Contact us at: sooddram@gmail.com

 

தாயகத்தின் தாய்

ஒரு அடி கூட பின்வாங்காதே!’

1942 ஆகஸ்ட் 23ம் தேதி அந்த மகத்தான நகரின் மீது பாசிச சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள் முதல் குண்டைப் பிரயோகித்துத்தாக்குதல் தொடுத்த நாள். அந்த நாள் முதல், அந்த நகரை மட்டுமல்ல, அந்த நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் மனிதகுலத்தையே பாசிசத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்த 1943 பிப்ரவரி 2ம் தேதி வரை போர்க்களத்தில் ஒலித்துக்கொண்டிருந்த குரல் இது. ஸ்டாலின் கிராடுஎன்பதே வரலாற்றின் கதாநாயகனாக மாறிய அந்த மகத்தான நகரம்.சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்என்ற முழுப் பெயர் கொண்ட சோவியத் ஒன்றியத்தின் வீரஞ்செறிந்த செஞ்சேனையின் கைகளால், ஹிட்லரின் படைகள் மீள முடியாத இழப்பையும் அழிவையும் சந்தித்த மாநகரம் அது.

வெள்ளம் பாய்ந்தோடும் வோல்கா நதியை கிழக்கு எல்லையாகக் கொண்ட இந்த மாநகரின் இயற்பெயர் வோல்கா கிராடு. 200 நாட்கள் நடந்த, மனிதகுல வரலாறு இதுவரையிலும் கண்டிராத மிகப்பிரம்மாண்டமான-அதே நேரத்தில் தங்களது தாயகத்தையும், இப்பூவுலகையும் பாசிசத்தின் பிடியில் சிக்காமல் காக்கும் பொருட்டு மிகப்பெரும் அழிவையும் எதிர்கொண்டு நடந்த தேசபக்தப் போருக்குப் பிறகு, ஸ்டாலின் கிராடு என்று இயல்பாகவே மக்களாலேயே பெயரை மாற்றிக்கொண்டது, வோல்கா கிராடு.

மாவீரன் ஸ்டாலின் தலைமையில், உலகமே கண்டிராத அளவிற்கு மிகப்பெரும் தியாகத்தைச் செய்து, வீரத்தின் விளை நிலமாக விளங்கி நாஜிப்படைகளை வீழ்த்தியது; ஹிட்லரின் ராஜ்யத்திற்கு முடிவுரை எழுதியது ஸ்டாலின் கிராடு.

ஆஆஆ

1943 நவம்பர் 6ம் தேதி இரவு குடிமக்களுக்கு உரையாற்றினார் சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி, தளபதி ஸ்டாலின்.


தாயகத்தைக் காக்கும் போரில், கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறோம். 1941 அக்டோபர் 6ம் தேதி, நமது மகத்தான சோசலிசப் புரட்சியின் 24ம் ஆண்டைக் கொண்டாடும் போது, நமது எதிரிகள் லெனின் கிராடைச் சுற்றி வளைத்திருந்தார்கள்; 1942 அக்டோபரில் நமது புரட்சியின் வெள்ளி விழாவைக் கொண்டாட வேண்டிய தருணத்தில் இன்னும் ஆபத்து சூழ்ந்திருந்தது; இதோ 1943 அக்டோபரில் பேசிக்கொண்டிருக்கிறோம். நமது புரட்சியின் 26ம் ஆண்டு இது. தேசபக்தப்போரில் மகத்தான வெற்றி பெற்றுவிட்டோம். செஞ்சேனையின் இந்த மாபெரும் வெற்றிகள் ஒருபோதும் சோவியத் மக்களின் ஆதரவும் பங்கேற்பும் அளப்பரிய தியாகமும் இல்லாமல் கிட்டியிருக்காது; தாயகத்தைக் காக்கும் போரில் உயிரையும் துச்சமென மதித்து ஆர்த்தெழுந்த எமது மக்களுக்கு தலைவணங்குகிறேன்”.

ஆஆஆ

ஜனாதிபதியும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் செஞ்சேனையின் தலைமைத் தளபதியுமான ஜோசப் ஸ்டாலின் தலைமையில் சோவியத் ஒன்றியம் ஹிட்லரை வீழ்த்திய அந்த மாபெரும் வரலாற்றில், பெயர் தெரியாத லட்சோப லட்சம் மக்கள்-புரட்சியாளர்கள்-போராளிகள்-ராணுவ அதிகாரிகள்-சாதாரண தரைப்படை வீரர்கள்-பல்லாயிரக்கணக்கான பெண்கள் என

20 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தியாகம் அடங்கியிருக்கிறது.

அவர்களில், ஸ்டாலின் கிராடைப் பாதுகாக்கும் அந்த 200 நாள் உச்சகட்டப் போரில் சோவியத் செஞ்சேனையின் 62வது படைப்பிரிவின் தளபதி ஜெனரல் வசிலி இவானோவிச் சுக்கோவ், 62வது படைப்பிரிவின் 1047வது ரைபிள் பிரிவின் தளபதிகளில் ஒருவரான வசிலி கிராகோரியெவிச் ஜேத்சவ், ஸ்டாலின் கிராடு நகரில் மட்டும் போரிலும் ராணுவத் தோழர்களுக்கான மருத்துவப் பணியிலும் ஈடுபட்ட 75 ஆயிரம் இளம் பெண்களின் பிரதிநிதியாக அளப்பரிய சேவையாற்றிய டாக்டர் ஜைனாய்டா எர்மோலெவியா... இப்படி ஸ்டாலின் கிராடின் கதா நாயகர்கள், சோவியத் ஒன்றியத்தின் கதாநாயகர் களாகக் கொண்டாடப்பட்டார்கள். இன்றளவும் நினைவு கூரப்படுகிறார்கள்.

ஆஆஆ

2013 பிப்ரவரி 2.


ஹிட்லரின் கொடிய ராஜ்யத்திற்கு முடிவுரை எழுதிய ஸ்டாலின் கிராடு போரின் 70ம் ஆண்டு விழாவை எழுச்சியுடன் கொண்டாடியது இன்றைய ரஷ்யா. சோசலிச சோவியத் ஒன்றியத்தின் மேன்மைகளையும், மகத்துவத்தையும், மாவீரன் ஸ்டாலினின் அளப்பரிய பங்களிப்பையும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து அழிப்பதற்கு முதலாளித்துவ சக்திகள் மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் போதிலும், ரஷ்ய மக்கள் தங்கள் வரலாற்றைப் புரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஸ்டாலின் கிராடை, வோல்கா கிராடு என மீண்டும் பெயர் மாற்றியவர்கள், மக்களின் நிர்ப்பந்தத்தால் மீண்டும் ஸ்டாலின் கிராடு என்று பெயர் சூட்டுகிறார்கள். பிப்ரவரி 2 முதல் ஒரு வார காலம் அதிகாரப்பூர்வமாகவே ஸ்டாலின் கிராடு என்று அழைக்கப்படும் என ஜனாதிபதி புடின் அறிவித்திருக்கிறார்.

உலகைக்காத்த அந்த மாபெரும் வரலாற்று யுத்தத்தின் அழிக்க முடியாத சாட்சியாக ஸ்டாலின் கிராடில் வானளாவ உயர்ந்து நிற்கிறாள்தாயகத்தின் தாய்’.

- -
எஸ்.பி.ராஜேந்திரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com