Contact us at: sooddram@gmail.com

 

உணர்ந்து உணர்த்தி எல்லைகள் தகர்க்கும் நாடகக் களம்!

“பாலஸ்தீனத்திலிருந்து வந்துள்ள கலைக்குழுவினரோடு நாடகம் பற்றிய கலந்துரையாடல் நடக்கிறது,” என்று அழைப்பு வந்தபோது வழக்கமானதொரு செய்திக்கான நிகழ்வாக இருக்குமென்ற நினைப்போடுதான் சென்றேன். பொங்கல் திருநாளை மறக்க முடியாததாக்கிய அனுபவமாக அது அமைந்தது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், ஆள் நடமாட்டமே இல்லாத அந்த முற்பகல் நேரத்தில், மாறுபட்ட கலை முயற்சிகளுக்கென்றே வடிவமைக்கப்பட்ட ‘ஸ்பேசஸ்’ அரங்க வளாகத்தில் மாறுபட்ட நாடக உணர்வுகள் பரிமாறப்பட்டன. சென்னை கலைக்குழு, மேஜிக் லேன்ட்டர்ன் கலைஞர்களோடு அந்த இருவரும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

கலந்துரையாடல் என்றால் அவரவர் கருத்துகளைச் சொல்ல, அதை பாலஸ்தீன நண்பர்களுக்கும், அவர்கள் சொல்வதை இவர்களுக்குமாக மொழிபெயர்க்கிற ஏற்பாடல்ல. மொழிபெயர்ப்பே தேவைப்படாத, உடல் மொழி வெளிப்பாட்டுப் பயிற்சியாக அது நடந்தது. தமிழகத்தின் முக்கிய நாடக ஆளுமைகளான பேராசிரியர் மு. ராமசாமி, பிரளயன், தில்லி நாடகப் பள்ளி பட்டதாரி ஜானகி உள்ளிட்டோர் எளிய பட்டறை மாணவர்கள் போல ஈடுபட்டிருந்தார்கள். சென்னை கலைக்குழுவின் சாரதி கிருஷ்ணன், மணிசுந்தரம், காளையப்பு, தேசிய ‘பாக்ஸிங்’ சாம்பியன் மெலடி, மேஜிக் லேன்டர்ன் குழுவின் பிரவீன், துரை, ஸ்ரீதர், ஹரிஷ், குமரவேல், தேவநாதன், அருண், சேகர் ஆகியோhரும் பயிற்சிக்களத்தில் இறங்கியிருந்தார்கள். புதியதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வ முனைப்பு இருக்கும் வரையில நாடகக் கலை எக்காலத்திலும் செழித்திருக்கும்.

“ஃபிரீடம் தியேட்டர்” என்ற பாலஸ்தீன நாடக இயக்கத்தைச் சேர்ந்த ஃபைசல், அஹமது இருவரும் தங்களது ஒத்திகை முறைகளை செயல்வடிவில் விளக்கினார்கள். குறிப்பிட்ட காட்சி அல்லது உரையாடலுக்கு நடிகர்கள் எவ்வாறு வினையாற்றுகிறார்கள் அல்லது எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதே பொதுவாக நாடகத்தின் நாடித்துடிப்பைத் தீர்மானிக்கும். அந்த வினை அல்லது எதிர்வினையை இயக்குநர் அல்லது நெறியாளுநர் தனது கற்பனைக்கேற்பச் சொல்வதும், கலைஞர்கள் அதை உள்வாங்கிக்கொண்டு அவரவர் கற்பனைக்கேற்ப சற்று மேம்படுத்திக்கொண்டு வெளிப்படுத்துவதும் பொதுவாக நாமறிந்த ஒத்திகை முறை.

இதுவோ முற்றிலும் வேறுபட்ட முறையில், அந்தக் கலைஞர்களின் சுய முனைப்பாகவே வினையும் எதிர்வினையும் வெளிப்படுகிற ஊற்றாக இருந்தது.
முதல் சுற்றில், தலை முதல் கால் வரையில் உடலின் அங்கங்களை, குறிப்பிட்ட சூழலுக்கேற்ப எந்த நொடியிலும் செயல்படத் தயாராக வைத்திருக்கிற பயிற்சி. பள்ளிக் குழந்தைகள் கை கால்களைத் தூக்கி இறக்குவது போலத்தான் தொடங்கியது. போகப்போக ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் மிக்க செயல்பாட்டுக்கான பயிற்சியாக அது உருவெடுத்தது.

கலைஞர்கள் நடந்துகொண்டே சுற்றி வருகிறார்கள். பயிற்றுநர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று ஒரு எண்ணிக்கையைத் திடீரென அறிவிக்க, அதற்கேற்ப ஒருவர், இருவர், மூவர் அல்லது நால்வர் மட்டுமே தொடர்ந்து நடக்க வேண்டும். மற்றவர்கள் அப்படியே நின்றுவிட வேண்டும். யார் நிற்பது, யார் நடப்பது என்று முதலிலேயே பேசி வைத்துக்கொள்ளக் கூடாது. அந்த நொடியில் தாங்கள் செயல்படுவதோடு, மற்றவர்களையும் கூர்ந்து கவனித்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகத் தெரிந்துகொண்டு வினையாற்ற வேண்டும். உடன் வருகிறவர்கள் நடக்கிறார்கள் என்றால் தான் நின்றுவிட வேண்டும், அவர்கள் நிற்கிறார்கள் என்றால் தான் தொடர்ந்து நடக்க வேண்டும்.
இது எளியதல்ல என்பதை திரும்பத்திரும்ப பல முறை அந்தப் பயிற்சி தேவைப்பட்டதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இறுதியில் அது சாத்தியமானது! பயிற்றுநர் எந்த எண்ணிக்கையைச் சொல்கிறாரோ அத்தனை பேர் மட்டும் தொடர்ந்து நடக்க, மற்றவர்கள் சட்டென அதற்கு ஒத்துழைப்பாக உறைந்து நின்றார்கள்!

சில நிமிட இடைவேளையில் பிஸ்கட், தேநீரோடு இந்த அனுபவம் பற்றிய புரிதல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இரண்டாவது சுற்றில், குறிப்பிட்ட வினைக்கேற்ப எதிர்வினையாற்றுகிற பயிற்சி. சேட், சீஸ், ஃபிரீசர், பொய்ங் என நான்கு குறிப்புகள். ஒருவர் “சேட்” என்று சொல்லி கைகாட்ட, அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் உடனே தனக்கு அடுத்திருப்பவருக்கு அதே குறிப்பை அல்லது வேறு குறிப்பைக் கடத்த வேண்டும். “சீஸ்” என்று சொல்லிக்கொண்டே ஒருவர் தனக்கு நேரெதிரே இருப்பவரை நோக்கிக் கைகாட்டினால், அவர் உடனே வரிசைப்படி அல்லாமல் வேறொருவருக்கு அதே குறிப்பை அல்லது வேறொரு குறிப்பைக் கூற வேண்டும். “பிரீசர்” என்ற குறிப்பு கிடைக்கப்பட்டவர் உறைந்து நின்றபடி வேறொருவருக்கு மற்றொரு குறிப்பைச் சொல்ல வேண்டும். குறிப்பைப் பெறுகிற ஒருவர் “பொய்ங்” என்று அறிவித்து, கைகளையும் கால்களையும் தன் விருப்பப்படி நடன முத்திரையோடு அமைத்து நிற்கிறார் என்றால், உடனே அவருக்குக் குறிப்பனுப்பியவரே மறுபடியும் செயல்பட வேண்டும். அவர் மீண்டும் மற்ற மூன்று குறிப்புகளைச் சொல்லலாம் அல்லது அவரும் நான்காவது குறிப்பையே சொல்லி நடனக் கோலத்தில் நிற்கலாம்.
ஒரு சீரான லயத்திற்கு எல்லா நடிகர்களும் வரும் வரையில் வெகு நேரத்திற்கு இந்தப் பயிற்சி நடைபெற்றது. அதிலிருந்தே இதன் கடினத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. கடின முயற்சியில் ஊறிடும்போது அது கூட்டுச் செயல்பாட்டுக் கலை நேர்த்தியாக வெளிப்படுவது கண்டு நான் “ஃபிரீசர்” ஆகி உட்கார்ந்திருந்தேன்.

மூன்றாவது சுற்றில், நடிகர்கள் பார்வையாளர்களாக அமர்ந்துகொண்டார்கள். நான்கு பேர் மட்டும் நின்றுகொண்டார்கள். பார்வையாளர்களில் ஒருவர் தனது அன்றைய காலை அனுபவம் ஒன்றையும், அதில் தனக்கு என்ன உணர்வு ஏற்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஒருவர் சாலையோர உணவுக் கடை ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார். மையத்தில் இருந்த ஒவ்வொருவரும் அதைத் தங்களது உடல்மொழியால் சித்தரிக்க முயன்றார்கள். அவர்களில் தனது உணர்வுக்கு நெருக்கமாக வந்தவர் யார் என்பதைப் பார்வையாளர் தெரிவித்தார். மையத்தில் இருந்தவர்கள் பார்வையாளர் பகுதிக்குச் செல்ல, வேறு நான்குபேர் மையத்திற்கு வந்தார்கள். ஒரு பார்வையாளர் தனது வீட்டிலேயே நடந்த ஒரு வாக்குவாதத்தைச் சொன்னார். மைய நடிகர்கள் அதைத் தங்களது சைகைகளில் வெளிப்படுத்த முயன்றார்கள். யார் பெருமளவுக்குப் பொருத்தமாக வெளிப்படுத்தினார் என்பதை அந்தப் பார்வையாளர் கூறுகிறார்.

நடிகர்களை ஒரே மாதிரியாகச் செயல்பட வைக்கிற வார்ப்பட ஏற்பாடாக அல்லாமல், சுயேச்சையான உள்வாங்கலுக்கும் வெளிப்பாட்டுக்கும் தூண்டுகிற இந்தப் பயிற்சி முழுமையாக அமையுமானால், முழு நாடகம் எவ்வளவு இயற்கையாக மக்களோடு கலந்திருக்கும் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது. இறுதிச் சுற்று அந்தச் சிந்தனைக்கான உறுதிச் சுற்றாக அமைந்தது. அத்தனை கலைஞர்களும் மையத்தில் கூடி தங்கள் கைகளை ஒன்று சேர்த்து, உரத்த குரலோடு கைகளை மேலே உயர்த்தினார்கள். மக்களிடம் கருத்தைக் கொண்டு செல்கிற கலை இயக்கமே நாடகம் என்ற மொழியற்ற முழக்கமாக அது ஒலித்தது. பொங்கல் நாள் முற்பகல் என்பதால் கடற்கரைக்கு மக்கள் வராததன் ஏக்கத்தோடு இருந்திருக்கக்கூடிய வங்கக்கடல் அலைகள், சற்று உயரமாக எழுந்து, இது என்ன புதிய பேரலை ஓசை என்று வளாகச் சுவருக்கு மேலாக எட்டிப்பார்க்க முயன்றிருக்குமோ?

(Kathiresan, தீக்கதிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com