Contact us at: sooddram@gmail.com

 

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும்

(கலாதரன்)

இன்று எமக்குத் தேவை அடிப்படைவாத அடையாளங்களா அன்றி ராஜபக்ச பாசிசத்தையும், பேரினவாதிகளையும் பலவீனப்படுத்தும் உடனடி நோக்கமா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் நண்பர்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டது குறித்த காட்சிகளின் பின்னர், ஜெயலலிதா, கருணாநிதி, சீமான், வை.கோபாலசாமி, ராமதாசு போன்ற அதே முகங்கள் மறுபடி களத்தில் குதித்து நாளை மரணித்துப் போகும் சீசன் வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே ஆகிவிடாத உண்ர்ச்சி வயப்படுத்தலுக்கு இவர்கள் அனைவரையும் உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரச பாசிஸ்ட் ராஜபக்சவும் அதன் பரிவரங்களும் போர்க்குற்றத்திற்காகவும் இனப்படுகொலைக்காகவும் தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் என்றால் உலகத்தில் இன்னொரு பாசிஸ்ட் எந்த மூலையிலாவது ராஜபக்சவை முன் உதாரணமாகப் பயன்படுத்தில் இனக்கொலை செய்துவிடக் கூடாது என்பதற்காக;! இலங்கையில் இன்னொரு இனக்கொலையாளி கொலை செய்வதற்கு அஞ்ச வேண்டும் என்பதற்காக; ! ! இதுவே ஈழம் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்று யாராவது எண்ணினால் அது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
ஒரு பேரினவாதிக்கு எதிராக இன்னொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்ப்பது அவலத்துள் வாழும் மக்களின் தலைகளில் சம்மட்டியால் அடிப்பதற்கு தயாராவதைப் போன்றது.

உலகத்தில் வெற்றிபெற்ற அழிக்கப்படாத போரட்டங்களில் எல்லாம் பாலச்சந்திரனின் கொலை போன்ற உணர்ச்சிமயமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட அந்தப் போராட்டங்களில் எல்லாம் அவ்வாறான சம்பவங்கள் மக்களை அணிதிரட்டும் ஆயுதங்களாகவும் அரசியல் மயப்படுத்தும் ஆயுதங்களாகவும் பயன்பட்டிருக்கின்றன.

பிரித்தானியா இலங்கைக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவது அறிந்திருந்தும் ஏகாதிபத்தியங்களின் அரசியல் சதிகளையே நம்புகின்ற அளவிற்கு அரசியல் இருள் சூழ்ந்த சமூகத்தில் உலா வருகின்றோம்.

அரசியல் வறுமைகொண்ட சமூகத்தில் சனல் 4 பிரச்சார ஊடகமாகி, புரட்சிகரமான போராட்ட சூழலையே கையகப்படுத்தி வைத்திருக்கிறது. சனல் 4 இன் கைவசம் உள்ள அனைத்து ஆவணங்களும் அமரிக்க அரசின் தேவைகளுக்கு ஏற்ப சிறிது சிறிதாக வெளிப்படுத்தப்படும். அது பிரச்சாராச் சாதனமாக, மற்றய பக்கத்தில் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சீசன் உணர்ச்சி அரசியலை ஆரம்பிப்பார்கள். புலம் பெயர்ஊடகங்கள்ஊத ஆரம்பித்துவிடுவார்கள். தேசியக்கூட்டமைப்பு தேர்தலுக்கான அத்திவாரத்தைப் போட்டுக்கொள்ளும். நோர்வேயோ சுவிஸர்லாந்தோ இலங்கைக்கு அமரிக்க சார்பில் உதவிக்கரம் நீட்டும். அமரிக்கா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற நோர்வேயிடமோ சுவிஸர்லாந்திடமோ இலங்கை அரசு தஞ்சமடைய அமரிக்கா தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும்.

மீண்டும் அடுத்த சீசன் வரும் வரை இது சுழற்சி முறையில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றது போன்றே நடைபெறும்.

உணர்ச்சிவயப்படுத்திய அரசியல்வாதிகள் சற்றுக்கொழுத்து எனர்ஜி ஏற்றிக்கொண்டு அடுத்த சீசன் வரை காத்திருப்பார்கள்.
இந்த சுழற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட குடிடியேற்றங்கள் எந்தத் தடையும் இன்றி நடைபெறும். புத்தர் சிலைகளால் கோவில்களும் பள்ளிவாசல்களும் நிரப்பப்படும், இலங்கையின் வரைபட எல்லைகள் வெட்டித் திருத்தப்படும், இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள், இலவசக் கல்வி அழிக்கப்படும், தெற்காசியாவின் சுற்றுலா மையமாக இலங்கை மாற்றப்படும், பாலியல் தொழில் உட்பட அனைத்து சீரழிவுகளும் நிறுவனமயப்படும்முன்னைனாள் போராளிகள் நவீன அடிமைகள் ஆவார்கள், போதைவஸ்துக்களுக்கு அடிமையான சமுதாயம் உருவாகும், எதிர்ப்பதற்கு முனைவோர் சாட்சியின்றிக் கொலப்படுவார்கள்..

இன்னும் சில சீசன் அரசியல் நடைபெறுகின்ற கால எல்லைக்குள் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் ஒன்று முன்னர் இருந்ததாக வரலாறு எழுதப்படும்.

அப்போதும் சிலர் பிரபாகரனின் புகழ் பாடுவதை மட்டுமே தொழிலாகக் கொள்வார்கள், தெய்வம் என்பார்கள், கோவில்கட்டி சிலைவைப்பார்கள். புலி எதிர்பாளர்கள் எல்லாம் பிரபாகரனால் மட்டும் தான் நடந்தது என்பார்கள்.
இலங்கையில்
புதிய பேரினவாத அரசு ஒன்று பிரபாகரனின் சிலை வைத்து அர்ச்சனைக்குக் கூட ஏற்பாடு செய்துவிட்டு நல்லிணக்கம் என்பார்கள்.

அடையாளங்களால் கொழுக்கும் அரசியல் வியாபாரிகளிடமிருந்து அரசியலை மீட்பதும், அமரிக்காவிலும் சனல் நான்கிலும் தங்யிருக்கும் அரசியலிலிருந்து உயிர்ப்பதும் மக்களின் அவலங்களைக் குறித்துச் சிந்திப்பதும், உலகம் முழுவதும் அழிவுகளிலிருந்து மீள உறுதியுடன் போராடும் மக்களோடு இணைந்து கொள்வதும் அவசியம்.

வாசகர் கருத்து:

k.ruban

முப்படைகளின் தலைவர் இலங்கையின் அதிபர் ராஜபக்சவும் இராணுவ படையணிகளும் மற்றும் அரசயந்திரங்களும் இறுதியுத்தத்தில் நடத்திய போர்குற்றங்கள் பற்றியும் இனப்படுகொலை பற்றியும் கடந்த நான்குஆண்டுகளாக கடுமையான கண்டனங்களுடன் உலகம்முழுக்க அம்பலப்படுத்தப்பட்டது மட்டுமன்றி இதில் இந்தியா ஐநாசபை உட்பட சிலமேற்குலகநாடுகளின்தொடர்புகளும் அம்பலப்படுத்தப்பட்டது.
ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு பெரும்தரப்பு தமிழ்ஈழவிடுதலைபுலிகளும் சிலஅரசசார்பு தமிழ்அமைப்புக்களும . இவர்களின் இந்த போர்குற்றங்கள்பற்றியதான கொலைகுற்றச்காட்டுக்களில் இருந்து தப்பிவிட்டார்கள் அல்லது தப்பிக்கவிடப்படுகிறார்கள். இவர்களைபற்றி பெரும்பான்மையான ஊடகங்கள் அம்பலப்படுத்துவதில்லை அல்லது அப்டி ஒன்று நடந்தாகவே காட்டிக்கொள்வதில்லை! இப்போர்குற்றங்களில் ஈடுபட்ட பல தமிழர்கள் வேளிநாடுகளில் சுதந்திரமாக வசிக்கிறார்கள் என்பது கசப்பான
உண்மை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com