Contact us at: sooddram@gmail.com

 

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை கண்ணியமாக நடத்த அரசாங்கம் விரும்புகிறது

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இன்னும் பல வாரங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரம் இப்போது இருந்தே படிப்படியாக சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் பல இடங்களில் இருந்த சுவரொட்டிகளை மாநகரசபை ஊழியர்கள் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் காட்சி களைப் பார்த்து, பலர், வேட்பாளர்களின் பிரசாரத்திற்கான சுவ ரொட்டிகளை ஒட்டுவதற்கு இவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக் கிறார்களா என்று, கிண்டல் செய்த சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் சட்டத்திற்கு கீழ் சுவரொட்டிகளை பொது இடங்களில் ஒட்டு வது ஒரு தண்டனைக்குரிய குற்றச்செயலாகும். என்றாலும், அதனை எந்தவொரு கட்சி வேட்பாளரும் இன்று பொருட்படுத்துவதில்லை. இதுவரை காலமும், மக்களின் எஜமானர்களாக இருந்த அரசியல் வாதிகள் இன்று வாக்குவேட்டையில் இறங்கி வேட்பாளர் கதாபாத் திரங்களை ஏற்றிருப்பதால், அவர்கள் மக்களை எஜமானர்களாக்கி, மக்களிடம் கரம்கட்டி சேவகம் செய்யும் ஊழியர்களைப் போன்று, பொது இடங்களில் நடிக்கும் நாடகங்கள் மேடையேறும் நிகழ்வுகள் இப்போது ஆரம்பமாகியுள்ளன.

வாக்குவேட்டையில் ஈடுபடும் இவர்கள் வயோதிபர்களை அரவணைத்தும், சிறுபிள்ளைகளை தூக்கிக் கொஞ்சி விளையாடும் நடிப்புகளிலும் ஈடுபடுவார்கள். வெள்ளத்தினால் நாட்டில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக் கிறது என்ற முறைப்பாடுகளுக்கு பின்னணியில் இந்த தேர்தல் வேட்பாளர்களே இருக்கிறார்கள் என்று அனுபவமிக்க புத்திஜீவி ஒருவர் விசனம் தெரிவித்தார். மக்களுக்கு கரட் கிழங்கை காண் பித்து ஏமாற்றுவதற்காக இந்த வேட்பாளர்கள் கரட் பொதிகளை வாங்கி பதுக்கி வருவதனால் தான், இதற்கு இப்போது நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று, அவர் வாதாடுகிறார்.

இதுபோன்ற கேலி கிண்டல்கள் இன்று, கேலி சித்திரக் கலைஞர் களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. எனவே, நாட்டின் இன்றைய யதார்த்தத்தை உணர்ந்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள சகல கட்சிகளின் வேட்பாளர்களும், மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளை அளித்து, பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை துறந்து உண்மையை பேசி, உண்மையான வாக்குறுதிகளை அளித்து, நேர்மையாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டால், அதனால் நாட்டிற்கும், மக்களுக்கும் இந்த வேட்பாளர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்ற கருத்தை நாம் முன்வைக்க விரும்புகிறோம்.

அரசாங்கக் கட்சி இந்தத் தேர்தலில், தான் பதவியில் இருந்த பல்லாண்டு காலத்தில் ஏற்படுத்திய சாதனைகளை முன்வைத்து மக்களின் வாக்குகளைக் கேட்கின்றது. நாம் பயங்கரவாதத்தை துவம்சம் செய்து நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி, மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துள்ளோம்.

நாட்டில், பொருளாதார வளர்ச்சி அதிகமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இனிமேல் இனங்களிடையே சந்தேகங்களோ ஒற்றுமையின்மையோ என்றுமே ஏற்பட இடமளிக்கமாட்டோம் என்று அரசாங்க கட்சி மக்க ளிடம் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, வாக்குகளை கேட்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியில் இன்று, தலைமைப்பீடத்திற்கு இருந்து வரும் பலத்த போட்டியினாலும், அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் களிடையே இப்போது அதிகரித்துள்ள போட்டி பொறாமை மற்றும் மோதல்கள் காரணமாக இக்கட்சி தேர்தலில் எதனை முன்வைத்து மக்களின் வாக்குகளை கேட்கப்போகிறோம் என்ற தடுமாற்ற நிலை யில் இருப்பது ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு பெரும் வேதனையாக இருக்கிறது.

ஜே.வி.பி. யினர் தங்களுக்கு வாக்குவேட்டைகளை பெறுவதற்கு இனி மேல் சரத் பொன்சேகாவை பயன்படுத்த முடியாது என்ற யதார்த் தத்தை உணர்ந்து, குழப்பம் அடைந்த நிலையில் செய்வதறியாது வேதனையில் மூழ்கியிருக்கின்றனர்.

நகரங்களையும், கிராமங்களையும் அவலட்சணப்படுத்தும் பிரசார சுவ ரொட்டிகளையும், பதாகைளையும் பொது இடங்களில் வைப்பதற் காக செலவிடும் பணத்தை இந்த வேட்பாளர்கள், ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். தங்கள் சொந்த கட்சிக் குள்ளேயே விருப்பு வாக்குகளுக்காக கழுத்தறுப்புக்கள், மோதல் களில் ஈடுபடுவதையும் இந்த வேட்பாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தத் தடவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மிகவும் அமைதியாக வன்முறைகளின்றி, நடத் தப்பட வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டுள்ளார். எனவே, அரசாங்க கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமன்றி, எதிர்க் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் ஜனநாயக பாரம்பரிய சம்பிர தாயங்கள் நாட்டில், தழைத்தோங்க வேண்டுமாயின் நேர்மையான, ஊழல்கள் அற்ற முறையில் தேர்தலை வெற்றிகரமான முறையில் நடத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளிப்பது அவசியமாகும்.

1956 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையில் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல்களோ உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோ வன்முறைகளற்ற நேர்மையான முறையில் நடத்தப்பட்டன இன்று, எங்கள் ஜனாதிபதி அறிமுகம் செய்துவரும் புதிய அரசியல் கலாசாரம், அந்த பழைய சம்பிரதாயங்களுக்கு புத்துயிர் அளித்து அதனை மறுமலர்ச்சியடையச் செய்வதற்கு சிறந்த அடித்தளத்தை அமைத்திருகின்றது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com