Contact us at: sooddram@gmail.com

 

ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வை அடிப்படையாகக் கொண்டு காய் நகர்த்தும் சக்திகள்

சந்தர்ப்பவாதம் என்பது சந்தர்ப்பத் திற்கு ஏற்ற வகையில் நடந்து தனக் கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அனுகூலத்தைப் பெற்று தருவது என்று பொ ருள்படும். இருந்த போதிலும் சந்தர்ப்பவாதம் ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடிய செய லென்று பலர் கூறுவர். நாம் எப்போதும் எமது நடத்தை, கொள்கை மற்றும் அன்றாட செயற்பாடுகளில் நேர்த்தியான வழிகாட்டல் களை பின்பற்ற வேண்டும். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக் கொள்வது பல சந்தர்ப்பங்களில் பொருத்தமாக இருக்காது.

இதனை அநுபவவாயிலாக பலர் நிரூபித்துள் ளனர். அத்தகைய ஒரு நிலைமையே இல ங்கை வாழ் மக்களும் தற்சமயம் எதிர் கொ ண்டுள்ளனர். சந்தர்ப்பம் வரும் வரை காத் திருந்து. பழி வாங்குகின்ற சில சக்திகள் ஒருபுறம், நாட்டை சீரழிப்பதற்கு முயற்சிக் கின்ற சக்திகள் மறுபுறம், தமக்கு விருப்ப மான முறையில் நாட்டை ஆட்டிப்படைப் பதற்கு அதன் தலைமைத்துவத்தை மாற்று வதற்கு முயற்சிக்கின்ற சக்திகள் இன்னொரு புறம். இவை எல்லாம் சந்தர்ப்பவாத சக்தி களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்கள் தமது உரி மைகளுக்காக போராட்டங்களை நடத்தியது உண்மை. ஆனால், பிற்காலத்தில் அந்தப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாற்றம் பெற்று, பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனால் வெளிநாடு சென்றவர்கள் பலர். அத்தகைய தமிழ் மக்களையும் அவர்களின் வழித்தோன்றல்களையும் புலம்பெயர் தமிழ ர்கள் என்று கூறுவார்கள்.

83ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட பாதிப்பை மனதில் வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் அனைவரையும் வெறுப்புடன் பார்கின்ற ஒரு குழுவினர் இன் றும் புலம்பெயர் தமிழ் மக்களில் காணப் படுகின்றனர். அத்தகையவர்கள் ஒருவி டயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 83ம் ஆண்டு இனக்கலவரம் இடம்பெறும் பொழுது ஆட்சியிலிருந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன அந்தக் காலத்தில் ஜனாதிபதியாக இருந் தார். உண்மையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரா கவே புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். அதேவேளை, ஆட்சிப் பீடம் ஏறும் சிங்கள தலைவர்கள் அனைவரும் ஒரே விதமாக தமிழ் மக்களை பார்க் கின்றனர் என்ற கோட்பாடு முற்றிலும் பிழை யானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிமுறை வேறு. பிரேமதாஸவின் ஆட்சிமுறை வேறு.

அதேபோன்று சந்திரிகா அம்மையாரின் ஆட்சிமுறை வேறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முறை வேறு. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு ஜே.ஆர் ஆட்சியிலும் சரி பிரேமதாஸ ஆட்சியிலும் சரி, சந்திரிகா ஆட்சியி லும் சரி எந்தவித விடிவும் கிடைக்கவில்லை. சமகாலத்தில் நாட்டுத் தலைவராக இருக் கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை பிரச் சினையை தீர்த்து வைத்துள்ளார்.

சர்வதேச சமூகம் என்பது என்ன? அவர்க ளுக்கு இலங்கை வாழ் மக்கள் பற்றி என்ன அக்கறை இருக்கிறது?

சர்வதேச சமூகம் என்ற பெயரில் பல குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது இலங்கை மீது முன்வைத்து, தமது சொந்த தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முயற்சிக் கின்றன. இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், அங்கு ஒன்றும் இல்லை. இவர்கள் தமிழ் மக்களின் அநுதாபிகள் என்ற பெயரிலேயே இந்த லீலைகளை மேற்கொள்கின்றனர்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இவர்களின் முயற் சியால் தமிழ்மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.

எதிர்க்கட்சியினரும் இந்த நாட்டின் துரித அபிவிருத் தியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் கூட, தற் போது ஏற்பட்டுள்ள சமா தான சூழலை ஏற்றுக்கொ ண்டுள்ளனர்.

ஜெனிவா - மனித உரிமை பேரவை அமர்வு மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்ட போவதில்லை.

யுத்தம் முடிவடைந்து கடந்த 4 வருடங் களில் நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழலிலும் தமிழ் மக்களுக்கு வேறு சில பிரச்சினைகள் இருப்பின் அவற்றை ஓருபோதும் ஜெனிவா - மனித உரிமை பேரவை அமர்வு தீர்த்து வைக்கப்போவதில்லை என்பதை யாழ்ப்பா ணத்தில் வீதியோரத்தில் குப்பை கொட்டும் வயோதிப தொழிலாளிக்கும் நன்கு தெரியும்.

பின் வாங்கியது பிரித்தானியா இலங்கை க்கு எதிரான யோசனை இல்லை அண் மைக்காலமாக பெரிதும் அலட்டிக்கொண்டு இருந்த, பிரித்தானியா கூட இலங்கையின் யதார்த்த நிலை உணர்ந்து, இலங்கைக்கு எதிராக அனாவசிய அழுத்தங்களை பிரயோ கிக்க கூடாது முன்கூட்டியே புரிந்து கொ ண்டமை ஓரளவு திருப்தியளிக்கும் விடய மாகும். எதிர்வரும் nஜனிவா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா இலங் கைக்கு எதிராக எவ்வித யோசனை வரை பையும் சமர்ப்பிக்காது என்று, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவ லகம் உறுதியளித்துள்ளது.

பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் களிடம் இந்த உறுதியை குறித்த அலுவல கம் வழங்கியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கை கள் இடம்பெறுகின்றன. எனினும் அவை மிகவும் மந்தக்கதியில் இடம்பெற்றுக் கொண் டிருக்கின்றன.

எனினும் இலங்கைக்கு எதிராக எவ்வித யோசனைகளையும் பிரித்தானியா சமர்ப்பிக் காது என்று கன்சவேட்டிவ் கட்சியின் இல ங்கை நண்பர்களின் தலைவர் லயனல் சமரசிங்க தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பிரித் தானியாவில் வாழும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவினர் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநல வாய அலுவலகத்தை சந்தித்து பேச்சு நடத்தினர்.இதன்போது இலங்கைக்கு எதிராக பயண தடைகளை விதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழு கோரி யிருந்தது.

இந்தநிலையிலேயே கன்சவேட்டிவ் இலங் கையின் நண்பர்கள் பொதுநலவாய அலு வலக அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

எனவே சில விடயங்கள் தொடர்பாக, எவ் வளவுதான் பொய் பிரசாரம் செய்தாலும் அவை பலனளிக்காது. நேர்மையான செயல் பாடுகளை ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாது.

யுத்தம் முடிவுக்கு வந்ததனால், உண்மை யில் பாரிய நன்மை அடைந்தவர்கள் தமிழர்களே. இத்தணை காலமும் மேற்கொ ண்ட போராட்டங்கள் வீணாகிப்போய் விட்ட னவே, இனி தமிழ் மக்களின் ஆழமான பிரச்சினைகளை யார் புரிந்து தீர்த்து வைப் பார்கள் என்ற அங்கலாய்ப்புடன் தமிழ் மக் கள் இருப்பார்களாயின், அவர்களுக்கு ஒரு தெளிவான பதிலையும் அரசாங்கம் வழங்கி யுள்ளது. பிரச்சினை தீர்வுக்காக உருவாக் கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்று தமது நேர்மையான தேவைகளை முன்வைப்பதாகும்.

அதனை விடுத்து உள்நாட்டில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது, சர்வதேசம் பக்கம் திரும்ப வேண்டும் என்று சில கடும்போக்குவாத தமிழ் தரப்புகள் கூறுமாயின், அது மீண்டும் பிரச்சினையை, இழுத் தடிப்பதற்கான மற்றும் ஒரு பிழையான அணு குமுறை என்றே கருத வேண்டியிருக்கிறது.

சம்பந்தன் ஏள விக்னேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் அண்மையில் இந்தியாவுக்கு சென்று "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய மாநில மாதிரியான தீர்வே பொருத் தமானது" என்று கூறியுள்ளார்.அதே வேளை, தமிழ் மக்களுக்கு 100 க்கு 100 வீதமான அதிகார பகிர்வு அவசியமில்லை. அதனை விட குறைவான தீர்வு போதுமானது என்று வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னே ஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப் பத்தில் மட்டும் திரு விக்னேஸ்வரன் கள நிலவரம் மற்றும் யதார்த்த நிலையை உண ர்ந்து கருத்து தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திரு சம்பந்தன் அவர்களைவிட திரு விக் னேஸ்வரனின் கூற்று, சமகாலத்திற்கு பொ ருத்தமானது. சாத்தியப்படக்கூடிய ஒன்றாகும். இதனை பெரும்பாலான தமிழ், சிங்கள சமூ கப்பிரதிநிதிகள் வரவேற்கின்றனர்.

பிரச்சினை தீர்விற்கான அணுகுமுறையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும்

தமிழர் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம், பல முயற்சிகளை மேற்கொண்டது என்பது உண்மை. சில சந்தர்ப்பங்களில் இந்த செய ல்பாடுகள் மந்த கதியில் மேற்கொள் ளப்படுகின்றன என்ற முறைப்பாடும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு ஏற்படுவ தற்கும் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்தி களே காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.நல்லிணக்க செயல்பா டுகளை முன்னெடுத்துச் செல்வதில் ஜனாதி பதிக்கும் அரசாங்கத்திற்கும் கூடுதல் ஆர் வம் உண்டு என்பது பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சில தென் பகுதி சிங்கள கடும்போக்குவாத சக்திகளையும் சமாளித்து கொண்டு, அரசாங்கம் சில முன்னேற்றங்களை கண்டிருப்பது பாராட்டுக் குரியது. இதனை தொடர்ந்தும் அடிமட்டத் தில் முன்னெடுத்து செல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

நல்லிணக்க ஆணைக்குழு பல சிபார்சுகளை முன் வைத்துள்ளது. அவற்றுள் சிலவற்றை , நல்லிணக்க ஆணைக்குழுவின் உத்தியோபூர்வ இணைத்தளத்தில் இருந்து பெற்று, இங்கு ஆவணப்படுத்தியுள்ளோம் , உங்கள் கவனத்திற்கு.

இதில் மொழி தொடர்பான சிபாரிசுகள் முக்கியமானவை. தமிழர் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று மொழிப் பிரச்சினையாகும். அதனை உணர்ந்து, ஆணைக்குழு அதனை முக்கிய காரணியாக இங்கு காண்பித்திருப்பது பாராட்டுக்குரி யதே. தமிழ் சமூகம் மொழிக்கு முக்கியத் துவம் வழங்கும் ஒரு சமூகமாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக, நாட்டின் பல பொது இடங்களில் தமிழ் மொழிபெயர்ப் புக்கள் பிழையாக அமைந்துள்ளன. இவை முன்னர் இருந்தே தெரிவிக்கப்பட்ட ஒரு முக் கிய குற்றச்சாட்டாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பொருத்தமான பரிந்துரைகளை மட்டும் கீழே தந்துள்ளோம். மொழி அமுலாக்கல் - நல்லி ணக்க ஆணைக்குழுவின் மற்றுமொரு முக் கிய சிபார்சு

9.246

எந்தவொரு மாவட்ட மும் அல்லது மாகாண மும் மொழியின் அடிப்ப டைகளில் வகைப்படுத் தப்படுதல் கூடாது. அரச சேவைகளிலுள்ள உத்தியோகத்தர்கள் நாட்டின் எந்தப் பாகத் திலும் சேவையாற்று வதற்கான மொழித் தேர்ச்சியைக் கொண்டிருத்தல் வேண்டும்.

9.247

அனைத்து அரசாங்க அலுவலகங்களும் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை எல்லா

வேளைகளிலும் கொண்டிருப்பதை கட்டாய மாக்குதல் வேண்டும். பொலிஸ் நிலையங்க ளைப் பொறுத்த வரை அவை, இரு மொழித் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களை 24 மணித்தியாலங்களும் கொண்டிருத்தல் வேண்டும்.

முறைப்பாட்டாளர் ஒருவர் தனக்கு விரும்பிய மொழியில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

9.248

உத்தியோக பூர்வ மொழிகள் ஆணைக்குழு அதிகார மையப்படுத்தப்பட்டதாகவும் மற்றும்

கொழும்பைத் தளமாகவும் கொண்டு அமைந்துள்ளதினால் கிராமப்புற மக்களால்

இலகுவாக அணுகப்பட முடியாததாகவுள்ளது. மொழி ஆணைக்குழு அமுல்படுத்துதலிற்கு

பயனுறுதியான அதிகாரங்களைக் கொண்டவொரு அதிகாரமாகவும், மற்றும் அனைத்து

மாகாணங்களிலும் கிளைகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.

9.249

மொழிரீதியான தடைகளைக் கடப்பதற்கான ஓர் சாதனமாக தகவல் தொழில்நுட்பத்தைப்

பயன்படுத்துவதற்கு கூடுதலான கவனம் செலுத்தப்படல் வேண்டும். இந்த

நோக்கத்திற்காக, ஓர் தற்காலிக முறையாக, நீண்டகாலக் கொள்கைகள் மற்றும்

செயல்முறைகள் பயனுறும் வரை, ஒரு மொழியிலிருந்து மற்றைய மொழிக்கு

மொழிபெயர்ப்பு செய்வதற்கான மென்பொருள் செய்நிரல்கள் பயன்படுத்தப்படலாம்.

9.256

ஒரு மும்மொழி கொள்கைக்கு பயனுறுதி அளிப்பதில், வேறுபட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சாத்தியமான வரைக்கும் இடைச் செயற்பாடுடையதாக இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படல் வேண்டும். நடைமுறைச் சாத்தியமான வரை, ஒரே வகுப்பறையிலேயே இடைச் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும், வௌ;வேறான மொழிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்காக அவர்கள் வேறுபட்ட வகுப்பறைகளுக்கு பிரிந்து செல்ல முடியுமாக இருத்தல் வேண்டும்.

9.257

அனைத்து மூன்று மொழிகளிலும் வழங்கப்படும் கற்கை நெறிகளின் ஒரு தெரிவுடன்

இனரீதியாக கலப்புக் கொண்ட மாணவர் தொகைகளை அரச பல்கலைக்கழகங்கள்

கொண்டிருப்பதை உறுதிசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

அண்மைக் காலம் வரை, தமிழ் பேசும் பல்கலைக்கழக மாணவர்களில்

பெரும்பாலானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களிற்கும், அதே போன்று

சிங்கள மொழி பேசும் பட்டதாரி மாணவர்கள் தெற்கிலுள்ள பல்கலைக் கழகங்களிற்குமே

வரையறுக்கப்பட்டவர்களாக இருக்கக் காணப்பட்டது.

9.258

நல்லிணக்கச் செயன்முறைகளில் அத்தியாவசியமான வௌ;வேறுபட்ட சமூகங்களைச்

சேர்ந்த மக்களிடையேயான தனிப்பட்ட தொடர்புகளை விளையாட்டுகள் கட்டியெழுப்பு

கின்றன என ஆணைக்குழு கருதுகின்றது. இந்தக் கருத்திற்கமைவாக, மாகாண

மட்டங்களிலான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுவதற்கும் மற்றும் நாடு

முழுவதிலுமாக, விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கில் முக்கியமான தேசிய

விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுவதற்கும் ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

புலம்பெயரந்தவர்கள்.

9.259

சில 'புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள்' நல்லிணக்கச் செயன்முறைகளை பரந்து

பட்டதாக்குவதற்கு ஆக்க பூர்வமான வகையில் பங்களிப்பதற்கு நாடும் அதேவேளை,

ஏனைய சில புலம்பெயர் குழுக்கள், விசேடமாக, தமழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை

ஆதரிப்பவர்களாக கூறப்படுகின்றவர்கள், ஓர் பாதகமான அணகுமுறையைக்

கடைப்பிடிப்பதற்கு காணப்பட்டனர்.

9.260

இந்த 'விரோதப் போக்குக் கொண்ட புலம்பெயர்ந்தவர்கள்" நல்லிணக்கம் நோக்கிய

இலங்கையின் உண்மையான முயற்சிகளை அநேகம் பாழ்படுத்தலாம் என ஆணைக்

குழுவிற்கு தெளிவாகின்றது. ஆதலால், அரசாங்கம் சம்பந்தப்பட்ட அக்கறை கொண்ட

செயற்பாட்டாளரகளுடன், விசேடமாக சிவில் சமூகங்களுடன் இணைந்து சாத்தியமான

நாடு கடந்து வாழும் சமூகத்தின் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு விரிவான

அணுகுமுறையை உருவாக்குதல் வேண்டுமென, ஆணைக்குழு உணர்கின்றது.

மொழிபெயர்ப்பில் உள்ள சில முக்கிய குறைபாடுகளில் இரண்டை, கீழே காண்பித்துள்ளோம்.

இத்தகைய குறைபாடுகள் நாட்டின் பல பொது இடங்களில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பிழைகளுக்காக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நானயக்கார மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் அது மட்டும் போதாது. கீழே உள்ள பிழைகள் பார தூரமானவை. இத்தகைய பிழைகள் எதிர்காலத்தில் இடம்பெறாது தவிர்த்தல் வேண்டும். அதே வேளை பிழை செய்தவர்கள் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

தமிழ் தெரியாதவர்களை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்துவது தவறு. தமிழ் பேசத் தெரியும் , தமிழ் தெரியும் என்று கூறி மொழிபெயர்ப்பில் ஈடுபட முயற்சிப்பவர்கள் முறையாக பரீட்சிக்கப்படல் வேண்டும்.

இங்கு தமிழ் மொழிபெயர்ப்பில் "தாய்மாருக்காக" என்பதற்கு பதிலாக "நாய்மார்களுக்காக" என எழுதப்பட்டுள்ளது.

இது பாரதூரமான குற்றமாகும்.

ஆத்துடன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக ஒதுக்கப்பட்டுன்னது என எழுதப்பட்டுள்ளது.

மேலும் தமிழில் மட்டுமா பிழை உண்டு. ஆங்கிலத்திலும் உண்டு.

RESERVED என்பதற்கு பதிலாக RESERRVED என்றும் எழுதப்பட்டுள்ளது.

The only Tamil

இங்கு "தேசிய நூதனசாலை" என்பதற்கு பதிலாக முற்றிலும் தவறான அகராதியில் இல்லாத ஒரு சொல் எழுதப்பட்டுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இத்தகைய மொழி தவறுகள் தமது வேதனையை மேலும் தீவிரமடையச்செய்யும். இவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்தால் பாரிய சமூக முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

தமிழ் மொழி ஒரு தேசிய மொழி என்ற வகையில் அதற்கான உரிய கௌரவம் வழங்கப்படல் வேண்டும். மொழி மீது பற்றுக்கொண்டவர்களை பணியில் அமர்த்தவேண்டும். ஆளணி பற்றாக்குறை இருக்கிறது என்ற காரணத்தை தொடர்ந்தும் முன்வைப்பதை தவிர்த்து, ஆக்கபூர்வமான மாற்றங்கள் மொழிபெயர்ப்பில் ஏற்படவேண்டும். ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும.நாட்டில் பல திறமையான தமிழ் மொழி ஆர்வலர்கள் உள்ளனர்.சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். ஆவர்களை தேடி பிடித்து பணியில் அமர்த்துவது உரிய அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யும்பொழுதே, நாட்டில் மொழி ரீதியான உண்மையான புரிந்துணர்வு ஏற்படும்.இது விடயம் தெர்hபில் நீங்கள் கருத்து கூற விரும்பினால் மின்னஞ்சல மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

ஜயரஞ்சன்

யோகராஜ்

சிரேஷ்ட

ஊடகவியலாளர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com