Contact us at: sooddram@gmail.com

 

ராஜீவுடன் கொல்லப்பட்ட அப்பாவிகள் 15 பேரின் உறவுகள் கதறல்

கொலையாளிகளின் விடுதலையை வரவேற்போர் கொலையானோர் பற்றி கவலைப்படாதது ஏன்?

தமிழ்நாட்டிற்கு வந்து அப்பாவி 15 தமிழர்களை கொன்ற கொலையாளிகளை ஆதரிப்பவர்கள், அன்று கொல்லப்பட்ட அப்பாவி 15 தமிழர் களின் நிலை பற்றிக் கவலைப்படாமல் இருப்பது ஏனோ? ராஜீவ்காந்தி உட்பட வெடி வைத்து சிதறப்பட்ட அந்த 15 அப்பாவி தமிழர்களின் உயிர்களை பற்றி கவலைப்பட தமிழ்நாட்டில் யாரும் இல்லையா? புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம், நம் நாட்டைச்சேர்ந்த தேசத்து ரோகிகளின் உதவியுடன், நம் நாட்டின் முன்னாள் பிரதமரை, நமது மண்ணிலேயே வைத்து படுகொலை செய்வதை ஏற்கவே முடியாது. குண்டு வெடிப்பில் இறந்த பல அப்பாவி உயிர்களை விட, கொலைக்கு உதவிய இவர்கள் விடுதலையாவது முக்கியமாகி விட்டது.

ஸ்ரீபெரும்பதூரில் என் சகோதரியின் கணவன் கொல்லபட்டார். ராஜீவ் காந்தி மீட்டிங் பார்க்க சென்ற என் சகோதரியின் கணவன் என்ன பாவம் செய்தார். அப்போது என் சகோதரி 4 மாதம் கரூவுற்று இருந் தாள். என் சகோதரி தன கணவனை பறி கொடுத் தாள். அந்த சம்பவத்திற்கு பிறகு என் சகோதரி மன நிலை பாதிக்கபட்டாள். என் சகோதரியின் மகள் தான் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தாள். இவர்க ளுக்கு தூக்கு தண்டனை ரத்து சரியானது அல்ல. மக்களே உங்கள் குடும்பத்தில் யாராவது இப்படி வெடி வைத்து கொல்லப்பட்டு இருந்தால் இந்த தீர்ப்பை வரவேற்பீர்களா?..

மனிதாபிமான அடிப்படையில் இது நல்ல தீர்ப்புபினால் தார்மீக அடிப்படையில் ஏற்புடையது அல்ல. டெல்லியில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும் நாடே அதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஆனால் ஒரு நாட்டின் பிரதமரும் அவரோடு பலரும் கொல்லப்பட காரணமாக இருந்தவர்களை தூக்கில் போட கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது விந்தையாக உள்ளது.

பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி கண்ணீர் பேட்டி

தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளுக்காக மகிழ்ச்சி அடைபவர்கள், ராஜீவ்காந்தி படுகொலையின்போது உயிர் இழந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரின் குடும்பங்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? என்று பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி கண்ணீர் மல்க கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும் புதூரில் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுரு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். தற்போது ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் குறைக்கப்பட் டுள்ளது குறித்து மறைந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பால சரஸ்வதிதினத்தந்திநிருபரிடம் கூறியதாவது:–

என் கணவரும் பச்சை தமிழர் தான். காவல்துறையில் அப்பழுக்கற்ற வகையில் மிக துணிச்சலாக பணியாற்றிய அதிகாரி. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மரணமடைந்தார். அந்த நேரத்தில் நானும், எனது மகள் பபிதா தேவி, மகன் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் நிற்கதியாக நின்றோம். அப்போது என் மகள் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந் தாள். மகன் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டி ருந்தான். என் கணவருக்கு அப்போது வயது 44.

தூக்கு தண்டனை கைதிகளுக்காக முழக்கம் எழுப்பிய தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்தான் எனது கணவருக்கு முழு பென்சன் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாகத்தான் எங்கள் குடும்பம் தத்தளிக்காமல் வாழ்க்கை நடத்த முடிந்தது.

ராஜீவ்காந்தியோடு உயிரிழந்த குடும்பங்க ளுக்கு தமிழக அரசு கருணை உதவிகளை செய்துள்ளது. மத்திய அரசாங்கம் இதுவரை திரும்பி பார்க்கவில்லை. இனிமேலாவது எங்கள் குடும்பத்தை போன்ற மற்றவர்களுக்கும் உதவிகளை செய்ய நினைக்க முன்வருவார்களா? இவ்வாறு பால சரஸ்வதி கூறினார்.

முகமது இக்பால் எஸ்.பி,

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட பொலீஸ் எஸ்.பி. முகமது இக்பால் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மறைந்த எஸ்.பி.முகமது இக்பாலின் மகன் ஜாவீத் இக்பால் நிருபரிடம் கூறியதாவது:–

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களின் தண்டனையை ரத்து செய்தது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். அவருடன் கொல்லப்பட்ட 14 பேர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி வழங்கப்போகிறார்கள். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தான். அதுவும் தமிழர்கள் தானே. சிறையில் இருந்தவர்க ளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில அரசி யல் கட்சியினர், எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? வரும் காலங்களிலாவது நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுக்க அரசியல் கட்சியினர் தயங்க கூடாது. அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையை அரசியல் கட்சிகள் பெற முடியும். இந்த தீர்ப்பை கேட்ட என்னுடைய வயதான தாயார் இன்று (நேற்று) இதை நினைத்து மேலும் வருந்தும் சூழல் தான் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணி யன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப் படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாஜகவின் மற்றொரு தலைவரான 'நவாஸ் ஹுசைன் கூறுகை யில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

கர்நாடக மாநில காங்கிரஸ்

எம்.பி நடிகை ரம்யா

இதேவேளை தமிழக அரசின் இந்த முடிவிற்கு கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான நடிகை ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அந்தக் கொலைச் சம்பவத்தில் ராஜீவ்காந்தி மட்டுமே கொல்லப்படவில்லை. மற்ற பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கி றார்கள். அப்படியிருக்க எப்படி விடுதலை செய்ய முடியும்? என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com