Contact us at: sooddram@gmail.com

 

யாழிலிருந்து ஒரு குரல்-மாவீரர்களின் பெயரால் ஜிம் அடிக்கத் துடிக்கும் கனேடிய தமிழர் தேசிய அவையினர் (NCCT)

 தமிழ் மக்களுக்காகவும், மண் மீட்புக்காகவும் தன்னுயிரை துச்சமென எண்ணி களமாடி உயிர் நீத்தவர்கள்தான் எங்கள் மாவீரர்கள்.அவர்கள் தங்களின் உயிர் தியாகங்களைச் செய்தமைக்கு ஒரேயொரு காரணம்தான் அமையக் கூடும். அதாவது இலங்கைத் தமிழ் மக்களுக்கான தனிநாடு. அதை விடுத்து வேறெந்த உள்நோக்கமும் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் புலம்பெயர் நாடுகளில் புகுந்திருக்கும் சோம்பேறிகள், தங்கள் கைகளைக் கொண்டு பிழைப்பு நடத்தத் தெரியாதவர்கள் மாவீரர்களின் பெயர்களைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முனைப்புக் காட்டுகின்றனர். அந்த வகையில் கனேடியத் தமிழர் தேசிய அவையினர் 69 கோடி ரூபாய் செலவில் தொடர்பாடல் மையம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்து அதில் ஒரு அறைக்குள் மாவீரர்களுக்கான நினைவு மண்டபம் ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஒரு தொடர்பாடல் மையம் ஒன்றை அமைப்பதற்கு மக்களிடம் இருந்துதான் நிதி சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை கனேடிய அரசே செய்து தரும்.

எம்.பிக்களுடனும், அரச அதிகாரிகளுடனும் நின்று போட்டோவுக்குப் போஸ் கொடுத்து விட்டுப் பின்னர் அதனை பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் வெளிப்படுத்தத் தெரிந்த உங்களுக்கு ஒரு தொடர்பாடல் மையத்தினை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு வக்கில்லையா?

அதைவிடுத்து இவ்வளவு பெரும் தொகையில் காணி ஒன்றைக் கொள்வனவு செய்து பின்னர் தொடர்பாடல் மையம் ஒன்றை நிறுவி, அதன் ஒரு அறைக்குள் மாவீரர்களை வைத்துப் பூட்டி விட்டு, அவர்களின் பெயரால் கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடிக்க, ஜிம் அடிப்பவர்கள் ஜிம் அடிக்க இவ்வாறு நகர்கின்றது உங்களின் நரித்தனம்.

உங்கள் நரித்தனத்துக்கு நாட்டுக்காக இரத்தம் தோய்ந்தவனை வைத்துக் கொண்டும் அவனின் உருவத்தில் சேட்டுப்பட்டி குத்திக் கொண்டும் நாங்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தவே முயல்கின்றோம் எனக் கூறுபவர்களின் கண்களில் திருட்டுக் குணம்தான் தெரிகின்றது.

அதேநேரம் தமிழ் மக்களை ஒற்றுமைப்பட வைப்பதற்காகவே இவ்வளவு பணத்தில் இந்தத் தொடர்பாடல் மையம் என்றால் அது தேவையற்ற ஒன்று.

அத்துடன் மண்டபம் அமைத்து ஜிம் அடித்துத் தான் நீங்கள் ஒற்றுமைப்பட்டுப் பலம் பெறுவீர்கள் என்றால் அந்த ஒற்றுமையோ அல்லது மண்டபமோ எமக்குத் தேவையில்லை.

நீங்கள் காணி கொள்வனவு செய்து, அதில் மண்டபம் அமைத்து ஒற்றுமைப்பட்டு வருவதற்குள் தாயகத்தில் ஒரு தமிழன் கூட இருப்பான் என்பது சந்தேகம்?

இதேநேரம் எந்த மாவீரனும் தான் போராடிய மண்ணில்தான் மண்டபம் அமைக்க விரும்புவானே தவிர, பிறிதொரு நாட்டில் நீங்கள் பிச்சை எடுப்பதற்காகச் சென்ற நாட்டில் அவனுக்கு நினைவாலயம் தேவையில்லை, அதனை அவன் விரும்பவும் மாட்டான்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் காரணமாக எத்தனையோ தமிழ் உறவுகள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வரும் இந் நிலையில் இவ்வளவு தொகையில் இந்தத் நினைவு மண்டபம் தேவையா?

தமிழ் மக்களுக்கான களமாடி தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் எத்தனையோ இளைஞர், யுவதிகள் வெறும் 5 ஆயிரம் ரூபாய் இல்லாமல் வெளியில் வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சிறைச்சாலையில் மாற்றி அணிய சாரம் இன்றி எத்தனையோ முன்னாள் போராளிகள் துன்பப்பட்டு வருகின்றனர். 2 ஆயிரம் ரூபாய்க்கு சட்டத்தரணியை நிறுத்த முடியாமல் எத்தனையோ இளைஞர்களின் வாழ்வு சிறைச்சாலைக்குள் முடங்கிப் போய்க் கிடக்கின்றன.

இத்தனை துன்பங்களும் அரங்கேறி வருகின்றது தாயகத்தில். ஆனால் நீங்கள் உங்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக இவர்களின் வாழ்கையில் விளையாடுகின்றீர்கள்.

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவனையிழந்து அடுத்த நேர உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பசிக்குது, பசிக்குது என்று கத்தும் பிள்ளைகளுடன் இருக்கும் எத்தனையோ தாய்மார்கள், இவற்றை எல்லாம் கடந்து பிள்ளைகளைப் பறி கொடுத்து விட்டு அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது கூடத் தெரியாமல் தெருத் தெருவாக அலையும் பெற்றோர்கள் இங்கிருக்கும் பட்சத்தில்,

இவ்வாறானவர்களுக்கு உதவுவதை மறந்து, தங்கள் சுயநலத்துக்காக எந்த ஒரு நோக்கமும் இன்றி களமாடி உயிர் நீத்த தியாகிகளை நினைவு மண்டபம் என்ற பெயரில் அறைக்குள் பூட்டி, அருகில் ஜிம் நிலையமும் அமைத்து சுகபோகங்களை நீங்கள் அனுபவிப்பதற்காக எங்கள் மாவீரர்களை பகடக்காய்களாக்குகின்றீர்கள்.

நாங்கள் பிரபாகரன் மனைவியின் சொந்தக்காரர்கள் என்று பெருமைக்காகப் புகழ்பாடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உலா வந்து,  வரலாற்றுச் சின்னங்களைச் சேகரிக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு உங்கள் வங்கிகளில் பணத்தை நிரப்பும் உங்களைப் போன்றவர்களினால்தான் எம் இனம் இன்று நாதியற்று, நடுத் தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தாயகத்தில் தண்ணீருக்குக் கூடக் கையேந்தும் நிலைதான் எமக்குள்ளது. கொட்டில் வீடுகளிலும், குடிசைகளிலும், மழை பெய்தால் நீரும், வெய்யில் எறித்தால் வெக்கையும் என முற்றத்தில் இருக்கின்றோமா? வீட்டுக்குள் இருக்கின்றோமா என்ற வித்தியாசம் இன்றி இன்று வன்னியில் மக்கள் பெரும் அவலங்களை அனுப்பவித்து வருகின்றனர்.

இதனை நீங்கள் அறியாதவர்களும் அல்ல. மாறாக உங்கள் சுயநலத்துக்காக, சுகபோக வாழ்வுக்காக மாவீரர்களை வைத்துப் பிழைப்பு நடத்துகின்றீர்கள்.

ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் ஒவ்வொரு பெயர்களில் தமிழ் மக்களை வாழ வைப்போம், கட்டிக் காப்போம் என்று கூறிக் கொண்டு கையில் ஒரு உண்டியலுடன் புறப்படுகின்றீர்கள்.

ஆனால் இங்கோஅதே ஏழ்மைஅதே வாழ்க்கை. என்ன செய்வது? பாதிக்கப்பட்ட மக்களை வைத்துப் பிழைப்பும் நடத்தி, நீங்கள் சேகரிக்கும் பணம், யாழ்ப்பாணத்தில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களாக, பல்சர் மோட்டார் சைக்கிள்களாக மாறி வீதிகளையும் காணிகளையும் அலங்கரிக்கின்றது.

வயிற்றுப் பிழைப்புக்கே வழியின்றித் தவிக்கும் எத்தனையோ எம் உறவுகள் இருக்கும் போது இவ்வளவு பெரும் தொகையை நினைவு மண்டபத்திற்குள் போடுவது எவ்வகையிலும் நியாயமாகாது. அத்துடன் இதற்காக எங்கள் மாவீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்யவில்லை.

எனவே நீங்கள் எக் காரணத்தைக் கொண்டும் கொள்ளையடியுங்கள். ஆனால் எங்கள் மாவீரர்களின் பெயரை வைத்துக் கொள்ளையடிக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்வீர்களானால் தாயகம் உங்களை எக்;காரணம் கொண்டும் மன்னிக்காது.

ஆகவே உங்களின் சுயநலத்துக்காக விலை மதிக்க முடியாத மாவீரர்களின் தியாகங்களையும், சிறையில் வாடும் முன்னாள் போராளிகளின் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி, அவர்களுக்கான ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுக்க முடியாத நீங்கள் எவ்வாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தொடர்பாடல் மையம் ஊடாக ஒற்றுமைப்படுத்துவீர்கள்?

உங்களின் உதவியும் எங்களுக்கு வேண்டாம், உங்கள் ஒற்றுமையும் வேண்டாம். நீங்கள் அங்கே சும்மா இருந்தால் அதுவே எங்களுக்குப் போதும்.

அத்துடன் இந்த வீடியோவில் கருத்துத் தெரிவித்த தேவா மற்றும் அல்வின் ஆகியோருக்குத் தாயகத்திலிருந்து தமிழ் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீங்கள் தெரிவித்த கருத்துக்கள்தான் தமிழ் மக்களின் கருத்துக்கள் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டி நிற்கின்றோம்.

யாழிலிருந்து ஒரு குரல்.

(www.sankathi.com)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com