Contact us at: sooddram@gmail.com

 

வன்முறைகளால் அச்சுறுத்தப்படும் யாழ். குடாநாட்டு சிறுவர்கள்

சிறுவர்கள் மீதான வன்முறைகளும், துஷ்பிரயோக சம்பவங்களும் மலிந்த பூமியாக மாறிவிட்டது இன்றைய யாழ். குடாநாடு. கடந்த 30 வருடகால யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன யாழ். குடாநாடு மீளெழுச்சி கண்டு வருகிறது. அமைதியும் இயல்பு வாழ்வும் படிப்படியாக திரும்பத் தொடங்கியுள்ள இந்த தருணத்தில் யாழ். குடாநாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளான சிறார்கள் உடல், உள ரீதியில் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும்.

திடீரென தலை தூக்கியுள்ள இவ்வாறான சம்பவங்கள் குடாநாட்டின் அமைதிக்கும் மீள் எழுச்சிக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை பொறுத்த வரையில், வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் சிறுவர் பாலியல் ரீதியாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகும் சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வாறான வன்முறைகள் யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தமது பிள்ளைகளை நேசிக்கும் பெற்றோர் மனதில் பாரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது பிள்ளைகளை, உறவினர் வீடுகளுக்கு அனுப்பவும், பாடசாலை மற்றும் கல்விக் கூடங்களுக்கு அனுப்பவும், வீதிகளில் நடமாட விடுவதற்கும் மைதானங்களில் விளையாட விடுவதற்கும் அஞ்சிக் கலங்கும் எத்தனையோ தாய்மாரை இன்று குடாநாட்டில் காண முடியும்.

இத்தனைக்கும் ஏன் ஒரு சில தந்தையரை கூட நம்பி தமது பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்ல அஞ்சும் எத்தனையோ தாய்மார் யாழ். குடாநாட்டில் உள்ளனர்.

இந்த அச்சத்துக்கு கூட நியாயம் இருக்கத்தான் செய்கிறது. கடந்த டிசெம்பர் மாதம் 31ம் திகதி (31.12.2012) யாழ். நல்லூர் பகுதியில் 12 வயதேயான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 50 வயதான தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த துஷ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியே பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்தும் உள்ளார்.

வீட்டில் தான் பிரச்சினை பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால் பாடசாலையிலும் இதே நிலைதான்.

யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் காவலாளி மாணவி மீதான துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

தன்னை பாடசாலையின் காவலாளி துன்புறுத்துவதாக சம்பந்தப்பட்ட மாணவி பெற்றோரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி குறித்த காவலாளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த காவலாளி மேற்படி பள்ளி சிறுமியை ஜனவரி 30 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலை, வீடுகளில் மட்டுமல்லாமல் குடாநாட்டு வீதிகளில் கூட சிறுமியருக்கு பாதுகாப்பு அற்ற நிலையே உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி 15 வயது சிறுமி ஒருவர் யாழ். செம்மணி பகுதியில் வைத்து கடத்தப்பட்டார்.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே இந்த சிறுமியை கடத்திச் சென்றதாக விசாரணைகளில் தெரிய வந்தது.

எனினும் 30ம் திகதி புதன் கிழமை பொலிஸில் சரணடைந்த 21 வயதான இளைஞன் சிறுமி மீது காதல் கொண்டதினாலேயே அவரை தான் கடத்த முயற்சித்ததாக கூறியுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் காதல் விவகாரம் இருந்தாலும் சிறுமியர் ஒருவர் வீதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவமானது சிறுமியருக்கு வீதியில் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையையே காட்டுகிறது.

யாழ். குடாநாட்டில் தலைவிரித்தாடும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் அதி உச்சமான சம்பவம் ஒன்று மண்டைதீவில் இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி சுரேந்திரன் சுதர்சினி, இவர் கடந்த டிசெம்பர் மாதம் 26ம் திகதி திடீரென காணாமல் போனார்.

இவ்வாறு காணாமல் போன சுதர்சினி இரண்டு நாட்களின் பின்னர் 28ம் திகதி கிணறொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் புரியப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.

இந்த கொடூர சம்பவம் யாழ். குடாநாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்தது. இதனையடுத்து யாழ். தீவகத்தில் திரண்ட மக்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர் சிறுவர்களும், பெண்களும், ஊர் பெரியார்களும் இணைந்து ஊர்வலமாக சென்று சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பொலிஸாரிடம் மகஜர் ஒன்றும் கொடுத்தனர்.

இவ்வாறு குடாநாட்டில் அரங்கேறும் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் பலவற்றை அடிக்கடி அங்கு வெளியாகும் பத்திரிகைகளில் காண முடிகிறது.

மனித கலாசாரத்தின் அடிப்படைப் பண்புகளை புரட்டிப்போடும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் சிறுமியர்கள் மீது மட்டுமின்றி ஆண் பிள்ளைகள் மீதும் புரியப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.

தினம் தினம் நடக்கும் சிறுவர்கள் மீதான வன்முறைகளில் பெரும்பாலானவை வெளியில் வருவதில்லை கெளரவம், கலாசாரம், பிள்ளைகளின் எதிர்காலம் என பல காரணங்களால் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.

இவ்வாறு மூடி மறைக்கப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. துஷ்பிரயோகத்துக்கு இவர்களும் சிறுவர், சிறுமியர் தொடர்பான தகவல்கள் வெளியாகும் போது பாதிக்கப்பட்ட சிறார்களை மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாக்குவதாக அத்தகவல்கள் அமைந்து விடக்கூடும்.

எனவே, அவை மறைக்கப்படுவது அல்லது இரகசியமாக வைக்கப்படுவது அவசியம். அது தான் தர்மமும் கூட. எனினும் சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையும், பொறுப்பும் ஊடகங்களுக்கு உள்ளன.

இவற்றை எல்லாம் கடந்து வெளியாகும் தகவல்களை அறியும் போதே கலக்கம் மேலெழுகிறது. இதனால் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுப்பது என்பது பெரும் சவாலாகவே குடாநாட்டு பெற்றோரால் பார்க்கப்படுகிறது.

பாடசாலைக்கு பொது வாகனங்களில் தமது பிள்ளைகளை அனுப்ப அஞ்சும் பெற்றோர் பலர் என்ன பாடுபட்டாவது தமது பிள்ளைகளை தாமே கூட்டிச்சென்று பாடசாலைகளிலும் கல்விக் கூடங்களிலும் விட்டிட்டு வருகின்றனர்.

அது மட்டுமன்றி பாடசாலை கல்விக் கூடங்கள் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே பாடசாலை, கல்விக் கூடங்களுக்கு சென்று வாசலில் காத்திருந்து தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.

இவ்வாறு யாழ். குடாநாட்டில் தலைதூக்கியுள்ள சிறுவர், சிறுமியர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பெற்றோர் தினம் தினம் திகிலுடனேயே பொழுதை கழிக்கின்றனர்.

க. பவன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com