Contact us at: sooddram@gmail.com

 

மகிந்த ராஜபக்ஸவின் பிரமிப்பூட்டும் சரிவு மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் அதிசயிக்கத்தக்க எழுச்சி

(கேணல் ஹரிஹரன்)

சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் நம்பிக்கையை பொய்யாக்கியதுடன், அவருடைய நீண்டநாள் சகபாடியும் முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய மைத்திரிபால சிறிசேனவினால் அவர் தோற்கடிக்கப் பட்டார். தேர்தல் பேரணிகளில் மகிந்த தெரிவித்தபடி “தெரிந்த பிசாசு” ஆகிய ராஜபக்ஸவினைவிட தெரியாத தேவைதையாகிய சிறிசேனவையே மக்கள் விரும்பியிருக்கிறார்கள். மக்களின் ஆணையை மூன்றாவது தவணையும் வெல்ல முடியும் என்கிற மிகுந்த நம்பிக்கையில், ராஜபக்ஸ தனது இரண்டாவது தவணைக் காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தேர்தல்களை நடத்த அறிவிப்புச் செய்தார். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (எஸ.எல்.எப்.பி) பொதுச் செயலாளரான சிறிசேன, தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட அன்று மாலையே அவருக்கு ஒரு சவாலாக உதயமானார்.

உத்தியோகபூர்வ முடிவுகளின்படி மைத்திரிபால சிறிசேன 3.7 விகித பெரும்பான்மையால் மிகவும் தந்திரசாலியான மகிந்த ராஜபக்ஸவினை வென்றார், மற்றும் மொத்த 121 மில்லியன் வாக்குகளில் 51..38 விகித வாக்குகளை விருப்புரிமையாகப் பெற்றுக் கொண்டார்.
2005ல் ராஜபக்ஸ, தனது போட்டியாளரான ரணில் விக்கிரமசிங்கவைவிட மிகக் குறைந்தளவிலான 1.86 விகித பெரும்பான்மையான வாக்குகளை சுவீகரித்து ஜனாதிபதியானதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் குறைவான செயல்திறனாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு தசாப்தத்துக்குப் பிறகு ஏராளமான நிறைவேற்று அதிகாரங்களுடன் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி என்கிற தோரணையில் ராஜபக்ஸ தேர்தலுக்குச் சென்றார்.

2009ல், ஈழப் போரில் அவர் சம்பாதித்த வெற்றியை, தனது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (யு.பி.ஏப்.ஏ) பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறவும் மற்றும் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக வருவதற்கு 2010ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கணிசமான வெற்றியை பெறுவதற்கும் கூடப் பயன்படுத்தினார்.
இந்த முன்னேற்றங்கள் இருப்பினும், ராஜபக்ஸ வழி மாறிச் செல்வதாக தோன்றியதால் இந்த தேர்தலில் அவர் ஜனாதிபதி பதவியை இழக்க நேரிட்டது. அனால் அவரது தேர்தல் தோல்வி பற்றிய விவாதத்துக்கான முக்கிய காரணம், அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் மக்கள், குறிப்பாக பெருமளவு சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்ததேயாகும்.

இரண்டு பாரிய பிறழ்ச்சிகள் - ராஜபக்ஸ குடும்பத்தினரது கைகளில் ஆட்சியின் பலம் சென்றது மற்றும் நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது – அவரது இரண்டாவது தவணைக் கால ஆட்சியில் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. 2010 முதல், தனது அதிகார அடித்தளத்தை உறுதியாக்குவதற்காக அவர் தனது பாராளுமன்ற பலத்தைப் பயன்படுத்தினார். அந்த நடவடிக்கையில், நீதிச்சேவை,தேர்தல் ஆணையம், போன்ற தேசிய நிறுவனங்களில் இடம்பெறும் நியமனங்களில் பாராளுமன்றத்துக்கு ஒரு பங்கினை வழங்குவதுடன்; ஜனாதிபதியை மிகவும் பொறுப்புடமையானவராகவும் ஆக்கும் அரசியலமைப்பின் 17வது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் 18வது திருத்தத்தை நிறைவேற்றவும் அவர் அதனைக் கையாண்டார். ஆனால் 18வது திருத்தம் இச்சேவைகளுக்கான உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அளவுக்கு மீறிய அதிகாரத்தை மேலதிகமாக வழங்கியதால் மோசமான ஆட்சி காரணமாக ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்த முடியாதவரானார்.

சீனாவின் இருப்பு

பொதுவாக பல பிரமாண்டமான திட்டங்கள், அம்பாந்தோட்ட துறைமுகம் மற்றும் விமானநிலைய கட்டிடத் தொகுதிகள் மற்றும் கொழும்பு துறைமுக அபிவிருத்தி போன்றவை சீனாவின் கடும் வட்டி வசூலிக்கும் கடன்கள் மூலமாகப் பெற்ற நிதியுதவியுடன் மேற்கொள்ளப் பட்டதுடன் அவற்றை சீன ஒப்பந்தக்காரர்களே நிறைவேற்றினார்கள். அவற்றில் திறந்த ஒப்பந்தக் கேள்விகள் இல்லாததால் முழு நடவடிக்கையுமே வெளிப்படைத் தன்மை குறைவானதாக இருந்தது. மேலும் அரச துறைகளிலும் பரவலான ஊழல்கள் நடத்தி அரச கஜானாவை வடிகட்டியதாக தகவல்கள்; தெரிவிக்கின்றன.

ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் எதிரணியின் முயற்சிகளால் பயன் ஏற்படவில்லை. மாறாக அவர்களது ஊக்கத்தை தடுப்பதற்கு அடிக்கடி மிரட்டல்களும் மற்றும் அச்சுறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்துக்கு எதிர்க்கட்சியான ஐதேக வினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அம்பாந்தோட்ட திட்டங்களில் இடம்பெற்ற ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை பார்வையிடச் சென்றபோது, எஸ்.எல்.எப்.பி உதவி மேயரினால் பகிரங்கமாக துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அப்படியான விடயங்களில் இலஞ்ச ஆணைக்குழு மற்றும் காவல்துறை என்பன உடனடி கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு செயலற்றவர்களாக இருந்தனர். இந்த பிறழ்ச்சிகளைப் பற்றி குறையாக எழுதிய ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும்வரை வேட்டையாடப் பட்டார்கள். காவல்துறையினருக்குப் பதிலாக இராணுவமே தொழிற்சங்க எதிர்ப்புகள் மற்றும் ஏனைய குடிசார் செயற்பாடுகளை கையாண்டதால்,பொதுமக்கள் விவகாரங்களில் அதிகரித்த இராணுவமயமாக்கல் அடையாளம் காணப்பட்டது.

ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்களான பசில் மற்றும் கோட்டபாயா ஆகியோர், முறையே பொருளாதார அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளார் ஆக இருந்தார்கள், பெரும்பான்மையான அரசாங்க முடிவுகளில் இவர்களின் ஆணையே செல்வாக்கு செலுத்தியதாகத் தோன்றியது.

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் பெரும்பாலும் வழி நடத்தப்படும் குண்டர்கள் மற்றும் ஆளும் கட்சி அடியாட்கள் பெரும்பாலான குற்றவியல் வழக்குகள் மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் சுயாதீன ஊடகங்களை அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். தேர்தலுக்கு முந்தைய காலங்களிலும் இது நிறுத்தப்படவில்லை. ஆளும்கட்சி அடியாட்கள் முன்னாள் ஜனாதிபதியும் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட எஸ்.எல்.எப்.பி தலைவருமான சந்திரிகா குமாரதுங்கவின் வீட்டை தாக்கியதுடன் சிறிசேன மற்றும் ஐதேக தேர்தல் அலுவலகங்களையும் தாக்கினார்கள். நீதிக்கும் மற்றும் சுதந்திரத்திற்குமான தேர்தலுக்கான பிரச்சாரசபை தேர்தல் தொடர்பான வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகளில் ஒரு சாதனையாக வன்முறை குறைவான 500 தேர்தல் முறைப்பாடுகள் உட்பட 574 முறைப்பாடுகளைப் பெற்றிருந்தது. அவற்றில் 47 வழக்குகள் தேர்தல் வன்முறை தொடர்பாக தொடரப்பட்டுள்ளது, 16 சம்பவங்கள் சுடுகலன்களைப் பயன்படுத்தியது தொடர்பானது.

ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள்

ஒட்டு மொத்தமாக ராஜபக்ஸ குடும்பத்தின் மகத்தான செல்வாக்கு மற்றும் அதன் ஆணவம் என்பன அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டது, சிறிசேன போன்ற அநேக எஸ்.எல்.எப்.பி தலைவர்களை தனிமைப் படுத்தியது, முடிவுகளை மேற்கொள்வதில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். தனது குழுவை வழி நடத்துவதில் தோல்விகண்டதுடன் புகழ்பெற்றிருந்த ராஜபக்ஸவின் பொதுவான தோற்றமும் சரிவடையத் தொடங்கியது, அநேகமாக இதன் காரணமாக விரக்தி நிலையிலிருந்த சிறிசேன மற்றும் கிட்டத்தட்ட 26பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான யு.பி.எப்.ஏ மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்க்கட்சிக்குத் தாவினார்கள்.

இது சந்திரிகா பண்டாரநாயக்காவின் விசுவாசிகளுக்கு ஜனாதிபதிக்கு எதிராக போட்டியிடுமாறு சிறிசேனவுக்கு ஊக்கம் கொடுக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. சந்திரிகா, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடனும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனும் கரம் கோர்த்துக் கொண்டார், அவர்கள் தங்களது ஜனாதிபதியாகும் சொந்த இலட்சியத்தை கைவிட்டு சிறிசேனவை பொது எதிரணி வேட்பாளராக களமிறக்கினார்கள்.

ஆச்சரியப்படத் தக்க விதத்தில் கட்சியின் கட்டுப்பாட்டுக்காக கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த ஏனைய ஐதேக தலைவர்களும் இதன் காரணமாக சக்தி பெற்றதாகத் தோன்றியது. சிறிசேனவை பயன்படுத்தி ராஜபக்ஸவை தோற்கடிப்பதுதான் அவர்களது ஒரே இலட்சியமாக இருந்தது. ராஜபக்ஸ மற்றும் யு.பி.எப்.ஏ கூட்டணியின் நீண்ட கால அங்கத்தவரான பௌத்த வலதுசாரிக் கட்சியான ஜாதிக ஹெல உருமய கூட மோசமான ஆட்சி, குடும்ப ஆட்சி; மற்றும் ஊழல் பற்றிய தனது புகார்களுக்கு அவர் திருப்தியான பதிலை வழங்ககாததால், அவர்களும் சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்காக அவரைக் கைவிட்டு வெளியேறினார்கள்.

அவருக்கு பொதுவாகவே ஆதரவு வழங்கிவந்த முஸ்லிம் கூட்டணிகளையும் ராஜபக்ஸ நன்கு கவனிக்கவில்லை. 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட தீவின் சனத்தொகையில் சுமார் 10 விகிதமான முஸ்லிம்கள் ராஜபக்ஸமீது கொண்டிருந்த நம்பிக்கை பௌத்த உதிரிக் குழவினாரால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்க அவர் நடவடிக்கைகள் மேற்கொள்ளாததினால் ஆட்டம் காண ஆரம்பித்தது. அழுத்கமவில் பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகள் விரைவாகவே பேருவலவுக்கு(கொழும்புக்கு அருகில்) 2014 ஜூன் 15ல் பரவியதால் மூன்றுபேர் கொல்லப்பட்டு, 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மற்றும் 200க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகளும் உடமைகளும் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. 2,000க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்கள் ஆனார்கள். இது யு.பி.எப்.ஏ இல் அங்கம் வகித்த இரண்டு பிரதான முஸ்லிம் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவற்றை ஆளும் கூட்டணியுடனான நட்பை துண்டிக்க வைத்தது. சிறிசேனவுக்கு அவர்கள் வழங்கிய ஆதரவு முழு முஸ்லிம் மக்களின் ஆதரவு வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்

ஈழப் போருக்குப் பின்னர் ராஜபக்ஸவுக்கு சவால் விடமுடியாத அதிகார பலம் இருந்தபோதும், சிறுபான்மைத் தமிழர்களின் நீண்டகால மனக்குறையாக உள்ள அரசியல் நடவடிக்கைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலான ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. வட மாகாணசபை தேர்தல்கள் மூலம் மாகாணசபையை கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ), அடிப்படைக் கோரிக்கைகளைக்கூட அவர் நிறைவேற்றவில்லை. சிறிசேன, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தனியான திட்டங்கள் எதனையும் முன்வைக்காத போதிலும் ரி.என்.ஏ ராஜபக்ஸவை அகற்றுவதற்காக சிறிசேனவை ஆதரிக்க தீhமானித்தது, மற்றும் தமிழர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததால் இது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது.

தேர்தல் விஞ்ஞ}பனத்தில் குறிப்பிட்டபடி சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள். சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞ}பனம் ராஜபக்ஸ ஆட்சியின் மூன்று பலவீனங்களை கவனத்தில் கொண்டிருந்தது – ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் ஜனாதிபதியும் அவரது குடும்பமும் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டது என்பனவே அந்த மூன்று விடயங்களும். தற்போதுள்ள சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து அதற்குப் பதிலாக அமைச்சரவை மூலமாக பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் ஒரு அரசியலமைப்பு முறையை ஏற்படுத்தப் போவதாகவும் அதில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

100 நாட்களுக்கிடையில், தான் சகல கட்சியையும் சேர்ந்த தேசிய ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தி 18வது திருத்தத்தை ரத்துச் செய்வதற்காக 19வது திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து அடுத்த ஆறு வருடங்களும் தேசிய நிறுவனங்களை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு சிறிசேன நம்பிக்கை கொண்டுள்ளார்.
இது ஒரு கடினமான திட்டம் ஏனெனில் புதிய ஜனநாயக முன்னணிக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லை. எனினும் யு.பி.எப்.ஏ யில் பிளவுகள் ஏற்பட்டதின் பின்னர் அதன் பலமும் குறைந்துள்ளது. எனவே அடுத்த 100 நாட்களும் சிறிசேன ஒரு கொந்தளிப்பான நேரத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

அவர் வெற்றியடைவாரோ அல்லது இல்லையோ, ராஜபக்ஸவின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதால் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. சிறிசேன விடயங்களை ஜனநாயக முறையில் சரியாக ஒழுங்கு படுத்தி மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
(நன்றி: இந்தியா லீகல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com