Contact us at: sooddram@gmail.com

 

வயோதிபத்தை அடையும் நம் நாட்டவர்கள் இன்று வறுமையில் வேதனைப்படுகிறார்கள்

இலங்கையில் இன்று வயோதிபத்தை எட்டும் மூத்த பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இப்போதைக்கு 60 வயதை தாண்டிய பிரஜைகளின் எண்ணிக்கை 16 இலட்சத்து 61 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் 9 இலட்சத்து 36 ஆயிரத்து 804 பேர், அதாவது 56.4 சதவீதமானோர் 60 வயதிற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். மேலும் 21 ஆயிரத்து 593 பேர், அதாவது முதியவர்களின் சனத்தொகை 1.3 சதவீதமானோர் 90 வயது எல்லையைத் தாண்டியவர்களாவர்.

2003 மற்றும் 2004ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதியவர்களின் கணக்கெடுப்பின் விபரங்களே இது என்று சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இப்போது இந்த வயோதிபர்களின் சனத்தொகை கணக்கெடுப்பு எடுத்து 7 வருடங்கள் கடந்துவிட்டன. அதனால், அந்த சனத்தொகை இன்னும் பெருமளவில் இன்று அதிகரித்திருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் முதுமை நிலையை எட்டியிருக்கும் 60 வயதை தாண்டியவர்களுக்கு பல வகையான சலுகைகளை பெற்றுக் கொடுக்கின்ற போதிலும், அவர்களுக்கு வருமானம் இல்லாத காலத்தில் வாழ்வதற்கு அந்த உதவிகள் போதியதாக இருக்கவில்லை.

வயோதிபத்தை எட்டியிருப்பவர்களுக்கு மாதத்திற்கு 600 முதல் 1000 ரூபா வரையிலேயே மாதாந்தம் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை வைத்து அவர்களுக்கு மூன்று நாட்களுக்காவது சீவிக்க முடியாதிருக்கிறது. வயோதிப மடங்களில் இப்போது முன்பிருந்த அளவிற்கு வயோதிபநிலை அடைபவர்களை சேர்த்துக் கொள்வதும் இல்லை. இதனால், நாட்டுக்காக தங்கள் இளமைக் காலத்தில் கடுமையாக உழைத்து பொருளாதாரத்தை வளமாக்கும் பணியை நிறைவேற்றியவர்கள் வயோதிபத்தை அடையும் போது அவர்களில் பெரும்பாலானவர்கள் கவனிப்பாரற்ற நிலையில் நடைப்பிணங்களாக வாழ்ந்து இறுதியில் துன்பதுயரத்தில் மூழ்கி மரணிக்கிறார்கள்.

சுமார் 60 முதல் 100 வருடங்களுக்கு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த கீழைத்தேய பண்பாட்டு சம்பிரதாயங்களின்படி தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் கூட்டுக்குடும்பங்கள் பந்தபாசத்தை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அன்று கூட்டுக்குடும்பத்தில் ஒரு தலைவர் இருப்பார்.

அதே குடும்பத்தில் பிள்ளைகள், மருமக்கள், சகோதர, சகோதரிகள், மைத்துனர், மைத்துனிமார், பேரப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

இத்தகைய கூட்டுப் குடும்பங்களில் வயோதிப நிலை அடையும் எவரும் ஓரங்கட்டப்படுவதில்லை. அவர்களையும் குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினராக கருதி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் அன்புடன் பராமரிப்பார்கள். ஆயினும், நாகரீகம் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப கட்டமைப்பு கடந்த 30 ஆண்டுகாலமாக பெருமளவில் சீர்குலைந்து போய்விட்டது.

திருமணமானவுடன் மணமகள் அல்லது மணமகன் தனது வாழ்க்கைத் துணையுடன் பெற்றோரின் அரவணைப்பில் இருந்து தனிக்குடித்தனம் என்ற இன்றைய நாகரீகத்திற்கு அமைய பிரிந்து வாழும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

இவ்விதம் பெற்றோரிடமிருந்து பிரிந்து செல்லும் பிள்ளைகள் தங்களுக்கு பிள்ளைகள் பிறந்து பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கும் போதும் தங்கள் பிள்ளைகளை தங்களால் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் போதும் வேலையாட்களை வைத்திருப்பதற்கு பண வசதியில்லாத காரணத்தினால் மீண்டும் தாய், தந்தையினரிடம் வந்து தங்கள் பிள்ளைகளுக்கு ஆயா வேலை பார்ப்பதற்கும், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு கூட்டிச் சென்று வருவதற்கும் பெற்றோரின் உதவியை நாடுகிறார்கள்.

பெற்றோர் ஓரளவு நடமாடக்கூடிய நிலையில் இருக்கும் வரை தங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் உதவி செய்யத் தயங்குவதில்லை. அதற்கு பின்னர் பெற்றோர் நோய்வாய்ப்பட்டு, நடமாட முடியாத அவல நிலைக்கு தள்ளப்படும் போது, பெற்றோரை நம்பி வாழ்ந்த பிள்ளைகள், அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த துன்பகரமான நிகழ்வுகள் பெரும்பாலான வயோதிபத்தை எட்டியுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுவதுண்டு.

பெற்றோர் ஓய்வூதியம் போன்ற மாதாந்த வருமானத்தை அல்லது வங்கியில் பெருமளவு பணத்தை வைப்புச் செய்திருந்தால் பிள்ளைகள் அவர்களை மாதம் ஒரு தடவையாவது வந்து பார்த்து அவர்களிடம் உள்ள பணத்தின் ஒரு பகுதியை எடுத்துச் செல்வதும் உண்டு. ஒரு சதமேனும் வருமானமாக இல்லாத பெற்றோர் இறுதியில் தங்கள் கடந்தகால மதிப்பையும், மரியாதையையும் மறந்துவிட்டு தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக மற்றவர்களிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வயோதிபர்களுக்கு ஒசுசல போன்ற அரசாங்க மருந்தகங்களில் 5 சதவீத கழிவுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அதைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ள முதுமையை எட்டியிருக்கும் பலர் துன்பப்படுகிறார்கள்.

இவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களின் உற்றார், உறவினர்கள் உதவுவதற்கு முன்வருவது அரிதிலும் அரிதாகும்.

வறுமை காரணமாக தங்கள் சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட எத்தனையோ பெற்றோர் இறுதியில், வாழ வழியின்றி நடைபாதையில் ஒதுங்கி அமர்ந்திருந்து வாழ வேண்டிய அளவிற்கு வறுமை அவர்களை வேதனையில் ஆழ்த்தி விடுகிறது.

சமூகத்தில் உள்ள வயோதிபத்தை எட்டி, வாழ்வதற்கு வழியில்லாமல் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுபவர்கள், அவர்களின் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு சமூக அமைப்புகளும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து அவர்களுக்கான பாரிய நிவாரணத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

சமூக சேவைகள் அமைச்சு வயோதிபத்தை அடைந்துள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு 8 இலட்சத்து 52 ஆயிரத்து 253 அடையாள அட்டைகளை விநியோகித்திருக்கிறது. இந்த அடையாள அட்டைகளை பெற்றவர்களுக்கு ஓரளவிற்கேனும் நிவாரணம் கிடைக்குமென்று நாம் நம்புகிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com