Contact us at: sooddram@gmail.com

 

அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மேற்குலகத்திற்கு நல்ல சமிக்ஞையை கொடுத்திருக்கும்

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதி ராக இந்நாட்டு மக்கள் தேசப்பற்றுடன் நாட்டின் நாலா பக்கங்க ளிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தை நேற்று நடத்தி சாதனை புரிந்தார்கள். மக்களின் இறைமையை பிரதிபலிக்கக்கூடிய தேசத் தலைவர் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மக்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை வெளி ப்படுத்தும் இந்த நாடளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட் சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் சாதி, மத, பிரதேச பேதங்கள் இன்றி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாதத்தினால் பெரும் பாதிப்பிற்குள்ளான நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில், அரசாங் கத்திற்கு துன்புறுத்தல்களை செய்து கொண்டிருக்கும் மேற்கத்திய வல்லர சுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றிருந்தமை உண்மையி லேயே இந்நாட்டு மக்களின் இன ஐக்கியத்தையும், தேசப்பற்றையும், ஒரு மைப்பாட்டையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

30 ஆண்டுகால யுத்தத்தின் போது பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் இன்று, அரசாங் கம் அவர்களின் துயரத்தை துடைப்பதற்கு எடுத்துவரும் மீள்வாழ்வுத் திட் டங்களையும், அபிவிருத்தி திட்டங்களையும் மகிழ்ச்சியோடு வரவேற்ப தன் ஒரு சின்னமாகவே நேற்றைய அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அமை ந்தன என்று கூற வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இரா மநாதன் தலைமையில் நடந்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஆர்ப் பாட்டப் பேரணியில் வடபகுதியின் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந் திரசிறியும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அங்கஜன் இராம நாதன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் காரியாலயத்திற்கு சென்று இலங்கை மீது அவ்வமைப்பு மேற் கொண்டு வரும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு மகஜரையும் சமர்ப்பித் தார்.

அதையடுத்து, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், மனித உரிமைகள் பேரவை யின் முக்கியஸ்தர்களுக்கு இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தந்திகளையும் அனு ப்பிவைத்துள்ளார். இந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தவறான போக்கை கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு உட்பட நாடெங்களிலும் 150 இடங்களில் நேற்றுக் காலையில் இருந்து மாலை வரையில் தொடர்ந்து இடம்பெற்றன.

வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக இலங்கையில் நேற்று நடைபெற்ற ஆர்ப் பாட்டம், ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் அளித்த மூன்றாவது ஆணை யாக அமைந்திருக்கிறதென்று அரசியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரி வித்தனர். மக்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் மக்களின் ஆணை முதல் தடவையாக ஜனாதி பதிக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அது போன்று 2010ம் ஆண்டி லும் இவ்விதம் மக்கள் ஆணை ஜனாதிபதிக்கு கிடைத்தது.

2012ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதியன்று நாடெங்கிலும் உள்ள மக்கள் சாதி, மத, பிரதேச அரசியல் பேதங்கள் இன்றி ஒரே குரலில் மஹிந்த ராஜ பக்ஷ மாத்திரமே இந்நாட்டின் ஒப்பற்ற ஒரே ஒரு தலைவர் என்பதை உறுதி செய்வதாக நேற்று நாட்டின் நாலாப் பக்கங்களிலும் நடைபெற்ற மக்களின் ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஊர்ஜிதம் செய்வதாக அமைந்தது.

மத்திய கிழக்கு அரபு நாடுகளை தங்களுடைய குள்ளத்தனமான இராஜதந் திரத்தின் மூலமும் பணத்தை வீசியெறிந்து, உள்நாட்டிலேயே தேசத்துரோ கிகளை ஆளணி சேர்த்து அந்த நாடுகளின் அரசாங்கங்களை மக்கள் புரட்சி என்ற போலி சதி முயற்சிகள் மூலம் பதவி விலக்கச் செய்ததை போன்ற செயற்பாடுகள் இலங்கையில் என்றும் வெற்றி பெறப் போவதி ல்லை என்பதை நேற்றைய ஆர்ப்பாட்டங்கள் வெளிநாடுகளிலும் உள்ளூ ரிலும் உள்ள எமது நாட்டின் துரோகிகளுக்கு ஒரு நல்ல முன்னெச்சரிக் கையாக அமையுமென்று நாம் நம்புகிறோம்.

வெளிநாட்டவர்களின் கோடான கோடி டொலர்களுக்காக தேசத்துரோக செய ற்பாடுகளில் ஈடுபடும் பிணந்தின்னி பிசாசுகளை நம்நாட்டு மக்கள் இனம் கண்டு, அவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல பாடம் புகட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தப் பட்டவர்களுக்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

இலங்கையில் நேற்று நடைபெற்ற மக்களின் ஏகோபித்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து, ஏற்கனவே மேற்கத்திய நாடுகளுக்கு அவற்றின் தூதரகங்கள் மூலமும் சர்வதேச செய்தி ஸ்தானங்கள் மூலமும் தகவல் கிட்டியிருக்கும். இலங்கை மக்கள் அனைவரும் ஓரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவரது அரசாங்கத்தையும் முழு மனதுடன் ஆதரிக்கிறா ர்கள் என்பதை நேற்றைய நிகழ்வுகள் ஆதாரபூர்வமாக இந்த மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கும்.

ஒரு நாட்டின் அரசாங்கம் மக்களிடமிருந்து அப்பாற்பட்டு தான் தோன்றித்தன மான சர்வாதிகார போக்கில் நடந்து கொண்டால் மாத்திரமே மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இந்த மேற்குலக சதிகார நாடுகள் அந்த நாடுகளில் சட்டவிரோதமாக தலையீடு செய்து, அந்த அரசாங்கங்களை பதவி இழக்கச் செய்து, தங்களின் சொற்படி செய ற்படும் கைப்பொம்மைகளை அந்நாடுகளில் அதிகாரபீடத்தில் அமர்த் துவதுண்டு.

மேற்கத்திய நாடுகளின் இந்த சதிமுயற்சி என்ற பருப்பு இலங்கையில் வேகாது என்பதை அவை நன்கு உணர்வதற்கு நேற்றைய அரசாங்கத்தை ஆதரிக் கும் நிகழ்வுகள் பறைசாற்றுவதாக அமையும். எனவே, மேற்கத்திய நாடுக ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கியஸ்தர்களான நவனீதம்பிள்ளை போன்றவர்கள் இந்த யதார்த்தத்தை உணர்ந்து இல ங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கி வரும் நிவாரண உதவிகளையும் நன்கு ஆராய்ந்த பின்னர் இல ங்கை மீது அநாவசியமான அழுத்தங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள் வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com