Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கில் அமோக விளைச்சல் தரும் பப்பாசி செய்கை

இன்று தொழில்வாய்ப்பு இல்லை என எத்தனையோ இளைஞர் யுவதிகள் தங்கள் எதிர்காலத்தை கழிக்கின்றனர். அரச வேலை செய்தால் மட்டும்தான் உயர்வானது, கெளரவமானது எனப் பலர் நினைப்பதினாலேதான் தொழில் இன்றி கஷ்டப்படுகின்றனர். அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் மக்களின் வறுமையை விரட்டியடிக்கக் கூடிய வகையில் பல்வேறு சுயதொழில் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அரசின் வழிகாட்டல்கள் மற்றும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றிப் பிடிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் உயர் நிலையை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். சில சோம்பேறிகள் இன்னும் சோம்பேறிகளாகவே காலத்தைக் கழிப்பதையும் காண்கின்றோம்.

இங்கே அரசு வழங்கிய ஒரு சிறிய வாய்ப்பை பெற்றுக்கொண்ட ஒருவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பப்பாசிச் செய்கையில் கொடிகட்டிப் பறக்கின்றார். இன்று மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புக் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப் பழங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. பப்பாசி செய்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் இராசேந்திரன், வடிவேல் ஆகிய இருவரும் கடும் உழைப்பாளிகள்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தின் பிரதான வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இப் பப்பாசி மரங்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகும், நேர்த்தியுமாகவுள்ள இப் பப்பாசித் தோட்டத்திலுள்ள மரங்கள் யாவும் மூன்று அடி, நான்கு அடி உயரத்திலேயே பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றது. 2010ஆம் ஆண்டு விவசாயத்திணைக்களத்தின் ஊடாக மானிய அடிப்படையில் கிடைத்த 100 பப்பாசிக் கன்றுகளை 50 ரூபா படி வாங்கிவந்து முதற்கட்டமாக நாட்டி பப்பாசிச் செய்கையை மேற்கொண்டதன் மூலம். வெற்றிகண்டதாக இராசேந்திரன் கூறினார். மூன்று வருடங்களுக்கு முன்பு பரீட்சாத்தமாக செய்து பார்க்கப்பட்ட பப்பாசிச் செய்கை இன்று மூன்று ஏக்கர் விஸ்தீரணத்தில் இரசாயணக் கலவையற்ற அருஞ்சுவைப் பழங்களை பப்பாசிப் பழங்கள் உற்பத்தி செய்கின்றது.

இங்கு நாட்டப்பட்டுள்ள பப்பாசி மரங்கள் தாய்லாந்தின் ரெட்லேடி இனத்தைச் சேர்ந்தவையாகும் இப் பப்பாசி விதைகளை தற்போது கொழும்பில் இருந்தே கொள்வனவு செய்கின்றனர். 100 கிராம் விதை பருப்பு 8500 ரூபாவிற்கு வாங்குகின்றனர். அவற்றில் இருந்து 500 பப்பாசிக் கன்றுகளே கிடைக்கின்றன. இங்கு (எட்டு) 8 அடிக்கு ஒரு பப்பாசிக் கன்று நாட்டப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் 750 பப்பாசி மரங்களை நட முடியும். இங்கு மூன்று ஏக்கரில் 2000 வரையான மரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பப்பாசி விதைகளை நட்டு மூன்று மாத காலத்திற்குள் அவை பூத்துக் காய்க்கத் தொடங்கிவிடுகின்றன. பின்னர் ஆறு மாதத்தில் இருந்து பப்பாசி பழம் கிடைக்கத் தொடங்குகின்றது. சிறந்த முறையில் பப்பாசித் தோட்டத்தை பராமரித்தால் மூன்று வருடங்கள் வரை பயன் பெறலாம் எனச் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் மருந்து வகைகளைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை சேதனைப் பசளைகளைக் கொண்டு வளர்க்கப்படும். இப்பப்பாசி மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் மிகவும் சுவையானதாகவுள்ளது. ஒரு சிறிய பப்பாசி மரத்தில் 30 தொடக்கம் 46 வரையான பழங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பழமும் 1 1/2 கிலோ தொடக்கம் 3 1/2 கிலோகிராம் வரை எடை கொண்டதாக உள்ளது.

இத்தொழிலினை விருத்தி செய்வதற்கு வங்கிகளில் மானிய அடிப்படையில் அல்லது குறைந்த வட்டி வீதத்தில் தமக்கு கடன் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் பட்சத்தில் இது இவ்வாறு புது முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரக் கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் ஒரு சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் அத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை என்பது கடந்த கால வரலாறு ஆகும். ஆனால் தற்போது மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் விவசாயிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் அபிவிருத்தியின் பயனை நேரடியாக அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்கை பண்ணப்பட்டுள்ள பப்பாசித் தோட்டச் செய்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய இடங்களில் விஸ்தரிப்பதற்கும், புதுக்குடியிருப்பு கிராமத்தில் இத்தொழிலில் ஈடுபடுவோருக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com