Contact us at: sooddram@gmail.com

 

தண்டனைகள் குறையும்போது குற்றச் செயல்கள் அதிகரிக்கும்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைக்குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுமார் 23 வருட கால விசாரணை மற்றும் சிறைத் தண்டனை வழங்கலின் பின்னராக இந்த இறுதித் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது இவர்கள் ஆயுள் தண்டனைக்கான காலத்தை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் நிரந்தரமாக விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான அதிகாரத்தை இந்திய உச்ச நீதிமன்றம் தமிழக அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. தமிழக அரசாங்கமும் இவர்களை விடுதலை செய்யத் தீர்மானித்து அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்க மத்திய அரசாங்கத்திடம் அனுமதியைக் கோரியுள்ளது. மத்திய அரசாங்கத்தின் பதில் கிடைத்தவுடன் இம்மூவர் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கியமான எழுவர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்தச் செய்தியே கடந்த வார நடுப்பகுதி முதல் இன்றுவரை சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. இதில் தொண்ணூறு சத வீதத்திற்கும் அதிகமான ஊடகங்கள் இக்கொலைக் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பையும், விடுதலை பெறவிருப்பதையும் வரவேற்றே தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக இவர்களது விடுதலையை வைத்து கடந்த பல வருடங்களாக அரசியல் நடத்திவரும் தமிழக அரசியல்வாதிகளின் கருத்துக்க ளுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மனிதநேயம் செத்துவிடவில்லை, அப்பாவிகளது உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டது என்பதாக தமிழக அரசியல்வாதிகள் பலரும் கருதுகின்றனர். இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தமது தாய் நாட்டின் பிரதமர் கொல்லப் பட்டபோது கொதித்தெழுந்து அவரைக் கொன்ற புலிகளைக் கொன்றொழிக்க வேண்டும் என ஆர்ப்பரித்தவர்கள் இன்று அக்கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் விடுதலையில் மகிழ்வடைகிறார்கள். ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுவது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றுதான். ஆனால் அன்று பாரதப் பிரதமரின் உயிருடன் பொலிஸ் அதிகாரிகள், பத்திரிகைக்காரர்கள், பொதுமக்கள் எனப் பதினைந்து பேரின் உயிர்களை ஒரு நிமிடத்தில் காவு கொண்டவர்கள் அல்லது கொள்ளத் துணைக் காரணமாக இருந்தவர்கள் என நன்கு தெரிந்திருந்தும் அத்தகை யவர்களின் விடுதலையில் இன்று பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அன்று பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்படாதிருந்திருந்தால் இன்று நிச்சயம் அவரே பாரதப் பிரதமர் ஆசனத்தை அலங்கரிப்பவராக இருந்திருப்பார். அவரை நம்பிக் கரம்பிடித்த வெளிநாட்டுப் பெண்மணி சோனியா காந்தி அம்மையார் பூவும், பொட்டோடும் சுமங்கலியாக இருந்திருப்பார். அதேபோன்று அவருடன் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பதவியுயர்வு பெற்று உயரதிகாரிகளாக இருக்க அவர்களது மனைவிமார் மகிழ் வுடன் வாழ்ந்திருப்பர். கொலையாளிகளின் விடுதலையில் மகிழ்வடைவோர் இது பற்றியும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் புறப்பட்ட விடுதலைப் புலிகளான தமது வளர்ச்சிக்கு இடம் தந்து, பயிற்சி தந்து, நிதி தந்து பெரும் துணையாக இருந்த அன்னை இந்திரா காந்தி அம்மையாரை ஒரு நிமிடம் மனதில் சிந்தித்திருந்தால் புலிகளுக்கு இக்கொலையைச் செய்ய மனம் வந்திருக்காது. என்னதான் மேற்குலகம் வேண்டிக் கொண்டிருந்தாலும் அல்லது இலங்கையில் அமைதிப் படையை அனுப்பி அட்டூழியம் செய்திருந்தாலும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தமை வரலாற்றுத் துரோகமாக புலிகளின் அத்தியாயத்தில் அவர்கள் உயிருடன் இருந்த காலத்திலேயே பதியப்பட்டு விட்டது.

ராஜீவ் காந்தி அவர்களது கொலைக்குப் பின்னர் ஒட்டுமொத்த இந்தியர் களினாலும் விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமல்லாது இலங்கைத் தமிழர்களும் வெறுத்து ஒதுக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து எவராவது இந்தியா சென்றால் அவர்கள் மீது கெடுபிடிகள் காணப்பட்டது. இங்கிருந்து செல்வோர் அங்கு அருகிலுள்ள பொலிஸில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்கும் ஹோட்டல்கள் பலவற்றில் இலங்கையிலிருந்து சென்றால் அறைகள் தரப்பட மாட்டாது. கடந்த 23 வருட காலத்தில் இன்றும்கூட தமிழகத்தில் பல இடங்களில் இந்நிலை காணப்படுகிறது. அதற்குக் காரணம் தமது நாட்டுப் பிரதமரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது மட்டுமே.

இவ்வாறிருந்த தமிழக மக்கள் இன்று அதற்கு நேர்மாறாகத் தமது தலைவனைக் கொல்லக் காரணமாக இருந்தவர்களின் விடுதலையில் சரவெடி கொளுத்தி மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார்கள். இம்மாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது தமிழகத்திலுள்ள ஒருசில அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்திய மத்திய அரசாங்கத்தையும், அதன் நீண்ட வரலாறு கொண்ட சட்டத் தையும், சி.பி.ஐ எனப்படும் மத்திய அரசின் கீழ் ஆனால் சுயாதீனமாக இயங்கும் பொலிஸ் பிரிவின் விசாரணையையும் கேள்விக்குறியாக்கி 23 வருட காலமாக எத்தனையோ கோடி ரூபாக்களைச் செலவு செய்து மேற்கொண்ட முயற்சி இறுதி யில் புஸ்வாணமாகிப் போயுள்ளது. பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன் றவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து தண்டனை வழங்க முடியாத நிலையில் மிக நீண்ட விசாரணை முடிவில்லாமலேயே முடிவிற்கு வந்துள்ளது என்பதே உண்மை.

மனிதாபிமான அடிப்படையில் இது நல்ல தீர்ப்பாக அமைந்திருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் ஏற்புடையது அல்ல. டெல்லியில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும் முழு இந்தியாவுமே அதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஆனால் ஒரு நாட்டின் பிரதமரும் அவரோடு பலரும் கொல்லப்பட காரணமாக இருந்தவர்களை தூக்கில் போடக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இது விந்தையாக உள்ளது. ஸ்ரீ பெரம்பதூரில் என் சகோதரியின் கணவன் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மீட்டிங் பார்க்க சென்ற என் சகோதரியின் கணவன் என்ன பாவம் செய்தார்?

அப்போது என் சகோதரி 4 மாதம் கருவுற்று இருந்தாள். என் சகோதரி தன் கணவனை பறி கொடுத்தாள். அந்த சம்வத்திற்கு பிறகு என் சகோதரி மன நிலை பாதிக்கப்பட்டாள். என் சகோதரியின் மகள் தான் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தாள். இவர்களுக்கு தூக்குத் தண்டனை ரத்து சரியானது அல்ல. மக்களே உங்கள் குடும்பத்தில் யாராவது இப்படி வெடி வைத்து கொல்லப்பட்டு இருந்தால் இந்த தீர்ப்பை வரவேற்பீர்களா என்று தனது அக்காவின் கணவனை இழந்த பெண்ணொருவர் இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் கதறியழுதிருக்கிறார்.

உண்மையில் இது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயம். இதேபோன்று தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளுக்காக மகிழ்ச்சி அடைபவர்கள் ராஜீவ்காந்தி படுகொலையின் போது உயிரிழந்த தமிழர்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை என அக்குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி கண்ணீர் மல்க தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கிறார். ராஜீவிற்குப் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுரு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோன்று ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட பொலிஸ் எஸ்.பியாக இருந்த முகமது இக்பால் அவர்களும் பரிதாபமாக கொல் லப்பட்டார். மறைந்த எஸ்.பி.முகமது இக்பாலின் மகன் ஜாவீத் இக்பால், முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களின் தண்டனையை ரத்து செய்தது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். அவருடன் கொல்லப்பட்ட 14 பேர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி வழங்கப் போகிறார்கள். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தான். அதுவும் தமிழர்கள் தானே. சிறையில் இருந்தவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில அரசியல் கட்சியினர், எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? வரும் காலங்களிலாவது நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுக்க அரசியல் கட்சியினர் தயங்க கூடாது என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதனால் உயிருடன் இருப்பவர்களுக்காக மனிதாபிமானம் இரக்கம் பார்ப் பவர்கள் அவர்களால் உயிர் எடுக்கப்பட்டவர்கள் மற்றும் பிரிவால் துயருறும் அக்குடும்பத்தவர்கள் குறித்தும் தமது மனிதாபிமானத்தைச் செலுத்த முன்வர வேண்டும். தண்டனைகள் குறையும்போது நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். டெல்லி தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமானவர் எனத் தெரிந்ததும் கஸாப் தூக்கிலிடப்பட்டார். அவர் பாகிஸ்தானியர் என்பதால் அவருக்கு ஒரு சட்டம் பிறிதாக இயற்றப்பட்டிருந்ததா எனும் கேள்வி சிலரது மனங்களில் எழுவதும் நியாயமே?

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com