Contact us at: sooddram@gmail.com

 

நேரம் பொன்னானது

னிதன் உருவாகும் போதே அவனின் மரணமும் உறுதி செய்யப் படுகிறது! மனிதனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இதுவே, பொதுவான நியதி! ஆயுளின் அளவு களில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் பிறப்பின் முடிவு இறப்பு என்றும், ஆக்கத்தின் முடிவு அழிவு என்றும், ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருக்கவே செய்கிறது. ஒரு மனிதன், பிறந்த வினாடியிலி ருந்து, அவனின் ஆயுள் காலம் முழுவதும் அவனை நிழலாய் பின் தொடர்வது இரண்டு விடயங்கள்தான். ஒன்று உணவு மற்றது மரணம். ஒருவனின் உணவு நிறைவுறும் போது, மரணம் அவனை தழுவச் செய்யும், அல்லது மரணம் அவனை தீண்டும் போது... அவனின் உணவு முடிவுற்றிருக்கும். மரணத்தை வென்றவர் எவருமிலர் என்ற நிதர்சன உண்மையைமறுப்ப வரும் எவருமிலர் ஆயினும் தன் விடயத்தில் மட்டும், “அது எப்போதோ... தற்போதைக்கு இல்லை...” என்ற அலட்சியமே ஒவ்வொரு மனிதனுக்கும்.

நேரங்களின் திரட்சி, அல்லது வினாடிகளின் அடர்த்திகளையே காலம் என்கிறோம். அடர்த்தியின் அளவுக்கேற்ப, மணித்துளிகள், நாட்கள், வாரங்கள், வருடங்கள் என வரைவகை படுத்துகிறோம். நடப்பாண்டு முடிந்து புதிய ஆண்டு பிறக்கையில் புத்தாண்டு என்ற பெயரிலும், ஒவ்வொரு வயதை கடக்கும் போதும் பிறந்தநாள் என்ற பெயரிலும், காலங்களின் இழப்பை கொண்டாடி குதூகலித்து வருகிறோம். மாறாக ஒவ்வொரு புத்தாண்டிலும், பிறந்தநாளிலும், நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை அல்லது ஒரு வயதை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மேலிடும் போதே நேரத்தின் அருமையும், காலத்தின் அவசியமும் விளங்கும்.

ஒரு மனிதனின் சராசரி வயது (அதுவும், எந்த ஒரு விபத்திலோ... நோய் நொடியிலோ மரணிக்காத பட்சத்தில்) 70 என்று வைத்துக் கொள்வோம். அதில் 30 வயதான ஒரு வாலிபனின் மீதமுள்ள 40 வரு டங்களின் எண்ணிக்கை நாட்களின் அடிப்படையில் 14,600 நாட்கள்.

மணித்துளிகளின் அடிப்படையில் 3,50,400 மணி நேரங்கள்

நிமிடங்கள் அடிப்படையில் 2,10,24,000 நிமிடங்கள்

வினாடிகளின் அடிப்படையில் 126,14,40,000 வினாடிகள் மட்டுமே!

இந்த கணக்கின் அடிப்படையில் 70 வருடத்தில் உங்களின் வயதை கழித்து மீதமுள்ள வருடங்களின், நேரங்களை கணக்கிட்டு பார்த்தீர்களானால்ஆயுளின் அற்பம்புரியும் நாள் ஒன்று 86,400 வினாடிகள், நம் ஒவ்வொருவரையும் கடந்து கொண்டிருக்கிறது.

என்ன ஏதேதோ சொல்லி பயமுறுத் துவது போல தெரிகிறதே என்றும் சிலரும், ஏதோ புதிதாக கண்டு பிடித்து விட்ட மாதிரி சிலரும் கேட்கலாம்.

இங்கு யாரையும் பயமுறுத்தவுமில்லை, புதிதாக எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை நாமெல்லாம் அறிந்த ஒன்றை அலட்சிய படுத்துவதையும், பொழுதே போக மாட்டேன்கிறது வாழ்க்கையே விறு விறுப்பின்றி இருக்கிறது என்று பொன்னான நேரங்களை வீணடிப்பதை யும் சுட்டிக்காட்டவே இந்த புள்ளி விபரம். இன்னும், குடும்பங்களையும், உறவினர்களையும் பிரிந்து வெளிநாடு களில் வேலை செய்பவர்களுக்கென்று தனிக் கணக்கு இருக்கத்தான் செய்கிறது. அதாவது,

வருடத்தில் 11 மாதங்கள் வேலை 1 மாதம் விடுமுறையென்று வருடத்திற்கு ஒரு முறை தாயகம் செல்பவரானாலும் சரி, அல்லது 2 வருடத்திற்கு ஒரு முறை என்று, 22 மாதங்கள் பணிபுரிந்து விட்டு, 2 மாத விடுமுறையில் ஊர் செல்பவரானாலும் சரி 30 வயதில் வேலைத் தேடி, வெளிநாடுகளுக்கு வரும் ஒரு இளைஞன், தன் 60 வயது (முதுமை) வரை பணிபுரிந்தால் (அதற்கு மேல் பணிபுரிய நீங்களே, விரும்பினாலும் தற்போதைய சட்டத்தில் இடமில்லை) அவன் தன் குடும்பங்களை பிரிந்து (வாடிய) காலம் நாட்களின் அடிப்படையில் 9,900 நாட்கள் அதா வது 2,37,600 மணி நேரங்கள் ஆனால், அவன் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சி யாக இருந்த (விடுமுறை) காலம் வெறும் 720 நாட்கள் அதாவது 17,280 மணி நேரங்கள் மட்டுமே. பெரும்பாலும், குடும்பத்தை பிரிந்து வெளி நாடுகளில் வசிக்கும் நாம்... நம்மை நாமே சமா தானப் படுத்திக் கொள்ள நமக்கு நாமே முன் வைக்கும் உதாரண தத் துவம்திரை கடலோடியும் திரவியம் தேடுஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் போன்றவைக ளாகும். திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்னும் சொல் நாம் வாழும். கிட்டத்தட்ட துறவரம் போன்ற வாழ்க்கையை நியாயப்படுத்த கூறப்பட்ட தத்துவமல்ல. ஒன்றைத் இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்ற வைரவரிகளில் நம் வாழ்க்கை எப்படி அடங்கும். எதை பெற, எதை இழக்கிறோம்? வெறும் 720 நாட்களின் மகிழ்ச்சிக்காக 9,900 நாட்களை தியாகம் செய்கிறோமே இதுவா...? ஒருவன் புழுக்களை போட்டு மீன்களை பிடிப்பதற்கு பதிலாக, மீன்களை போட்டு புழுக்களை பிடிப்பதற்கும், நமக்கும் பெரியதாய் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? வாழ்க்கையை இழந்து வசதிகளையும் பெறும் இந்தவாழாத வாழ்வுஏன்?

அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் இல்லாத வாழ்க்கை ஒரு போதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாய் ஆகாது. முப்பது வருடங்களை கடந்து, வெளிநாடுகளில் வேலை செய்தும் எண்ணற்ற கடமைகளினால், இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எத்தனை எத்தனையோ பேர் இருக் கத்தான் செய்கிறார்கள். ஒரு போதும் நான் அவர்களை குறிப்பிடுவதாய் எண்ண வேண்டாம். எல்லா வசதிகளு மிருந்தும், மேலும் வசதிகளை பெருக்க வாழ்க்கையை இழக்க வேண்டாமே. இறைவன் தந்த மகத்தான பரிசான, அவன் கொடுத்த பொன்னான நேரங் களை வீணாக்காமல் இம்மைக்கும், மறுமைக்குமான, பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com