Contact us at: sooddram@gmail.com

 

தமிழர் நாங்கள் விழித்தெழுவோம்.

புலம்பெயர்ந்து வாழும் தயாகத்தமிழர்களே!

தமிழீழம் பெற்றுத்தருவதாக சொல்லி இன்று வரை எங்களை ஏமாற்றி வந்தவர்கள் தொடர்ந்தும் எங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.இதை நாங்கள் ஏற்போமா?திரண்டு வாருங்கள் தமிழர்களே என்று எங்களை அழைத்த போது நாங்கள் அதற்கு ஒரு போதும் மறுத்திருந்ததில்லை.ஜெனீவா மன்றை நோக்கி எத்தனை தடவைகள் நாங்கள் ஆர்ப்பாட்டப்பேரலையாக சென்றிருக்கின்றோம்.இறுதியில் எங்களுக்கு என்னத்தை அவர்கள் பெற்றுத்தந்தார்கள்?உறவுகளை இழந்தோம்.எங்கள் உறவுகளின் சொத்துக்களை இழந்தோம்.

பேரழிவு ஒன்றுதான் அவர்கள் எங்களுக்கு பெற்றுத்தந்த மிச்சம்.தமிழீழ தாயகம் நோக்கி எங்களை வழிகாட்டி சென்றவர்கள் துண்டு துண்டாக பிரிந்து போய் தமக்குள் சண்டையிடுகின்றார்கள். பிரித்தானியாவில் இருந்து உருத்திரகுமாரன் தலமையிலும் பெல்ஜியத்தில் இருந்து நெடியவன் தலைமையிலும் இரண்டு குழுக்களாக போட்டி போட்டு ஜெனீவா மன்றம் நோக்கி தமக்குள் ஒற்றுமை இன்றி நடைப்பயணம் வருகிறார்கள். தமிழர்களாகிய நாங்கள் மட்டும் ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்ட ஜெனீவா நோக்கி வரவேண்டுமாம்.

முன்னர் எங்களை ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு கேட்டவர்களும் எங்களிடம் மாதாந்தம் பணம் கறந்தவர்களும் இன்று சிறீலங்கா அரசுடன் உறவுகளை பேணி வருகின்றார்கள். கொழும்பு சென்று கே. பி யை சந்தித்து கை குலுக்கி கொண்டாட்டம் நடத்துகின்றார்கள்.

இன்று நீதிக்கான போராட்டம் என்று சொல்லி எம்மை ஜெனீவா மன்று நோக்கி அழைப்பவர்களும் நாளை சிறீலங்கா அரசுடன் சேர்ந்து விடுசவார்கள். கே.பி யோடு உறவு வைப்பார்கள். அப்பாவித்தமிழர்கள் நாங்கள் மட்டும் இவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்பதா? ஆர்ப்பாட்டம் நடத்த வாருங்கள் என்று கூறிவிட்டு எங்களை போட்டோ எடுத்து ஊடகங்களில் இவர்கள் விளம்பரப்படுத்துவார்கள். எங்களுக்கு பின்னால் ஒளிந்து நின்று கொண்டு தங்களது முகங்களை மறைத்து எங்களது முகங்களை மட்டும் இவர்கள் ஊடகங்களுக்கு காட்டுவார்கள். இவர்களது பிரச்சாரங்களுக்கு நாம் பலியாக வேண்டுமா?

சமர் விடுமுறைக்கு நாங்கள் தாயகத்திற்கு சொல்ல வேண்டும். எங்கள் உறவுகளை சந்தித்து அவர்களோடு சிறிது காலம் சந்தோசமாக நாங்கள் வாழவேண்டும். நாங்கள் விரும்பும் எங்களது சந்தோசத்தை கெடுப்பதற்காகவா இவர்கள் இன்று ஜெனீவா நோக்கி ஊர்வலத்திற்கு அழைக்கிறார்கள்?

நாங்கள் வங்கிக்கடன் எடுத்து எங்கள் பணத்தை இவர்களுக்கு இலட்சம் இலட்சமாக கொடுத்திருந்தோம். திருப்பித்தருவதாக சொன்ன பணத்தை ஏன் இன்னும் தரவில்லை. எங்கள் பணத்தை எங்களிடம் இருந்து பறித்தவர்கள் தாயகத்தில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். நாங்கள் மட்டும் இவர்களுக்கு எடுத்து கொடுத்த வங்கிக்கடனை மாதாந்தம் செலுத்துவதற்கு கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். வங்கிக்கடன் எடுத்துத்தந்த எங்கள் பணம் எங்கே? அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். எங்கள் பணத்தை கொள்ளையடித்து நீங்கள் சேர்த்த சொத்துக்களை விற்று எங்கள் வங்கிக்கடன்களை செலுத்த முன்வாருங்கள்.

நாங்கள் யாரையும் நம்பி ஊர்வலம் வரமாட்டோம். எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். எங்கள் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்காதீர்கள். எங்கள் உறவுகளை சந்திக்க நாங்கள் தாயகம் சொல்ல விரும்புகின்றோம். எந்த விமோசனமும் இல்லாத ஜெனீவா ஆர்ப்பாட்டத்தை புறக்கணிப்போம்.விரைவில் நாங்கள் யார் என்று சொல்வோம். நாங்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.எதற்காக என்று அப்போது புரிந்து கொள்ளுங்கள்.

புலம்பெயர்ந்து வாழும்

புதிய தாயக தமிழர்கள்.

(samthuvam)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com