Contact us at: sooddram@gmail.com

 

புற்றுநோய் என்பது வாழ்வின் முடிவல்ல் அவதானமாக இருப்பின் மீட்சி பெறலாம்

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் இன்று பெண்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த புற்றுநோய் காரணமாக அநேகமான பெண்கள் உயிரிழப்பதற்குக் காரணம் அவர்களைப் பற்றியிருக்கும் வெட்கம் மற்றும் அக்கறையின்மை ஆகும். 'புற்றுநோய்' என்றதுமே இறுதி முடிவு 'மரணம்' தான் என எண்ணுவது மூடநம்பிக்கையாகும். விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியுடன் புற்றுநோயினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வது என்னவோ மறுக்கமுடியாத உண்மையாக இருந்த போதிலும், அதே விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிகாரங்களை எமக்காக பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கலங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோய் என வரைவிலக்கணப்படுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இந்த புற்றுநோய் எதன் காரணமாக மனிதருள் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவேயுள்ளது.

முற் பிறப்புக்களில் நம்பிக்கை கொண்ட சமய மக்கள் இது கர்ம வினையின் பயனாக ஏற்படும் நோய் என்று வாய் வழியாக கூறுவதனைக் கேட்டிருக்கின்றோம். எது எப்படியான போதிலும் கதிரியக்கங்கள், உணவுகள் பழுதடைவதனை காலம் தாழ்த்துவதற்காக பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தங்கள் புற்றுநோய் ஏற்படுவதில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையென விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒன்பது புற்றுநோய் வைத்தியசாலைகளிலும் கடந்த மூன்று வருடமாக ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார கல்விப் பணியகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

ஒரே நபர் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் தம்மை பதிவு செய்துகொள்வதாகவோ மற்றும் சிலர் தமக்கு ஏற்பட்டிருப்பது புற்றுநோய் தானா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாக மேற்படி வைத்திய சாலைகளுக்கு சென்றிருந்த போதிலும் இதனையே பொதுவான கணக் கெடுப்பாக சுகாதார அமைச்சு கொண்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில் புற்றுநோய் வைத்தியசாலைகளில் பதிவு செய்து கொண்டோரது எண்ணிக்கை 13 ஆயிரமாக இருந்தபோதிலும் அதன் எண்ணிக்கை இன்று வரை அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதாக இல்லை. அத்துடன் புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் இலங்கையில் மரணமடைவ தாகவும் கணக்கெடுக்கப்பட் டுள்ளது.

புற்றுநோய் தாக்கத்திற்குள்ளாகும் ஆண், பெண் இருபாலாருள் பெண்களை எடுத்துக் கொண்டால் இவர்களுக்கு பெருமளவில் மார்பகப் புற்றுநோயும் அதற்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை புற்றுநோயுமே பாரிய அச்சுறுத் தலாக இருந்து வருகின்றன.

வருடந்தோறும் 2 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயுடனும் ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயுடனும் இலங்கையில் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே இது குறித்து எமது பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

உலக நாடுகளிலேயே ஆண்டுதோறும் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதமான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கே ஆளாகின்றனர். இது 1.4 மில்லியன் பேர் எனவும் கணக்கிடப்பட் டுள்ளது. பொதுவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்களின் விழிப்புணர் வின்மை மற்றும் காலம் தாழ்த்தி நோயைக் கண்டுபிடித்தல் ஆகியன இந்த அச்சுறுத்தலை மென்மேலும் ஊக்குவிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு சதவீதமானோர் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். இலங்கையில் மாத்திரம் ஆண்டுதோறும் 470 பேர் மார்பகப் புற்றுநோயின் காரணமாக உயிரிழக்கின்றனர். இருப்பினும் இது குறித்த பூரண விழிப்புணர்வை பெற்றிருப்பதன் மூலம் நாம் அதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து முறையான சிகிச்சை பெற்றுக்கொண்டால் அந்நோய் தாக்கத்திலிருந்து நிச்சயமாக மீள முடியுமென இலங்கை வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இன்று வளர்முக நாடுகளிலுள்ள அநேகமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் உபகரணங்கள் எமது அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் காணப்படுவதுடன் முறையாக உரிய நேரத்திற்கு சிகிச்சைபெற வந்த சுமார் 12 ஆயிரம் பேர் குணமடைந்து மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதாகவும் சுகாதார கல்விப் பணியகத்தில் அண்மையில் ஒன்றுகூடிய புற்றுநோய் வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.

புற்றுநோய் அரசினர் வைத்தியசாலை யொன்றில் நீண்ட காலமாக உதவித் தாதியாக பணிபுரிந்து வந்த பெண்ணொருவர், தனது சேவைக் காலத்தில் அநேகமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களையே கால வித்தியாச அடிப்படையில் நோயாளி களாக தான் சந்திப்பதாக என்றோ கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. வைத்தியர் கள் இதனையும் தமது ஆய்வின் அடிப்படை யில் உறுதிசெய்கிறார்கள்.

தாய் அல்லது சகோதரிகளுக்கோ அல்லது பரம்பரையில் வேறு யாருக்காவதோ புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தமது உடல் நலம் குறித்து கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது அவசிய மெனவும் வைத்தியர்கள் கேட்டுக்கொண் டுள்ளனர்.

மற்றும் மார்பகப் புற்றுநோயை பொறுத்தவரையில குழந்தை பெற்று தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், 35 வயதிற்குப் பின்னர் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் மற்றும் ஈஸ்ட்ரஜன் ஹோமோன்கள் தொடர்பிலான சத்திரசிகிச்சைக்குள்ளான பெண்கள் ஏனைய சாதாரண பெண்களிலும் தமது மார்பகங்களின் நலன் குறித்து விழிப்புணர் வுடன் இருத்தல் அவசியம்.

அத்துடன் அதிகம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மிகப் பெரிய அச்சுறுத்தலெனவும் ஆராய்சிகளின் முடிவில் வெளியாகியுள்ளது. எனினும் முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி என்பன மூலம் புற்றுநோய் ஏற்படுவதனை தவிர்த்துக்கொள்ள கூடியதாகவுள்ளது.

மார்பகப் புற்றுநோயானது நூறு பெண்களில் ஒரு ஆணுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோயாகும். உலகில் ஆண்டுதோறும் 5 இலட்சம் பேர் கர்ப்பப்பை புற்றுநோய் தாக்கத்துடன் அடையாளம் காணப்படுகின்றனர்.

இதற்கு மேலதிகமாக 10 இலட்சத் திற்கும் அதிகமானோர் இப்புற்று நோயுடன் உயிர் வாழ் கின்றனர். வருடந்தோறும் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் மரணிப்பதுடன் தெற்காசியாவில் சுமார் ஒரு இலட்சம் பேர் கர்ப்பப்பை புற்றுநோய்க் குள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பலர் இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தடவை உலகில் ஒரு பெண் கர்ப்பப்பை புற்று நோயினால் உயிரிழந்து வருகின்றாள். 2030 ஆம் ஆண்டளவில் அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளில் இந்த நோய் தாக்கம் 98 சதவீதம் வரை உயர்வடையலா மெனவும் இதன் காரணமாக வருடாந்தம் 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் மரணிக்கக் கூடுமெனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்கின்ற போது அதில் இலங்கைக்கும் முக்கிய பங்கு உண்டு. இலங்கையில் கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக தற்போது ஆண்டு ஒன்றிற்கு சுமார் 1500 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மேற்படி அச்சுறுத்தல்களிலிருந்து பெண்கள் மீள வேண்டுமாயின் எம்மைப் பற்றியிருக்கும் வெட்கம், மூடநம்பிக்கை, அசட்டையீனம் ஆகியவற்றை களைந்தெறிய வேண்டும்.

மார்பகங்களின் உருவங்களில் வித்தியாசம் தெரிந்தாலோ அல்லது அதன் வெளிப் புறத்திலோ அல்லது உட்புறமோ ஏதாவது தட்டுப்படும் வகையில் அமைந்திருந்தாலோ கண்டும் காணாதது போல் இருப்பது மிகவும் தவறான விடயமாகும்.

பல பெண்களுக்கு தமது மார்பகங்களில் அவ்வாறான அடையாளங்களோ தளும்புகளோ ஏற்பட்டிருப்பதும் கூட தெரியாது. காரணம் அவர்கள் தமது உடல் உறுப்புகளையே பார்ப்பது கிடையாது. அவ்வாறில்லாமல் பெண்களே சுயமாக அடிக்கடி தங்கள் மார்பகங்களை சோதனையிட்டுக்கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவையான ஒரு விடயம். இதற்காக வெட்கப்படத் தேவையில்லை.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதாவது தென்படுமாகவிருந்தால் கூச்சத்தை விட்டு குடும்ப உறுப்பினர் ஒருவரது உதவியுடன் உடனடியாக வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகும்.

35 வயதிற்குப் பின்னர் ஏற்படும் மாதவிடாய் ஒழுங்கின்மை, தொடர்ச்சியான இரத்தப் போக்கு, தீராத வயிற்று வலி, வெள்ளைபடிதல், நீர்த்தன்மை வெளிப்படுதல் போன்றவை மற்றும் மாதவிடாய் முடிவு அடைந்த பெண்களும் தமது கர்ப்பப்பையை முறைப்படி சோதனையிட்டுக் கொள்வது இன்றைய வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்பதனை ஒவ்வொரு பெண்ணும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இச்சோதனைகளுக்கான வயதெல்லையாக சுகாதார அமைச்சு 35 வயதினை வரையறை செய்துள்ளது. 35 வயதையடைந்த ஒவ்வொரு பெண்ணும் ஆகக் கூடியது வருடத்திற்கு ஒரு தடவையாவது இத்தகைய சோதனை களுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென எமது அரசாங்கம் வலியுறுத்தி யுள்ளது.

பெண்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு 1996 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலகம் தோறுமுள்ள மகப்பேற்று மருத்துவ நிலையத்தில் இலவச உடல் சிகிச்சை முறை யினை அரசாங்கம் அறிமுகம் செய்து வைத் தது. ஆனால் இன்று எம்மில் எத்தனை பேர் இந்த இலவச சோதனை களுக்கு உள்ளாகின் றோம் என்பது தான் கவலைக்குரிய விடயம்.

எம்மில் பலர் புற்று நோய் ஏற்பட்டபோதும் காலம்தாழ்த்தி இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வருவதாகவே இன்று புற்றுநோய் ஆஸ்பத்திரிகளிலிருந்து கிடைக்கும் வழக்கமான முறைப்பாடு ஆகும்.

பலர் புற்றுநோய் என்றதும் மரணம் தான் என தமக்குத் தாமே தீர்மானித்துக் கொள்வது வேதனைக்குரிய விடயமாகும். மேலும் சிலர் இதற்காக எதற்கு சிகிச்சை? உடல் மெலிந்து தலைமயிர் கொட்டி அகோரமான தோற்றமும் பலரின் பரிதா பத்துக்கும் உள்ளாகி மானம் கெடுவதனைவிட இப்படியே இருந்து மரணித்துப் போய்விடலாம் என்று கூட நிலைப்பதுண்டு.

இது மூடத்தனமான சிந்தனையாகும். சிகிச்சையின்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அவை ஐந்து அல்லது ஆறு மாத காலத்திற்கு மட்டுமேயுரிய தற்காலிக மாற்றங்களாகும். பின்னர் அவர்களால் நிச்சயமாக தமது வழமையான தோற்றத்தை பெற்றுவிட முடியும். இது இன்று மார்பகப் புற்றுநோயுடன் இலங்கையில் சாதாரண வாழ்க்கை நடத்தி வரும் 12 ஆயிரம் பெண்களுக்கூடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புற்றுநோயினை கட்டுப்படுத்தவென விரைவில் தேசிய கொள்கைத் திட்டமொன்றினை வகுக்க அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. அத்துடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் www.nணீணீp.gov.lk என்ற இணைய தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் 0715320320 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதனூடாக உங்களது புற்றுநோய் பற்றிய சந்தேகங்களுக்கு அரசாங்க வைத்தியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விடையளிப்பர்.

புற்றுநோயினை தவிர்ப்பதற்கும் நோய்குள்ளானவர்கள் குணமடைவதற்கும் மன தைரியம் மிக மிக அவசியமாகும்.

முப்பத்தைந்து வயதினையடைந்த பெண்கள் ஒவ்வொருவரும் தமது பிரதேசத்திலுள்ள மருத்துவ உதவித் தாதியை சந்தித்து இலவச மருத்துவ சிகிச்சை எப்போது நடைபெறுகிறது என்பதனை இன்றே அறிந்துகொள்வதுடன் பிறருக்கும் இது குறித்து விழிப்புணர்வூட்டு வதன் மூலம் புற்றுநோயிலிருந்து மீள்வதற்கு திடசங்கற்பம் கொள்வோமாக.

(நன்றி: தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com