Contact us at: sooddram@gmail.com

 

முல்லைத்தீவில் மனதை உருக்கிய பாசமான உபசரிப்பு

அம்மா......... அப்பி போய்டு வாறம்” “ரொம்ப சந்தோச

அப்பி கிஹிங் என்னங்” “அப்பிவ ஹொந்தட்ட சலக்குவாட்ட ஸ்தூதி

ஹறி ஹறி நன்றி” “அடுத்த முறை நீங்கள் கண்டிப்பாக வரோணும்”..... கடந்த ஜனவரி 30 ஆம் திகதி மாலை 4.30 க்கு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தின் விநாயகர் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்ற சம்பாஷனைகளே இவை.

பேராறு கிராமத்துக்குச் சென்றிருந்த இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 62 கிராமங்களின் பிரதிநிதிகள் விடைபெறும் போது பாசமான கட்டியணைப்புக்கள், உருக்கமான விடைபெறுதலின்போது பரிமாறப்பட்ட வார்த்தைகளே இவை.

யுத்தத்தால் அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிவரும் வடபகுதி மக்களுக்கும், தென்பகுதி மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு பேராறு கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யுத்தம் காரணமாக முறிவடைந்திருந்த சிங்கள தமிழ் உறவைப் பலப்படுத்துவதற்கு புதியதொரு ஆரம்பமாக அமைந்திருந்த இந்தச் சந்திப்பில் யுத்தத்தின்போது தாம் பட்ட கஷ்டங்கள் மற்றும் யுத்தத்தின் பின்னர் தமது வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளார்கள் போன்ற விடயங்களை மனந்திறந்து பகிர்ந்துகொண்டனர் பேராறு கிராம மக்கள்.

சிங்கள மக்கள் இவ்வாறு எமது கிராமத்துக்கு வருவது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை இவ்வா றான நிகழ்வுகள் இருந்ததில்லை. இது எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவது டன், எமது கிராமத்துக்கும் தென்பகுதி மக்கள் வருவது எமக்கு ஒருவித பெருமையையும் தருகிறதுஎன்று கூறினார் 59 வயதுடைய கூலித் தொழிலாளியான பண்டா என அழை க்கப்படும் முத்துலிங்கம்.

இதுவரையிருந்த கட்டுப்பாடான, மறு பகுதி மறைக்கப்பட் டிருந்த வாழ்க்கைக்கு மாறாக இவ்வாறு சகோதர இனத்த வர்களுடன் உண் மையான பாசத்து டன் பழகுவதற்கு வாய்ப்புக் கிடை த்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது என்பதே பேராறு கிராம மக்களின் ஒட்டு மொத்தமான கரு த்தாக இருந்தது. கிரா மங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்ப டுத்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முயற்சிக்கும் அவர்கள் தமது மனமுவந்த பாரா ட்டுக்களைத் தெரிவிக்கத் தவறவில்லை.

கிராமங்களுக்கிடையில்

நல்லிணக்கம்

யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் மீளெழுச்சித் திட்டத்தை முன்னெடுத்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சமூக அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தர முன்னேற்றம் எனும் திட்டத்தின் கீழ் வடக்கிலுள்ள கிராமங்களுக்கும், தென்பகுதி கிராமங்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

மீளெழுச்சித் திட்டத்தின் செயற்பாடு கள் ஒவ்வொரு கிராமத்திலும் நிய மிக்கப்பட்டிருக்கும் கிராம அபிவிருத்தி குழுவின் ஊடாகவே முன்னெடுக் கப்படுகின்றது. இந்த செயற்பாடுகளுக் கும், அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் பாலமாக சமூக வளவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி ஏகமனதாகத் தேர்வுசெய்யபபட்டு சமூக வளவாளராக நியமிக்கப்படுவார். மீளெ ழுச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப் படும் நடவடிக்கைகள் அவரின் ஊடா கவே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் சமூக வளவாளர்களே கிராமங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கும் பிரதிநிதிகளாக அமைந்துள்ளனர். கிராமங்களுக்கிடை யில் நல்லிணக்கம் ஏற்படவேண்டியதன் அவசியம், எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் போன்ற பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை 2000 கிராமங்களைச் சேர்ந்த வளவாளர்களுக்கு திவிநெகும பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் வழங்கப் பட்டிருப்பதாக பிரதிப் பணிப்பாளர் சமன் குமார் கூறுகின்றார்.

வளவாளர்களுக்கு வெறுமனே பயிற்சிகளை வழங்குவதுடன் நின்று விடாது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தென்பகுதியைச் சேர்ந்த வளவாளர்களை வடபகுதியிலுள்ள கிராமங்களுக்கும், வடபகுதியைச் சேர்ந்த வளவாளர்களை தென்பகுதியிலுள்ள கிராமங்களுக்கும் அழைத்துச் செல்கிறோம்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்கள் ஒரு நாள் முழுவதும் அங்குள்ளவர்களுடன் தங்கியிருந்து அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பங்களிப்புச் செய்வதற்கு அல்லது பழகுவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறதுஎன்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத் திலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 62 வளவா ளர்களுக்கு வவுனியா கனகராயன் குளத்தில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடந்த ஜனவரி 29ஆம் திகதி ஒருநாள் செய லமர்வு நடைபெற்றது. கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது பற்றியும், நல்லிணக் கத்தின் அவசியம் தொடர்பிலும் இவர்களுக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மறுநாளான 30ஆம் திகதி காலை இரத்தினபுரி மாவட்டத் தைச் சேர்ந்த 62 வளவாளர்களும் முல்லைத் தீவு பேராறு கிராமத்துக்கு அழைத்துச் செல் லப்பட்டனர்.

செம்மண் புழுதிநிறைந்த வீதிகளின் ஊடாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தைச் சென்றடைந்த இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதிநிதிகளை வரவேற்பதற்காக பேராறு விநாயகர் முன்பள்ளி முன்றலில் மக்கள் ஆர்வமாக கூடி நின்றனர். “வணக்கம் வாங்கோஎன்ற இன்முக வரவேற்புடன் அவர்களை அழைத்துச் சென்ற பேராறு கிராம மக்கள், தமது கிராமம் பற்றிய சிறிய அறிமுகமொன்றை வழங்கியதுடன், வந்தவர்கள் அனைவருக்கும் பால் வழங்கி உபசரித்திருந்தனர்.

நம்பிக்கை

விவசாயமே முக்கியமான ஜீவனோபாயமாக அமைந்திருக்கும் பேராறு கிராம மக்கள், நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

இழக்கவேண்டிய அனைத்தையும் இழந்துவிட்டோம். இனிப்போதும். இவ்வாறான பேரழிவொன்று மீண்டும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் நாம் எமது வாழ்க்கையை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளோம்எனக் கூறினார் சமூக இணைப்பாளராகச் செயற்படும் கலைச்செல்வி.

இந்த அடிப்படையில் புதிய வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் கடந்த யுத்தகாலத்தில் இல்லாதிருந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் தடையின்றிய பிரயாணங்கள் மூலம் வாழ்வாதாரத்துக்குப் புதிய பாதையொன்று தோன்றியிருப்பதாகக் கூறினார். குறிப்பாக நாட்டின் எப்பகுதிக்குச் செல்வதற்கும் காணப்படும் போக்குவரத்து வசதியானது இனங்களுக்கிடையில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கலைச்செல்வி சுட்டிக்காட்டினார்.

மீண்டும் நம்பிக்கையான வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக மீளெழுச்சித் திட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி கூறவும் பேராறு கிராம மக்கள் தவறவில்லை.

அறிமுகங்கள் ஆட்களையாட்கள் நலன் விசாரிக்கும் படலம் முடிவடைந்ததும், பேராறு கிராம மக்கள் தமது கிராமத்துக்கு வந்திருந்த இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளில் விரும்பியவர்களைத் தத்தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

உபசரிப்பு

தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்றவர்களுக்கு தமிழர்களின் பாணியிலேயே உபசரிப்பும் இடம்பெற்றது. பலகாரங்கள், புழுக்கொடியல், குளிர்பானம் என அழைத்துச் செல்லப்பட்ட அனைவருக்கும் தமது வசதிக்கேற்ற வகையிலான உபசரிப்புக்களை வழங்கியிருந்தனர் பேராறு கிராம மக்கள். பேராறு கிராமத்தில் வசிப்பவர்களில் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மலையகத் தொடர்பு இருந்தது. இவ்வாறான குடும்பங்களிலுள்ளவர்கள் சிங்கள மொழியை சரளமாகப் பேசக்கூடியவர்களாகவிருந்தனர்.

சில வீடுகளில் மொழி ஒரு தடையாகவிருந்தாலும் அதனைத் தாண்டியும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. விருந்தாளிகள் என்ற நிலையிலிருந்து மாறி தாமும் அவ்வீட்டில் உள்ள ஒருவர் என்பது போல வீட்டு வேலைகளுக்கும் உதவி செய்தார்கள் இரத்தினபுரி மாவட்டப் பிரதிநிதிகள்.

கடந்த யுத்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உளக்காயங்கள், அதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் போன்றவற்றை சகோதர இனத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக பேராறு மக்கள் இதனைப் பயன்படுத்தியிருந்தனர். தமது சகோதர இனத்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைக் கேட்டறிந்த இரத்தினபுரி மாவட்டப் பிரதிநிதிகளுக்கு மனவேதனையும், கவலையும் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஏன் இந்த மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான கஷ்ட நிலமை இந்த நிலைமை மாறாதா? பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது. இவர்களின் நிலைமை நிச்சயமாக மாறவேண்டும்என மனவேதனைப்பட்டுக் கொண்டார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைச் சேர்ந்த அதிகாரியான சந்தராணி. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு சோகக் கதை உள்ளது பெரும் கஷ்டமாக உள்ளது என கொழும்பு திரும்பும்வரை வேதனைப்பட்டுக் கொண்டே வந்தார் அவர்.

என்னதான் மனதில் கவலையிருந்தாலும் தமது வாழ்க்கையை ஒரு புதிய நம்பிக்கையுடன் அவர்கள் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு சான்றாக பெரும்பாலானவர்களின் வீடுகளின் முன்னால் விதைக்கப்பட்டிருந்த நெல் வயல்கள் அமைந்திருந்தன. தற்காலிக வீடுகளுக்கு அருகில் பாதியளவு கட்டிமுடிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டம் காட்சியளித்தது.

அடுத்தமுறை நீங்கள் வரும்போது வீட்டு வேலை முடிந்துவிடும். நீங்கள் இங்கு தங்கிச் செல்லலாம்என்பதே அவர்களின் அழைப்பாக இருந்தது. தம்முடன் அழைத்துச் சென்ற விருந்தாளிகளுக்கு மதிய உணவளித்து உபசரித்தனர் பேராறு மக்கள். பாசமான உபசரிப்புக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட இரத்தினபுரி மாவட்ட பிரதிநிதிகள் தமது மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொண்டு பிரியாவிடை பெற்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றிருந்தவர்கள் மீண்டும் விநாயகர் முன்பள்ளி முன்றலில் கூடியதுடன், பேராறு கிராம மக்களும் கூடி தாம் பழகிய விடயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இக்கருத்துப் பகிர்வானது மனதை உருக்கும் வகையில் அமைந்திருந்தது. ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர். மாலை 4.30 மணியளவில் புறப்படும் நேரம் ஒருவருக்கொருவர் நன்றி கூறுதலுடன் விடைபெற்றனர்.

யுத்தம் காரணமாக நீண்டகாலம் பிரித்து வைக்கப்பட்டிருந்த சமூகங்கள், ஒரு சமூகத்தைப் பற்றி மற்றைய சமூகம் புரிந்துகொள்வதற்கான காலம் தற்பொழுது கனிந்துள்ளது. இதனை மேலும் பலப்படுத்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நல்லிணக்க செயற்திட்டமும் அமைந்துள்ளது. இந்த நல்லிணக்கம் தொடர்ந்தும் நீடித்து நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வழியமைக் கட்டும்.

மகேஸ்வரன் பிரசாத்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com