Contact us at: sooddram@gmail.com

 

பாலியல் வன்முறைகளின் பின்னணி

(அர்ச்சனா பிரசாத்)

கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு தலைநகரம் தில்லியில் 23 வயது மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது என்பது தில்லியில் நடை பெறும் 635வது வன்முறைச் சம்பவமாகும். இந்த சம்பவமானது, ஒரு அரசாங்க அமைப் பில் ஆழமாக வேரோடிப் போயுள்ள குறைபாடு களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் கூடிய ஒரு அடையாளமாகவும், பெண்களுக் கெதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங் களை கட்டுப்படுத்தத் தவறிய மற்றும் கட்டுப் படுத்த இயலாத ஒரு அரசாங்கத்தின் இய லாமையை வெளிப்படுத்தியுள்ள சம்பவமாக வும் மாறிப்போயுள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமைக்கெதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்பலை கள், ஜனநாயக பெண்கள் அமைப்புகளின் நீண்டகாலக் கோரிக்கைகள் பொதுமக்களின் உணர்வுகளுக்குள்ளும் புகுந்து பிரதிபலிக் கின்றன என்பதையே காட்டுகிறது. பாலியல் வன்முறைகளுக்கு எதிரான ஒரு மசோதா, விரைவு நீதிமன்றங்கள், தாமதமில்லாமல் துரிதமான விசாரணைகள், குற்றவாளிகளை தப்பவிடாமல் பாரபட்சமில்லாமல் ஒரே மாதிரி யான தரமான விசாரணை நடைமுறைகள், முக்கியமான பொது இடங்களில் எல்லாம் தக்க வகையில் அதிகமான காவலரின் இருப் பினை உத்தரவாதம் செய்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு பலியான பாதிக்கப்பட்ட பெண் களுக்கு உரிய நிவாரணம் மற்றும் புனர் வாழ் வுக்குரிய ஏற்பாடுகள் என்பது போன்ற கோரிக் கைகளை முன்வைத்து கடந்த 15 ஆண்டு களாக பெண்கள் அமைப்புகள் போராடி வரு கின்றன.

தற்போது தில்லியில் நிகழ்ந்த இந்த பாலி யல் வன்கொடுமைக்கு எதிராக இளம் எதிர்ப் பாளர்கள் மத்தியில் எழுந்துள்ள சில கோரிக் கைகள், பெண்கள் அமைப்புகள் நீண்ட கால மாக முன்வைத்துப் போராடி வந்த கோரிக் கைகள் பொது மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன என்பதையே காட்டுகிறது. எது எப்படியா யினும், பொது மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள இந்த எதிர்ப்பலைகளின் திசை வழியானது, ஒரு நீண்டகால கோரிக்கையை வென்றெடுக்கும் நோக்கத்துடன் கூடியதாக வும், உருப்படியானதாகவும் மாற்றப்படுமேயா னால், ஒரு சமூக மற்றும் அரசியல் ரீதியான மாற்றத்திற்கான கருவியாக இந்த எதிர்ப் பலைகள் மாறும் என்பதில் ஐயமில்லை.

நீண்டகாலமாக பாலியல் வன்முறைகளின் போக்கு

பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்குப் பிந்தைய காலக்கட்டத் தில்தான் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்ற கருத்து தற்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் (சூஊசுக்ஷ) புள்ளி விவ ரங்களின்படி, 1971 மற்றும் 2011ம் ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 873.3 சத மானம் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த புள்ளிவிவரங்களை பரி சீலனை செய்து பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய காலக்கட்டத் தில் தான் பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வந் துள்ளன என்பது ஊர்ஜிதமாகிறது. 1971 மற்றும் 1991ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலி யல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையே வருடத்திற்கு 6074 பாலியல் பலாத் கார வழக்குகள் இந்த காலக் கட்டத்தில் பதி வாகியுள்ளன என்று கூறலாம். ஆனால் 1992 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கிடையில் பதி வாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண் ணிக்கை 1,54,664 ஆகும். அதாவது ஆண் டிற்கு 15,466.4 பலாத்காரங்கள் பதிவாகியுள் ளன எனலாம். அதாவது பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகள் அமலாகத் தொடங் கிய முதல் பத்தாண்டுகளில் இந்த குற்றங் களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே வந் துள்ளது. சீர்திருத்தக் காலக்கட்டத்தின் சமீ பத்திய பத்தாண்டுகளில் அதாவது 2002 மற் றும் 2011ம் ஆண்டுகளுக்கிடையில் இந்த எண்ணிக்கை மிகவும் அபாயகரமான அள வில் அதிகரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத் தில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங் களின் எண்ணிக்கை 1,98,139 ஆகும். அதா வது ஆண்டிற்கு 19,813.9 குற்றங்கள் சராசரி யாகப் பதிவாகியுள்ளன. இதற்கு என்ன பொருள் என்றால், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் மொத்தம் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 97.5 சதமான குற்றங் கள் 1991 மற்றும் 2011ம் ஆண்டுகளுக் கிடையில் நடைபெற்றுள்ளது என்பது தான்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளதையும் நாம் காண லாம். 2009-2010ம் ஆண்டிற்கிடையில் பாலி யல் பலாத்காரங்களின் எண்ணிக்கை என்பது 9.6 சதமானம் அதிகரித்துள்ளது. 2010-2011ம் ஆண்டிற்கிடையில் இந்த விகிதம் 9.2 சதமாக அதிகரித்துள்ளது.

சமீப காலமாக பதிவு செய்யப்படும் பாலி யல் வன்முறைகளின் எண்ணிக்கை அதி கரிப்பதற்குப் பலவிதமான காரணங்கள் கற்பிக் கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் இன்று தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை பகிரங்கமாகச் சொல்லத் தயாராக உள்ளனர் என்ற காரணம் கற்பிக்கப் படுகிறது. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு தங்கள் ஒருமைப்பாட் டினை தெரிவிக்கும் உதவிகளை அளிக்கும் மற்றும் மாற்றங்களை விரும்பும் பெண்கள் அமைப்புகளின் வெற்றியாகவும் இதனை கொள்ளலாம் என்று மற்றொரு காரணம் கற் பிக்கப்படுகிறது. ஆனால், இந்தக் காரணங் களோ அல்லது விளக்கங்களோ சீர்திருத்தக் காலக்கட்டத்திற்குப் பிந்தைய காலக்கட் டத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன் முறைகளுக்கான காரணத்தை அல்லது விளக்கத்தை அளிக்கப் போதுமானதாக இல்லை. சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலக் கட்டத்தில் அரசு தன்னை சமூகப் பொறுப்பு களில் இருந்து மிக அதிகமாக விடுவித்துக் கொண்டு வருகிற பின்னணியோடு, இந்த பாலியல் வன்முறைகளின் அதிகரிப்பை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் குறைவான நிதி ஒதுக்கீடு

தலைநகர் தில்லியில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான எதிர்ப்பலைகள் மிக அதிகமாக பெருகி வரு வதால் முதலமைச்சர் திருமதி, ஷீலா தீட்சித் வேறு வழியின்றி தலைநகர் தில்லி பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக மாறிப் போயுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அதற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தில்லி காவல் துறையினர் மீது தனக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலைக்குக் காவல் துறையினரின் அஜாக்கிரதையான போக்கே காரணம் என்றும், நிலைமையை அவர்கள் சரி வரக் கையாளாததே இதற்கான காரணம் என் றும் புலம்பித் தீர்த்துள்ளார். முதலமைச்சரின் இந்த அணுகுமுறை பழியை மத்திய அரசாங் கத்தின் மீது தூக்கிப் போட்டுவிட்டு, மாநில அர சாங்கம் நிரபராதி என்று தப்பிக் கொள்ளும் முயற்சியையும் மனோநிலையையும் காட்டு கிறது. அப்படியே பார்த்தாலும் இந்த மனோ நிலை என்பது மிகவும் மோசமானது. பாலியல் வன்கொடுமைகள் என்பது ஏதோ சட்டம்- ஒழுங்கு சார்ந்த பிரச்சனை மட்டுமே என்ற பார்வைதான் முதலமைச்சரின் இந்த புரி தலுக்கான காரணமாகும்.

இந்தப் பின்னணியில், பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படும் பெண்களை அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்பதும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிரான சட்டங்களை அம லாக்குவதில் அரசாங்கம் எப்படி செயல்படு கிறது என்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறு கிறது. உதாரணமாக, மத்திய அரசாங்கம் வெறு மனே ரூ. 1 கோடியை மட்டுமே குடும்ப வன் முறை தடுப்புச்சட்டம் 2005க்கென ஒதுக்கி யுள்ளது. மாநில அரசாங்கமோ ரூ. 45 லட்சங் களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதே போல, பாலியல் வன்முறைகளுக்கு பலியாகும் பெண் களுக்கு உதவுவதற்கென மாநில அரசால் நிர்மாணிக்கப்படும் ஆபத்து கால தலையீடு மையங்களுக்கு வெறுமனே ரூ. 30 லட்சம் மட்டுமே கடந்த பட்nஜட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான ஹாஸ்ட்டல்கள் மற்றும் குறுகிய கால தங்கும் இல்லங்கள் ஆகியவற்றை ஸ்தாபிப்பதிலும் நிர்வகிப்பதி லும் நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மிகவும் மோசமான நிலையே நீடிக்கிறது. 2011-2012ல் மாநில அரசாங்கம் தங்கும் விடுதிகளுக்கென 12 லட்சங்களையும் 2012-2013ல் 26 லட்சங் களையும் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. துன்பத்திற்குள்ளாகும் பெண்கள் தங்கிச் செல் லும் குறுகிய கால அல்லது இடைக்கால இல் லங்களை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு என் பதோ இதைவிட மோசமாக உள்ளது. 2011-2012ல் இது 14 லட்சங்கள், 2012-2013ல் இது 12 லட்சங்களாகும்.

தலைநகர் தில்லியில் நடைபெற்ற கூட் டுப் பலாத்காரத்திற்கு எதிராக ஆங்காங்கே முளைவிட்டு கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பலை களை மேலே குறிப்பிட்டுள்ள இந்த பிரச்ச னைகளின் பின்னணியில், இந்த விஷயங் களின் வெளிச்சத்தில் நாம் பார்க்க வேண் டும். பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றால் தேவைப் படுவது உண்மையான சமூக மற்றும் அரசி யல் அமைப்பு மாற்றமே என்பதுதான் இந்த எதிர்ப்பலைகளின் அடையாளமாக இருக்க வேண்டும்.

தமிழில் சுருக்கம்: ஆர்.எஸ்.செண்பகம்

திருநெல்வேலி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com