Contact us at: sooddram@gmail.com

 

“உயிர்வாழ ஆசைப்படுகிறேன்; என்னைக் காப்பாற்றுங்கள்...!”

'நான் உயிர் வாழ ஆசைப் படுகிறேன். என் னைக் காப்பாற்றுங்கள், குற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள்' டெல்லியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உருக்கமான வேண்டுகோள், இந்தியாவை மட்டுமல்லாமல் உலக அரங்கு, ஐ.நா. சபையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முழு இந்தியாவுக்குமே தலைகுனிவை ஏற்படுத்திய வெறியர்களுக்கு வழங்கும் தண்டனை இனிமேல் பெண்களை வல்லுறவுக்குட்படுத்த நினைக்கும் அனைவருக்குமே பாடமாக அமையவேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் கோஷம் எழுப்பத் தொடங்கி யுள்ளனர்.

ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்காக இந்திய தேசம் காமுகர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டங்களை கடு மையாக்க தீர்மானித்துள்ளது.

இந்திய தேசத்தையே அதிர வைத்துள்ளது. இதன் விளைவாக காமுகர்களின் வெறியாட்டங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முழு இந்திய தேசமே கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

இந்திய தேசமே வெட்கித்தலை குனியவேண்டிய அவமான சின்னமாக இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெண்ணியல்வாதிகள், இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தி வீதிகளில் இறங்கியுள்ளனர்.

கொடூரம் - துயரம்

15.12.12 அன்று இரவு தெற்கு டெல்லியில் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், இவர் தன் நண்பரான கணனி மென்பொருள் பொறியியலாளர் ஒருவருடன் திரையரங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திரைப்படத்தை பார்த்து ரசித்துவிட்டு இவர்கள் வெளியேவந்த பொழுது நேரம் இரவு 9.30 ஆகிவிட்டது. வீடு திரும்ப நினைத்த அவர்களுக்கு கண்ணில் பட்டது அந்த தனியார் பஸ். இப்படியெல்லாம் நிகழும் என நினைத்துகூட பார்க்காத அவர்கள், எந்த ஒரு தயக்கமும் இன்றி அதில் ஏறிக்கொண்டனர்.

பஸ்சில் ராம்சிங் என்ற ஓட்டுனரும் அவரது சகாக்கள் 5 பேரும் இருந்தனர். பஸ் பயணிக்க தொடங்கியது. பஸ்ஸில் ஏற்கனவே இருந்தவர்கள் போதையில் இருந்தனர். அவர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். நக்கலும் நையாண்டியும் எல்லை மீறிப் போக மாணவியின் நண்பர் அதை தட்டிக் கேட்டார். இதனால் சீற்றமடைந்த அவர்கள் மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கினர். பஸ்சில் இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து தன் நண்பரை கண்மூடித்தனமாக அவர்கள் தாக்குவதை மாணவி நடுத்தார்.

அப்போது மது போதையில் இருந்த அந்த காமுகர்களின் கவனம் மாணவியின் பக்கம் திரும்பியது. அவர்கள் கண் மூடித்தனமாக இரு வரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட மாணவியின் நண்பர் சுருண்டு விழுந்தார்.

இத்தனைக்கும் பஸ்ஸை சாரதி நிறுத்தவே இல்லை. இதையடுத்து பஸ்ஸை நிறுத்தும்படி மாணவி கூச்சலிட்டார் கதறினார் பயனேதும் இல்லை பஸ் நகர்ந்து கொண்டே இருந்தது.

பஸ்ஸில் இருந்த வாலிபர்களின் வெறித்தனம் தணியவில்லை. மாண வியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இரத்தம் பீறிட்டது. வலி தாங்க முடி யாமல் மாணவி சுருண்டு விழுந்தார்.

அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மாணவியை காம வெறியர்கள் ஆறு பேரும் ஈவு இரக் கமின்றி மாறி மாறி தம் இச்சைக்கு இரையாக்கிக் கொண்டனர்.

இத்தனைக்கும் அந்த பஸ் டெல்லி நகர சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தது. பஸ்ஸில் மாணவி சின்னாபின்னமாக்கப் பட்டார். காம இச்சையை தீர்த்துக் கொண்ட அவர்கள் அதே நாள் இரவு 10.35 மணியளவில் ஓடும் பஸ்ஸில் இருந்து மாணவியையும் அவரது நண்பரையும் சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றனர்.

சாலையோரத்தில் இரத்த வெள் ளத்தில் கிடந்த இருவரையும் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பொலிஸ் விசாரணை

வைத்திய சாலையில் அறிவு, நினை வற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு அங்கு செயற்கை சுவா சத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இதன் போது இவர்களுக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. சம்பந்தப்பட் டவர்கள் பற்றிய விவரமும் பொலிஸா ருக்கு கிடைத்தது. இந்த காமவெறியா ட்ட சம்பவம் தொடர்பான செய்திக ளால் ஏற்பட்ட பரபரப்பினை தொடர் ந்து உஷாரடைந்த டெல்லிப் பொலி ஸார் மறுநாள் 17.12.2012 தனிப்படை கள் அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

இந்த கொடூரச் செயலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் பஸ் சாரதியுமான ராம்சிங்கை பொலிஸார் 18.12.2012 கைது செய்தனர். சம்பவத் துக்கு பயன்படுத்தப்பட்ட பஸ்ஸ¤ம் சிக்கியது. உரிய உரிமம் இல்லாமல் அந்த பஸ் சேவையில் ஈடுபடுத்தப் பட்டதும் தெரியவந்தது.

“குற்றவாளிகளை தப்பிக்கவிடாதீர்கள்...”

டெல்லி மாணவியின் இறுதி மூச்சு காமுகர்களை பழிதீர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை தூண்டியது

சாரதி ராம்சிங் கொடுத்த தகவலின்படி அவரது சகோதரன் முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். ஏனைய இருவரையும் பிடிப்பதற்காக பொலிஸ் குழுக்கள் அண்டைய மாநிலங்களான பீகார், ராஜஸ்தான் ஆகியவற்றுக்குச் சென்றனர்.

டெல்லி பொலிஸின் வலையில் 21.12.2012 அன்று 5வது சந்தேக நபர் அக்ஷய் தாகுர் சிக்கினார். உத்தர பிரதேச மாநிலத்தில் மறைந்து வாழ் ந்தபோது இவர் பிடிக்கப் பட்டார். 6வது சந்தேக நபரும் கைதானார்.

விசா ரணை நடத்தியதில் 6வது சந்தேக நபர் சிறுவன் என்பது தெரியவந்தது. இதனால் பொலிஸார் அவனது பெயரை வெளி யிடவில்லை. அதே சமயத்தில் டெல்லி திகார் ஜெயிலில் தடுத்துவைக்கப் பட்டிருந்த சந் தேக நபர்களில் சம்பவத்துடன் தொடர்புடை யவர்களை சரி யாக கண்டுபிடிக்க அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது.

மாணவியின் நண்பர் அணிவகுப்பை பார்த்து சம்பவத்தின் போது பஸ்ஸில் இருந்த ஆறு பேரையும் மிகச் சரியாக அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அந்த ஆறு பேர் மீதும் 7 கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கலவரங்கள் கொந்தளிப்புகள்

சப்தர்ஜங் மருத்துவமனை வைத் தியர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவிக்கு 22 ஆம் திகதி மயக்கம் தெளிந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அவரிடம் டெல்லி மஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போது அந்த மருத்துவ மாணவி, 'நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப் படியாவது என்னை காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை தப்பவிட்டு விடா தீர்கள்' என்றார்.

இதனை அறிந்த மக்களின் மனதில் ஆத்திரம் பீறிட்டது. ஏற்கனவே பாதி க்கப்பட்ட மாணவிக்காக போராட் டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இது ஆவேசத்தை ஏற்படுத்தியது. இதனால் டெல்லியில் நீதி கோரும் போராட்டங்கள் பரவலாக வெடித்தன. மாணவர்களும் மக்களும் பால், வயது, ஜாதி, மத பேதமின்றி வீதி களில் இறங்கினர்.

இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோசத்துடன் கோஷங்களை எழுப்பினர். டெல்லி முடங்கியது. இயல்பு நிலை சீரழிந்தது. மறுநாள் 23 ஆம் திகதியும் டெல்லியிலுள்ள இந்தியா கேட் பகுதியில் ஆயிரக் கணக்கில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர் களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினார்கள்.

இதையடுத்து இந்தியா கேட் பகு தியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் தடியடி நடத்தியும், தண்ணீர் பீச்சியடித்தும் கலைக்கப்பட்டனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

அரசின் ஆறுதலும் - எதிரணியின் வேண்டுகோளும்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 22 ஆம் திகதி இரவு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின்வீட்டுக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த சோனியாவும், ராகுல் காந்தியும் குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம். உரிய தண்டனை பெற்று கொடுப்போம் என்று உறுதியளித்தனர்.

தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கலவரங்களை நிறுத்தி மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். மக்களின் கோபம் நியாயமா னது என தெரிவித்த அவர் குற்றவாளி கள் தண்டிக் கப்படுவர் எனவும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மறுபுறத்தில் மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து மாணவி கற்பழிப்பு தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண் டும் என்று பா. ஜ. க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை

பாலியல் பலாத்காரத்தால் பாதிக் கப்பட்ட மாணவிக்கு நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது என 25 ஆம் திகதி (25.12.2012) வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு மேலும் இரு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் 26 ஆம் திகதி (26.12.2012) மாணவியின் உடல் நிலை மீண்டும் மிகவும் மோசம டைந்தது. இதனையடுத்து அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அன்றிரவு சிறப்பு ஏர்-அம்புலன்ஸ் விமானம் மூலம் மாணவி டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்துக்கு மட்டும் கட்டணமாக 60 இலட்சம் ரூபாவை இந்திய மத்திய அரசு வழங்கியது. 27 ஆம் திகதி (27.11.2012) அதிகாலை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு நவீன சி.டி. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்ட போது மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மாணவி உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக சிங்கப்பூர் வைத்திய நிபுணர்கள் அறிவித்தனர். மறுநாளே மாணவியின் உடல் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின.

மாணவி குடல், நுரையீரலில் கிருமி தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டது. மாணவி உயிரைக் காப்பாற்ற வைத்திய நிபுணர்கள் கடு மையாக பாடுபட்டனர். பலன் கிட் டவில்லை. சிகிச்சைகள் ஏதும் பயன ளிக்காத நிலையில் 29ஆம் திகதி (29.12.2012) அதிகாலை 2.15 மணி யளவில் மாணவி மரணம் அடைந்தார்.

குற்றப் பத்திரம்

ஆரம்பத்தில் பாலியல் பலாத்கார வழக்காக இருந்த இந்த வழக்கு மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து 'பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்காக பதிவு செய்யப் பட்டது.

சந்தேக நபர்கள் மீது 1000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தயாரித்துள்ள டெல்லி பொலிஸார் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்ட னையாக மரண தண்டனை வழங் குமாறு பரிந்துரை செய்துள்ளனர். அத்துடன் இதற்கு 30 பேர் சாட்சிகளாக இணைக்கப் பட்டுள்ளனர்.

பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம்

டெல்லியில், மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரண மடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியா தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இனிமேல், இதுபோன்ற குற்றங்கள் இடம்பெற்றால் அதற்கு கடும் தண்டனைகள் கொடுக்கும் ரி(8யில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமான சட்டத்தில் அதிரடி திருத்தங்களை மேற்கொள்ள இந்திய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி, சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார். இதன்போது பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறை யிலான ஆண்மை நீக்க தண்டனை வழங்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. இதுதவிர 30 ஆண்டு சிறை, பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்குதல், சிறுவர் என அழைக்கப் படுவதற்கான வயதெல்லை 15 போன்ற பல திருத்தங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த புதிய சட்டமூலம், அடுத்த இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள், மாநில அரசுகள், சமூக தொண்டு நிறுவனங் களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வரு கிறது.

இரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை

பாலியல் பலாத்கார குற்றங்களை வேரோடு அறுப்பதற்கான முயற்சிகளில் முறையிலான ஆண்மை நீக்க தண் டனை சட்ட ரீதியாக்கப்படுவது எவ் வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானதே.

இந்த சட்டத்தை அறிமுகப்படுத்துவ தில் பல சிக்கல்கள் தோன்றவே சாத்தியங்கள் உள்ளன.

குறிப்பாக மனித உடலில் உள்ள உறுப்பொன்றை ஊனப்படுத்துவதற்கு மனித உரிமைகள் சாசனத்தில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகும்.

மரணதண்டனையே மனித உரிமை ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத போது உடல் உறுப்பு ஒன்றை ஊன ப்படுத்துதல் எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

இரசாயன ஆண்மை நீக்கம் எப்படிப்பட்டது?

இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்றால் என்ன என்பதற்கு இணையங்களில் விளக்கம் தரப்பட் டுள்ளது. அதாவது, பாலியல் உண ர்வை தூண்டும் ஆன்ட்ரோஜன், ஹார்மோனுக்கு எதிராக அல்லது செயலிழக்க செய்வதற்காக சைப்ரோடெ ரோவ் அசிடேட் மெட் ரோசைப்ரோ ஜெஸ்ட்ரோன் போன்ற மருந்துகளை ஆண்களுக்கு செலுத்துவது ஆகும். இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீதம், ஒரு ஆண்டுக்கு செலு த்த வேண்டும்.

இதன் பிறகு அந்த ஆணுக்கு பாலி யல் இச்சையோ வன்முறை சிந்த னையோ ஏற்படாது. ஆனால் இதில் இன்னொரு ஆபத்து இருக்கிறது. இந்த மருந்தை பெற்றவர் மாற்று மருந்து கொடுத்து மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்தலாம். அதாவது பாலியல் உணர்வு ஏற்படும் நிலையை உருவா க்கலாம்.

எனினும் இதற்கு பல பக்க விளை வுகள் உள்ளன. அதாவது இம்மருந்தை பயன்படுத்துபவருக்கு நாளாக நாளாக இதய நோய், எலும்பு உதிர்தல் போன்ற நோய் ஏற்படலாம்.

சில ஆண்களுக்கு பெண்களைப் போல் மார்பகம் வளர்ச்சி அடையலாம். முடிகள் உதிரும் இருப்பினும், அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தண்டனை சட்டப்பூர்வமாக பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வெளிச்சத்துக்கு வந்த மேற்படி சம்பவம் ஒன்று தான் பலமாக பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் தினமும் பெண்கள் மீதான பலாத் காரங்களும் வன்முறைகளும் அரங் கேறிக்கொண்டுதான் உள்ளன.

எனவே இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொன்னது போல முழு இந்திய தேசமும் மலர்ந்துள்ள புத்தாண்டை பெண்களின் பாதுகாப்புக் கான ஆண்டாக அர்ப்பணிக்க வேண் டும். பெண்களுக்கான பாதுகாப்பை 100 வீதம் எட்டும் வரை இந்தியா சட்டங்கள், மாற்றங்கள் நடவடிக்கைகள் என கடுமையாக உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com