Contact us at: sooddram@gmail.com

 

காற்றாலை மின்னுற்பத்தியை அதிகரிப்பதனால் உலகில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணலாம்

காற்றுத் திறன்  (Wind power)  அல்லது காற்று மின்சாரம் (wind electricity)  எனப்படுவது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பொறிமுறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின் திறன் செலுத்தல் தொகுதிகளில் இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. புதைபடிவ எரிபொருள் சக்தியின் மாற்றுச் சக்தி முறையொன்றாகக் காற்றுத் திறன் காணப்படுகின்றது

ஏனைய ஆற்றல் முதல்களுடன் ஒப்பிடும் போது காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறப்படுவதன் மூலம் சுற்றுச் சூழல் மாசடைதல் பெருமளவில் தடுக்கப்படுகின்றது. எனினும், காற்று மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகளுடன் கூடிய தொகுதிக்கான உற்பத்திச் செலவு அதிகமாகும். 2011 ஆம் ஆண்டளவில் டென்மார்க் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது.

மேலும், உலகின் 83 நாடுகள் காற்று மின்சாரத்தை வணிக நோக்கு அடிப்படையில் பயன்படுத்துகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த மின்சார நுகர்வின் 2.5 சதவீதம் காற்று மின்சாரத்தின் மூலம் பெறப்பட்டுள்ளதுடன், காற்று மின்சாரத்தை பயன்படுத்தும் அளவு ஆண்டுக்கு 25 சதவீதத்தால் உயர்வடைந்து செல்கின்றது.

காற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை முதலாவதாக அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சார்ல் எப். புருஸ் 1888 இல் கண்டுபிடித்தார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் 12 கிலோவாற்று நேர் ஓட்ட மின்சாரத்தை மதிப்பீடு செய்தது. 1920 நடுப்பகுதிகளில் அமெரிக்காவில் ஒன்று முதல் மூன்று கிலோவாற்று காற்று மின்பிறப்பாக்கிகள் பரிஸ்-டன்ஸ் போன்ற கம்பனிகளால் அபிவிருத்தி செய்யப்பட்டன.

1956 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் 200 கிலோவாற்று மின்சாரத்தை உற் பத்தி செய்யக்கூடிய மூன்று விசிறிக ளைக்கொண்ட காற்றுச் சுழலி யொக னீஸ் ஜூல் என்பவரால் உருவாக்கப்பட் டது. 1975 இல் அமெரிக்காவின் எரிசக்தி திணைக்களம் பயன்பாட்டு அளவு காற்றுச் சுழலிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்தது.

காற்றுச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை பல நூற்றாண்டுகளாக விருத்தியடைந்து வந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் காற்று மின்சார உற்பத்தி உலகம் முழுதும் பாரியளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றுச் சக்தியானது வளியின் அசைவின் இயக்க சக்தியாகும். ஓரலகு நேரத்தில் குறித்த கற்பனைப் பரப்பை வாரிச் செல்லும் மொத்த காற்று சக்தி சமன்பாட்டினால் தரப்படுகின்றது.

ஒரு பிரதேசத்தில் பல காற்றுச் சுழலிகள் ஒன்று சேர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக காற்றாலை பண்ணைகள் உருவாக்கப்படுகின்றன. பெரும் காற்றாலைப் பண்ணை ஒன்று நூற்றுக் கணக்கான தனித்தனி காற்றுச் சுழலிகளைக் கொண்ட பரந்துவிரிந்த நிலப்பரப்பில் காணப்படலாம். மேலும், காற்றுச் சுழலிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இடைப்பட்ட நிலம் விவசாய மற்றும் ஏனைய நோக் கங்களுக்காக பயன்படுத்தப்பட முடியும்.

காற்றாலை பண்ணைகள் தொலைதூரங்களிலும் அமைக்கப் படலாம். பொதுவாக எல்லாப் பெரிய காற்றுச் சுழலிகளும் ஒத்த வடிவத்தைக் கொண்டுவடிவ மைக்கப்படுகின்றன. காற்றுச் சுழலியொன்றின் கிடை அச்சு மேல் காற்று சுழற்றகம் மற்றும் மூன்று விசிறிகளை கொண்டதுடன் இது நேஸல் (Nacelle) ஒன்றுடன் இணைக்கப்பட்டு உயர்ந்த குழாய் கோபுரத்தின் மேல் முனையில் பொருத்தப்படுகின்றது.

காற்றாலை பண்ணைகளில தனித்தனியான காற்றுச் சுழலிகள், மத்திய தர மின்னழுத்த (பொதுவாக 34.5 கிலோவோல்ட்) சக்தி சேமிப்பக அமைப்புடனும், தொடர்பாடல் வலையமைப்பு ஒன்றுடனும் சேர்ந்து காணப்படுகின்றது. ஒரு மின்நிலை யத்தில், உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்ற அமைப்புடன் நிலைமாற் றியொன்று இணைக்கப்படுவதன் மூலம் இம்மத்திய தர மின்னழுத்த மின்னோட்டம் மின்னழுத்தத்துடன் அதிகரிக்கின்றது.

பல பெரிய செயல்பாட்டு கடல் சார்ந்த காற்றாலைப் பண்ணைகள் ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள் ளன. 2012 இல், உலகின் மிகப்பெரிய கடல்சார் காற்றாலைப் பண்ணையாக அல்டா காற்று எரிசக்தி நிலையம் 1020 மெகாவாற்று உடன் காணப்பட்டது. இதற்கு அடுத்ததாக சேப்ஹேட்ஸ் பிளட் காற்றாலைப் பண்ணை (845 மெகாவாற்று), ரோஸ்கோகாற்றாலைப் பண்ணை (781.5 மெகாவாற்று) என்பன பெரிய காற்றாலைப் பண் ணைகளாக காணப்பட்டன.

2012 செப்டெம்பரில், ஐக்கிய இராச்சியத்தின் சிரிங்கம் சோல் தொலை கடல் காற்றாலைப் பண்ணை மற்றும் தேனட் காற்றாலைப் பண்ணை என்பன முறையே 317 மெகாவாற்று, 300 மெகாவாற்று என்ற அள வில் உலகில் மிகப்பெரிய தொலை கடல் காற்றாலை பண் ணைகளாக காணப்பட்டன. இதற்கு அடுத்ததாக டென்மார்க்கின் ஹோர் ன்ஸ் ரேவ் தொலைகடல் காற்றாலை பண்ணை (209 மெகாவாற்று) காணப் பட்டது.

தற்போது உலகம் முழுவதும் இருநூறாயிரத்துக்கும் அதிகமான 282,482 மெகாவாட்டு பெயர்பலகையுடன் மொத்த சக்தி உடைய காற்றுச் சுழலிகள் செயற்பாட்டில் உள்ளதாக கணிப்பொன்று தெரிவிக்கின்றது.

2012 செப்டெம்பரில் ஐரோப்பிய யூனியன் மாத்திரம் மொத்தம் 100,000 மெகாவாட்டு சக்தி பெயர்பலகையை தாண்டியது. ஐக்கிய அமெரிக்கா 2012 ஆகஸ்டில் 50,000 மெகாவாட்டை விஞ்சியதுடன, சீனாவும் அதே மாதத்தில் 50,000 மெகாவாட்டை தாண்டியது.

உலக காற்றுச் சக்தி கொள்ளளவானது 2000 - 2006 இடையில் நான்கு மடங்கிலும் மேலாக அதிகரித்தது. அதாவது மூன்று வருடங்களில் இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளது. 1980 - 1990 காலப் பகுதியில் உலகை நிறுவப்பட்ட கொள்திறனுக்கு இட்டுச் செல்லும் முன்னோடியாக ஐக்கிய அமெரிக்கா காற்றாலைப் பண்ணைகள் விளங்கின.

1997 இல் ஜேர்மனில் நிறுவப்பட்ட கொள்திறன் அமெரிக்காவை விஞ்சியது. 2008 இல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட கொள்திறன் மீண்டுமொரு தடவை ஜேர்மனை விஞ்சியது. சீனா 2000 ஆண்டு முதல் தனது காற்றுச் சக்தி கொள்திறனை விருத்திசெய்து வருகின்றது. 2010 இல் அமெரிக்காவின் காற்றுச்சக்தி கொள்திறனை சீனா தாண்டியதுடன் காற்றுச்சக்தி திறன் கொண்ட நாடுகளில் சீனா முன்னி லையில் உள்ளது.

2012 இன் இறுதியில் உலகம் முழுவதும் 282 ஜிகாவாட்டு கொள்ள ளவைக் கொண்ட காற்று சக்தி பிற ப்பாக்கிகள் காணப்பட்டதுடன், முந்திய வருடத்திலிருந்து அது 44 ஜிகா வாடினால் அதிகரித்துச் செல்கின்றது. ஒரு கைத்தொழில் நிறுவனம் 2010 இல் மொத்த உலக மின்சார நுகர்வின் 2.5 சதவீதம் காற்றுச் சக்தி வலுவின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது என உலக காற்று எரிசக்தி சங்கம் குறிப்பிட்டுள்ளது. 1997 இல் 0.1 சதவீதமாக இருந்த உலக காற்று சக்தி நுகர்வு 2008 இல் 1.5 வரை அதிகரித்துள்ளது.

காற்று மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் பல நாடுகள் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வரிசையில் டென்மார்க் 28%, போர்த்துக்கல் 19%, ஸ்பெயின் 16%, அயர்லாந்து 14%, ஜெர்மன் 8% உலகின் 83 நாடுகள் 2011 இல் வணிக அடிப்படைகளுக்காக காற்றுச் சக்தியை பயன்படுத்தியிருக்கின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com