Contact us at: sooddram@gmail.com

 

பிரதம நீதியரசருக்கு நடக்கப்போவது என்ன?

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு வந்த நாட்டில், நீதித்துறை இப்போது செல்லாக்காசு போன்று மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வாசம் அனுபவித்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் உள்ள அவரது அமைச்சரவை சகாக்களே, பகிரங்கமாக நீதிமன்றங்களை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கின்ற நிலை காணப்படுகிறது. அதுவும், உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கருத்துகள் எல்லாம் கண்டபடி விமர்சிக்கப்படுகின்றன.

அரச ஊடகங்களிலேயே, இத்தகைய விமர்சனங்கள் தாராளமாக வெளியாகின்றன. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக முக்கிய அரசியல்வாதி ஒருவரையே சிறைக்கு அனுப்பிய இந்த நாட்டில், இப்படியொரு நிலை ஏற்படும் என்று எவரும் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

எனினும், அரசியலமைப்பில் 18ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, நீதித்துறை சுதந்திரம் மீது கை வைக்கப்படும் நிலை உருவாகும் என்ற கருத்து ஒருசாராரிடம் இருந்ததை மறுக்க முடியாது. எல்லா நீதிமன்றத் தீர்ப்புகளும் நியாயத்தை சொல்வதாக இருக்க முடியாது. எல்லா நீதிமன்றத் தீர்ப்புகளும் நியாயத்தை சொல்வதாக இருந்தால், மேல்முறையீடு, அதற்கான நீதிமன்றக் கட்டமைப்பு என்பனவற்றுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.

நீதிமன்றங்கள், நீதிபதிகள் சுய விருப்பு, வெறுப்புகளற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியமான போதும், அவ்வாறு செயற்படாமல் பக்கசார்புடன் செயற்படும்போது அதை சட்டரீதியான அணுகுவதே சரியான அணுகுமுறையாக கருதப்பட்டது. அதற்காகவே மேல் முறையீடு செய்யும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை.

தமக்குச் சார்பாகச் செயற்படாதபோது நீதிமன்றங்களையும் அவற்றின் தீர்ப்புகளையும் மட்டுமன்றி, நீதிபதிகளையும் கூடத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கின்ற நிலை தான் தற்போது காணப்படுகிறது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையைக் கொண்டு வந்த அரசாங்கம், அதற்குரிய நடைமுறைகளின்படி அதை அணுகியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பிரதம நீதியரசரின் விவகாரத்தை அரசாங்கம் அணுகிய முறை பற்றிய விவாதங்களுக்கு அப்பால், அவரைக் குற்றவாளியாக நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலேயே அதிக கரிசனை காட்டப்பட்டது.

அரசாங்க அமைச்சர்களும் அரசாங்க ஊடகங்களும், பிரதம நீதியரசர் சில வழங்குகளில் வழங்கிய தீர்ப்புகள் தவறானவை என்ற கருத்தை உருவாக்க முற்பட்டதையும் அவதானிக்கலாம். இது நாட்டு மக்களுக்கு நீதித்துறை மீது கொண்டிருந்த நம்பிக்கையை பெரும்பாலும் சிதைத்துவிட்டதென்பதை மறுக்க முடியாது.

உயர்நீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்பட்டது, தீர்ப்பை வழங்கியது என்ற கருத்து எப்போது உருவாக்கப்பட்டதோ, அப்போதே இலங்கையின் நீதித்துறையின் கால்கள் ஒடிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் தான் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, எத்தகைய அணுகுமுறையையும் பின்பற்றலாம், யாரையும் கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு முடியும் என்ற உண்மை மக்களுக்கு உணர வைக்கப்பட்டுள்ளது.

இந்தவாரம் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. 10ஆம், 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள விவாதத்தின் முடிவில், 11ஆம் திகதி மாலை வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அரையும் குறையுமாக விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஆனால், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்து, தண்டனை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும், அந்தத் தெரிவுக்குழு அளித்த அறிக்கை செல்லுபடியற்றதென்றும் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை மீறித்தான் இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை உயர்நீதிமன்றமோ, மேல்முறையீட்டு நீதிமன்றமோ கட்டுப்படுத்த முடியாது என்றும், அதன் தீர்ப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசாங்கத் தரப்பு சொல்கிறது.

ஆனால், அரசியலமைப்பு ரீதியான சந்தேகங்கள் ஏற்படும் போது, அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பது உயர்நீதிமன்றம் தான். ஓர் அரசியலமைப்பு உருவாக்கத்தில், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது உலக வழக்கம். அப்படியிருக்கும் போது, அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்கிறது. விளக்கம் சொல்லும் அதிகாரம் இல்லை என்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை என்கிறது. இது எதிர்காலத்தில், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை வலுவற்றதாக்கி விடுவதுடன், அரசியலமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமன்றி அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்துக்கு அரசியலமைப்பு ரீதியான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கின்ற தகைமையைக் கூட உயர்நீதிமன்றத்துக்கு இல்லாமல் செய்து விடும். அரசியலமைப்பில் நீதித்துறைசார் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு, நீதிமன்றங்களிடமே விடப்பட்டுள்ளது. அரசாங்கம் அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் கையில் எடுத்துக்கொள்ளத் துணிந்துள்ளது.

இத்தகைய நிலையில், நாட்டின் இரண்டாவது நீதிக் கட்டமைப்பாக, நாடாளுமன்றம் தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது. இந்த முரண்பாட்டின் உச்சநிலையாக, நாடாளுமன்றமே உயர்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இப்போதைய நடப்புகள் அதற்காக அடிக்கல்லைத் தான் போட்டுள்ளன. தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக, பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதற்கடுத்து ஜனாதிபதி அவரைப் பதவி நீக்க நடவடிக்கை எடுப்பார். அதற்குள், பெயர் வெளியிடப்படாத நான்கு பேரைக் கொண்ட நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் விசாரணை நடைமுறைகள் குறித்து அவர்கள் அளிக்கும் அறிக்கைக்கு அமையவே பதவிநீக்கம் இடம்பெறும்.

இந்த நிபுணர் குழு, ஒருவேளை பிரதம நீதியரசருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை அளிக்குமேயானால், அதன் விளைவு மிகவும் மோசமாகும். அதாவது, தெரிவுக்குழு, நாடாளுமன்றம், நீதித்துறை போன்றவற்றை அது கேலிக்கூத்தாக்கி விடும். எனினும், பெயர் கூட வெளியிடப்படாத அந்த நிபுணர் குழுவின் அறிக்கை பிரதம நீதியரசருக்கு சாதகமாக இருப்பதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை.

இருந்தாலும், பிரதம நீதியரசர் விவகாரத்தில் அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு அணுகுமுறையும், மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளும், ஆட்சியின் இலக்கணங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதை மறுக்க முடியாது.

அரசாங்கத்தின் இப்பாதைய ஒரே இலக்குபிரதம நீதியரசரை அகற்ற வேண்டும் என்பது தான். அதற்காக ஒட்டுமொத்த நிதித்துறையையும், நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் பக்சார்பானவர்களாக காண்பித்திருப்பது உச்சக்கட்ட அநீதி எனலாம்.

பிரதம நீதியரசரைப் பதவி நீக்குவதன் மூலம், அரசாங்கத்தின் இந்த இலக்கு எட்டப்பட்டு விடலாம். ஆனால், நீதித்துறையின் மீது ஏற்படுத்தப்பட்ட கறை, இழந்துபோன அதன் சுயாதிபத்தியம் என்பனவற்றை ஒருபோதும் மீள வழங்க முடியாது. அதுமட்டுமன்றி, இனிமேல் நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதும் கூட விவாதப் பொருளாகலாம். நீதி
, நிர்வாக, சட்டவாக்கத் துறைகளுக்கு இடையில் இது ஒரு நெடுங்காலச் சிக்கலாக நீளப்போகிறது.

(கே.சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com