Contact us at: sooddram@gmail.com

 

சம்பந்தனின் சர்வாதிகார போக்கு தமிழ் தேசிய ஓற்றுமையை சிதைத்து விடும்இரா.துரைரத்தினம்

சில தினங்களுக்கு முதல் என்னுடைய நண்பர் ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது கூறிய விடயம் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் மீது தமிழ் மக்கள் எவ்வளவு வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. என்னை சம்பந்தனுக்கு சார்பான ஆளாக காட்டிக்கொள்ள வேண்டாம். நான் சம்பந்தனின் ஆளும் இல்லை, இப்போது இருக்கும் சூழலில் சம்பந்தனின் ஆள் என்று என்னை அடையாளம் காட்டினால் நான் யாழ்ப்பாணத்தில் கால் வைக்க முடியாது என எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் அந்த நண்பர் என்னிடம் கூறினார். அடிமட்ட மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மதிக்க தெரியாத நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் இருக்கிறார் என்பதற்கு இது போன்ற பல காரணங்களை கூறலாம்.

வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் தெரிவு செய்யப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் மனதார ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த தெரிவில் சம்பந்தன் நடந்து கொண்ட சர்வாதிகாரப் போக்கினால் தான் விக்னேஸ்வரனை தெரிவு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டது. முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டும் என்ற எண்ணம் சம்பந்தனிடம் இருந்திருந்தால் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்னரே தமிழரசுக்கட்சி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் பேசி ஒரு சுமூக நிலையை உருவாக்கியிருந்தால் மாவை சேனாதிராசாவின் பெயர் அங்கு முன்வைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்காது.

யாழ். மாவட்ட தமிழரசுக்கட்சி கிளை உட்பட பெரும்பாலான தமிழரசுக்கட்சி கிளைகள் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்த பின், ஏனைய கட்சிகள் மாவை சேனாதிராசாதான் முதலமைச்சர் வேட்பாளர் என பிரேரித்த பின் அவர்களின் எந்த கருத்துக்களையும் மதிக்காது சர்வாதிகாரப் போக்கில் விக்னேஸ்வரன் தான் முதலமைச்சர் வேட்பாளர் என நடந்து கொண்டது அவர் தமிழரசுக்கட்சியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் வழி நடத்த தகுதி அற்றவர் என்பதை உணர்த்தி விட்டார். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளர் என சம்பந்தன் அறிவித்த பின்னரும் யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி உட்பட பெரும்பாலான தமிழரசுக்கட்சி கிளைகள் அவரின் முடிவை நிராகரித்து மாவை சேனாதிராசாவின் பெயரை முன்வைத்திருந்தன. இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழரசுக்கட்சியின் நம்பிக்கையையும் சம்பந்தன் இழந்து விட்டார் என்பதே உண்மையாகும்.

போட்டியின்றி சச்சரவின்றி விக்னேஸ்வரனை தெரிவு செய்வதற்கான சூழலை ஏற்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அல்லது தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் இருப்பவர் என்ற வகையில் சம்பந்தன் தவறி விட்டார். ஆரம்பத்தில் இருந்து போட்டியின்றி விக்னேஸ்வரனின் தெரிவு இருந்திருந்தால் அவரைப் பற்றிய விமர்சனங்கள், வெளிவந்திருக்க மாட்டாது. தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களே விக்னேஸ்வரன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் அளவிற்கு பாதக நிலையை உருவாக்கியவர் வேறு யாரும் அல்ல சம்பந்தன் மட்டுமே ஆகும். சில வேளைகளில் சரியானதை செய்தாலும் சர்வாதிகாரப் போக்கால் அதைக் கூட மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய் விடுகிறது. இதற்கு சம்பந்தனின் நடவடிக்கைகளும் விக்னேஸ்வரனின் தெரிவும் நல்ல உதாரணங்களாகும்.

சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகளை விமர்சிப்போர் அவர் இந்தியாவின் கையாளாக சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் கையாளாக செயற்படுகிறார் என குற்றம் சாட்டுகின்றனர். இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ என்பதற்கு அப்பால் இந்த விமர்சனங்கள் உண்மைதான் என்பதை நிரூபிப்பது போலவே சம்பந்தனின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சம்பந்தனின் மீது சந்தேகம் எழுவதற்கு இங்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.

 

1.    மகிந்த – சம்பந்தன் சந்திப்பு சிறிலங்கா அரசாங்க தரப்பிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இனப்பிரச்சினையின் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகள் முறிவடைந்த பின்னரும் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை சம்பந்தன் அலரி மாளிகையில் பல தடவைகள் தனியாக சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழர் பிரச்சினை பற்றியே தான் பேசியதாக சம்பந்தன் கூறினாலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றியோ மகிந்த ராசபக்சவிற்கும் சம்பந்தனுக்கும் இடையிலான உறவு பற்றியோ யாருக்கும் தெரியாது தமிழர் பிரச்சினை பற்றி மகிந்த ராசபக்சவுடன் சந்திப்பதாக இருந்தால் தனியாக சம்பந்தன் சென்று சந்திக்க கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவைகள் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி பல தடவைகள் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் பலரும் மகிந்த ராசபக்சவை சம்பந்தன் தனியாக சந்திக்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர். ஆனால் இவர்களின் எந்த பேச்சையும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்தையோ சம்பந்தன் மதிப்பதாகவோ கேட்பதாகவோ இல்லை. சம்பந்தன் கடந்த வாரமும் அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை தனியாக சந்தித்தார். சம்பந்தனின் இந்த இரகசிய சந்திப்பு குறித்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பலமான சந்தேகம் இன்று தமிழரசுக்கட்சிக்குள்ளேயே அவருக்கு பலமான எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. மகிந்த ராசபக்சவை சந்திக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு உறுப்பினரையாவது அழைத்து சென்றால் இந்த சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்த சந்தேகங்கள் வலுவடையும் வகையிலேயே சம்பந்தனின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

 

2.     இந்தியாவின் கைப்பொம்மை தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையும், ஜனநாயக ரீதியான போராட்டத்தையும் அழிப்பதில் முன்னின்ற இந்தியாவின் கைப்பொம்மையாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் செயற்படுகின்றன என பொதுவான குற்றச்சாட்டு நிலவு கின்ற போதிலும் தமிழரசுக்கட்சியின் தலைவராக இருக்கும் சம்பந்தனே இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றார் என்ற பலமான குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. இந்தியாவை பொறுத்தவரை தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டமோ அல்லது ஜனநாயக ரீதியான போராட்டமோ நடைபெறக் கூடாது தமிழர்கள் பலவீனமடைந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். தமிழ் மக்களுக்கு பலமான ஒரு அரசியல் தலைமை இருப்பதை சிறிலங்கா அரசு மட்டுமல்ல இந்தியா கூட விரும்பவில்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் அதனை பலவீனப்படுத்தவதற்கும் பின்னணியில் சிறிலங்காவும் இந்தியாவும் செயற்பட்டு வருகின்றன என்பதே உண்மையாகும். இதற்கு சிறிலங்காவும் இந்தியாவும் சம்பந்தனை பயன்படுத்தி வருகின்றன என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த சந்தேகங்களை உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே சம்பந்தனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. 3. தன்னிச்சையான முடிவுகள் சம்பந்தன் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் திணித்து வருகிறார் என்றும் அதை எதிர்க்க முற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படும் என்ற அச்சத்தில் மௌனம் காக்க வேண்டி இருப்பதாக பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை சிங்கள தலைவர்களுடன் தனியாக பேசி விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் திணித்திருந்தார். தமிழினத்தை கொன்றொழித்த போருக்கு தலைமை தாங்கிய ஒருவரை தமிழ் மக்கள் ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பான ஒன்று. ஆனால் தவறான ஒரு முடிவை எடுத்து தமிழ் மக்களிடம் திணித்த வரலாற்று தவறை சம்பந்தன் செய்திருந்தார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விரும்பினாலும் பொறுப்பு வாய்ந்த தலைமை பதவியில் இருப்பவர் என்ற ரீதியில் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய சம்பந்தனே அந்த வரலாற்று தவறை செய்தார். 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை தனிப்பட்ட ரீதியில் தான் விரும்பிய ஒருவருக்கே சம்பந்தன் வழங்கியிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் மூலம் பெற்ற ஒரு ஆசனம் என்பது வடக்கு கிழக்கு தமிழ் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததாகும். வடக்கு கிழக்கிற்கு வெளியே ஒரு வாக்கு கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது கிடையாது. அந்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வடக்கு கிழக்கில் இருக்கும் ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். வடக்கு கிழக்கில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுவது இயல்பானதே. வடக்கு கிழக்கில் எத்தனையோ புலமைசார் அறிஞர்கள், கல்விமான்கள், சட்டவாளர்கள், இருக்கும் போது ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் ஒரு துரும்பை கூட தூக்கி போடாத ஒருவருக்கு வழங்கியது ஏன் என்ற கேள்விக்கு சம்பந்தனால் பதில் கூற முடியாது. காலத்திற்கு காலம் சிங்களத்தை குஷிப்படுத்துவதற்காக கூறிவரும் வார்த்தைகளை கேட்டு தமிழ் மக்கள் எப்படி கொதிப்படைந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நிலையிலும் சம்பந்தன் இல்லை. ஏனெனில் அவர் வெறும் பதவிகளுக்காக இலங்கைக்கு வந்து செல்கிறாரே தவிர அவரின் இருப்பு என்பது இந்தியா, கேரளாவை மையப்படுத்தியது தான். இந்த இருப்பு ஒரு போதும் தமிழ் தேசிய விடுதலையை பெற்றுத் தரப்போவதில்லை. இந்திய இருப்பின் வெளிப்பாடாகவே அவர் வெளிப்படுத்தி வரும் பின்வரும் கருத்துக்களாகும். 1 தமிழீழத்தை நாம் ஒரு போதும் கோரவில்லை ( 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தே தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அதில் திருகோணமலை தொகுதியில் சம்பந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்)

 

3.      வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானது என நாம் கோரவில்லை.

 

4.     தமிழீழம் என்ற பெயரை மறந்து விட்டோம்.

 

5.    சிறிலங்காவின் சிங்கள கொடி எனது விருப்பத்திற்குரிய கொடி, அதனை நான் பலமுறை ஏற்றியிருக்கிறேன். 5 சுயநிர்ணய உரிமையை நாம் இப்போது வலியுறுத்தவில்லை இப்படி சம்பந்தன் கூறிவரும் கருத்துக்களால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல அவர் தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சியும் அவர் மீது நம்பிக்கை இழந்து வருகிறது. இதனை அண்மையில் வவுனியாவில் நடந்த தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டம் வெளிப்படுத்தி நின்றது மக்கள் நம்பிக்கை இழந்து வரும் ஒருவரை தொடர்ந்தும் தலைவராக வைத்திருப்பது தமிழரசுக்கட்சியை மட்டுமல்ல தமிழ் தேசிய அரசியலுக்கு இன்று தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து விடும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தொடர்ந்து சம்பந்தன் தலைமை தாங்குவது தமிழ் தேசிய அரசியல் தலைமையை சிதைத்து பலவீனப்படுத்துவதற்கு கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் இந்திய பேரினவாதத்திற்கும் அதை செய்வதற்கு மிக இலகுவாகவே இருக்கும். (இக்கட்டுரை கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் தந்தி வாரப்பத்திரிகையில் 21.07.2013 அன்று பிரசுரமானது.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com