் ஏற்கனவே தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பேசப்பட்டன.

அவர் போதைப்பொருள் உபயோகித்ததனை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். குறிப்பாக ஜொப்ஸ் கடும் போக்குடையவர் எனவும் அவர் தனது ஊழியர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதில்லையெனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுமட்டுமன்றி அப்பிளின் பொருட்களைத் தயாரிக்கும் சீனாவில் உள்ள 'பொக்ஸ்கோன்' நிறுவனத்தில் ஊழியர்களின் நலனில் ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிர்வாகம் சிறிதும் அக்கறை காட்டவில்லையென பல சர்ச்சைகள் எழுந்தன.

அந்நிறுவனத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள், மன உளைச்சலால் ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் ஸ்டீவுக்கு பலமுறை அறிவித்த போதிலும் அவர் அது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என அந்நிறுவனத்தின் ஊழியர்களும் மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்திருந்தன.

இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் ஜொப்ஸ் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொழில்நுட்ப உலகில் ஜொப்ஸிற்கு நிகர் என்றுமே ஜொப்ஸ்தான் என வாதாடும் ஒரு சாராரும் இருக்கவே செய்கின்றனர்.

ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின்பொட் முதல்போன் வரை உருவாகியமை யாரும் மறுக்கமுடியாது. அவர் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அக்கறை கொண்டிருந்தார். அவர் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸிற்கு இருந்தாக அவரது நண்பர்களில் சிலர் தெரிவிக்கின்றனர். ஜொப்ஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்களில் பல அவரைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டவையே.

இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். எனவே ஒரு சிலரின் கருத்துக்களை வைத்து அவரைக் கெட்டவர் என முத்திரை குத்திவிட முடியாது. எது எவ்வாறு இருப்பினும் தொழில்நுட்ப உலகில் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அப்பிளின் பெயரை அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது. இசை
முதல் ஸ்மார்ட் போன் வரை அனைத்துக்கும் முன்னோடியாகத் திகழும் அப்பிள் பொருட்களை உலகுக்குத் தந்த ஜொப்ஸை அவ்வளவு இலகுவாக மறக்கமுடியுமா என்ன?

(வீரகேசரி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com