Contact us at: sooddram@gmail.com

 

நவனீதம்பிள்ளை எங்களை நிம்மதியாக வாழவிட வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களும் மரணித்தது சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் தாம் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்ததாக நவனீதம்பிள்ளை கூறுகிறார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை இப்போது நடைமுறைப்படுத்தி வருகின்றதையும், யுத்தக்குற்றம் புரிந்தவர்கள் என்று சந்தேகப்படுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்து அவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் தண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதுவும் நவநீதம்பிள்ளைக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது.

நவனீதம்பிள்ளை உலகமெல்லாம் சுற்றித்திரிந்து மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை செய்வதில் தான் வல்லமைமிக்கவர் என்று மார்தட்டி கூறுவதன் மூலம் பெருமைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட இந்த சர்வ தேச ராஜதந்திரியான நவனீதம்பிள்ளைக்கு இலங்கைக்கு ஒரு தடவை வந்து உண்மை நிலை என்ன என்பதை கண்டறியும் அளவுக்கு மனப் பக்குவம் இல்லாதிருப்பது உண்மையிலேயே வேதனையை அளிக்கிறது.

இலங்கையில் நடந்த நிகழ்வுகளை நேரில் வந்து பார்க்காமலேயே இலங்கைக்கு எதிரான தேசத்துரோக சக்திகள் தமக்கு அளிக்கும் போலியான, ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து எங்கள் நாட்டின் மீது இத்தகைய பாரதூரமான பழியை நவனீதம்பிள்ளை சுமத்துவது நியாயமற்ற செயலாகும்.

இந்தப் பெண்மணி இலங்கை மீது ஏதோண ஓர் காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு வஞ்சம் தீர்க்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்று சமாதானத்தை விரும்பும் இந்நாட்டு மக்கள் வேதனைப்படுகிறார்கள். நம்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் பொருள் இழப்பினாலும், உயிர் இழப்பினாலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத்திறனின் மூலம் 30 ஆண்டு கால யுத்தத்தை வெற்றிகரமாக நாம் முடிவுக்கு கொண்டு வந்து, உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறோம். அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் எல்.ரி.ரி.ஈ. போன்ற படுபயங் கரமான இயக்கத்தை துவம்சம் செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் பெரும் சாதனை செய்து விட்டதென்று பாராட்டியும் இருக்கின்றன.

கடந்தகால வேதனை வடுக்களை மறந்து தங்கள் இழப்புகள், அன்புக்குரியவர்களின் மரணங்கள் மரணப்பீதியுடன் இரவு நேரத்தில் கேட்கும். துப்பாக்கிவேட்டு சத்தத்தின் போது பதுங்கியிருந்து வேதனை அனுபவித்ததையும் மறந்து நம் நாட்டு மக்கள் இன்று ஏற்பட்டுள்ள சமாதானத்தினால் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்நாட்டு மக்கள் அனைவரும் கடந்த காலத்தை மறந்து எமக்கு யுத்தம் இல்லாத, பகைமை இல்லாத, நிம்மதியான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழ்நிலையே அவசியம் என்று விரும்புகிறார்கள். அவர்களின் இந்த விருப்பத்திற்கு ஏற்புடைய வகையில் அரசாங்கமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி நாடெங்கிலும் அபிவிருத்திப் பணிகளை துரித வேகத்தில் மேற்கொண்டு வருகின்றது.

இவ்விதம் இலங்கையில் தோன்றியுள்ள அமைதியை சீர்குலைக்கக்கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சர்வதேச விசாரணையொன்று இலங்கை மீது நடத்தப்பட வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு பரிந்துரை செய்திருப்பது சமாதானத்தை விரும்பும் மனித நேயம்படைத்த உலகில் உள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இவ்விதம் சர்வதேச விசாரணைகளை இலங்கை மீது நடத்தினால் நாட்டில் இப்போது தோன்றியிருக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப்பா டும், தேசிய ஒற்றுமையும் பலவீனமடையுமென்று மக்கள் கவலை கொள் வார்களென்று சமூகவியலாளர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே ஒற்றுமையையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி யுத்தம் இல்லாத ஓர் உலகை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்துடனேயே இரண்டாவது உலகமகா யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தினால் சீர்குலைந்து போன ஜேர்மனியும், ஜப்பானும் சேர்க்கப்படாத நிலையில் 1945ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் என்றும் உலக சமாதானத்திற்காகவே அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் அநாவசியமாக தலையிடுவதில்லை. பிரச்சினைகள் இருந்தால் அவற்றை கூடிப் பேசி தீர்த்துவிடும் பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பதுண்டு. அதைவிட்டு ஒரு நாட்டை வேண்டுமென்றே துன்புறுத்தக்கூடிய வகையில் அந்நாட்டுக்கு எதிரான தேசத்துரோக சக்திகளை ஆதரித்து செயற்படுவதில்லை.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இந்த உயர்ந்த நோக்கத்தை நன்கு தெரிந்திருந்தும் சர்வதேச ராஜதந்திரியான நவனீதம்பிள்ளை மீண்டும் மீண்டும் இலங்கை மீது குற்றங்களை சுமத்தி வருவது இந்நாட்டு மக்களால் இனிமேலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நவனீதம்பிள்ளையின் இந்த செயற்பாடு குனியக்குனிய குட்டுவது போன்று அமைந்துள்ளது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com