Contact us at: sooddram@gmail.com

 

தமிழனை காக்க இதுவா வழி

(இரா. ஆஞ்சலா ராஜம்)

"மேடை ஏறி பேசும் போது ஆயிரம் பேச்சு கீழே இறங்கி வந்தால் அத்தனையும் போச்சு' மேற்சுட்டிய வாக்கியம், மேடைப் பேச்சாளர்களுக்கு பொருந்துமோ இல்லையோ, நம்மூர் அரசியல்வாதிகளுக்கும், "தமிழினத்' தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கும், நிச்சயம் பொருந்தும்.

"தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள், சுய மரியாதை உள்ளவர்கள், தன் ரத்த பந்தங்களுக்கு ஒன்றென்றால், அதை, ஒரு போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்...' இப்படித் தான், தமிழ்த் தாயின் தன்னிகரற்ற தவப் புதல்வராகவும், "தமிழ் இனத்' தலைவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், மேடைதோறும் கூவிக் கொண்டிருக்கின்றனர். "தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒன்று என்றால், அதைவிட இந்த உயிர் இருந்தாலென்ன, போனால் என்ன' என்றெல்லாம், வீராவேசமாக இவர்கள் பேசும் போது, உள்ளமெல்லாம் துடிக்கிறது; உடலில் மின்சாரம் பாய்கிறது. இதெல்லாம், கேட்பவர்களின் உணர்ச்சியைத் தூண்ட மட்டும் தான். மேடையை விட்டுக் கீழே இறங்கி விட்டால், துண்டை உதறி தோளில் போட்டுச் சென்று விடுவர், தன் ஜோலியைப் பார்க்க; அதோடு அவர்கள் காரியம் முடிந்தது; நாம் விக்கித்து நிற்போம், அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய்! தாய்த் தமிழனுக்கு ஒன்று என்றாலும், தொப்புள் கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்று என்றாலும், மேடைகளில் தான் முழங்குகின்றனரே தவிர, காரியம் ஏதும் நடைபெறவில்லை. உண்மையில், எம் "தமிழினத்' தலைவர்கள், புதிதாக எதையும் செய்ய வில்லை; புரட்சிக்குத் தலைமை தாங்கவுமில்லை. புரட்சி செய்து கொண்டிருப்பது போல, "பிலிம்' காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

"வானத்தைப் பார்த்து நடப்பவர்களுக்கு, தன் காலுக்கு கீழே இருப்பது தெரியாதாம்' என்றொரு பழமொழி உண்டு. இதை இவர்கள் படித்தனரோ, இல்லையோ தெரியவில்லை. வானத்தைப் பார்க்கின்றனர்; அதையும் சரியாகப் பார்ப்பதில்லை. இப்படி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுவது போல பாவனை செய்து, ஒரு கூட்டமிங்கே பிழைப்பு நடந்திக் கொண்டிருந்தால், இப்படிப்பட்டவர்களை வளர்த்து விட்டு, அரசியல் செய்து கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம். கடந்த ஆட்சியில், போருக்கு பின், "இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன?' என்பதை கண்டறிவதற்காக, தி.மு.க., பார்லி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், 10 எம்.பிக்களைக் கொண்ட குழுவினர், ஐந்து நாள் பயணமாக, இலங்கை சென்றனர். அங்கே, தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அங்கிருந்தவர்களோடு கலந்துரையாடி, குறைகளைக் கேட்டு ஆய்வு நடத்தி, சென்னை திரும்பினர்.

தமிழ்த் தேசிய முன்னணி அமைக்க முயன்று வரும், அந்தத் "தமிழினத்' தலைவரும், இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் நிலை, துக்கம் தொண்டையை அடைத்ததாக பேட்டியளித்து, இங்குள்ள தமிழர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தார். இவர்கள்,"இலங்கைக்கு சென்றதன் பலன்தான் என்ன?' என்று கேள்வியெழுந்தால், அதற்கு விடை யாருக்கும் தெரியாது; சென்றவர்களுக்கும் கூட. இன்னொரு நாடான இலங்கைக்கு சென்று, அங்குள்ள முகாம்களை பார்வையிட்டு வக்கணை பேசும், "தமிழினத்' தலைவர்களுக்கு, நம்மை அண்டிப் பிழைக்க வந்த நம் தொப்புள் கொடி உறவுகள், இங்கிருக்கும், அகதி முகாம்களில், எப்படியிருக்கின்றனர், அவர்களின் தேவை என்ன என்பது குறித்தெல்லாம் அக்கறை காட்டாதது ஏனோ? உப்பு வியாபாரிக்கு சர்க்கரையைப் பற்றி என்ன கவலை? அதுபோலத்தான், ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கும், இங்குள்ள இலங்கைத் தமிழர்களைப் பற்றி கவலையில்லை. ஒருவேளை, இங்குள்ள முகாம்களில், சாலைகள் எல்லாம் சிங்கப்பூரைப் போல, சீராக அமைக்கப்பட்டுள்ளதாகவும், "தானே' வந்தாலும், போனாலும், பாதிக்கப்படாத வகையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மழைநீர் தேங்குவதில்லை; சாக்கடை நீரெல்லாம் கண்ணில் படுவதே கிடையாது. கொசு என்பதைப் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது என, சுகாதாரம் உலகம் மெச்சும் அளவு உள்ளதாக, இவர்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனரோ?

இலங்கைத் தமிழர்களின் மீது கொண்ட,"அன்பின்பால் (!)' அவர்களுக்காக, இங்கு ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தி, "கரிசனையோடு' போராடும் இவர்கள், "முள்வேலி'யில் சிக்கி, குத்தி, குருதி சிந்தும் தமிழர்களைப் பற்றி வேதனையோடு பேசும் இவர்கள், தமிழகத்திலுள்ள, 115 முகாம்களில், எத்தனை முகாம்களுக்குச் சென்றுள்ளனர்? உண்மையான அக்கறை இருந்தால் தானே இதையெல்லாம் செய்வதற்கு... போக்குவரத்துக்கு போக்கற்ற சாலைகள்; தண்ணீருக்கு தண்ணி காட்டும் குழாய்கள், தூர்வாரப்படாத கிணற்றில் இருந்து குடிநீர், திறந்த வெளி குளிப்பிடங்கள், மழையில் கரையும் மண் வீடுகள்; வெயிலை வீட்டுக்குள் கொண்டு செல்லும் கூரைகள்; மொத்தத்தில் வீடல்ல; வீடு மாதிரி... என, அடித்தட்டு மக்களும் முகம்சுளிக்கும் வகையிலான வாழ்க்கைத் தரத்தில், தான், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் நம் தொப்புள் கொடி உறவுகள்... மொத்தத்தில், இவை அகதிகள் முகாம் அல்ல; அவதிகள் முகாம். சொந்த மடம் இல்லாத வரை, இந்த பாடுதான் என்பதை நினைத்து, கிடைத்ததை வேறு வழியின்றி, இவர்கள் ஏற்றுக் கொண்டாலும், "நான் தமிழன், என் இனம் அழிகிறது, என் இனம் அழிய விடமாட்டேன்' என, வாய்கிழியப் பேசி, தமிழையும், தமிழனையும் வைத்து, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கும், "செந்தமிழன், பைந்தமிழன்' என்றெல்லாம் அடைமொழியுடன் அழைக்கப்படும், "தமிழினத்' தலைவர்கள், இனியும், "வெறுங்கையில் முழம்' போட்டுக் கொண்டிராமல், வெறுமனே, சிங்கம் போல, மேடையில் கர்ஜிப்பதோடு மட்டும் விட்டு விடாமல், நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் மீது, உண்மையான அக்கறையிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் காண, குறைந்தபட்சம் ஆளுக்கொரு முகாமை தத்தெடுத்து, அரசியல்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் முன் உதாரணமாகத் திகழ வேண்டும்.

கட்சியை வளர்க்கவும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், காசு சம்பாதிக்கவும், இப்படி, இவர்கள், ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால், ஜாதிப் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும், பா.ம.க., உட்பட சில சில்லறை கட்சிகளும், காம்ரேட்டுகளும், மற்ற நேரங்களில், வாயே திறக்காமல், தேர்தல் நேரத்திலும், தங்களுக்குத் தேவைப்படும் நேரத்திலும் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னைகளை கையிலெடுக்கின்றனர். "இவர்களுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை, நாங்களும்தான் அரசியலில் இருக்கிறோம்' என்ற ரீதியில், தமிழக காங்கிரசாரும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, "குரல்' கொடுப்பதாக, காமெடி செய்யும் சம்பவங்களையும், அவ்வப்போது, நாம் செய்திகளில் காண நேரிடுகிறது. இப்படி,தேர்தல் நேரத்தில் மட்டும் பாசம் காட்டி, வாய்ச் சொல்லில் வீரர்களாகத் திகழும் இவர்களும், இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமை தத்தெடுத்து, அவர்கள் அடிப்படை வசதிகளையாவது பெற்று வாழ, முகாமை தத்தெடுத்து, அவர்கள் வாழ்க்கையில் குத்துவிளக்கு ஏற்றுவரா? இவர்களை எல்லாம் மிஞ்சிவிடும் விதமாக, கண்ணீர் வடிக்கும் தமிழனின் துயரினைக் கண்டவுடன், இதயம் துடித்து, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழினத்துக்கு ஒரு துயர் என்றால், ஓடோடிச் சென்று உதவிடும் கரங்கள் என்றும், உலகத் தமிழ் சமுதாயத்தின் ஒரே பாதுகாவலர் என்றும், தங்களை தாங்களே புகழ்ந்து கொள்பவர்களும், இவர்களோடு இணைந்து கைகோர்ப்பரா? வாழ்க... வாழ்க... தமிழே யென்று வாயார மட்டும் வாழ்த்தாமல் வந்தோரை வாழவைக்கவும் வாட்டமுறாச் சமுதாயம் படைக்கவும் கைகோர்ப்பீரோ "தமிழின' வியாபாரிகளே...

நன்றி : தினமலர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com