Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயகத்துக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை

இளைஞர் மற்றும் மாணவர்களின் உலக விழாவுக்கான இலங்கை தேசிய தயாரிப்புக் கமிட்டியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கலாநிதி ஜீ. வீரசிங்க தினகரனுக்கு அளித்த பேட்டி

கே. : இளைஞர் மற்றும் மாணவர்கள் உலக விழாவின் நோக்கம் என்ன, அது எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது?

ப. : இளைஞர் மற்றும் மாணவர்கள் உலக விழாவைப் பற்றி கூறுவதானால் இரண்டாவது உலக யுத்தத்தின் இறுதிக்கு செல்ல வேண்டும். அந்த விழாவை ஜனநாயக இளைஞர்களின் உலக ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஒன்றியம் 1945 நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் குறிப்பிடத்தக்கவொரு வருடமாகும்.

முழு உலகையும் தமது பிடிக்குள் கொண்டுவர நாஸி ஜெர்மனியும் பாசிசவாத இத்தாலி மற்றும் ஜப்பானும் எடுத்த முயற்சி சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவினால் அந்த வருடம் தான் தோற்கடிக்கப்பட்டது.

அந்த வெற்றிதான் மே 9 ஆகும். யுத்தத்தில் தோல்வியுற்றதை ஏற்றுக்கொண்டு நாஸிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுக் கொடுத்தது அன்றைய தினம்தான். நாஸி – பாசிசவாததுக்கு எதிரான மக்கள் வெற்றியின் 65 ஆவது நிறைவை முழு உலகமும் கடந்த வருடம் கொண்டாடியது.

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் உலகில் எந்தவொரு யுத்தமும் ஏற்படக்கூடாது என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இந்த நோக்கத்துடன் பல சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகளில் ஒன்று இளைஞர் மற்றும் மாணவர்களின் உலக விழா ஆகும். இரு பிரதான நோக்கங்களுக்கமைய இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் முதலாவது உலக அமைதியையும் ஒருமைப்பாட்டையும் தொடர்ந்து பேணுதல், இரண்டாவது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுதல். அந்த காலகட்டத்தில் முழு உலகும் ஒரு சில ஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலேயே இருந்தது. அதனால் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அச்சமயம் பிரதான போராட்டமாக இருந்தது.

மாணவர்களின் சர்வதேச சங்கம் என்ற மற்றொரு அமைப்பு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளும் சேர்ந்துதான் இந்த விழா நடவடிக்கைகளை ஆரம்பித்தன. முதலாவது இளைஞர் மற்றும் மாணவர்கள் உலக விழா செக்கோஸ்லோவேகியாவின் பிராக் நகரில் 1947 இல் நடத்தப்பட்டது. அது முதல் உலகில் வெவ்வேறு இடங்களில் இது போன்ற 16 உலக விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த உலக விழாக்கள் அனைத்திலும் இலங்கை பங்குபற்றியுள்ளது. இந்த விழா பிடெல் கெஸ்ட்ரோ மற்றும் மடிபா நெல்சன் மண்டேலா ஆகிய இரு நாயகர்களின் போராட்டம் மற்றும் பரம்பரைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

எனினும் சோவியத் யூனியனினதும் மற்றும் ஐரோப்பாவில் சில சோசலிஷ நாடுகளினதும் வீழ்ச்சி, விழா நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த பின்னடைவுக்கு முன்னர் இறுதியாக நடந்த விழா 1989 இல் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசில் நடைபெற்றது. அது 13 ஆவது விழாவாகும்.

கியூபாவின் ஆதரவுடன் விழா நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி 14ஆவது விழா ஹவானாவில் 1997இல் நடைபெற்றது. அதனையடுத்து 8 வருடங்களின் பின் 2005 இல் 16வது விழாவை வெனிசூலா பொறுப்பேற்று நடத்தியது. 17வது விழாவை தென் ஆபிரிக்கா 2010 டிசம்பர் 13 முதல் 21 ஆம் திகதி வரை நடத்தியது.

கே. : இந்த விழாவில் பங்குபற்றுவதற்கான இலங்கையின் ஏற்பாடுகள் என்னென்ன?

ப. : 17ஆவது இளைஞர் மற்றும் மாணவர்களின் உலக விழா சமாதானம், ஒருமைப்பாடு மற்றும் சமூக மாற்றத்துடனான உலகுக்காக ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம் என்ற பரந்துபட்ட தொனிப் பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் தத்தமது நாடுகளில் இதற்கான ஏற்பாடுகளை நடத்திக் கொண்டிருந்த வேளையில் அதற்கு சமாந்தரமாக இலங்கையில் நாம், மாறுபட்ட அரசியல் நோக்கங்களைக் கொண்ட அனைத்து பிரதான இளைஞர் மற்றும் மாணவ அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொழும்பில் ஒன்றுகூடி இலங்கை தேசிய தயாரிப்புக்கான கமிட்டியொன்றை அமைத்தோம்.

இளைஞர் மற்றும் மாணவ அமைப்புகள் இருபதினை இந்த கமிட்டி உள்ளடக்கியிருந்தது. உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிரதித் தலைவராக தெரிவானார். அதன் நடவடிக்கைகளில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர நெருங்கிச் செயற்பட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி இந்த விழாவில் மேற்படி கமிட்டியின் அங்கத்துவ அமைப்பாக அன்றி தனியொரு பிரிவாக கலந்து கொண்டது.

இலங்கை தேசிய தயாரிப்புக்கான கமிட்டி என்ற மேற்படி கமிட்டி 2010 செப்டம்பரில் அமைக்கப்பட்டது. இளைஞர் மற்றும் மாணவர்களினதும் உலக விழாவின் தொனிப்பொருளில் எமது இளைஞர் மற்றும் மாணவர்களின் நெஞ்சங்களையும் மனங்களையும் எட்டும் வகையிலான விரிவான செயற்திட்டமொன்றை கமிட்டி வகுத்தது. நாடளாவிய ரீதியில் நாம் பல மினி விழாக்களை ஏற்பாடு செய்தோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் தில் பாரிய மாணவர் விழா ஒன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் மாணவர் மட்டுமன்றி தெற்கில் இருந்து சிங்கள மாணவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். மலையகப் பகுதியில் உள்ள இளைஞர்களின் பங்களிப் புடன் மற்றொரு விழா ஹட்ட னில் நடை பெற்றது. நடைப் பயணம் உள்ளிட்ட மற் றொரு முழு நாள் நிகழ்வு மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

அத்துடன் அங்கு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் கால்பந்தாட்ட போட்டியொன்றும் நடைபெற்றது. இவ்வாறான பிராந்திய விழாக்களின் கடைசி விழா கடந்த வருடம் டிசம்பரில் கொழும்பில் நடைபெற்றது.

கே. : 17வது ஆவது இளைஞர் மற்றும் மாணவர்கள் உலக விழாவில் பங்குபற்றிய இலங்கை தூதுக் குழுவில் எத்தனை பேர் இடம்பெற்றிருந்தனர்?

ப. : 17ஆவது இளைஞர் மற்றும் மாணவர்களின் உலக விழாக்களின் சரித்திரத்தில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட தூதுக்குழுக்களில் இதுவே மிகப் பெரியதாகும். தமிழ் மாணவர்கள் 20 பேரும் முஸ்லிம் மாணவர்கள் 7 பேரும் உள்ளிட்ட 187 இளைஞர் மற்றும் மாணவர்கள் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இதில் பல்கலைக்கழக மாணவியர் 20 பேரும் பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

அத்துடன் பார்வை மற்றும் நிறைவேற்றுக் கலை பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு நடன அணிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, துமிந்த திசாநாயக்க, அருந்திக பெர்னாண்டோ, எஸ். ராஜதுரை, மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் சம்மேளன உபதலைவர் சட்டத்தரணி ராசாங்க ஹரிஸ்சந்திர மற்றும் அதுல சில்வா, தேசிய இளைஞர் சபையின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

கே. : இந்த விழாவில் இருந்து இலங்கை தூதுக்குழு பெற்றுக்கொண்ட அனுபவங்கள் என்னென்ன? விழாவில் அவர்கள் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தினர்?

ப. : தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் தலைவர் ஜுலியஸ் மலேமா மற்றும் ஜனநாயக இளைஞர் உலக ஒன்றியத்தின் தலைவர் டியகோ வியெரா ஆகியோர் கலந்துகொண்ட ஆரம்ப விழாவில் நாம் பங்குபற்றி னோம். அந்த ஆரம்ப விழா ஊர்வலங்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் விமான சாகச சேவை ஆகியவற்றால் களை கட்டியது.

விழாக்காலம் முழுவதும் இலங்கையின் தகவல் கூடமொன்று இயங்கி வந்தது. விழா முழுவதும் சுமார் 100 மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

எமது தூதுக்குழு இலவச மற்றும் சர்வதேச ரீதியிலான கல்வி, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் மக்கள் சேவைக்கான தகவல் என்ற பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் எமது தூதுக்குழு பங்குபற்றியது. ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேச்சாளர்கள் இங்கு தத்தமது கருத்துக்களை கூறினர். ஆசியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. எமது ஒதுக்கப்பட்ட நேரத்தில் பிரதான உரையை நான் ஆற்றினேன்.

திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்களையடுத்து கேட்போர் கூடத்தில் இருந்தவர்களுக்கு பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டது. அச்சமயம் பல்கலைக்கழகங் களுக்கு இடையிலான மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன கோபமூட்டும் வகையிலான உரையொன்றை ஆற்றினார். பொய்கள் நிறைந்த பேச்சாக அது இருந்தது.

கேட்போர் கூடத்தில் இருந்த இலங்கையர்களுக்கு அது அவ்வளவு மகிழ்ச்சியளிக்க வில்லை. அவர் பேச்சை தொடர்வதை அவர்கள் தடுத்து விட்டனர். பின்னர் மற்றும் இரு மாணவர்கள் உரையாற்றினர்.

அதில் ஒருவர் பல்கலைக்கழகங் களுக்கிடையிலான மாணவர் கேந்திரத்தின் ஏற்பாட்டாளர் அஸங்க புலேகொட ஆவார்.

இந்த உரைகளையடுத்து இறுதியாக குறிப்புகளை கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இலங்கையில் இலவச கல்வி நாட்டின் தேசிய தலைவர்களி னதும் முன்னேற்றகரமான போராட்டங்களினதும் காரண மாகவே கிடைத்தது. 1947 முதல் பல்கலைக்

கழகம் வரையிலான இலவச கல்வியை பெற்ற நாம் அனுபவித்து வருகிறோம். கல்விக்கான முதலீடு மக்களின் சுகாதாரத்துக்கான மறைமுக முதலீடு என்பதை நான் வலியுறுத்திக் கூறினேன். 1960 அளவில் நாட்டின் சுகாதார புள்ளி விபரங்களில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை காணமுடிந்தது.

இலவச கல்வியை முதல் பரம்பரை தாய்மாரின் படிப்படியான முன்னேற்றத்தையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு எமது தடுப்பூசி எல்லை 100 சதவீதமாகும்.

அதேவேளை இந்தியாவில் தற்போதும் அந்த சதவீதம் 50 ஐ எட்டவில்லை. தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் எமது சிறுவர்களை பல்வேறு கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். தாம் பெற்ற கல்வியின் காரணமாக எமது தாய்மார் அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளனர்.

சுகாதாரம் என்று வரும்போது நாங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான மட்டத்தில் இருக்கிறோம். அதேவேளை எமது நாட்டில் கல்வியும் சுகாதாரமும் எப்போதும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு பரவலாக இருந்து வருகிறது என்றும் நான் அங்கு குறிப்பிட்டேன்.

எங்கள் நாட்டில் எந்தவொரு அரசாங்கம் பதவியில் இருந்த போதும் கல்வி சுகாதாரம் போன்ற வசதிகளை இலவசமாக வழங்குவதை குறைத்துக் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வரும் போதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

எமது அரசாங்கத்தின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை இதுவாகும். இதனை முன்னெடுத்துச் செல்ல இளைஞர் அமைப்புகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன. இலவச கல்வியை பாதுகாப்பதுடன் அதனை மேலும் வலுப்படுத்தி அபிவிருத்தி செய்து விஸ்தரிக்கப் போவதாக அரசாங்கம் பகிரங்கமாக கூறி வருகிறது.

அதேவேளை உயர்தர பரீட்சையின் மூலம் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைவரையும் சேர்த்துக்கொள்ள அரசாங்கத்தால் முடியாதுள்ளது. எனவே உயர் கல்வி வழங்க தனியார் துறையின் பங்களிப்புக்கான சாத்தியத்தின் தேவையும் அவசியமும் இலங்கை சமூகத்தின் அக்கறையை அதிகரித்து வருகிறது.

மில்லியன் கணக்கில் அந்நிய செலாவணியை பாவித்து உயர் கல்விக்காக ஆயிரக் கணக்கான மாணவர்கள் வருடாந்தம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். எனினும் உயர் கல்வியை தனியார் மயப்படுத்தும் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை அரசாங்கத்திடம் இல்லை. எனது உரையின் சாராம்சம் இதுவாக இருந்தது.

எமது அணி மேலும் ஐந்து கருத்தரங்குகள், மூன்று சந்திப்புகள் மற்றும் ஆசியாவில் கல்வியை தனியார் மயப்படுத்தல் 1}சி பயிற்சி பட்டறையிலும் பங்குபற்றியது.

விழாவின் ஐந்தாவது நாள் ஆசிய நாளாக இருந்தது. இதனையிட்டு அன்றைய தினம் வியட்னாம், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கூட்டாக கலாசார நிகழ்ச்சியொன்றை நடத்தின. எமது நடன அணிக்கு அரை மணி நேரம் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் இலங்கையின் தகவல் கூடத்துக்கு முன்பாகவும் பலஸ்தீன கூடத்துக்கு முன்பாகவும் இலங்கை அணியினர் நடன நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலே இந்த நடன நிகழ்வு நடத்தப்பட்டது.

ழாவின் இறுதி வைபவத்தின் உச்சக் கட்டமாக இருந்தது சமாதான ஊர்வலமாகும். தனது நடனக் கலைஞர்கள் மற்றும் மேளக் கலைஞர்களினால் இலங்கை அணியின் பங்களிப்பு கண்கவர் நிகழ்வாக அமைந்தது. அடுத்த நாள் தென் ஆபிரிக்காவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எமக்கு பாரிய விளம்பரம் கிடைத்தது.

விழாவின் இறுதி பிரகடனம் இலங்கையின் தேசிய ஐக்கியத்துக்கான போராட்டத்தை ஆதரிப்பதாக இருந்தது. பிரகடனம் அரசுக்கு எதிரானது என்று கூறும் வகையில் சுதந்திர கல்வி மற்றும் ஜனநாயகத்தை பயன்படுத்த மக்கள் விடுதலை முன்னணி எடுத்த முயற்சியை இலங்கை தேசிய தயாரிப்புக்கான கமிட்டி எதிர்த்தது.

இந்த நாட்டில் இலவச கல்வி மற்றும் ஜனநாயகத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என நாம் கருதியதால் இது தொடர்பாக பிரகடனத்தில் விசேட அக்கறை செலுத்தும் அவசியம் இருக்கவில்லை. மறுபுறம் தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும்.

இலங்கை தேசிய தயாரிப்புக்கான கமிட்டியின் நிலை சர்வதேச ஏற்பாட்டுக் கமிட்டியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 126 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றதுடன் பிரகடனத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com