Contact us at: sooddram@gmail.com

 

பிரதீபா தர்மதாஸவின் புதிய இசை இறுவட்டு வெளியீடு, 'அந்திக்கு முன் வாருங்கள்'
(ஷு தில்ஹான் நாணயக்கா )

லங்கையில் இசைத்துறையின் பாடல்கள் மூலமாக மக்களின் இதயத்தைக் கவர்ந்த சிறந்த பாடகி பிரதீபா தர்மதாஸ 7 ஆண்டு நீண்ட மெளனத்திற்குப் பிறகு தனது புதிய இசை இறுவட்டை வெளியி டவுள்ளார். ஹெந்தேவட கலின் என்ன” (“அந்திக்கு முன்வாருங்கள்”) என்ற சிங்கள பாடல்கள் அடங்கிய புதிய இறுவட்டினை இவர் வெளியிடவுள்ளார்.

ஏழு வருட நீண்ட கால மெளனத்திற்குப் பிறகு தனது ஆறாவது இறுவட்டாக வெளியிடவுள்ளஅந்திக்கு முன் வாருங்கள்” “புழுதியில் பிறந்த பெண்ணேமற்றும்கண்ணீர் கரையோரம்ஆகிய மூன்று இறுவட்டுகள் வெளியிடப்படவுள்ளன. இவ் இறுவட்டு வெளியீடானது கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கேற்ற மண்டபத்தில் எதிர்வரும் 18 ம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கை இசைத்துறையில் மிகச்சிறந்த புதிய பாடலாசிரியர்களான பேராசிரியர் சுனில் ஆரியரத்தின, இரத்தன ஸ்ரீ விஜேசிங்க, பந்துல நானாயக்காரவசம், டலஸ் அழகப்பெரும ஆகியோர் இப்பாடல்களை எழுதியுள்ளனர்.

பிரதீபா தர்மதாஸ தனது பாடல்கள் மூலம் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவுப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தனது புதிய பாடல்களை வெளியிடவுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெண் என்ற வகையில் பார்த்தால் துன்பம், கண்ணீர், இரத்தத்தின் நிறம் என்பது வடக்கில் வாழும் பெண்ணுக்கும் தெற்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரேமாதிரியாக இருக்கின்றது.

ஒரு பிள்ளை இறந்து போனால் ஒரு தாயின் இதயத்தில்வரும் சோகம் வடக்கு தெற்கு என்று பேதம் இல்லை. இந்த விடயத்தை கலைஞர்களாகிய நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உணர்ச்சிகொள்ள வில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இன்று அந்த நிலைமை முடிந்து விட்டது. இந்த நிலையில் நம் இரு இனங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்காக தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இந் நாட்டின் பிரதான மொழிகளாக வேண்டும். அத்தோடு இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை கலைஞர்களுக்கு தான் மிகச்சிறந்த முறையில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பாக யாழ்தேவி என்பது இந்நாட்டில் பயணம் செய்த ஒரு புகையிரத வண்டி அல்ல, அது நமது இனங்களை இணைக்கச் செய்த ஒரு உருவப் பாலமாக இருந்தது. அந்த யாழ்தேவி தாக்குதலுக்கு உட்பட்ட நாள்தான் நமது உருவத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் நடந்த நாள் என்று நான் நினைக்கி றேன்.

அதனால் தான் இன்று வெளியிடும் எனது புதிய இறுவட்டில்யாழ்தேவிஎன்ற ஒரு புது பாடலையும் நான் சேர்த்துள்றேன். இதன் மூலம் இன சகோதரத்துவத்தின் பாலத்தை அமைப்பதற்காக நான் முயற்சி செய்துள்ளேன். ரத்தன ஸ்ரீ விஜேசிங்க எனும் பாடலாசிரியர் எழுதிய இப்பாடல் மூலமும் என் குரல் மூலமும் நமது சகோதரத்துவத்தின் பாலத்தை அமைப்பதற்காக கலைஞர்களாக நாம் பங்குபெறமுடியுமாயின் அதனால் நான் மிகவும் சந்தோஷப் படுவேன் என்றும் பிரதீபா தெரிவிக்கின்றார்.

புரட்சிகரமான பாடல்களை பாடிய பிரதீபாவின் முதல் இசை இறுவட்டு 1992ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு யதார்த்தமான பாடகியான பிரதீபா தனது பாடல்கள் மூலம் மக்களின் பக்கத்திலிருந்து மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையைப் பற்றி பேசினார்.

1977 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அறிமுகமாகிய திறந்த பொருளாதாரத்தால் இலங்கையின் கலாசாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்றுகொலொம் தொட்டின் னெவு னெக்காஎனும் பாடல் மூலம் பேசினார். கொழும்பு துறைமுகத்தில் கப்பல் ஏறினது நம் மனிதாபிமானம் என்றும் அதற்கு மாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது இழிவுச் செயல் என்பது அப் பாடலின் அர்த்தமாகும். இவ்வாறு மக்கள் பக்கத்திலிருந்து மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமையை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியால் அப்போதைய அரசாங்கம் அப்பாடல் உள்ளிட்ட 6 பாடல்களை தடை செய்தது.

சிங்கள பாடல்கள் மட்டுமின்றி தமிழ் பாடலும் பாடிய பிரதீபா 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது இரண்டாவது இசை இறுவட்டில்நீ யாரோ நான் யாரோஎன்ற தமிழ் பாடலை பிரதீபா தனது இனிமையான குரலில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் புது இசை தலைமுறையினருடன் இணைந்து வேலை செய்வதை விரும்புகிறார். அதற்கு காரணம் இப் புதிய தலைமுறை புதிய தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகும். அதுமட்டும் இல்லாமல் அவர்களை இணைத்துக் கொண்டு வேலை செய்யும் போது நேயர்களுக்கு புதியதொரு இசை அனுபவத்தை வழங்க முடியும் என பிரதீபா தெரிவிக்கின்றார்.

இசை என்பது இக் காலக்கட்டத்தில் பணத்திற்கு விற்கப்படுகின்றது. அந்த பாடல்களைப் போல் நான் என் பாடல்களை விற்க மாட்டேன். மக்களுக்காக ஒரு சிறந்த அர்த்தமுள்ள இசையை வழங்குவது தனது ஒரே நோக்கம் என்று கருதுகிறார்.

பிரதீபா தர்மதாஸ தன் ஆரம்பக் கல்வியை மாத்தறை சுஜாதா கல்லூரியில் கற்றார். கல்வி கற்கும் போதே நாடகத்துறையிலும் ஆர்வம் கொண்டார்.

சோமலதா சுபசிங்க எனும் சிறந்த நடிகையின் வழிகாட்டலின் மூலம் கலைத்துறையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இதில்சிங்கபாகு”, “விகுர்த்தி”, “மூதுபுத்து”, மற்றும்சத்யாங்கனாவீஎன்பவை இவர் நடித்த நாடகங்காளகும்.

அதன்பின்னர் பிரதீபா இசைத் துறையில் நுழைந்தார். அக்காலக்கட்டத்தின் போது இன்று அமைச்சராக இருக்கும் டலஸ் அழகப்பெரும அவர்களுடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளராக பணியாற்றினார். இவர்களின் திருமணம் 1994 ம் ஆண்டில் நடைபெற்றது.

புதிதாக வெளியிடப்படவுள்ள இசை இறுவட்டுக்கும் பாடலாசிரியராக இணைந்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமை ச்சர் டலஸ் அழகப்பெரும் அவர்கள் பிரதீபாவின் இசைப் பயணத் திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com